Categories
தேசிய செய்திகள்

“வேலைக்கு சென்ற இடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”… தனியார் நிறுவன ஊழியர் கைது… நடந்தது என்ன…??

பெங்களூரில் உள்ள  கூடலூர் பகுதியில் பரமசிவமூர்த்தி (47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயதான தந்தை மற்றும் தாய் இருக்கின்றனர். அவர்களை கவனித்துக் கொள்வதற்காகவும், வீட்டு வேலை செய்வதற்காகவும் பெண் வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதனால் வில்சன் கார்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் பரமசிவமூர்த்தி வேலைக்கார பெண் வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த நிறுவனமும் 21 வயது இளம்பெண்ணை அனுப்பி வைத்துள்ளது. அதன்படி அந்த இளம் பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் காணாமல் போன சகோதரிகளை!…. சமூகஊடக கணக்கு மூலம் மீட்க பிளான் போட்ட போலீசார்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மல்புரா போலீஸ் நிலையத்தில் சென்ற டிச..16-ம் தேதி ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், கடந்த 16ம் தேதி காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு சென்ற இரண்டு சகோதரிகள் வீடு திரும்பவில்லை. இவர்களில் ஒருவர் 10ம் வகுப்பும், மற்றொருவர் 12ம் வகுப்பும் படித்து வந்தனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரித்தபோது மதிப்பெண் குறைவாக எடுத்தது பற்றி சகோதரிகளின் தாய் அவர்களை திட்டியது தெரியவந்தது. இந்நிலையில் காணாமல் போன சகோதரிகளில் ஒருவரின் சமூகஊடக […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! திருப்பதி பெருமாளுக்கு 2 கிலோவில் தங்க கந்தாபாரணம்…. வழங்கியது யார் தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதா ரெட்டி இருவரும் திருப்பதி வெங்கடாசலர் கோவிலுக்கு 2 கிலோ 12 கிராம் 500 மில்லி கிராம் எடையில் தங்க கந்தாபாரணத்தை காணிக்கையாக அளித்துள்ளனர். திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் சீனிவாச விஸ்வசாந்தி மகா யாகம் வெற்றிகரமாக முடிந்ததை முன்னிட்டு அவர்கள் இந்த தங்க கந்தாபரணத்தை காணிக்கையாக அளித்துள்ளதாக கூறியுள்ளனர் […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் உங்கள் லட்சியமா?… அப்போ நான் எப்படி ஒரு தலைவரை பின்பற்றுவது?…. பொங்கி எழுந்த காயத்ரி ரகுராம்….!!!!!

காயத்ரி ரகுராம் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பா.ஜ.க-வில் இருந்து என்னை துரத்துவது தான் உங்கள் லட்சியமா..? இதற்கிடையில் தொடர்ச்சியான தாக்குதல். பிறகு நான் எப்படி ஒரு தலைவரை பின்பற்றுவது..? இது போன்ற செயல்களை ஊக்குவிக்கும்போது எப்படி இந்த உத்திகளை நான் 8 வருடங்களாக எதிர்கொண்டு நிற்கிறேன். நான் இன்னும் வலுவான பா.ஜ.க காரிய கர்த்தா மட்டுமே” என அவர் கூறிய டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. மேலும் தன் மீது சுமத்தப்படும் அனைத்து பழிகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை… 3 பேர் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி…!!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாரிடம் இணைந்து அந்த பகுதியில் இன்று காலை தேடுதல் வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் அந்த பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… வேறொரு பெண் மீது ஆசை…. கர்ப்பிணி மனைவிக்கு HIV வைரஸை செலுத்திய கணவர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் சரண் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திருமணம் முடிந்த நாளிலிருந்து சரண் தன்னுடைய மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதோடு, ஆண் குழந்தை பெற்று தராததை குத்தி காட்டி அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதற்கிடையில் சரணுக்கு விசாகப்பட்டினம் பகுதி சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணை சரண் திருமணம் செய்து கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“வெளியே சிங்கம் மாதிரி, ஆனா நாட்டுக்குள்ள எலிதான்”…. PM மோடியை சீண்டிய காங்கிரஸ் தலைவர் கார்கே….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடைபெற்ற நிலையில் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மோடி அரசு மிகவும் வலிமையானது எனவும் அவர்களுடைய கண்களை கூட யாரும் நேரடியாக பார்க்க முடியாது எனவும் கூறி வருகிறார்கள். ஆனால் எல்லையில் சர்ச்சைகளும் மோதலும் நீடிக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரு வருடத்தில் 1.64 லட்சம் தற்கொலை‌கள்…. “குறிப்பாக இவர்கள்தான் அதிகம்”….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தற்கொலை மரணங்கள் குறித்த தவகவலை மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த வருடம் இந்தியாவில் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 18,925 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டவை போன்ற பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. இந்த தற்கொலைக்கு வேலையின்மை மிகப்பெரிய காரணமாக கூறப்படும் நிலையில், சிறு தொழில் முனைவோர்கள், சுய தொழில் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

“அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சை கருத்து”…. பிரபல நடிகர் மீது ரசிகர் செருப்பு வீச்சு…. பரபரப்பு சம்பவம்….!!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். இதனால் தர்ஷன் தான் கூறிய சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தர்ஷன் நடித்துள்ள கிராந்தி என்ற திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டை பகுதியில் நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

சட்டசபை வளாகம்: இனி மை பேனா கொண்டு வராதீங்க….. மாநில அரசு எடுத்த திடீர் நடவடிக்கை….!!!!

மகாராஷ்டிரா அமைச்சர் மீது மை தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களுக்கு பின், மாநில சட்டப்பேரவை கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தி இருக்கிறது. அதாவது இனி மாநில சட்டசபை வளாகத்துக்குள் மை பேனா கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மகாராஷ்டிர மாநில குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளான நேற்று (டிச..19) சட்டசபைக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பேனாக்களும் சோதனை செய்யப்பட்டது. ஆகவே சட்டமன்றத்திற்குள் போகும் அனைவரிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, மை பேனாக்களை வளாகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. உடனே இந்த வேலையை செய்து முடிங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து…. மிக முக்கிய தகவல்….!!!!

நீங்கள் EPFO சந்தாதாரராக இருப்பின், இந்த செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். EPFO ஒரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை வழங்கி இருக்கிறது. அந்த வகையில், EPFO தன் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கில் இருந்து நேற்று டிசம்பர் 19 ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. அதன்படி “பிஎஃப் பங்களிப்பை செலுத்தாத முதலாளிகள் இழப்பீட்டை ஏற்பதோடு செலுத்தவேண்டிய தொகைக்கு வட்டி செலுத்தவேண்டும்” என EPFO தெரிவித்துள்ளது. மேலும் EPFO ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளது. அவற்றில் இழப்பு மற்றும் வட்டியை EPFO-க்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் கூகுள் முதலீடு…. சுந்தர் பிச்சை தகவல்….!!!!

இந்தியாவுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வந்துள்ளார். இவர் மத்திய தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை டெல்லியில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு இந்தியா 2022-க்கான google என்ற நிகழ்விலும் சுந்தர் பிச்சை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய டிஜிட்டல் மயமாக்கல் நிதியத்தின் ஒரு பகுதி இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் ரூபாய் VS யூபிஐ…. இதுதான் வித்தியாசம்…. என்னனு நீங்களே பாருங்க….!!!!

ரிசர்வ் வங்கி  ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி  ஒன்றை  அளித்துள்ளார். ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தியது. இது பெரிய வங்கிகளுக்கு மட்டும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் சில நகரங்களில் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்த சோதனை அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பரிவர்த்தனைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் டிஜிட்டல் ரூபாய் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே யூபிஜ,ஆர்டிஜிஎஸ் போன்ற பரிவர்த்தனை தளங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கணிசமாக உயர்த்தி […]

Categories
தேசிய செய்திகள்

இனி நொடி பொழுதில் பார்சல் அனுப்பலாம்…. இந்திய ரயில்வேயின் புதிய சேவை…. அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக பல புதிய அறிவிப்புகளை வெளியிட்ட வரும் இந்திய ரயில்வே தற்போது போக்குவரத்தை தொடர்ந்து மக்களுக்கு பார்சல் சேவையை வழங்கி வருகின்றது. ரயில் மூலமாக நீங்கள் எந்த ஒரு பொருளையும் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப முடியும். நீங்கள் அனுப்பக்கூடிய பொருளின் எடை மற்றும் தூரம் ஆகியவற்றை பொறுத்து குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூல் செய்யப்படும். இந்நிலையில் ரயில்வே துறை தபால் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?….. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் கட்டாயமாகப்பட்டுள்ளது. ஆதார் இல்லாமல் எதுவுமே நடக்காது என்ற சூழல் தற்போது உருவாகிவிட்டது. அதனால் ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய ஆதார் அமைச்சகம் வலியுறுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை அப்டேட் ஆக வைத்திருந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

ஹாலால் இறைச்சிக்கு தடை….? கர்நாடக அரசு அதிரடி முடிவு…!!!

ஹலால் இறைச்சிக்கு தடை   கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை கொண்டு வர அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடக CM பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக எம்எல்சி என் ரவிக்குமார் இதற்கான முன்னெடுப்பை எடுக்கஉள்ளார். அதாவது மாநிலத்தில் இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு சான்றுஅளிக்கும் உணவுகளைத் […]

Categories
தேசிய செய்திகள்

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமல்…. இனி 500 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்து வருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசு வழங்கும் சிலிண்டருக்கான மானியமும் சில மாதங்களாக வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் சமீப காலமாக மீண்டும் சிலிண்டர்களுக்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலிண்டர் ஒன்றின் விலை 1100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் ராஜஸ்தான் […]

Categories
தேசிய செய்திகள்

காதல் சின்னத்திற்கு இந்த நிலைமையா….? தாஜ்மஹாலுக்கு 1.5 லட்சம் அபராதம்…. எதற்கு தெரியுமா….? வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

தாஜ்மஹாலுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். டெல்லியில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்  வருவது வழக்கம். இந்நிலையில் இந்த  ஆண்டு  தாஜ்மாஹலுக்கு வீட்டு வரி செலுத்தாத காரணத்திற்காக 88 ஆயிரத்து 784 ரூபாயும்,  அபராத தொகையும் சேர்த்து 1  லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை  உடனடியாக செலுத்த வேண்டும் என ஆக்ரா நகராட்சி நிர்வாகம் இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து தொல்லியல் துறை […]

Categories
தேசிய செய்திகள்

TV ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2 வயது சிறுவன்…. 20 நிமிடங்களில் நேர்ந்த திருப்பம்…. நிம்மதியடைந்த பெற்றோர்….!!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ் என்ற 2 வயது சிறுவன் எதிர்பாராத வகையில் TV ரிமோட்டிலிருந்த பேட்டரியை விழுங்கியதாக தெரிகிறது. உடனே பெற்றோர் சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரையின் அடிப்படையில் சிறுவனை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவ நிபுணர்கள் உடனே சிகிச்சை மேற்கொண்டனர். அதன்பின் எண்டோஸ்கோபி வாயிலாக வயிற்றிலிருந்த பேட்டரியை அகற்றி, சிறுவனின் உயிரைக் காப்பாற்றினர். இது […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது!… உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வீட்டுவரி செலுத்தவில்லையா?…. ஆக்ரா நகராட்சி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் திகழும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்காக உள்நாடு மற்றும் உலக நாடுகளிலிருந்தும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். இந்த நிலையில் முறையாக வீட்டுவரி செலுத்தாத காரணத்தால் தாஜ்மஹாலுக்கு ரூபாய்.1 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகமானது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதாவது, நடப்பு நிதியாண்டில் வீட்டுவரி செலுத்தாததால் 88 ஆயிரத்து 784 ரூபாயும், அபராதத் தொகையை சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சத்து 47 […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவ நாயகன் மரணம்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

இந்தியா – பாகிஸ்தான் இடையே 1971 இல் நடந்த லோ லோங்கோவாலா போரின் முக்கிய பங்காற்றிய வீரர் நாயக் பைரன்சிங் (81) நேற்று ஜோத்பூரில் உயிரிழந்தார். நாயக் பாத்திரத்தை ஏற்று பார்டர் படத்தில் நடித்த சுனில் ஷெட்டி இவருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தார்க்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் இவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இந்தி பயன்படாது… ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளுங்கள்”…. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி….!!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரை சென்று வருகின்றார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் முடிவடைகின்றது. இந்நிலையில் ஒற்றுமை பாத யாத்திரையில் நேற்று ராஜஸ்தான் ஆழ்வாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உலக மக்களிடம் பேச இந்தி பயன்படாது எனவும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும் உலகின் மக்களுடன் நீங்கள் பேச விரும்பினால் இந்தி ஒருபோதும் உங்களுக்கு பயன்படாது, […]

Categories
தேசிய செய்திகள்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPFO) குறைந்தபட்ச பென்ஷன் உயர்த்தப்படுமா…..? மத்திய அரசு பதில்….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான EPFO குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதாவது தொழிலாளர் வைப்பு நிதியில் அனைத்து ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தில் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். இதேபோன்று அவருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனமும் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். அதன் பிறகு இதில் பென்ஷன் திட்டமும் இருப்பதால் ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. “இனி மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசம்”…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…..!!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் ஷௌக்கான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 12-ம் வகுப்பில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசம் என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு அதிகபட்சமாக 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் அதற்குரிய கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். இதேபோன்று ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி படிக்கும் மாணவர்கள், பொறியியல் […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணிக்கு திடீரென வந்த பிரசவ வலி…. ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டிய ராணுவ வீரர்கள்…. நன்றி சொன்ன குடும்பத்தினர்….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சரியான சாலை இணைப்பு மற்றும் அடிப்படை மருத்துவ உதவி கிடைப்பதில்லை. இதனால் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) மற்றும் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎப்) போன்றோர் அங்குள்ள கிராமத்தில் பாதுகாப்புப்படை முகாமில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பொட்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பழங்குடி பெண்ணான மாயா என்ற கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டது. இதற்கிடையில் சுகாதார மையம் தொலைவில் உள்ளதால் கிராம மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: சிறுவன் வயிற்றில் ரிமோட் பேட்டரி…20 நிமிடத்தில் மருத்துவர்கள் சாதனை….!!!!!

2  வயது சிறுவன் ரிமோட் பேட்டரியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரிஷிகேஷ் என்ற 2  வயது மகன் உள்ளார். இந்நிலையில் இன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ் திடீரென ரிமோட் பேட்டரியை விழுங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுவனை  மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து  மருத்துவர்கள் என்டோஸ்கோப்பி முறையைப்  பயன்படுத்தி 20 நிமிடத்தில் சிறுவனின் வயிற்றில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்கள் தொகையில்…. இவ்வளவு பேர் பாஸ்போர்ட் வச்சிருக்காங்க?…. வெளியான தகவல்….!!!!

இந்திய மக்கள் தொகையில் 7.2% நபர்களிடம் பாஸ்போர்ட் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத மத்தியில் வழங்கப்பட்ட மொத்த பாஸ்போர்ட்களின் எண்ணிக்கையானது 9.6 கோடி ஆகும். இவற்றில் 2.2 கோடி கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 97 லட்சம் பேர் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர். எனினும் தமிழகத்தை விட இரண்டு மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தில் 87.9 லட்சம் பேர் தான் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

OMG!… 2 வயது குழந்தையின் வயிற்றில் பேட்டரி… 20 நிமிட போராட்டம் ‌…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!

பொதுவாக குழந்தைகள் என்றாலே எந்த பொருளை எடுத்தாலும் உடனடியாக வாயில் போட்டு விடுவார்கள். எனவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் பொருட்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். குழந்தைகள் எளிதில் எடுத்து வாயில் போட்டு விழுங்கக்கூடிய பொருட்களை அவர்கள் கைகளில் கொடுக்காததோடு அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் எதையும் எடுத்து வாயில் போட்டு விழுங்க மாட்டார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை டிவி பேட்டரியை வாயில் போட்டு விழுங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…!! பேரவை கூட்டத்திற்கு “கைக்குழந்தையுடன் வந்து மாஸ் காட்டிய எம்.எல்.ஏ….. திகைத்து நின்ற உறுப்பினர்கள்…!!!!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை நாக்பூரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூடியது. கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ சரோஜ் பாபுலால் அஹிரேவுக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிறந்து இரண்டரை மாதமே ஆன தனது குழந்தையுடன் சரோஜ் பாபுலால் குளிர்கால கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து பேரவை வளாகத்தில் பச்சிளம் குழந்தையுடன் சரோஜ் பாபுலாலை கண்ட பிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இது குறித்து  செய்தியாளர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு…. முதல் 24 மணிநேரம் இலவச சிகிச்சை…. அசத்தலான திட்டம்…..!!!!!

சாலை விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் 24 மணிநேரம் இலவச சிகிச்சையளிக்கும் அரசு திட்டத்தை சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (எஸ்ஜிபிஜிஐஎம்எஸ்) அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் ராஜேஷ் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது,  விபத்துக்கு உள்ளானவர்களின் உயிரை காப்பாற்ற இவ்வசதி உதவும். மோகன்லால்கஞ்ச் நகரில் வசித்து வரும் ராகுல்சிங், லாரி ஓட்டுநராக உள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை அன்று காலை சாலை விபத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு கையில் 4 இடங்களில் எலும்பு […]

Categories
தேசிய செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய “பதான்” படம்…. ஷாருக்கான் தன் மகளுடன் அதை பார்ப்பீர்களா?…. கேள்வி எழுப்பும் பா.ஜ.க….!!!!

நடிகர் ஷாருக்கான் தன் மகளுடன் பதான் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்ததலைவரும் மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தலைவருமான கிரிஷ் கெளதம் தெரிவித்து உள்ளார். மத்தியப்பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை அடுத்து “பதான்” பாடலில் காவி நிற உடையணிந்தது தொடர்பாக சட்டப்பேரவை தலைவரும் கேள்வி எழுப்பி இருக்கிறார். பதான் திரைப்படத்தில் ”பேஷாரம் ராங்” என்ற பாடலில் ஷாருக்கானுடன் காவி உடையணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடுவதற்கு பா.ஜ.க தரப்பில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் நீக்கம்?…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவில் தற்போது ஆதார் அட்டைகளின் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. போலி ஆதார் அட்டைகளின் வழக்கு தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று நாட்டின் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். அதே சமயம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதற்கான பணிகளும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. வாக்காளர் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்: 7-14 நாட்கள்: 3.00 சதவீதம் 15 – […]

Categories
தேசிய செய்திகள்

2023 ஏப்ரல் 1 முதல் ரூ 500க்கு சிலிண்டர் வழங்கப்படும் – முதல்வர் அதிரடி அறிவிப்பு.!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.500க்கு ஒரு வருடத்தில் 12 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வு பிரச்னை தீவிரமானது என்றும், அரசின் நலத்திட்டங்களின் பலன்களை யாரும் இழந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். The issue of price rise is serious. We will give 12 gas cylinders in […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… 2 வருடங்கள் காத்திருந்து மருமகனை ஆணவக் கொலை செய்த மாமனார்…. பரபரக்கும் பகீர் சம்பவம்….!!!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் ஜமகண்டி டக்கோடா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் புஜபலி கர்ஜகி (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (25) என்ற பெண்ணை காதலித்தார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக புஜபலி மற்றும் பாக்யஸ்ரீ திருமணம் செய்து கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

UPI பண பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்?… தேசிய கட்டண கழகத்தின் அதிரடி முடிவு….!?!

உலகம் முழுவதும் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் வங்கிகளுக்கு செல்வதற்கு பதில்  யுபிஐ செயலிகள் மூலமாகவே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்த முறை சுலபமாக இருப்பதால் பல கோடி பேர் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் தேசிய கட்டண கழகத்தின் தரவுகளின் படி கடந்த செப்டம்பர் மாதத்தில் போன்பே மற்றும் ஜி பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் 11 லட்சம் கோடி அளவிற்கு பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக யுபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

இவர்கள்தான் காரணமா?….எய்ம்ஸ் மருத்துவமனை தாக்குதல் வழக்கு…. கும்பல் பற்றிய விவரம் கேட்டு போலீசார் கடிதம் …..!!!!!

எய்ம்ஸ் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியவர்களின் விவரங்களை அளிக்குமாறு உளவுப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். டெல்லியில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை மீது கடந்த மாதம் 23-ஆம் தேதி இணையதள தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மருத்துவமனையில் உள்ள சர்வர்கள் பழுதடைந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து சி.பி.ஐ., என்.ஐ.ஏ  உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை நடத்தி வந்தது. அந்த விசாரணையில் சீனா மற்றும் ஹாங்காய் நாடுகளில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“இனி யாரும் சாலைகளில் குளிரால் நடுங்கக்கூடாது”…. அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதல்வர் யோகி ஆதித்யநாத்…..!!!!

உத்தரப்பிரதேசத்தில் வெப்ப நிலை குறைந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வீடற்றவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். தற்போது மாநிலத்தில் கடும் பனி நிலவி வருவதால் மக்கள் பலரும் நடுங்கி தவிக்கின்றனர். இவற்றில் வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பாதுகாக்கும் விதமாக நிவாரண  உதவிகளை வாங்கி அவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்  என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

BH பதிவு முறை: இனி தனியார் நிறுவன ஊழியர்களின் வாகனங்களுக்கும்…. வெளியான உத்தரவு….!!!!

வாகனங்களின் பதிவை நாடு முழுவதும் தடை இல்லாமல் மாற்றும் அடிப்படையில் கடந்த 2021ம் ஆகஸ்ட் 26-ல் சட்டபூர்வமான பொதுவிதியை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டது. இதையடுத்து பாரத் தொடர் வரிசை (BH) எனும் புது பதிவுமுறை மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் சேர்க்கப்பட்டது. இது 2021-ம் வருடம் செப்..15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இவ்விதிகள் அமலாக்கம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இது வேற லெவல்!!… குத்துசண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா…. அரங்கமே உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம்….!!!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் உடா சிறுவர் பூங்காவில் 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசா அணியும் முதல் பரிசை வென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அதன் பிறகு ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துசண்டை விளையாடினார். […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியா என்றால் நினைவுக்கு வருவது ஊழல், மோசமான சாலைகள் மட்டும் தான்”….. இன்போசிஸ் நிறுவனர் ஸ்பீச்….!

ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் ராஜம் என்ற இடத்தில் ஜிஎம்ஆர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, வாய்ப்பு தேடுபவர்கள் எங்கே இடைவெளி இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். நீங்களே உங்களை தலைவராக நினைத்துக் கொள்ளுங்கள். வேறு ஒருவர் தலைவர் பதவியை எடுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் என்ன உருவாக்குகிறீர்களோ அதுதான் நிஜம். அதன்பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஷாக்….!! 12 மணி நேரம் 8 வாலிபர்கள்…. கதறி துடித்த சிறுமி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள பல்கர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு சில  வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வாலிபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை  தங்களுடன் வெளியே வருமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய  அந்த சிறுமியும் சென்றுள்ளார். அவர்கள் சிறுமியை மஹிம் கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் 8 பேரும் சேர்ந்து இரவு 8 […]

Categories
தேசிய செய்திகள்

சேகர் ரெட்டியின் மாப்பிள்ளையாக வர இருப்பவருக்கு திடீரென மாரடைப்பு…. தற்போதைய நிலை என்ன?…. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை….!!!!

திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அலுவலர் தர்மா ரெட்டியின் மகன் சந்திரமௌலி (26) ரெட்டிக்கு நேற்று டிச..18-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சந்திரமௌலி ரெட்டி முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு கேத்லாப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதால் கவலைக் கிடமாக இருக்கிறார். ஆகவே […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் பயங்கரம்….!! மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…..!!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய  விபத்தில் 4  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட் பகுதியில் பிரீதம்  ராம்-ஈஸ்வரி தேவி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நந்தினி, ரூபி என்ற  2  மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பிரீதம்  ராம் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிலிபிட் -பிசல்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென  கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தையுடன் அவைக்கு வந்த காங்கிரஸ் பெண் எம்எல்ஏ…. வெளியான புகைப்படம்…. வைரல்…..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரானது நாக்பூரில் இன்று காலை கூடியது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரே இரண்டரை மாதமே ஆன தன் குழந்தையுடன் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அவரை கட்சி பேதமின்றி பிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு சரோஜ் பாபுலால் பதிலளித்ததாவது “சென்ற இரண்டரை வருடங்களாக கொரோனா காரணமாக நாக்பூர் பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை. எனக்கு வாக்களித்தவர்களின் கேள்விக்கான பதிலை பெற […]

Categories
தேசிய செய்திகள்

“அதிக நேரம் போன் பேசிய மகள்”…. ஆத்திரத்தில் தந்தையின் வெறிச்செயல்…. போலீசில் பரபரப்பு புகார்…..!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் என்னுடைய 17 வயது தங்கை வீட்டில் நீண்ட நேரமாக போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த என்னுடைய வளர்ப்பு தந்தை என் தங்கையை கண்டித்ததோடு அவளை கண்மூடித்தனமாக தாக்கினார். இதனால் என் தங்கைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. நான் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு என் தங்கையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

16 வயது சிறுமியை 8 பேர் 12 மணி நேரம்….. உச்சக்கட்ட கொடூர சம்பவம்…..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி எட்டு பேர் கொண்ட கும்பலால் 12 மணி நேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடற்கரை அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு… இழப்பீடு கொடுங்க!…. பா.ஜ.க எம்பி வலியுறுத்தல்….!!!!

மது விலக்கு நடைமுறையில் இருக்கும் பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் சாப்ரா என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 82 ஆக அதிகரித்து உள்ளது. இவ்விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க் கட்சியான பாஜக இது தொடர்பாக அவையில் பல கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. முன்பாக பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ் குமார் […]

Categories
தேசிய செய்திகள்

காதல் மனைவியை கொன்று 50 துண்டுகளாக கூறுபோட்ட கொடூரன்…. பின்னணி என்ன?…. மனதை பதைபதைக்கும் சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இளம் பெண்ணை கொலை செய்து 50 துண்டுகளாக வெட்டிய கணவரின் கொடூர செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சாகிப்கஞ்ச் மாவட்டத்தின் போரியோ காவல் நிலைய எல்லையில் ரூபிகா பகதின் (22) என்பவர் வசித்து வந்தார். பழங்குடி இனத்தை சேர்ந்த இந்த இளம் பெண் தில்தார் அன்சாரி(28) என்பவரை காதலித்து உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 2 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் அண்மையில் திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

காதலனை திருமணம் செய்ய எதிர்ப்பு… வாட்டர் டேங்க் மீது ஏறி இளம் பெண் தர்ணா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் அவரது உறவினர் பையனான தீபக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த இளம் பெண் தீபக்கின் உறவினர்கள் அவர்களது திருமணத்திற்கு மறுப்பதாக கூறி ராட்சத தண்ணீர் தொட்டி மீது ஏறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணை சமாதானப்படுத்தி கீழே இறக்கியுள்ளனர். காதலனை கரம் பிடிக்க […]

Categories

Tech |