திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனை கிடங்குகளில் வேளாண்மை இணை இயக்குனர் கி. ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு குறைவாக விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், விற்பனை செய்தபின் உரிய ரசீது வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை கருவி மூலமாக […]
