ரயிலில் கடத்திய ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோம நாயக்கன்பட்டி ரயில்வே கேட் அருகில் பெங்களூரை நோக்கி செல்லும் பாசஞ்சர் ரயிலில் கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் உதவியாளர் அருள் பாண்டியன், கிருஷ்ணன் போன்றோர் அந்த இடத்திற்கு செல்வதற்கும் பாசஞ்சர் ரயிலில் மர்மநபர்கள் ரேஷன் அரிசி கடத்திச் […]
