மேலப்பாளையத்தில் அனைத்து வழிகளும், தெருக்களும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்துள்ளது அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 பேரில் 22 திருநெல்வேலி, ஒருவர் தூத்துக்குடி, 4 கன்னியாகுமரி, 18 நாமக்கல் […]
