Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆற்றின் குறுக்கே கட்டிய தொங்கு பாலம்…. திறந்து வைத்த கலெக்டர்…. கலந்து கொண்ட பலர்….!!

காணி இன மக்கள் கட்டிய தொங்கு பாலத்தை உதவி கலெக்டர் திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு பகுதியில் வாழும் காணி இன மலைவாழ் மக்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் குறுக்கே மரத்தாலான தொங்கு பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் விக்ரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் அவர்களுக்கு ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கயிறு வழங்கப்பட்டது. அதனை கொண்டு அங்கு வாழும் காணி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொடியில் துணியை காயப்போட்ட வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லை சந்திப்பு பகுதியில் தி.மு.க. நிர்வாகியான மலைபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொம்பையா என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை சந்திப்பில் பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கொம்பையா தனது வீட்டில் குளித்துவிட்டு ஈரத்துணியை இரும்பு கொடியில் காயப் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கொம்பையா சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து நெல்லை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. முதியவருக்கு கொலை மிரட்டல்…. கைது செய்த போலீஸ்….!!

முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் ஆதிநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். தற்போது வீட்டு சுவர் சேதப்படுத்தப்பட்டது குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆதிநாராயணன் சேதப்படுத்தப்பட்ட வீட்டு சுவரை கட்டித் தரக்கோரி அசோக்கிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக் ஆதிநாராயணனுக்குக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தட்டிக்கேட்ட மாமியார்…. மருமகனின் வெறிச்செயல்…. கைது செய்த போலீஸ்….!!

மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னத்தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இசக்கியம்மாள் என்ற மகள் உள்ளார். இவருக்கும் அவரது உறவினரான பாளைகோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் பாபா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இசக்கியம்மாள் தனது கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பாபா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக ரவிச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் அருகிலுள்ள வயலுக்கு சென்று அங்கு விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ரவிச்சந்திரனை உடனடியாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகமது தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, வேளாண் அணி மாநில தலைவர் ஷேக் அப்துல்லா, நேஷனல் விமன் பிரண்ட் மாவட்ட பேச்சாளர் சலீமா ஆலிமா, அகில இந்தியா இமாம் கவுன்சில் மாநில துணைத் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையஞ்செட்டிக்குளம் பகுதியில் கோயில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோயில் மணி மோட்டார் சைக்கிளில் கக்கன் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கோயில் மணியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கோயில் மணி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார்சைக்கிள்-ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பொட்டல் பகுதியில் தங்கபாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒர்க் ஷாப் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தங்கபாபு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தங்கபாபு பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் தங்கபாபுவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கிகுளம் பகுதியில் ஐகோர்ட் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இதனையடுத்து பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கஞ்சா, போதை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால் பேட்டை காவல்துறையினர் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறையினர் 2 பேரையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விரக்தியடைந்த கல்லூரி மாணவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

என்ஜினியரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூரில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வள்ளியூரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளார். ஆனால் அனீஷ் கோயமுத்தூரில் படிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த அனிஷ் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது பெற்றோர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த முதியவர்…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

முதியவரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் திசையன்விளை புறவழி சாலையில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் பொன்னுசாமி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

ரேஷன் அரிசி கடத்திச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் காவல்துறையினருக்கு கூட்டப்புளி அருகில் ஒரு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மினி லாரியில் 1 1\2 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மினி லாரி டிரைவரிடம் விசாரணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேசிக் கொண்டிருந்த நண்பர்கள்…. வாலிபருக்கு ஏற்பட்ட நிலை…. கைது செய்த போலீஸ்….!!

வாலிபரை பிளேடால் வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆமின்புரம் பகுதியில் சதாம் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லோடு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு பகுதியில் வசிக்கும் தொழிலாளியான ராஜேந்திரன் என்பவரும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் 2 பேரும் மேலப்பாளையம் பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் சதாம் உசேனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மூட்டா பேராசிரியர் சங்கம் சார்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மூட்டா பேராசிரியர் சங்கம் சார்பினர்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பொதுச் செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி முதல்வரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனவும், நெல்லை மாவட்டத்தில் உள்ள […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“முன்கள பணியாளர்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

பா.ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட பா.ஜனதா கட்சியினர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்டத் தலைவர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கணேசமூர்த்தி, முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பா.ஜனதா கட்சியினர் வண்ணார்ப்பேட்டை மேம்பாலம் பகுதியில் ஊர்வலமாக அண்ணாசாலை, அறிவியல் மையம் ரோடு, கொக்கிரகுளம் மெயின் ரோடு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேசிக் கொண்டிருந்த வாலிபர்…. மிரட்டி பணம் பறித்த 2 பேர்…. வழக்கு பதிவு செய்த போலீஸ்….!!

டிரைவரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சேயாபுரத்தில் உள்ள அம்மன் கோவில் முன்பு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜன் மகன் மணிகண்டன், உள்ளமுடையார் ஆகியோர் அங்கு வந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன தங்க நகை…. தம்பதியினர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

உறவினர் வீட்டில் நகை திருடிய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைத்தலையூர் பகுதியில் பேச்சியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். அவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தற்போது பேச்சியம்மாள் விவசாய வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பேச்சியம்மாள் வீட்டை பூட்டி விட்டு சாவியை உள்ள ஒரு இடத்தில் வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் வீட்டிற்கு திரும்பி வந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறில்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் கனகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு எஸ்தர் பபிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறில் மன உளைச்சலுக்கு ஆளான எஸ்தர் பாபிதா திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் எஸ்தர் பபிதாவை உடனடியாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திபட்டி பகுதியில் காணியாள மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு காணியாள மாடசாமி இறந்து விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்லம்மாள் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் செல்லம்மாளை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய டிரைவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி டோல் கேட்டில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று வந்தது. இதனைப் பார்த்த மினி லாரி டிரைவர் காவல்துறையினரை பார்த்ததும் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனையடுத்து காவல்துறையினர் மினி லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லாரி டிரைவர் காவல்துறையினரிடம் முன்னுக்கு பின் முரணாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்…. சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் முன்பு சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், வள்ளியூர் நகர செயலாளர் வேம்பு சுப்பையா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் வள்ளியூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. ஆட்டோ டிரைவர் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

ஆட்டோ டிரைவரை மண்வெட்டியால் தாக்கிய மற்றொரு ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நொச்சிகுளம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோவில் டிரைவராக உள்ளார். இந்நிலையில் தோணித்துறை பேருந்து நிறுத்தத்தில் தனது ஆட்டோவில் ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சீவலப்பேரி பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான சண்முகதுரை செல்வகுமாரிடம் நீ எப்படி ஆட்களை ஏற்றலாம் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தகாறு முற்றியதில் கோபமடைந்த சன்முகதுரை செல்வகுமாரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அடையகருங்குலம் பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆனது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து இது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்” உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை ஐகிரௌண்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பழனி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது அங்கு வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் பழனியை உடனடியாக மீட்டு சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பழனியை பரிசோதனை செய்த பிறகு அவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெயிண்டர் அடித்துக் கொலை…. வசமாக சிக்கிய நண்பர்…. போலீஸ் விசாரணை….!!

பிறந்தநாளை கொண்டாடிய பெயிண்டரை அடித்துக் கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவ்வலடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ரமேஷ் திசையன்விளை-நவ்வலடி சாலையில் உள்ள தனியார் வங்கி அருகில் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நகை,பணம் கொள்ளை…. மர்மநபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகஸ்தியர்பட்டி பகுதியில் உள்ள உலகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி ஆவார். இவர் தற்போது எல்.ஐ..சி. ஏஜென்டாக உள்ளார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு விருதுநகருக்கு சென்று விட்டனர். அதன்பின் மறுநாள் காலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவதூறாக பேசிய நபர்…. போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் குடிநீர் பம்பு ஆபரேட்டராக விநாயகம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாடிய பெயிண்டர்…. நண்பர் செய்த கொடூர செயல்…. நெல்லையில் பரபரப்பு….!!

பிறந்தநாளை கொண்டாடிய பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவ்வலடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ரமேஷ் திசையன்விளை-நவ்வலடி சாலையில் உள்ள தனியார் வங்கி அருகில் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் பெருமன்றத்தினர்…. நெல்லையில் பரபரப்பு….!!

இளைஞர் பெருமன்றத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்ப்பேட்டையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் துணைத் தலைவர் பாலன், துணைச்செயலாளர் மகராஜ் மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட தலைவர்  போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!

விபச்சாரம் நடத்தியதாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள் புரம் காவல்துறையினருக்கு மகிழ்ச்சி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடப்பதாக  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெருமாள்புரம் காவல்துறையினர் அங்கு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் பசுமதி மற்றும் பெருமாள்புரம் என்.எச். காலனி பகுதியில் வசிக்கும் முருகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் உயர்நிலைக் குழு செயலாளர் குமாரசாமி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், தனியார் நிறுவனங்கள் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை ஐகிரௌண்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பழனி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது அங்கு வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் பழனியை உடனடியாக மீட்டு சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஓலணியை பரிசோதனை செய்த பிறகு அவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் பேருந்து-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு பகுதியில் நல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலில் உள்ள எலுமிச்சை ஆராய்ச்சி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நல்லமுத்து வேலைக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் பிரியும் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவதூறாக திட்டிய நபர்…. முதியவர் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் சின்னதம்பி என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரை அகஸ்தியவர் கோவில் பகுதியில் வசிக்கும் துரைராஜ் என்பவர் சாதியைச் சொல்லித் திட்டியுள்ளார். இதுகுறித்து சின்னதம்பி கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் துரைராஜை கைது செய்துள்ளனர். ஆனால் துரைராஜிற்கு உடல்நிலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கணாகிணறு பகுதியில் பாண்டியராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி கணவனை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே பாண்டியராஜுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி அவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விஷம் குடித்த முதியவர்…. உடனடியாக மீட்ட அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்வராஜை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் சீதாராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இவர் தொடர்ந்து அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட வந்துள்ளார். இதேபோன்று கோட்டாரகுறிச்சி பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ் என்பவர் அடிதடி, கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் 2 பேரையும் நெல்லை மாவட்ட  போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

மின்வாரிய ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பையில் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சி.ஐ.டி.யு. தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி சங்க துணைச் செயலர் கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அதில் தொழிற்சங்கங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. இதனை கண்டித்து 20 சதவீதம் போனஸ் வழங்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பக்கோடாவில் பல்லி..! அதிர வைத்த மிட்டாய் கடை…. நெல்லையில் பரபரப்பு …!!

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பிரபல இனிப்பகத்தில் வாங்கிய பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இயங்கி வரும் பிரபல இனிப்பு கடையான ஸ்ரீராம் லாலா கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பக்கோடா வாங்கிய போது அதில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசி தீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையிலான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் பெய்த மழை…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இவருக்கு சுடலி என்ற மனைவியும், 2 மகன்களும், மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை அனுமார் புதுக்குளம் பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் திடீரென மின்னல் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சுடலை சம்பவ இடத்திலேயே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வாங்கி சென்ற பக்கோடா…. பிரித்து பார்த்து அதிர்ச்சியடைந்த நபர்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை….!!

பக்கோடாவில் பல்லி பொறிந்து கிடந்ததால் அதிகாரிகள் கடையின் தின்பண்டங்களை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி அருகில் தெற்கு பஜாரில் ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு பக்கோடா வாங்கி சென்றுள்ளார். இதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று அதனைப் பிரித்துப் பார்த்து தட்டில் தட்டிய போது அதில் எண்ணெயில் பொறிந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த தொழிலதிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரன் நகர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய காரை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குமாரின் தொழில் சரிவர நடைபெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் இது குறித்து பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திறந்து கிடந்த கதவு பூட்டு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. கைது செய்த போலீஸ்….!!

வீடு புகுந்து நகை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வல்லவன்கோட்டை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பெருமாள் கடந்த 23-ஆம் தேதி தனது தோட்டத்தில் பூக்களை பறித்து விட்டு விற்பனைக்காக பூ மார்க்கெட்டில் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பெருமாள் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பெருமாள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

தூய்மை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சங்க தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பொது செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்து போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அதில் அவர் தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும், தூய்மை பணியாளர்களை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்கள்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

2 பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்து சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரைசுத்துபுதூர் பகுதியில் ஐசக் தனராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீலா வசந்தகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரும் மன்னார்புரம் பகுதியில் வசிக்கும் ஆசிரியையான பெப்பின் என்பவரும் கடந்த 13-ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு காரணமாக…. பைனான்சியருக்கு நடந்த கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு….!!

பைனான்சியர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து தென்றல் நகர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் வீட்டில் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். இவருடைய மனைவி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனையடுத்து அவருடைய மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது முருகானந்தம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அவரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரின் மனைவியான சுஜாதா என்பவர் தச்சநல்லூர் சந்தி மரித்தம்மன் கோவில் அருகில் பூ கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு சுஜாதா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மொத்தம் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…. கோரிக்கையை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர்…. குவியும் பாராட்டுகள்….!!

நெல்லையில் காப்பகங்களுக்கு போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் தலைமையில் கடந்த 16-ஆம் தேதி அனைத்து காப்பக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது காப்பகங்களில் தங்கியிருப்பவர்களுக்கு தேவையான உடை, பாதுகாப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு உபகரணங்கள், கணினி வசதி, போர்வைகள், படுக்கை வசதி போன்றவை குறித்து கேட்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் நன்கொடையாளர்கள் மூலம் காப்பக நிர்வாகிகளின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறப்பு தள்ளுபடி விலையில் கார்…. டிரைவர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

தள்ளுபடி விலையில் கார் தருவதாக டிரைவரிடம் 6 1\2 லட்சம் வரை பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெத்தரெங்கபுரம் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கார் டிரைவரான வில்சன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது செல்போனில் முகநூலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில் ரூ.13 லட்சம் மதிப்பிலான கார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. தப்பி ஓட முயன்ற வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகன் குறிச்சி பகுதியில் பாளையங்கோட்டை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கர்நாடகா மாநிலத்தில் வசிக்கும் சந்திப் குமார் என்பதும், அவர் சட்ட விரோதமாக புகையிலை விற்று […]

Categories

Tech |