அக்டோபர் 27 கிரிகோரியன் ஆண்டின் 300 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 301 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 65 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 939 – இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார். 1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது. 1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இடம்பெற்றது. 1682 – பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது. 1795 – எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது. 1806 – பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர். 1810 – மேற்கு புளோரிடாவின் முன்னாள் எசுப்பானியக் குடியேற்றங்களை அமெரிக்கா இணைத்துக் கொண்டது. […]
