Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“என்னை ஏமாத்திட்டாங்க” மலேசிய பெண்ணின் பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மலேசிய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிக்கந்தர்புரத்தில் இம்ரான்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலேசியாவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் இம்ரானை மீண்டும் மலேசியாவிற்கு அழைத்துள்ளார். அப்போது அங்கு செல்ல மறுத்து இம்ரான் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் இம்ரான், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஸ்கூலுக்கு ஒழுங்கா போ” மகளை கண்டித்த பெற்றோர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை பெரியகுளம் காலனியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள்(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்த இசக்கியம்மாளை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த இசக்கியம்மாள் அளவுக்கு அதிகமான சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துவிட்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் பெண்ணை எரித்து கொலை… அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீஸ் தீவிர விசாரணை…!!!

பட்டப்பகலில் பெண்ணை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகில் பேட்டை ரொட்டிக் கடை பேருந்து நிலையத்திலிருந்து பழையபேட்டை செல்லும் பாதையில் ஆதம்நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்றுமுன்தினம் மதியம் ரோட்டின் ஓரம் ஒரு பெண்ணின் சடலம் தீயில் எரிந்து கொண்டு இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவங்க மீது உரிய நடவடிக்கை எடுக்கணும்” பெற்றோர் அளித்த மனு…. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை….!!

அரசு பள்ளியில் ஏற்பட்ட மோதலில் மாணவரை கொன்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வசூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பள்ளகால் புதுக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். அங்கு மாணவர்களிடையே நடந்த மோதலில் செல்வசூர்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து செல்வ சூர்யாவை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிக்கு திடீரென ஏற்பட்ட பிரசவ வலி…. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை…. மருத்துவ உதவியாளர்களுக்கு குவியும் பாராட்டு….!!

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்தியாபுரம் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் பிரசவத்திற்காக இளையநயினார் குளத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் ஐஸ்வர்யாவை உடனடியாக மீட்டு திசையன்விளை 108 ஆம்புலன்ஸ் மூலம் கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியின் சமாதிக்கு சென்ற நபர்…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இளையநயினார்குளம் கிராமத்தில் விவசாயியான செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அழகம்மாள் இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவியை இழந்த துக்கத்தில் இருந்த செல்லதுரை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து தனது மனைவியின் சமாதிக்கு சென்று செல்லதுரை விஷம் குடித்து தற்கொலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆளில்லாத வீட்டில் உள்ளே புகுந்த திருடர்கள்…. ‘ஓட ஓட’ விரட்டிய பெண்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆட்டோ டிரைவர் வீட்டில் திருட வந்த திருடர்களை பெண்கள் ‘ஓட ஓட’ விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அன்னை நகர் பகுதியில் ஆட்டோ டிரைவரான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அதன்பின் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த பொருட்களை திருட முயன்றனர். அப்போது சுப்பிரமணி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருந்த மாடு…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

சிறுத்தை மாட்டை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள முந்தை துறை புலிகள் காப்பகம், பாவநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில்  திருப்பதியாபுரம், கோதையாறு, வேம்பையாபுரம்   போன்ற மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில்  ஏராளமான விவசாயிகள்  தங்களது வீடுகளில் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செட்டிமேடு கிராமத்தை சேர்ந்த  ராஜா என்பவர்  தான் வளர்த்து வந்த பசு மாட்டை மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்தில்  தோட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் உள்பட 2 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி,சி நகரில் அருள் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் இசை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருள்ராஜ் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து ரெட்டியார்பட்டி மலை அருகே வைத்து அருள்ராஜ் அந்த மாணவிக்கு பாலியல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. பூசாரி செய்த வேலை…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகேசபுரத்தில் ஜெயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயகுமார் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த இளம்பெண்ணுக்கு நேற்று மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

5 மாத குழந்தை விற்பனை…. தந்தை உள்பட 5 பேர் கைது…. நெல்லையில் பரபரப்பு…!!

பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தந்தை உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அண்ணாநகரில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கசெல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூன் என்பவர் தங்கசெல்வியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தங்கசெல்விக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கூட்டப்பனை சுனாமி நகரில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான மாரியப்பன் என்பவர் பச்சிளம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்”… ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…!!!!

திருநெல்வேலியில் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாளையங்கோட்டை ஒன்றிய தலைவர் சுரேஷ் தலைமை தாங்க, மாவட்ட பொறுப்பாளர் சிம்சன், மாநிலத் துணைத் தலைவர் இசக்கிமுத்து, இணைச்செயலாளர் வானமாமலை, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், பொருளாளர் ஆசீர் ஜெபராஜ் உள்ளிட்டோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பாளையங்கோட்டை அருகே ரேசன் அரிசி கடத்தல்”…. 2 பேரை கைது செய்த போலீஸார்…!!!

பாளையங்கோட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தியபோது அவ்வழியாக வந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் பாளையங்கோட்டையை சேர்ந்த சாலை குமார், ஆறுமுகம் உள்ளிட்ட இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தார்கள் மேலும் அவர்களிடமிருந்த ரேஷன் அரிசி மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணி நியமன ஆணை வழங்க வேண்டும்…. பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு…!!!

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக ஆசிரியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள தி.தி.அ.க தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 54 பேருக்கு இது வரை பணி நியமன ஆணை வழங்கப் படாமல் இருக்கிறது. இதன் காரணமாக  54 ஆசிரியர்களும் ஊதியம் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயி”… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!!!!

ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயி திடீரென தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தார்கள். அப்போது சிங்கிகுளம் இந்திரா நகரில் வாழ்ந்து வரும் விவசாயியான முருகன் என்பவர் மனு கொடுக்க வந்த பொழுது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் நடந்த தாக்குதல்…. பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திகுத்து…. முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு….!!

தாக்குதலில் காயமடைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு 5 லட்ச ரூபாய் காசோலை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. நெல்லையில் உள்ள சுத்தமல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் உள்பட 3 பேர் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்றனர். இவர்களை மடக்கிய போலீசார் மது அருந்திவிட்டு இருசக்கரம் ஓட்டியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு மார்க்ரெட் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இனிமேல் அனைத்து காவல் நிலையங்களிலும்…. அரசின் அறிவிப்பு…. டி.ஜிபி. சைலேந்திரபாபு அளித்த பேட்டி….!!

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் குறைந்து வருவதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள சுத்தமல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் உள்பட 3 பேர் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்றனர். இவர்களை மடக்கிய போலீசார் மது அருந்திவிட்டு இருசக்கரம் ஓட்டியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு மார்க்ரெட் தெரசா பணியில் இருந்தபோது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற வாகனம்…. உயிருக்கு போராடிய காவலர்…. வள்ளியூரில் கோர விபத்து….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதியில் செந்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் வள்ளியூர் நான்கு வழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென செந்தில் முருகன் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சோசியல் மீடியாவில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்”… விசாரணையில் வெளிவந்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்…!!!

சோசியல் மீடியாவில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் வாழ்ந்து வருபவர் 29 வயதுடைய முத்துக்குமார். இவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, இணையத்தில் அந்தப் பெண்ணு அனுப்பி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதுகுறித்து புகார் வந்ததையடுத்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் சைபர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு…. சடலமாக மீட்கப்பட்ட பெண்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மானூர் தாலுகாவில் இருக்கும் நரிக்குடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் சாமி. இவர் கேரளாவில் இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவருடைய இளைய மகளான 23 வயதுடைய தங்கதுரைச்சிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தங்கதுரைச்சி அவரது தாயாரிடம் கிணற்றுக்கு சென்று குளித்து வருவதாக கூறி சென்றுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்…. கலெக்டரிடம் மனு அளித்த மாணவ, மாணவிகள்..!!

நிரந்தர சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று  பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் ஷேக் அயூப், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் நல அலுவலர் சரசுவதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் சேரன்மாதேவி அருகில் புதுக்குடி இந்திரா காலனியில் வசித்து வந்த மாரிமுத்து என்பவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு கேட்டு… பொதுமக்கள் கலெக்டரிடம் மனு…!!!

குறைதீர் கூட்டத்தில் ரேஷன் கடை கேட்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு கேட்டும் பொது மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் நெல்லை அருகில் பாலாமடை இந்திரா நகரில் வசித்து வந்த பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் தங்கள் ஊரில் ரேஷன் கடை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் கண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

3 பேர் கொடூர கொலை.… “உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு”… முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தல்…!!!!

நெல்லை அருகில் கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நெல்லை மாவட்டம், மானூர் அருகில் நாஞ்சான்குளம் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் கட்டிட காண்டிராக்டர் ஜேசுராஜ்(73). இவர் தம்பி மரியராஜ்(56) கிறிஸ்தவ மதபோதகராக இருந்து வந்துள்ளார். இவர்களுடைய சகோதரி வசந்தா(40) பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கும் அதே ஊரிலுள்ள இவர்களுடைய சித்தப்பா மகனான அழகுமுத்து என்பவருக்கும் இடையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடிக்கடி தகராறு… “விஷம் குடித்த நர்ஸ் மற்றும் மகள் மரணம்”…. சோக சம்பவம்..!!

குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து நர்ஸ், அவருடைய மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சந்திப்பில் சி.என். கிராமத்தில் வசித்து வருபவர் காற்றாலை இன்ஜினியர் மாடசாமி. இவருடைய மனைவி சுமதி(38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. சுமதி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மாடசாமி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தபோது சுமதி மற்றும் இளைய மகள் சுப […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பஸ் நிலையத்தில் வெடித்த நாட்டு வெடிகுண்டு…. ஒரு வாலிபர் கைது… மற்றொருவர் யார்?… போலீசார் விசாரணை..!!

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டிருக்கும் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வழியாக தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பேருந்து நிலையத்தில் ஒரு டீக்கடை அருகில் உள்ள கீழ் தளத்திற்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடைக்கு நடையாய் நடக்கும் மக்கள்…. திடீரென தர்ணா போராட்டம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே ரேஷன் கடை அமைத்துத் தர கோரிக்கை விடுத்து ஆட்சியர் அலுவலகம் முன் திடீரெனெ சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  நெல்லை மாவட்டத்தில் உள்ள பாலமடை கிராமத்தில் அம்மன் கோவில் தெரு மற்றும் இந்திரா நகர் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடையானது , சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதால் மாதம்தோறும் அதிக தொலைவு அலைந்து, ரேஷன் பொருள்களை வாங்கி வர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தச்சநல்லூர் மண்டலத் தலைவராக பொறுப்பேற்றார் ரேவதி பிரபு..!!

தச்சநல்லூர் மண்டலத் தலைவராக ரேவதி பிரபு பொறுப்பேற்றுள்ளார். நெல்லை மாநகராட்சியில் தச்சநல்லூர் மண்டல தலைவராக ரேவதி பிரபு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் பதவி ஏற்பு விழா மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. அப்துல் வகாப் எம்.எல்.ஏ தலைமை தாங்கிய இந்த விழாவில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் மாநகராட்சி செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் லெனின், மண்டல தலைவர்கள் கதிஜா இக்லாம் பாசிலா, பிரான்சிஸ், கவுன்சிலர்கள் ஜெகநாதன், நித்திய பாலையா, வில்சன் மணித்துரை, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பலத்த கனமழை…. 500 வாழைகள் சாய்ந்தது…. விவசாயி கவலை…!!!

கலிங்கப்பட்டியில் பெய்த கனமழையால் 500 வாழைகள் அடியோடு சாய்ந்துள்ளது. தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் அருகில் கலிங்கப்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையால் கலிங்கப்பட்டியில் வசித்து வந்த விவசாயி நிறைபாண்டி என்பவர் பயிரிட்டு இருந்த 500க்கும் அதிகமான வாழைகள் அடியோடு சாய்ந்தது. இதனால் விவசாயி மிகுந்த கவலை அடைந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வனத்துறையை கண்டித்து…. பொதுமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில்… கண்டன ஆர்ப்பாட்டம்…!!

விக்ரமசிங்கபுரத்தில் பொது மலை பாதுகாப்பு இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில்  உள்ள மூன்று விளக்கு திடலில் பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பாக இயற்கை வளங்களை காப்பது குறித்து விழிப்புணர்வும், வனத்துறையினரின் செயல்பாடுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. முல்லை நில தமிழர் கட்சி தலைவர் கரும்புலி கண்ணன் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதிகைமலை பாதுகாப்பு இயக்க செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்துள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியினர், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேத்தியின் காதணி விழாவுக்கு சென்ற போது…. பாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மானூரில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகில் கட்டாரங்குளத்தில் வசித்து வருபவர் சூசை. இவருடைய மனைவி லீலா(58). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் லீலா நேற்று வெளியூரில் இருக்கின்ற தனது பேத்தியின் காதணி விழாவிற்கு சொந்தக்காரர்களுடன் செல்வதற்காக அரசு டவுன் பேருந்தில் ஏறி மானூர் வந்துள்ளார். அதன்பின் மானூர் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, சொந்தக்காரர்கள் இருக்கின்ற தனியார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கைப்பந்து போட்டி…. சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை..!!

சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்கள். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் அம்பை கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கைப்பந்து போட்டியில் பங்கேற்று இரண்டாமிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஜோசப் என்பவரையும், பள்ளி செயலாளர் காமராஜ், பள்ளி முதல்வர் மரிய ஹெலன் சாந்தி, ஆசிரியர்கள் பாராட்டி உள்ளார்கள்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கூடம் அருகே நின்ற நபர்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபருக்கு  கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை மைலப்பபுரம் வடக்கு தெருவில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார், இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்த இசக்கி முத்து என்பவரிடம் அரிவாளை காட்டி முருகன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இசக்கிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

படப்பிற்குள் இருந்த விஷ வண்டுகள்…. விவசாயி அளித்த தகவல்…. தீயணைப்புதுறையினரின் செயல்…!!

தீயணைப்புதுறையினர் விஷ வண்டுகளை பாதுகாப்பாக அகற்றினர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு பணவடலிசத்திரம் கிராமத்தில் விவசாயியான செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது . இந்நிலையில் தோட்டத்தில் இருக்கும் சோள படப்பிற்குள் இரண்டு இடங்களில் விஷ வண்டுகள் இருந்துள்ளது. இதுகுறித்து செல்லப்பா தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் இரண்டு இடங்களில் இருந்த கடந்தை வண்டுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி” பள்ளிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பள்ளிக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலைப்பள்ளி கடந்த 1880-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த பள்ளி தொடங்கப்பட்டு 142 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் நேற்று வெள்ளிவிழா சந்திப்பை நடத்தியுள்ளனர். அப்போது 96 நண்பர் குழு சார்பில் புதிய வகுப்பறை கட்டுவதற்காக 10 லட்ச […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் மெக்கானிக்கான பேச்சிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் புதுகுறிச்சி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பேச்சிமுத்து கீழே விழுந்து விழுந்து படுகாயமடைந்தார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பேச்சிமுத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு…!!

காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பள்ளமடை கிராமத்தில் விவசாயியான அக்னி மாடன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாடத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சீவல்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தமிழர் விடுதலை களம் இயக்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். இந்நிலையில் சீவல்ராஜ் அப்பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இதற்கு மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சீவல்ராஜுக்கும், மாணவியின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்காக வாங்கிய பணம்…. சடலமாக தொங்கிய தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் கிராமத்தில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான ரவிகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ரவிகுமார் தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரவிகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருங்காடு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் மற்றும் மகாராஜன் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து அப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மாரியப்பன் மற்றும் மகாராஜனை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புதருக்கு அருகே நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதருக்கு அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பால்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பால்ராஜ் அப்பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பால்ராஜை கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிரைண்டரில் மாவு அரைத்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கரம்மாள் தனது வீட்டு கிரைண்டரில் மாவு அரைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சங்கரம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சங்கரம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாமதமாக திரும்பி வந்த வாகனங்கள்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கோவிலுக்கு சென்று விட்டு தாமதமாக திரும்பிய வாகனங்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வனப்பகுதியில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை உள்ளே செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படும். இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு 6 வாகனங்கள் பாபநாசம் சோதனை சாவடிக்கு வந்தது. இதனால் தாமதமாக வந்த வாகனங்களுக்கு வனத்துறையினர் தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பீஸ்ட் படம் பார்க்க சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் இரும்பு தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பீஸ்ட் படம் பார்க்க சென்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் ஜெனிஸ் ரோஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலியில் இருக்கும் ஒரு தியேட்டருக்கு பீஸ்ட் படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குட்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் திருச்செந்தூரை சேர்ந்த பிரசாந்த் மற்றும் சக்தி என்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பிரசாந்த் மற்றும் சக்தி ஆகிய […]

Categories
சினிமா செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ்-க்கு கட்டித்தரப்பட்ட புதிய வீடு”…. திறந்து வைத்த கலெக்டர், இயக்குனர்…!!!!

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞருக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் இயக்குனர் புதிய வீட்டை திறந்து வைத்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டையில் இருக்கும் இளங்கோ நகரில் வாழ்ந்து வருபவர் நாட்டுப்புற கலைஞரான தங்கராஜ். இவர் பல படங்களில் நடித்தாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்து பிரபலமானார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில்  கொரோனா தொற்றின் போது  வியாபாரம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கடைக்குச் சென்ற ரேஷன் ஊழியருக்கு நேர்ந்த சோகம்”… மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு…!!!

நெல்லையில் ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியரை சரமாரியாக மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோட்டில் இருக்கும் ராஜா நகர் 3வது தெருவில் வாழ்ந்து வந்தவர் ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர் வெங்கடாஜலபதி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சைக்கிளில் சென்று வாங்கி விட்டு வீடு திரும்பிய பொழுது மெயின் ரோட்டில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“4 1/2 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த கொள்ளை கும்பல்”… 5 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸார்…!!!

நெல்லை மாவட்டம் அருகே நகைகளை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் புதுமனை தெருவில் வசித்து வரும் மைதீன் பிச்சை என்பவருக்கு பஜாரில் நகை கடை ஒன்று உள்ளது. சென்ற 11ஆம் தேதி கடையில் இருந்து 4 1/2 கிலோ தங்கத்துடன் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி நகைகளை எடுத்து சென்றார்கள். படுகாயமடைந்த அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இச்சம்பவம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிராஞ்சேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குணசேகரன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குணசேகரனை கைது செய்ததோடு, அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இவன் மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்வம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து செல்வத்தை காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான் செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் ரவிக்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ரவிக்குமார் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரவிக்குமாரை கைது செய்ததோடு, அவரிடமிருந்து மது பாட்டில்களை […]

Categories

Tech |