மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 16-ம் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது குறித்து தர்மராஜ் பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். […]
