வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாளையம்பட்டி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பொன்னுசாமி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 […]
