அம்மன் கோவிலில் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நல்லமாள்புரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி முப்பிடாதி என்பவர் பூஜை செய்து வருகிறார். கடந்த 4 – ம் தேதி இரவு நேரத்தில் பூசாரி முப்பிடாதி பூஜைகளை முடித்தவுடன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் கோவிலை திறப்பதற்காக பூசாரி முப்பிடாதி சென்றுள்ளார். இதனையடுத்து கோவில் திறக்கப்பட்டிருந்ததை […]
