Categories
கல்வி தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு… CBSE 10,12 வகுப்புகளுக்கு… “தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 வெளியீடு”…!!

பிப்ரவரி 2-ம் தேதி சிபிஎஸ்இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணை வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வருவதை அடுத்து, நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் 10-ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. செய்முறைத் தேர்வுகள் மார்ச் மாதம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே… “பொதுதேர்வில் மாற்றம்”… அமைச்சர் அறிவிப்பு…!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வகுப்புகள் சரிவர நடைபெறாத காரணத்தினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடங்களை முடிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளும் நடைபெறவில்லை. இதனால் பொதுத்தேர்வை எதிர்க்கொள்ள மாணவர்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், பொதுதேர்வில் மாற்றங்கள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு கட்டாயம்”… அண்ணா பல்கலை அறிவிப்பு..!!

“ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.” என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மணி நேரம் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும். லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வு எழுதலாம். 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும். என்று […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தட்டச்சு பணியாளர்களே…! மிக மிக முக்கிய அறிவிப்பு …. தேதி சொல்லிட்டாங்க ரெடியா இருங்க …!!

தட்டச்சர் பணிக்கான இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு 197 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். வரும் 22ஆம் தேதி அவர்களுக்கான பணி இடங்களை ஒதுக்கீடு செய்வது குறித்த கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

‘மாணவர்கள், பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை’… ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர்..!!

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கூறியுள்ளார். பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லை என்றும், வருகை பதிவேடு என்பது பள்ளிகளில் கடைபிடிக்க படாது என்று திருச்சி மண்டல தலைவரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருமான நிர்மலா ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உடல்நிலையில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதையொட்டி சில முன்னேற்பாடுகள் குறித்து திருச்சி மண்டல தலைவர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய […]

Categories
கல்வி சென்னை மாவட்ட செய்திகள்

70% OK ஆகிட்டு…! சென்னையில் நாளை முதல்….வெளியான புது அறிவிப்பு …!!

சென்னையில் நாளை 70 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என மாநகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. மாணவர்கள் பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தைப் பெற்று தான் பள்ளிக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 38 உயர்நிலைப் பள்ளிகளும், 32 மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய கல்வி அலுவலர் முனியன் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிப்பது எப்படி..?

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதல் கட்டமாக 100 மாணவர்களுக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே… பாடங்கள் குறைப்பு… என்னென்ன பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன..?

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பாடங்கள் குறைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. என்னென்ன பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல் வெளியிட வில்லை. கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதில் பாடங்கள் சரியாக முடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக 9-ம் வகுப்பு வரையில் உள்ள 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 10, 11, 12 மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக 35% […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

7.5% உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வு ….. சண்டைபோட்ட மாணவர்கள்….. உத்தரவு போட்ட தமிழக அரசு …!!

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒத்துக்கிட்டின் கீழ் தனியார் கல்லூரியில் இடம் கிடைக்குத்தும் வாய்ப்பை தவறவிட்ட 4 மாணவிகளுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மூலம் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான  இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கான கலந்தாய்வு நடைபெற்றது. இதற்காக 47 மருத்துவ இடங்கள் ஒதுக்கப் பட்டிருந்தன. இன் நிலையில் முதற்கட்ட கலந்தாய்வு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கடினமாக இருந்த குரூப்-1 தேர்வு… கட்-ஆப் மதிப்பெண் குறையும் அபாயம்… தேர்வர்கள் அதிர்ச்சி…!!!

நேற்று நடந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடினமாக இருந்தது என்று தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடந்தது. ஒவ்வொரு முறையும் தேர்வு நடப்பதற்கு முன்னதாக எந்தெந்த பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்? எத்தனை தொகுப்புகளாக கேள்விகள் இடம்பெற்றிருக்கும்? என்பது போன்ற மாதிரி வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தால் வெளியிடப்படும். ஆனால் தற்போது நடந்து தேர்வு முன்பாக வெளியிட்ட மாதிரி வினாத்தாள் போல் இல்லாமல் மாறுபட்டு இருந்தது. இதனால் தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்தது […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

மாணவர்களே… “பொதுத்தேர்வு தேதி… இன்று மாலை 6 மணிக்கு”… வெளியான அறிவிப்பு..!!

சிபிஎஸ்இ பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கான தேதி வெளியாக உள்ளதாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ தேர்வுகள் மாநிலத் தேர்வுகளுக்கு முன்னதாகவே நடத்தப்படுவது வழக்கம். இந்த வகையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். ஆனால் பிற மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்திலேயே பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அமைச்சர் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தேர்வுக்கு ரெடி ஆகிட்டீங்களா? ”இது கட்டாயமில்லை” டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ..!!

போட்டி தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் தேர்வர்கள் ஆதார் எண்ணை ஒரு முறை பதிவேற்றத்தில் (OTR) இணைத்தால் மட்டுமே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். அப்போது மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.மேலும், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

முக்கிய அறிவிப்பு…” 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை”… விண்ணப்பிக்கும் முறை இதோ..!!

தமிழகத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்க மேற்கொள்ளப்படும் தேர்வு தேதி மற்றும் விதிமுறைகள் குறித்து தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை பெறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வட்டார தேர்விலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு தேதி. 21.02.2021 இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை https://www.dge.tn.gov.in / இணையதளத்தில் 28.12.2020 முதல் 8.01.2021 வரை பதிவிறக்கம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறதா..? அமைச்சர் விளக்கம்..!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பதினொன்றாம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே மூடப்பட்ட பள்ளிகளை நவம்பர் 16ஆம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதி இருந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பு […]

Categories
கல்வி மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் தேர்வு எழுதிய கல்லூரிமாணவர்கள்… கல்லூரிக்குள் அனுமதிக்காத நிர்வாகம்…!!!

தாமரைக்குளம்  அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் தங்களது தேர்வுகளை சாலையோரங்களிலும், பயணிகள் நிழற்குடை, மைதானங்களிலும் அமர்ந்து எழுதியுள்ளனர். தாமரைக் குளம் பகுதியில் உள்ள அரியலூர் நகரில் அரசு கலை கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 13 துறைகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. அதன்பின் அரசு அறிவிப்பின் படி கடந்த 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு… 35% பாடங்கள் குறைப்பு… அமைச்சர் செங்கோட்டைன்..!!

10, 11, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாடங்களை 35% குறைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 35 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகையை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன் கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒன்பதாம் வகுப்பு வரை 50% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், 10, 11 மற்றும் […]

Categories
கல்வி சென்னை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மோசடி… வசமாக மாட்டிக்கொண்ட மாணவிகள்…!!!

நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்து மாட்டிக்கொண்ட வழக்கில் 3 மாணவிகள் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. அதில் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீஷா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரனும் கலந்து கொண்டனர். அப்போது தீசா தனது மதிப்பெண் சான்றிதழை அளித்தார்.அதில் அவள் 610 மதிப்பெண் பெற்று இருந்தது தெரியவந்தது. ஆனால் அந்தச் சான்றிதழ் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு… இந்த கண்டிஷன் ஃபாலோ பண்ணனும்… மாநில அரசு அதிரடி..!!

டிசம்பர்14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. ஆன்லைன் மூலமாக மட்டுமே மாணவர்கள் பாடம் பயின்று வந்தனர். இந்நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி 3 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும். […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு… அரசு அறிவித்த குட்நியூஸ்..!!

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை சுமையை அதிரடியாக குறைக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பித்து வருகின்றனர். […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

8 மாதங்களுக்குப் பிறகு…”டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு”… வெளியான அறிவிப்பு..!!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த தமிழ்வழி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் நேற்று ஒப்புதல் அளித்தார். தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கான பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழ் வழியில் படித்து […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இன்று… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. பட்டியல் http://www.dge.tn.gov.in/ இந்த இணையதளத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

இன்று முதல்… வாரத்திற்கு ஆறு நாட்கள் கட்டாயம் … வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று முதல் வாரத்திற்கு ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர். இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு மற்ற ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே… செமஸ்டர் தேர்வுகள்… அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

நடப்பாண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 14ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பின்பு மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. தேர்வு தொடர்பான அட்டவணை இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என்று கூறியிருந்தது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

திடீர் அறிவிப்பு…. தேர்வுகள் ஒத்திவைப்பு …!!

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், இந்த தேர்வு முடிந்த பிறகே இதர மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான அட்டவணை விரைவில் அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கல்வி மாநில செய்திகள்

ஜனவரி மாதம் கட்டாயம் திறக்கணும்… மத்திய அரசு அதிரடி..!!

பொதுத் தேர்வுக்காக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்த ஜனவரி மாதம் கண்டிப்பாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சந்தேகம் கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து 10, 11, 12 மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயத்தில் கொரோனா […]

Categories
கல்வி மாநில செய்திகள்

FlashNews: கட்டணம் அதிரடி உயர்வு – மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி …!!!

நவம்பர் 3ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை கன அறிவிப்பு வெளியாகியது. இதை அடுத்து 12ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 16ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கட்டணங்கள் ரூபாய் 3.85 லட்சம் முதல் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அரையாண்டு தேர்வு ரத்து, பள்ளி திறக்கப்படாது – முக்கிய தகவல் …!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இன்னும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. எப்போது பள்ளி, கல்லூரி திறக்கப்படும் என்ற  அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், பள்ளி கல்வித்துறை தரப்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் மாதம் வரை திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அரையாண்டு தேர்வு நடத்துவதற்கான […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

இறுதி பருவத் தேர்வு கட்டாயம் – யூஜிசி அறிவிப்பு …. மாணவர்கள் அதிர்ச்சி …!!

கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என யுஜிசி பதில் மனு தாக்கல் செய்துள்ளது மாணவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்துக்கு தடை கோரிய வழக்கில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என யூஜிசி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து இருக்கின்றது. கொரோனா காரணமாக பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து பட்ட  படிப்புகள் தேவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் காரணமாக முதலாம்,இரண்டாம் ஆண்டு கலை […]

Categories
Uncategorized கல்வி

10 மற்றும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. 10, 12 மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணை தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கும் பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படுகின்றன. பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளில் – அரசு அதிரடி உத்தரவு …!!

மத்திய அரசு கொண்டு வந்த மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு,  மருத்துவம் கனவை தொலைக்கின்றார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல் கட்சிகள் இதனை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். ஆனாலும் தமிழக அரசு…  அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.கோச்சிங் சென்டர் தொடங்கி பல ஏற்பாடுகளை அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த தற்போது தமிழக […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இன்று முதல் – மாணவர்களை அறிவிப்பு ….!!

பள்ளி மாணவர்கள் அரசு தேர்வை  எழுதி, அதன் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களது இறுதி ஆண்டு தேர்வு தேர்ச்சி பெற்று அதனை பதிவு செய்கின்றனர். அதேபோல கல்லூரி செல்லும் மாணவர்களும் அடுத்தடுத்து அதற்கான பதிவுகளை செய்துவருகின்றனர். வேலைவாய்ப்பு உறுதி செய்ய மாணவர்கள் இந்தப் பதிவை தொடர்ச்சியாக செய்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு பதிவு குறித்தான ஒரு அறிவிப்பு மாணவர்களுக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பொறியியல் படிப்பில் நிர்வாக இடங்கள் அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது…!!

தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடங்களையும் சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்குகின்றன. அதிகமான இடங்களை அரசுக்கு ஒதுக்கும் படி தனியார் பொறியியல் கல்லூரிகளை அரசு நிர்பந்திப்பதாக கூறி கோவை தொண்டாமுத்தூர் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் தலைவர் தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி…!!

ஆந்திர மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வந்தாலும் பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் சூழ்நிலையை கருதி அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

வெளியான “நீட்” தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் முடிவுகளை காணலாம்…!!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக  நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 14ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. ntaneet.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களது முடிவுகளை பார்க்கலாம்

Categories
கல்வி மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது..? அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கொரோனா ஊரடங்கு  காலத்தில் மொத்த கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை நிர்பந்திக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இது தொடர்பான வழக்கு […]

Categories
கல்வி மதுரை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு முடிவு – உயர் நீதிமன்றத்தில் முறையீடு…!!

மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சம்மந்தமாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பொறியியல் 2-ம் கட்ட கலந்தாய்வு – இன்று முதல் தொடக்கம்…!!

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 22,902 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க ஒரு லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றனர். முதற்கட்டமாக நடத்தப்பட்ட சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 457 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதை தொடர்ந்து பொதுப் பிரிவுக்கான […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு – மாணவர்கள் வருவது கட்டாயமில்லை…!!

உத்திரபிரதேச அரசு வழிகாட்டுதலின்படி 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 19ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவியதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை விடப்பட்டது. கொரோனா இன்னும்  குறையாத காரணத்தால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடைபெறுகிறது. ஊரடங்கு […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்.14 முதல் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ….!!

தமிழகத்தில் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 11, 12ஆம் வகுப்புக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும், தலா 600 மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றதா? இன்று ஆலோசனை…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது மற்றும் பொதுத்தேர்வு நடப்பதற்கான தேதியை அறிவிப்பது போன்றவை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்துகின்றார் .  தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மற்றும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான அங்காடிகளும் திறக்கப்பட்டன.ஆனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கமாக மார்ச் மாதம் முதல் […]

Categories
கல்வி நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் வகுப்பு” சிக்னல் தேடி காட்டிற்கு செல்ல மாணவர்கள்…. விலங்குகள் தாக்கும் அபாயம்…. பெற்றோர்கள் கோரிக்கை….!!

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் சிக்னலுக்காக  மாணவர்கள் வனப்பகுதிக்கு செல்வதால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் இருக்கின்றது. கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் செல்போன் சிக்னல் மட்டுமே கிடைக்கின்றது. பிற தனியார் செல்போன் சிக்னல்கள் சரிவர கிடைப்பதில்லை அதனால் ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்க முடியாமல் அதிகமான கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இன்ஜினியர் மாணவர்களே தயாரா இருங்க….. OCT-1 முதல் ஆரம்பம்….. அமைச்சர் அறிவிப்பு….!!

இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு தேதியை  உயர் கல்வி துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்ந்து ஊரடங்கு  தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. +12 தேர்வு வெளியானவுடன் முதற்கட்டமாக தொடங்கிய இன்ஜினியரிங் சேர்க்கை தகுதி தற்போது முடிவு பெற்றதையடுத்து, கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு லட்சத்து எட்டாயிரம் மாணவர்கள் […]

Categories
கல்வி பல்சுவை

1இல்ல… 2இல்ல…. 8 இருக்கு… ”குவியும் கல்வி உதவி தொகை” குஷியில் மாணவர்கள்….!!

மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய இணையத்தளங்கள் சில வெளியாகியுள்ளது மாணவர்களுக்கு அவர்களது படிப்பிற்கான செலவை ஈடுசெய்ய பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் திறமை, எடுத்திருக்கும் பாடப்பிரிவு, இனம், நாடு ஆகியவற்றின் அடிப்படையில் பல உதவித்தொகைகள் கொடுக்கப்படுகின்றன. வளர்ந்த நிறுவனங்கள் பல உதவித்தொகையை மாணவர்களுக்கு கொடுத்து வருகின்றன. கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்கள் சிலவற்றை இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். அவற்றில் சில www.scholarshipsinindia.com www.education.nic.in www.scholarship-positions.com www.studyabroadfunding.org […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பெற்றோர் சொல்லிட்டாங்களா ? அப்படினா மட்டும் வாங்க….! தமிழகம் முழுவதும் உத்தரவு …!!

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மார்ச் முதல் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள்  திறப்பு தொடர்பான உத்தரவு சமீப நாட்களாக வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

செப்டம்பர் 28ஆம் தேதி பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!!

பி.இ., பி.டெக்., பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. […]

Categories
கல்வி தேசிய செய்திகள் பல்சுவை

எண்ணத்தை வெளிப்படுத்த அரிய வாய்ப்பு….. வீடு என்றால் என்ன….? லாக்டவுனில் புதுமையை புகுத்தும் மாணவர்கள்….!!

கொரோனா பரவலினால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைபட்டனர். பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் வீட்டிலேயே இருந்து பல புதிய விஷயங்களை கற்கத் தொடங்கினர். அதோடு ஊரடங்கில் இதுவரை தெரியாத பலவற்றை வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் பலருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் நலந்தாவே  மற்றும் அகஸ்தியா அறக்கட்டளையின் மாணவர்கள் ஒன்றிணைந்து டிஜிட்டல் முறையில் எக்ஸிபிஷன் ஒன்றை நடத்துகின்றனர். இம்மாதம் 26ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11 […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்டோபர் 1- ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!!

அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தன்னார்வு அடிப்படையில் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும்..!!

புதிய கல்வி கொள்கை மூலம் சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் இயங்கிவரும் கவுகாத்தி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி இளைஞர்களின் சிந்தனையில் தான் நாட்டின் எதிர்காலம் உள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களின் கனவுகள் தான்  இந்தியாவை உருவாக்கப் போகிறது என குறிப்பிட்ட பிரதமர், எதிர்காலத்திற்கு தயாராவதற்கான நேரம் இது எனவும் கூறினார். சர்வதேச கல்வி மையமாக இந்தியாவே தேசிய […]

Categories
கல்வி சென்னை மாவட்ட செய்திகள்

நீதி தவறிய பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகியை நீக்குக – பேராசிரியர்கள் போராட்டம்..!!

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேராசிரியர்கள் 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் நிரந்தர பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை அறக்கட்டளை நிர்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நேரடியாக ஷோ காஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு 18 நாட்களில் விசாரணையே நடத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அநீதியாக […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரியர் தேர்வில் மாணவச் சமுதாயம் பயப்படத் தேவையில்லை – தமிழக அரசு..!!

அரியர் தேர்வு விவகாரத்தில் மாணவ சமுதாயம் அஞ்சத் தேவையில்லை என சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பழகன் யுஜிசி ஏஐசிடிஇ ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உயர்கல்வித்துறை செயல்படுவதாகவும், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி அரசு செயல்படும் என்றும் குறிப்பிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மெயில் ஐடியில் இருந்து ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பப்படவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தனிப்பட்ட முறையில் ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பியதாகவும் கூறினார். அரியர் தேர்வு […]

Categories

Tech |