மார்ச் 15 கிரிகோரியன் ஆண்டின் 74 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 75 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 291 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 44 – உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். 351 – இரண்டாம் கான்ஸ்டன்டீனசு தனது உடன்பிறவா சகோதரன் கால்லசுக்கு சீசர் பட்டம் அளித்து, உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்புக் கொடுத்தான். 933 – பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான். 1493 – கொலம்பசு அமெரிக்காக்களுக்கான தனது […]
வரலாற்றில் இன்று மார்ச் 15…!!
