நெருஞ்சி செடியில் பல மருத்துவ குணங்கள். இதனால் நம் உடலில் பல பிரச்சினைகள் தீரும். அதை குறித்து தெளிவாக பார்ப்போம். நெருஞ்சி செடி வாதம் , கபம் போன்றவற்றை குறைக்கும். பசியை தூண்டும், வயிற்றுக்கோளாறுகளை போக்கும். மலச்சிக்கல், மூலவியாதிகளுக்கு நெருஞ்சில் பயன்படுகிறது. நெருஞ்சில் கஷாயத்துடன் சிறிது சுக்கு சேர்த்து காலையில் பருகினால் ரூமாட்டிஸம், இடுப்பு வலி போன்றவை குறையும். நெருஞ்சி செடி இதயத்திற்கு நல்லது. ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து சீராக இரத்த ஒட்டம் நன்றாக இயங்க உதவும். […]
