விக்கிரவாண்டியில் பாமக – தேமுதிக கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி தொகுதிக்காக 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். […]
