Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கமிஷனரின் அதிரடி உத்தரவு…. கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண்களுக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை….!!

கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2 பெண்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார் உத்தரவின்படி துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமாரின் நேரடி மேற்பார்வையில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் ரசூல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உசேன்பாத் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் லதா, தெய்வானை ஆகியோரிடம் 4 லட்ச ரூபாய் பணத்தை வட்டிக்கு வாங்கியுள்ளார். அந்தப் பணத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. தொழிலாளியை கைது செய்த போலீஸ்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி மங்கம்மாள் சாலையில் லோடு ஆட்டோ ஓட்டுநரான பசுபதி(23) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி பசுபதி இரவு நேரத்தில் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பசுபதியுடன் தகராறு செய்து அவரை அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில்விளை பகுதியை சேர்ந்த ஆடுமேய்க்கும் தொழிலாளியான கணேசன் என்பவரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த என்ஜினியர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த என்ஜினியரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடைபயிற்சிக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த வாலிபர் ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவரை ஏறி உள்ளே குதித்து பெண் குளித்துக் கொண்டிருந்த அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சத்தம் போட்டதால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்-அரசு பேருந்து…. குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கார்-பேருந்து மோதிய விபத்தில் 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தியாகராஜபுரம் பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜிலா என்ற மனைவி உள்ளார். இவர் பொன்மனையில் உள்ள கனரா வங்கியில் வேலைபார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு யாழ்நிலா என்ற 1 வயது குழந்தை இருந்துள்ளது. மேலும் பிரேம்குமார் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் பிரேம்குமார் தனது தாய், மனைவி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கர சம்பவம்… வாலிபர் அடித்துக்கொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!!!

பணகுடியில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மங்கம்மாள் சாலை பகுதியில் வசித்து வருபவர் ராமன் என்பவருடைய மகன் 23 வயதுடைய பசுபதி. இவர் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது மது அருந்தி உள்ளார். இந்நிலையில் பணம் குடியில் உள்ள ஒரு கோவில் பின்பக்கம் பாழடைந்த வீட்டில் பசுபதி உடலில் ரத்த காயங்களுடன் பிணமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற முதியவர்…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோர விபத்து…!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் பாபநாசம் செல்வதற்கு நேற்று ஏராளமான பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது பாபநாசம் செல்லும் ஒரு பேருந்து வந்தது. இந்நிலையில் வீரவநல்லூரை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ஆறுமுகம் என்பவர் பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் ஆறுமுகத்தின் கால் பேருந்து சக்கரத்தில் சிக்கி சிதைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வளைவில் திரும்ப முயன்ற பேருந்து…. தவறி விழுந்து இறந்த பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலச்செவலில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இசக்கியம்மாள் தனது மகளை பார்ப்பதற்காக திருக்குறுங்குடிக்கு சென்றுள்ளார். நேற்று இசக்கியம்மாள் வீட்டிற்கு செல்வதற்காக திருக்குறுங்குடி பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்த பேருந்து திருக்குறுங்குடி சத்திரம் அருகே இருக்கும் திருப்பத்தில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக இசக்கியம்மாள் படிக்கட்டு வழியாக கீழே தவறி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. மீட்பு பணிகள் தீவிரம்…!!

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கேரள மாநிலத்தில் இருந்து கியாஸ் சிலிண்டர் லாரி தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று அதிகாலை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிறுமளஞ்சி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி நம்பியாறு பாலத்தில் மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

OMG: விளையாடிய குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்…. பெரும் பரபரப்பு….!!!!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நித்திஷா(7), நித்திஷ்(5) கபிலன்(4) என்ற மூன்று குழந்தைகள் காரில் விளையாடிய போது அடுத்தடுத்து மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 3 குழந்தைகளும் நீண்ட நாட்களாக பயன்படுத்தாத அந்த காரில் விளையாடிய போது மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயன்படுத்தப்படாத காருக்குள் குழந்தைகளை விளையாட வைக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் பரபரப்பு!!…. அண்ணனை மண்வெட்டியால் அடித்து”கொலை செய்த தம்பி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

அண்ணனை தம்பி மண்வெட்டியால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு ஆச்சியூர்  பகுதியில் நம்பிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆறுமுகவேல், சுப்பையா என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் பம்புசெட் கிணற்றுடன் விவசாய நிலம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பான அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதைப்போல் நேற்று நம்பிராஜனுக்கும் அவரது தம்பி அறுமுகவேலுக்கும்   இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நம்பிராஜன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சற்றுமுன்…. நெல்லையில் சோகம்…. காரை திறக்க முடியாமல் 3 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்..!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் காரில் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகேஇருக்கிறது லெப்பை குடியிருப்பு என்ற கிராமம். இந்த சிறிய கிராமத்தில் விளையாண்டு கொண்டிருந்த குழந்தைகள் 3 பேர் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடியுள்ளனர்.. இதில் நித்திசா (7) நித்திஷ் (5) இருவரும் அண்ணன் தங்கைகள்.. அதேபோல கபிலன் என்ற 4 வயது குழந்தை.. இந்த  3  குழந்தைகளும் நிறுத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லோடு ஆட்டோ…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பத்தினர்….!!

லோடு ஆட்டோ மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரேமா அதே பகுதியில் வசிக்கும் கல்யாணி, காளீஸ்வரி, ஜோதி ஆகியோருடன் தனது வீட்டின் முன்பாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில் சீர்வரிசை பொருட்களை இறக்கி வைத்துவிட்டு லோடு ஆட்டோ ஒன்று திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அங்கு பேசிக் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. சிதைந்த தொழிலாளியின் கைகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வெடிகுண்டு வெடித்து வாலிபரின் கைகள் சிதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரோஸ்மியாபுரம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான இசக்கிமுத்து(34) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் காடுகளில் சுற்றித் திரியும் வன விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளார். இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை இசக்கிமுத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்ததால் இசக்கிமுத்துவின் கைகள் சிதைந்து அவருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…. கொடூரமாக கொன்ற கணவர்…. நெல்லையில் பரபரப்பு…!!

பெண்ணை வெட்டிக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு வாகைகுளத்தில் கல்யாணசுந்தரம்(39) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் ராமலட்சுமி கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலட்சுமியின் நடத்தை மீது சந்தேகம் வந்ததால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ராமலட்சுமி தனது குழந்தைகளுடன் திருநெல்வேலியில் இருக்கும் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செத்து கிடந்த 9 ஆடுகள்…. விஷம் வைத்து கொன்றது யார்….? போலீஸ் விசாரணை…!!

விஷம் வைத்து ஆடுகளை கொன்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியில் கோபால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் பெருமாள், சப்பானி ஆகியோருக்கு சொந்தமான ஆடுகளும், ராஜ் என்பவருக்கு சொந்தமான மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஆடு, மாடுகள் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்ததை பார்த்து அதன் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சார்ஜ் போடும் போது…. திடீரென எரிந்த மின்சார ஸ்கூட்டர்….. நெல்லையில் பரபரப்பு…!!

மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொண்டாநகரம் கிராமத்தில் டேனியல் ஆசீர்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை டேனியல் தனது வீட்டு வளாகத்தில் மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து டேனியல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் டானியல் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் அவரால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய சர்வேயர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

லஞ்சம் வாங்கிய நபருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழநத்தம் கிராமத்திலிருக்கும் வீட்டுவசதி பிரிவு காலனியில் 5 1/2 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். அதில் வீடு கட்டுவதற்கு இடத்தை அளந்து தருமாறு செல்வம் வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது நிலத்தை அளப்பதற்கு வீட்டுவசதி வாரிய சர்வேயர் சின்னையா குமார் 500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சமையல் செய்த மூதாட்டி…. சேலையில் தீப்பிடித்து பலியான சோகம்…. போலீஸ் விசாரணை….!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு கள்ளிகுளம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி(80) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசாமி இறந்துவிட்டதால் மேரி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுமி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக சீதா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட சீதா திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த சீதாவின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த தொழிலாளி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிபாண்டி என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இசக்கிபாண்டி வேலை முடித்துவிட்டு பழவூர் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடக்கு சங்கன்திரடு பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பவர் இசக்கிபாண்டியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு இசக்கிபாண்டி பணம் தர மறுத்ததால் தினேஷ் அவரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரஷ்யாவிலிருந்து கூடங்குளத்திற்கு சிறப்பு விமானம் மூலம் கொன்டுவரப்பட எரிபொருள்…. தீவிர பாதுகாப்பு பணி …!!!!!!!

ரஷ்யாவில் இருந்து மூலப்பொருள்  கொண்டுவரப்பட்டுள்ளது. திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள  கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் தற்போது 5-வது மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2- வது அணு உலை எரிபொருள் நிரப்புவதற்கும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும்  கடந்த மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து முதலாவது அணு உலையில் மட்டும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 4.63 லட்சம் மோசடி”….. போலீஸார் கைது செய்து சிறையில் அடைப்பு….!!!!!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 4 லட்சத்து 63 ஆயிரத்தை மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை பகுதியில் வாழ்ந்து வருபவர் நெல்லையப்பன். வேலூர் மாவட்டம் அரியூரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் நெல்லையப்பனிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக ரூபாய் 4 லட்சத்து 63 ஆயிரம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கின்றார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவர்…. சடலமாக கிடந்த இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குண்டல் நடுத்தெருவில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெனிலா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரபு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெனிலா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட பல்கலைக்கழக பதிவாளர்….!!!!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் மருதகுட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளரான மருதகுட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பல்கலைக்கழகத்தில் எம்.பில், பிஎச்.டி ஆகிய பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்களும், முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் தற்போது நடைபெறும் தகுதி தேர்வில் கலந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள்   தேர்ச்சி பெற்று இறுதி மதிப்பெண் பட்டியலை சேர்த்து  சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் தேர்வு எழுத விரும்புபவர்கள் பாடப்பிரிவுகள், அடிப்படை தகுதி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. நெல்லையில் பரபரப்பு…!!

தீ விபத்து ஏற்பட்டதால் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து நாசமானது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்ரமசிங்கபுரம் பகுதியில் ஆனந்த்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலுக்காக ஆனந்த் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை வாங்கினார். இந்நிலையில் நேற்று மதியம் தண்ணீர் கேன்களை ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென மோட்டார் சைக்கிளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் ஆனந்த் அக்கம் பக்கத்தினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணத்தை கேட்டதால் தகராறு…. பத்திர எழுத்தாளர் மீது தாக்குதல்…. தந்தை-மகனை கைது செய்த போலீஸ்…!!

பத்திர எழுத்தாளரை தாக்கிய தந்தை, மகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டையில் பத்திர எழுத்தாளரான செங்கமலை(60) என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் ஜெய்கணேஷ் என்பவர் கடனாக பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் செங்கமலை தனது நண்பரான வேல்முருகன் என்பவருடன் இணைந்து பணத்தை திருப்பித் தருமாறு ஜெய்கணேஷிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜெய்கணேஷ் மற்றும் அவரது மகன் கோகுல், சகோதரர்கள் முத்துக்குமார், மணிகண்டன் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கணவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 2 இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சி.என் கிராமம் பகுதியில் உடையார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுப்புலட்சுமி தாழையூத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று உடையார், தனது உறவினரான நாகராஜன் என்பவருடன் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். மேலும் இருவரும் இணைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் பரமசிவன் (61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு விரைவு பேருந்து பரமசிவன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமசிவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லிப்டில் சிக்கிய தம்பதியினர்…. விரைந்து செயல்பட்ட போலீஸ்…. ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

லிப்ட்டில் சிக்கிய வயதான தம்பதியினரை காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லாவில் விஜிஜான்(84)-மரியா ஜான்(80) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் திருநெல்வேலியில் இருக்கும் கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை செய்து விட்டு நேற்று மாலை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கேரளாவுக்கு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க 2-வது பிளாட்பாரத்திற்கு செல்ல ரயில் நிலையத்தில் இருக்கும் லிப்டில் தம்பதியினர் ஏறியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் பழுதாகி பாதியிலேயே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோழனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்…. வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மட்டை வழங்கிய தோழர்கள்…!!!!

நண்பரின் நினைவு தினத்தை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மட்டை நண்பர்கள் வழங்கினார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்த நிலையில் சென்ற வருடம் மே 23-ஆம் தேதி ஹெல்மெட் அணியாமல் சென்ற போது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டார். இந்தநிலையில் அலெக்ஸ் பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று அவரின் அலுவலகத்தில் பணியாற்றிய நண்பர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கல்குவாரியில் உரிமம் தடைசெய்யப்பட்டது” ஆய்வு செய்த அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடைமிதிப்பான்குளம் பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் கடந்த 17-ஆம் தேதி ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்து விட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய  படுகாயம் அடைந்த 2  பேரை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் கிடந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சடலமாக மீட்கப்பட்ட நபரின் விவரம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலகுளம் விநாயகர் நகர் பகுதியில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்கு அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த ஆணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தாங்கமுடியாத குரங்குகளின் அட்டகாசம்” பொதுமக்களின் கோரிக்கை…. போராடி பிடித்த வனத்துறையினர்….!!!!

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பகுதியில்  100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும்  குரங்குகள் புகுந்து சிறுவர், சிறுமிகளை அச்சுறுத்துவது மட்டும் இல்லாமல் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் குரங்குகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து  வனத்துறையினர்  குரங்குகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது சிக்கிய   5  குரங்குகளை  பிடித்துள்ளனர். அதன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் பேனர்கள் அகற்றம்” பாதிக்கப்படும் பொதுமக்கள்…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதி மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் விளம்பர பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில்  அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து  நகராட்சி தலைவர் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி நகராட்சி  அதிகாரிகள் கடந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறு…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்….!!

சாலைகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் அகற்றியுள்ளனர். நெல்லையில் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை டவுன் வடக்கு ராஜ வீதி, கீழ ராஜவீதி சாலையில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களையும் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளனர். இந்த பணிகள் மாநகர நகர்நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சாலையை கடக்க முயன்ற 12 அடி மலைப்பாம்பு” பொதுமக்கள் அளித்த தகவல்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!!!

சாலையை கடக்க முயன்ற பாம்பை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி சாலையில்  மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக  பாம்புகள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  பாம்புகள் மீட்பு குழுவினர் நீண்ட நேரம் போராடி 12 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த பாம்பை களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பாபநாசம் காரையாறு அணை நீர்வரத்து”… கோடை மழை காரணமாக அதிகரிப்பு….!!!!

பாபநாசம் காரையாறு அணை நீர்வரத்து கோடை மழை காரணமாக அதிகரித்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் காரையாறு  அணையானது 143 அடி நீர் மட்டத்தை கொண்டுள்ளது. இந்த அணையின் நீர்வரத்தானது சென்ற சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது கோடை மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நீர் மட்டம் 46.60 அடியாக இருந்த நிலையில் தற்போது 49.30 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை கல்குவாரியில் சரிந்து விழுந்த ராட்சத பாறைகள்”… ஒருவர் உயிரிழப்பு…!!!!

நெல்லையில் கல்குவாரி பாறைக்குள் இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் பலியாகியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் அருகே இருக்கும் அடைமிதிப்பான் குளம் பகுதியில் தனியார் கல்குவாரி உள்ள நிலையில் சென்ற 14ம் தேதி கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் செல்வகுமார், ராஜேந்திரன், செல்வம், முருகன், விஜய், முருகன் உள்ளிட்ட 6 பேர் பாறைக்குள் மாட்டிக் கொண்டார்கள். இதையடுத்து தீயணைப்பு துறையினர் முருகன், விஜய், செல்வம் உள்ளிட்ட 3 பேரையும் நேற்று முன்தினம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுற்றிவளைத்து வெட்டிய மர்மகும்பல்…. என்ஜினீயருக்கு நடந்த கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு…!!

இன்ஜினியர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செம்பத்திமேடு அம்மன் கோவில் தெருவில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான சுகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மக்கள் தேசம் கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்நிலையில் சுகுமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களுடன் கீழே இறங்கினார். இதனை பார்த்த சுகுமார் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. துடிதுடித்து இறந்த தந்தை-மகன்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் வடக்கு தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மாயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுஜி என்ற மகளும், விஜயகுமார் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் வெல்டிங் பட்டறைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் மானூர் பல்லிக்கோட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வலி தாங்கவே முடியல” விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சடையமான்குளம் கிராமத்தில் விவசாயியான ஜெயக்குமார்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சகாயசாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அல்சர் காரணமாக ஜெயக்குமாருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயக்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துணிகளை காய வைத்த பெண்…. தலை சுற்றியதால் நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பையில் சங்கர சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று காலை மாரிச்செல்வி வீட்டு மாடியில் துணிகளை காய போட்டுள்ளார். அப்போது தலை சுற்றியதால் எதிர்பாராதவிதமாக மாரிச்செல்வி மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை அருகே பஸ் டிரைவரை வெட்டிய பஸ் கண்டக்டர்”…. போலீசார் கைது செய்து விசாரணை…!!!!

நெல்லை அருகே பஸ் டிரைவரை மற்றொரு பஸ் கண்டக்டர் அரிவாளால் வெட்டியதால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகின்றார். பாளையங்கோட்டையை சேர்ந்த சங்கரபாண்டி தனியார் பஸ்ஸில் டிரைவராக பணியாற்ற அதே பஸ்ஸில் இசக்கிபாண்டி கண்டக்டராக பணியாற்றி வருகின்றார். இசக்கிபாண்டிக்கும் சுபாசுக்கும் பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் ஏற்கனவே சண்டை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சில […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு…பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 12 லட்சம் ஒதுக்கீடு…வழங்கிய ஞானதிரவியம் எம்.பி…!!!

மானூரில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 12 லட்சத்தை  ஞானதிரவியம் எம்.பி வழங்கியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், மானூரில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஞான திரவியம் எம்.பி தலைமை தாங்குகினார். மேலும் இந்த விழாவில் மானூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பொன்ராஜ், மாவட்ட திமுக துணை செயலாளர் மணி, ம.தி.மு.க தலைமை இணையதள தொடர்பாளர் மின்னல் அலி, மாவட்ட பிரதிநிதி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து கொலை செய்யப்பட்டாரா….? கோவில் நிர்வாகி திடீர் இறப்பு…. நெல்லையில் பரபரப்பு…!!

கோவில் நிர்வாகி திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் காமராஜர் தெருவில் விவசாயியான வெங்கடேஷ் ராஜா(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் நிர்வாக கமிட்டி துணை செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கோவிலுக்கு சென்ற ராஜாவுடன் சமீபத்தில் விழா நடத்தியது தொடர்பாக மற்றொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

6 ஆண்டுகளாக காதலித்த வாலிபர்…. அடித்து உதைத்த பெண்ணின் உறவினர்கள்…. நெல்லையில் பரபரப்பு…!!

ஒருதலை காதல் விவகாரத்தில் பெண்ணின் உறவினர்கள் வாலிபரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூரில் வசிக்கும் வாலிபர் சென்னையில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக இந்த வாலிபர் நெல்லையில் இருக்கும் வங்கியில் வேலை பார்க்கும் இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர் நேற்று இளம்பெண் வேலை பார்க்கும் வங்கிக்கு சென்று தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் இணைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மரம் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 23 லட்சம் நிவாரண உதவித்தொகை.… வழங்கிய கலெக்டர்…!!!

மரம் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 23 லட்சம் நிவாரண உதவி தொகையை கலெக்டர் விஷ்ணு வழங்கியுள்ளார்.  நெல்லை அருகில் பத்தமடை குளக்கரை பகுதியில் இருக்கின்ற மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பத்தமடையில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் காதர் மைதீன்(35). இவருடைய மனைவி பக்கீராள் பானு(29). இவர்களுடைய மகன் 4 வயதுடைய ஷேக் மன்சூர், பக்கீராள் பானுவின் சகோதரி 27 வயதுடைய ரகுமத் பீவி, இவருடைய மகள் 7 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாட்டி உயிரோடு எரித்து கொலை…. பேத்திகளின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

பேத்திகள் பாட்டியை உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை ஆதம்நகர் எதிரே கடந்த 3-ஆம் தேதி பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எப்படி பழுக்க வைக்கிறாங்க….? 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் சசிதீபா தலைமையில் அதிகாரிகள் நேற்று நெல்லை சந்திப்பு கண்ணம்மன் கோவில் தெருவில் இருக்கும் மாம்பழம் மொத்த குடோன்கள், சில்லறை விற்பனை கடைகளில் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு கடையில் ஸ்பிரேயர் மூலம் எத்திலின் என்ற ரசாயனம் தெளித்து மாங்காய்களை பழுக்க வைத்தது தெரியவந்துள்ளது. இதனால் அங்கிருந்த 500 கிலோ மாம்பழங்களை காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த 3 மாத குழந்தை…. சடலத்தை தோண்டி எடுத்த போலீசார்…. நெல்லையில் பரபரப்பு…!!

3 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தினிப்பாறை கிராமத்தில் கூலித் தொழிலாளியான பூந்துறை(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சக்திபிரியா என்ற பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2-ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சக்திபிரியா […]

Categories

Tech |