Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

கல்வி கட்டணத்தை கேட்காதீங்க….. தந்தா வாங்கிக்கோங்க…. தமிழக அரசு தகவல் …!!

கல்வி கட்டணம் செலுத்த பெற்றோரை தனியார் பள்ளிகள் நிர்பந்திக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தனியார் பள்ளிகளுக்கு பிரதான வருமானம் கல்வி கட்டணம் தான். அந்த கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றால் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

டபுள் ட்ரீட் கொடுத்துட்டாங்களே… அறிவிப்பால் அசத்தும் அரசு… மாணவர்கள் குஷி …!!

மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாளையோடு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு 6 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏழாவது முறையாக மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் அறிவித்திருந்தன. அதைத் தொடர்ந்து மத்திய […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

2 நாளில் சொல்லுறோம்…! ”இப்போதைக்கு முடியாது” குஷியான மாணவர்கள் …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது ? ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்த பர்வேறு கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தாக்கத்தால் மார்ச் முதல் மாதத்திலேயே மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அக்டோபர் மாதத்தில்தான் கொரோனாவில் உடைய வீரியம் அதிகரிக்கும் என்று அரசு கூறி வருகின்ற நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் குழப்பம் நிலவி […]

Categories
கல்வி சற்றுமுன்

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய பரிந்துரை – கல்லுரி மாணவர்கள் மகிழ்ச்சி …!!

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? அல்லது வேண்டாமா என்பது சம்பந்தமான பரிந்துரை வழங்குங்கள் என்று ஒரு குழுவானது அமைக்கப்பட்டிருந்தது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் தான் இந்த குழு அமைக்கப் பட்டிருந்த நிலையில், அந்த குழு தற்போது முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானது, தற்போதைய சூழலில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் […]

Categories
கல்வி திருவாரூர் மாநில செய்திகள்

திருவாரூர் மத்திய பல்கலை. தேர்வுகள் ரத்து …!!

திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தின் அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு முந்திய பருவ தேர்வு முடிவுகள் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

உங்க இஷ்டத்துக்கு போடாதீங்க… தனியார் பள்ளிகளுக்கு செக்… எச்சரித்த அமைச்சர் …!!

10ஆம் வகுப்பு காலாண்டு,அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்திருக்கிறார். கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதால் என்பதால் தனியார் பள்ளிகள் 10ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடியால் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இந்த சூழலில்  ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேசும் போது, ஜூலை முதல் வாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதம் ஆகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகம் தயாராகும். புத்தகங்கள் தயாரானது மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்க ஆலோசனை  நடக்கிறது. சூழ்நிலையை பொறுத்து பருவ தேர்வு ரத்து செய்யப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Categories
கல்வி சற்றுமுன்

பிளஸ்-2 தேர்வு – தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு …!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுவதாக அண்மைச் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அப்போது நடைபெற்ற பிளஸ் 2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் போன்ற தேர்வினை பல மாணவர்கள் எழுத முடியாத நிலையில் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் நடத்த திட்டமிட்டுப்படிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து […]

Categories
கல்வி சற்றுமுன்

10ஆம் வகுப்பு : அறிவியலுக்கு 75, பிற பாடங்களுக்கு 100 மதிப்பெண் கணக்கீடு …!!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு இலவச புத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலையில் புத்தகங்கள் கொண்டு சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.  உரிய முன்னெச்சரிக்கையுடன் புத்தகம் அனுப்பும் பணி மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.  பத்தாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது. விடைத்தாள்களை ஒப்படைக்க […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்கள்… ”இனி டாக்டர் ஆவது ஈசி” … அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு ….!!

நீட் தேர்வு மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு என்பது மிக மிக அவசியமான ஒன்று என்றுதான் கல்வியாளர் தரப்பிலிருந்து முன்வைக்கக்கூடிய கருத்தாக இருக்கின்றது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை அரசு கல்லூரிகளில் 2600 மாநில ஒதுக்கீட்டு இடங்களாக […]

Categories
கல்வி சென்னை தேசிய செய்திகள்

இந்தியாவில் முதலிடம்… மாஸ் காட்டும் சென்னை ஐஐடி…!!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்ட அறிக்கையில் “மொத்தம் 5,805 கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற விண்ணப்பித்திருந்தன. இந்த பட்டியலில் இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான வரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது”. அதையடுத்து இரண்டாம் இடத்தை பெங்களூரு ஐஐஎஸ்சி பெற்றுள்ளது. மேலும் மூன்றாம் இடத்தை டெல்லி ஐஐடி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

ஜூலை 3ஆவது வாரத்தில் 10, 11, 12 தேர்வு முடிவுகள் வெளியீடு ….!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 15ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து. அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகளில் முனைப்பாக செயல்பட்டு வரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு  முடிவுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதில, 10, 11, 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியீடப்படும். தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு …!!

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் என்பது இன்று வெளியிடப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இணையதளம் மூலமாகவே மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், மாணவர்கள் அவர்கள் பயிலக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியாகி இருக்கிறது. http://www.dge.tn.gov.in/  என்ற […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”நாளை முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும்” – தமிழக அரசு …!!

10, 11, 12ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்வு தொடங்க இருக்கிறது. அதேபோல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய ஒரு தேர்வு மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் இறுதித் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கான ஒரு தேர்வுகள் நடத்துவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

மத்திய அரசு சொல்லுற கேட்கல…..! ”தமிழக அரசுக்கு எதிராக வழக்கு” ஷாக் ஆன எடப்பாடி ..!!

10 வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு ஏற்கனவே தள்ளி வையகப்பட்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அதனுடைய தலைவர் பக்தவச்சலம் சென்னை  உச்சநீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் பள்ளி கல்லூரி போன்ற நிறுவனங்களை திறப்பது குறித்து […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு தேர்வு வேண்டாம்…. களமிறங்கிய ஆசிரியர்கள்…. ஷாக் ஆன தமிழக அரசு …!!

10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி ஆசிரியர் சங்கங்கள் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமென்று தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் பகவத் சலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பொதுநல வழக்காகதொடரப்பட்ட இந்த வழக்கில் ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

நீங்களே சொல்லுங்க…! ”புது முடிவு எடுத்த அரசு” துள்ளிக்குதிக்கும் மாணவர்கள் …!!

பள்ளியை திறப்பது குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நாடு முழுவதும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வு அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு கல்விநிலையங்கள் மூடப்பட்டன. தமிழகத்திலும் இதே நிலை தொடர்ந்ததால் இங்கும் பொத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஜூன் 15ஆம் தேதி தேர்வு: தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு – பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு …!!

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கல்வியாண்டு என்பது கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் குறைவாக இருக்கிறது. 210 நாட்கள் செயல்பட முடியாத ஒரு சூழல் என்பது ஊரடங்கால் ஏற்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டுதமிழக அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருந்தது. அதே போல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது பெற்றோரிடமும் கருத்து கேட்க கல்வித்துறை  முடிவு செய்துள்ளது. பள்ளிகளை திறந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர் விடுதிகள் ஜூன் 11-ல் திறப்பு

 தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகள் ஜூன் 11ம் தேதி திறக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஜூன் 15ல் பத்தாம் வகுப்பு தொடங்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விடுதிகளில் காலை மாலை என இருவேளையும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என  சொல்லப்பட்டுள்ளது. விடுதிகளில் தனிமனித இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட நலத்துறை விடுதியிலிருந்து மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன.

Categories
கல்வி பல்சுவை

ஆன்லைன் மூலம் இலவச நீட் பயிற்சி…! அரசின் அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி …!!

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் இலவச நீட் பயிற்சி ஜூன் 15ல் தொடங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இலவச நீட் பயிற்சிகள் வழங்கி வருகிறது. ஆனால் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட முடியாமல் போய்விட்டது. இதற்கு மாற்றாக அவர்களுக்கு இணைய வழி மூலமாக இலவச நீட் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த அதன்படி […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

குட் நியூஸ் : 10, 12ஆம் வகுப்பு தேர்வு – புதிய உத்தரவு ….!!

பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ள கருத்தில் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய மனித வளத்துறை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

பாலி.விரிவுரையாளர் தேர்வு – 199 பேருக்கு வாழ்நாள் தடை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்திருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு பாலிடெச்னிக் கல்லூரிகளில் இருக்கும் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது, முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதன் அடிப்படையில் பல தேர்வர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் கிட்டத்தட்ட 199 பேர் மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தது. தேர்வை எழுதிய பிறகு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அப்படி மதிப்பெண்கள் வித்தியாசம் இருந்த, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

உங்க இஷ்டத்துக்கு செயல்படாதீஙங்க…! சாட்டையை சுழற்றிய அமைச்சர் ..!!

தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்த பிறகு ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கூட ஜூன் 15ஆம் தேதி ஜூன் முதல் 25-ம் தேதி வரை பத்தாம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

எல்லாமே பெர்பெக்ட்….! ”46.37 லட்சம் கொடுக்குறோம்” எதுக்கு அஞ்சாதீங்க …!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 46.37 லட்சம்  இலவச முகக் கவசங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கில் தமிழக அரசு, கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால அதற்குரிய விளக்கத்தை ஜூன் 11 க்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.ஆகவே இன்னும் இருபது நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

3 மடங்கு அதிகமா இருக்கு….! ”விமானம், ரயில் ஓடுது” யாரும் பயப்படாதீங்க …..!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கான நவீன வாகனம் தொடக்கபட்டது. அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேவி ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பத்தாம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

3, 4 நாளில் அறிக்கை வரும்…. 10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளிவைப்பா? பரபரப்பு தகவல் …!!

10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்று உதயநிதி – அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முதல்வர் ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு தேதியை மாற்றி அறிவித்தார். அதன்படி ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடைபெறும் என அட்டவணை […]

Categories
கல்வி

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… பள்ளி கட்டண உயர்வு கிடையாது…!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கட்டண உயர்வு கிடையாது என அறிவிப்பு ….   தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான நந்தகுமார் பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், “கொரோனா பரவும் இந்தச் சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்கள் அமைத்ததற்காக பள்ளிக் கல்வித் துறையை பாராட்டுகின்றோம்.   பள்ளிக் கல்வி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு” – அண்ணா பல்கலை. தகவல் …!! 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ, எம்சிஏ முதுநிலை பி.இ படிப்புகளில் சேர டான்செட் தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு கடத்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம்  வெளியிட்டுள்ளது. மே 23ம் தேதி வரை tancet.annauniv.edu  தளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

ஜூன் 16ல் 11ம் வகுப்பு எஞ்சிய தேர்வு நடத்தப்படும் – பள்ளிக்கல்வித்துறை …!!

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பட்ட தேர்வுகளை ஜூன் 16ஆம் தேதி நடைபெறுமென்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு தொடுக்கப்பட்டது. கொரோனா அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்வை நடத்துவது சரியானதாக இருக்காது, எனவே ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

”ஜூன் 18ல் 12ம் வகுப்பு எஞ்சிய தேர்வு” கல்வித்துறை அறிவிப்பு …!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்காக ஜூன் 18ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு தொடுக்கப்பட்டது. கொரோனா அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்வை நடத்துவது சரியானதாக இருக்காது, எனவே ஒத்திவைக்க வேண்டும் என்று […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஜூன் 15 முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான புதிய அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது என்று தெரிவித்தார். […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை வெளியீடு …!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான புதிய அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள்  தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. 15 ஆம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஒவ்வொருவரும் ஒரு விதமா பேசுறாங்க…! நீங்க தான் முடிவெடுக்கணும் …!!

10ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக, ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த தேர்வை தற்போது நடத்த வேண்டாம் என்று சொல்லி வரக்கூடிய சூழ் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதில் எந்த மாதிரி சிக்கல் இருக்கிறது, அந்த சிக்கலை எப்படி சரிசெய்து ? எவ்வாறாக மாணவர்களை தேர்வு எழுத வைக்கலாம் என்பது […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

20 மாநிலம் முடிவெடுத்தாச்சு…..! நாம என்ன பண்ணலாம் ? எதிர்பார்ப்பில் மாணவர்கள் …!!

10ஆம் வகுப்பு தேர்வை  நடத்துவது குறித்து தமிழக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் எல்லாம் இதற்கான தற்போதைய சூழல் தமிழகத்தில் இல்லை என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள். பல பகுதிகளில், குறிப்பாக வடமாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக தேர்வை தற்போது […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை : இதோ உங்களுக்காக

நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை என்பது தற்போது வெளியிடப்படுள்ளது. ஊரடங்கும் நாடு பிறப்பிக்கப்பட்டதால் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ தேர்வு கால அட்டவணை என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு அட்டவணையும்,  டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல தேர்வு நடைபெறும் வகுப்பறைகளில் கிருமிநாசினி கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூலை 1ஆம் தேதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ….!!

நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை என்பது தற்போது வெளியிடப்படுள்ளது. ஊரடங்கும் நாடு பிறப்பிக்கப்பட்டதால் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ தேர்வு கால அட்டவணை என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு அட்டவணையும்,  டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல தேர்வு நடைபெறும் வகுப்பறைகளில் கிருமிநாசினி கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி […]

Categories
கல்வி சற்றுமுன்

10ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் – அமைச்சர்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஒன்றிலிருந்து 12ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேர்வு தேதியில் மாற்றம் இருக்குமோ, அல்ல தேர்வு ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் இன்றைக்கு ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்திலிருந்து பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. இதனால் தான் தேர்வு தேதி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா? – சர்வதேச நிபுணர்கள் சொல்வது என்ன ?

பள்ளி திறந்தாள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் வேண்டாமா என்ற கேள்வி பெற்றோர் மனதில் எழுந்திருக்கின்றது. இதுகுறித்து சர்வதேச நிபுணர்கள் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள். குழந்தைகளை கொரோனா தாக்கும் எனினும், பெரியவர்களுக்கு ஏற்படும் அளவிற்கு சேதம், குழந்தைகளுக்கு ஏற்படுவது இல்லை. அது மட்டுமல்ல சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு விடும்போதும், அங்கிருந்து அழைத்துச் செல்லும் போதும், பள்ளியில் உள்ள பெற்றோர்கள் நுழையக்கூடாது. பள்ளிக் கூடத்துக்கு உள்ளே எங்காவது கையெழுத்திடும் போது ஒரு பேனாவை […]

Categories
கல்வி சற்றுமுன்

CBSE 10,+12 தேர்வு அட்டவணை இன்று மே 18இல் வெளியீடு …!!

CBCSE 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை மே 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் உட்பட மக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொத்தேர்வின் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

வீட்டுக்கு அருகே 10ம் வகுப்பு தேர்வு மையம்…! கல்வித்துறையின் அதிரடி முடிவு …!!

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அந்தந்த பகுதியிலே தேர்வு மையம் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்வு ஜூன் 1ல் இருந்து 12 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு கேள்வியாக முன்வைக்கப் பட்டது என்னவென்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய மாணவர்கள் எப்படி இதில் பங்கேற்பார்கள் ? அவர்கள் அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு வெளியே விடுவதற்கு அனுமதி வழங்கப்படாதே ? என்ற […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

CBCSE 10,+12 தேர்வு அட்டவணை இன்று வெளியீடு ….!!

CBCSE 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் உட்பட மக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. பத்தாம் வகுப்பு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அந்தந்த பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு… ஒரு அறைக்கு 10 மாணவர்கள் …!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்த பள்ளியிலே எழுதலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பொருத்தவரை வைக்கும் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 825 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருசில தேர்வு மையங்களில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். ஆனால் பத்தாம் வகுப்பு இருக்கக்கூடிய பள்ளிகளின் எண்ணிக்கை என்று பார்த்தோமானால் சுமார் 12 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்கள் வேறு வேறு தேர்வு மையங்களுக்குச் செல்லும் போது ஒரு […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

கல்லூரிகள் எப்போது ? அமைச்சர் விளக்கத்தால் மாணவர்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை வந்த பிறகே கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளுக்கு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கல்லூரிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழும்பி வந்த நிலையில் கல்லூரிகள் திறப்பு குறித்தும், செமஸ்டர் தேர்வு குறித்தும்  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

9, 11ஆம் வகுப்புக்கு இறுதித் தேர்வு இல்லை – சிபிஎஸ்இ உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சி …!!

9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சிபிஎஸ்இ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்வி நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்களால் தேர்வு எழுத முடியாது, தேர்வு எழுதாமலே அவர்களை அடுத்த கல்வியாண்டு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

இறுதித் தேர்வு இல்லை…. தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை… சிபிஎஸ்இ புது உத்தரவு …!!

9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து சிபிஎஸ்இ  விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் பள்ளிக்கல்வித் துறையும், நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சாகமும் கல்வி நிலைய திறப்பு, தேர்வுகள் குறித்து அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை வெளியீட்டு வருகின்றன.அந்த வகையில் தற்போது சிபிஎஸ்இ ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 9ஆம் வகுப்பு மற்றும் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

#Breaking: 9, +1 வகுப்பு தேர்வு – சிபிஎஸ்இ விளக்கம் …!!

9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து சிபிஎஸ்இ  விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் பள்ளிக்கல்வித் துறையும், நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் கல்வி நிலைய திறப்பு, தேர்வுகள் குறித்து அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை வெளியீட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சிபிஎஸ்இ ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில், தோல்வியடையும் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல் …!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கவேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இன்று காலை தலைமை செயலகத்தில்செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தள்ளி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வு பொது தேர்வு நடத்துவது குறித்த தேதி அறிவித்திருந்தார். குறிப்பாக ஜூன் 1முதல் ஜூன் 12 வரை பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என்றும், அதேபோல ஒத்திவைக்கப்பட்ட பதினோராம் வகுப்பு தேர்வு தேர்வு ஜூன் இரண்டாம் தேதியும், தேர்வை எழுதாமல் விட்ட பன்னிரண்டாம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? அமைச்சர் பதில் …!!

10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 10ஆம் வகுப்பு பொதுதேர்வு குறித்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். அதே போல விடுபட்ட +1, +2 பொதுத்தேர்வில் தேதியையும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதே போல நீட் தேர்வை பொருத்தவரை பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுதும் உள்ள 10 கல்லூரிகளில் இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயிற்சி வகுப்புகள் என்பது விரைவில் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு…. 11ஆம் வகுப்பு…. 12ஆம் வகுப்பு… தேர்வுகள் அறிவிப்பு – அமைச்சரின் முழு தகவல் …!!

ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பொதுத்தேர்வுகளையும் நடத்துவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். மார்ச் 27ஆம் தேதியிலிருந்து நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது. அதற்கான அறிவிப்பையும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாருக்கும் தேர்வு: […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

விடுபட்ட +2 தேர்வு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் –  தமிழக அரசு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டிருந்த ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதே போல கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட போக்குவரத்து சிக்கல் உள்பட பல காரணங்களால் 12ஆம் வகுப்பு இறுதி பொதுத்தேர்வை  எழுதாத 36 ஆயிரத்து 842  மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் […]

Categories

Tech |