10 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் சிரமப்பட்டு வரும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை அடிவாரப் பகுதியில் இருக்கும் எம்.ஜி.ஆர் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அப்பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பெருமாள் மலை அடிவாரத்தில் இருக்கும் சாலையில் காலி […]
