Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய ஓ.பி.எஸ்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீரசெல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தார். தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை பொங்கலை அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர். சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினர், அதிமுக தொண்டர்களுடன் பொங்கலை கொண்டாடினார். அதேபோல் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் அக்ரஹாரத் தெருவில் உள்ள தனது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பொங்கல் ஸ்பெஷல்” 250 ஏக்கர்…. நல்ல விளைச்சல்…. ஆனாலும் விவசாயிகள் வேதனை….!!

தேனியில் 250 ஏக்கரில் நல்ல விளைச்சலில் சாகுபடி செய்ய தயார் நிலையில் உள்ள செங்கரும்பை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கூழையூர், துறையூர், உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி வருடம் வருடம் செங்கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படும்.. கடந்த ஆண்டு 150 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்பு இவ்வாண்டு சுமார் 250 ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒரு கட்டு கரும்பு […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

கவுன்சிலரைக் காணோம் கண்டுபிடிச்சுத் தாங்க!’ – பொதுமக்கள் புகார்

பெரியகுளம் 8ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், துணை முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 10 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 7, பாஜக 1, திமுக 2 உறுப்பினர்களைப் பெற்றது. இதன்மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக சுலபமாகப் பெற்றது. ஆனால், ஒன்றிய அளவில் ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் தலைவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தித்திக்கும் பொங்கல்”…கரும்பு விளைச்சல் அமோகம் …!!

 கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் . பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது கரும்புதான் .அப்படிப்பட்ட சுவையான கரும்பு தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு  பயிரிடப்பட்டுள்ளது .பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் போதிய மழையால் தற்போது கரும்புகள் அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருக்கின்றன . கடந்த ஆண்டு 10கரும்புகள் கொண்ட 1கட்டு 300ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில்,இந்த ஆண்டு 400ரூபாய்க்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மாற்று பாதை” ஐயப்பன் பக்தர்களுக்கு தேனி போலீஸ் முக்கிய அறிவிப்பு….!!

தேனி மார்க்கமாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பன் பக்தர்கள் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக கம்பத்திலிருந்து மாற்றுப்பாதையில் செல்ல திருப்பி விடப்பட்டுள்ளன. கேரள மாநிலத்திலுள்ள சபரிமலைக்கு தேனி கம்பம் குமுளி வழியாக ஐயப்ப பக்தர்கள் செல்வதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதன் காரணமாக கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் கம்பத்தில் முன்பாக  திருப்பி விடப்பட்டு கம்பம் வழியாக மேலப்பாளையம் கூடகோயில் சபரிமலைக்கு செல்கின்றன. அதேபோல் சபரி மலையில் இருந்து தமிழகத்திற்கு திரும்பும் வாகனங்கள் குட்டிகணம், பெரியாறு, குமுளி மற்றும் கம்பம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஏன் குடிச்சிட்டு வந்த … இரவு முழுவதும் பிணத்துடன் உறங்கிய மகன் …!!

குடிப்பழக்கத்தை கண்டித்த பெரியப்பாவை கட்டையால் அடித்துக் கொலை செய்து இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தேனியில் ,சமதர்ம புரத்தைச் சேர்ந்த கனகவேல் ஐயப்பன் என்ற அந்த இளைஞர் நேற்று இரவு  குடிபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அவரது பெரியப்பா பெத்தணசாமி கண்டித்துள்ளார்.இதனால்  ஆத்திரமடைந்த கனகவேல் ஐயப்பன் உருட்டு கட்டையை எடுத்து பெத்தணசாமியின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில் பெத்தணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .அவர் உயிரிழந்ததைக்  கூட தெரியாமல் இரவு முழுவதும் அவர்  உடலுக்கு பக்கத்திலேயே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசுப் பள்ளியில் சத்துணவுக் கூடம் இடிந்து விபத்து – 3 மாணவர்கள் படுகாயம்

ஆண்டிபட்டி அருகே பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத  சத்துணவு சமையல் கூட கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொன்னன்படுகை என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்த பள்ளி வளாகத்தில் சத்துணவு சமைப்பதற்காக 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சமையல் கூடம் பயன்பாடின்றி இருந்தது. அந்த கட்டிடத்தை இடிக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால் மிகவும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு …!! போக்குவரத்து கடும் பாதிப்பு…

தேனி மாவட்டம் போடி அருகே பாறைகள் உருண்டு தீடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் மூணார், போடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் போடி,மூணார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.போடி அருகே புளியுற்று என்ற இடத்தில் காலையில் பாறைகள் உருண்டு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை முழுவதும் பாறைகள் மற்றும் மண்ணால் மூடப்பட்டுள்ளது. இதை அடுத்து போடி, மூணார் சாலையில் கடுமையாக போக்குவரத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரிமீது மோதியதில் ஒருவர் பலி …!!

தேனி மாவட்டம் அருகே  இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் அதனை ஒட்டி வந்தவர்  எதிரே வந்த லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது .   தேனி அருகே வீரபாண்டியை அடுத்து  உப்பார்பட்டியை  சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் ஒன்பது வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீரபாண்டி நோக்கி சென்றுள்ளார். அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது குமுளி நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து உள்ளது.   […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது…!!

தொடர் மழை காரணமாக வைகை அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.   முல்லைப் பெரியாறு வைகை முதலிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வைகை அணை வேகமாக நிரம்பி வருகிறது.அதிக  கொள்ளளவை கொண்ட வைகை அணையின்  நீர்மட்டம் தற்போது 28.93அடியாக உள்ளது. இந்நிலையில்  கடந்த மூன்றாம் தேதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது 68 அடியைஎட்டிய  நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   இந்நிலையில் நீர்ப்பிடிப்பு […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை” 2 கொடூரர்கள் கைது …!!

ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இரு வேறு இடங்களில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இருவருக்கு தேனி மகிளா நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியகரான்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார் (34). இவர் 2017ஆம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உதயகுமாரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு வழக்கு: பெற்றோருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு …!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களுடைய பெற்றோரின் நீதிமன்ற காவலை நீட்டித்து, அவர்களை மீண்டும் நவம்பர் 21ஆம் தேதி ஆஜர்படுத்த தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட பிறகு, இது குறித்த விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோரான சரவணன், டேவிஸ், முகமது சபி ஆகியோர் பிணை கேட்டு மதுரை உயர்நீதின்றக் கிளையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போக சொன்ன மனைவி….. உலகத்தை விட்டே சென்ற கணவர் …!!

வேலைக்குச் செல்லாமல் கணவர் குடிப்பழகத்திற்கு அடிமையாகி இருப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் கோயில் தெருவில் வசித்துவந்தவர் பாண்டியராஜன்(42). இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். பிழைப்பிற்காக பாண்டியராஜன் டிராக்டரை வாடகைக்கு எடுத்து ஓட்டிவந்துள்ளார். பாண்டியராஜன் வேலைக்குச் செல்லாமல் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறுது. இதனால் பாண்டியராஜனுக்கும் பாக்கியலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பாண்டியராஜனின் தாயார் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

OPS வீட்டருகே….. ”திருவள்ளுவர் சிலை அவமதிப்பு” தொடரும் பரபரப்பு …!!

தஞ்சை பிள்ளையார்பட்டியைத் தொடர்ந்து பெரியகுளத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அவமரியாதை செய்ததைத் தொடர்ந்து பாஜகவினர் பாலபிஷேகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கடந்த சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கருப்பு மை பூசியும், சாணம் வீசியும் அவமரியாதை செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் ஆழ்துளைக் கிணறுகளை, மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றும் திட்டம்!

விவசாயிகள், பொதுமக்களுக்கு அரசு நிதி உதவியுடன், பாதுகாப்பான முறையில் கூடிய மழைநீர் சேமிப்பு கிணறுகளாக மாற்றம் செய்வது குறித்த செயல்முறை விளக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் சுஜித் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து மூடுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. இதன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை பயன்படுமாறு மூடினால் ரூ22,000 பரிசு……. மாவட்ட ஆட்சியர் அதிரடி சலுகை….!!

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்கு 22,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது குறித்து செயல்முறை விளக்கம் மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஆழ்துளை கிணற்றில் மழை நீர் தொட்டி அமைக்க 22 ஆயிரம் ரூபாயும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தடை நீக்கம்” சுருளி அருவியில் ஆனந்த குளியல்…….தேனியில் குவியும் கூட்டம்….!!

தேனி மாவட்டம் சுருளி அருவியில் நான்கு நாட்களுக்கு பிறகு தடை நீக்கப்பட்டு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் சுருளி அருவியில் குளிக்க  விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக  சுருளி அருவி விளங்குவதால் அங்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (17.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  மேட்டூர்  அணை :  அணையின் நீர்மட்டம்- 113. 030 அடி அணையின் நீர் இருப்பு 82. 787 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8, 347 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 5, 500 கன அடி  ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 96. 98 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய (17.10.19) நீர் மட்டம்…!!

தேனி மாவட்ட அணைகளில்  உள்ள இன்றைய நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தேனி முல்லைப் பெரியாறு  அணை :  அணையின் நீர்மட்டம் 124  அடி அணையின் நீர் இருப்பு 3, 420 மில்லியன் கன அடி அணைக்கு நீர்வரத்து 2, 779 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1,400 கன அடி தேனி சோத்துப்பாறை அணை :  அணையின் நீர்மட்டம் 127. 10 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 மகன்கள் இருந்தும் கவனிக்க ஆளில்லை….. வேதனை அடைந்த தாய் ஆற்றில் குத்தித்து தற்கொலை….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இரண்டு மகன்கள் இருந்தும் கவனிக்க ஆளில்லை என்று கூறி வைகை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 55 வயது பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். தேனி மாவட்டம் ஜம்புலிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதம். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகன்கள் இரண்டு பேரும் வெளியூரில் உள்ளனர். வாழ்வாதாரத்தை காக்க வீட்டு வேலை செய்துவரும் மரகதம் வயதான நிலையில் இரண்டு  மகன்கள் இருந்தும் தன்னை கவனிக்க ஆளில்லை என்று கூறி வைகை ஆற்றில் […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (16.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 96. 51 அடி அணையின் நீர் இருப்பு 26 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 6, 429 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 100 கன அடி திருமூர்த்தி அணை :  அணையின் நீர்மட்டம்- 36. 56/60 அடி அணைக்கு நீர்வரத்து 862 கன அடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய (16.10.19) நீர் மட்டம்…!!

தேனி மாவட்ட அணைகளில்  உள்ள இன்றைய நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தேனி முல்லைப் பெரியாறு  அணை :  அணையின் நீர்மட்டம் 123. 40 கன அடி அணையின் நீர் இருப்பு 3, 301 மில்லியன் கன அடி அணைக்கு நீர்வரத்து 1, 976 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1,400 கன அடி தேனி சோத்துப்பாறை அணை :  அணையின் நீர்மட்டம் 126. 54 அடி அணையின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சரசரவென நிரம்பிய அணை “2,865 ஏக்கர் நிலம்….. 121 நாள்…. பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தேனீ மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பெரியகுளம் மேல்மங்கலம் லட்சுமிபுரம் தாமரைகுளம் பகுதியில் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 126.28 அடி கொண்ட அணை முழு கொள்ளளவை எட்டி தற்போது நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடியாக உள்ளது. இந்நிலையில் முதல் போக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …!!

தேனி கோடாங்கிபட்டி தனியார் மசாலா நிறுவனத்தில் இரண்டவது நாளாக எறிந்து வரும் தீயை கட்டுப்படுத்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியல்  இருக்கக்கூடிய ஈஸ்டர்ன்  மசாலா நிறுவனத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மசாலா கொடுக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 400_க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று  காலை வழக்கம் போல பணி தொடங்கிய போது 8 மணியளவில் தீடிரென தீ பற்றி எறிய ஆரம்பித்தது. இதையடுத்து அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் அடித்ததை தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடினர்.இதை தொடர்ந்து […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (14.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  சேலம் மேட்டூர் அணை :  அணையின் நீர்மட்டம் 114. 400 அடி அணையின் நீர் இருப்பு 84. 820 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  8, 290 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 18, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 95. 86 அடி அணையின் நீர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உயிர் தப்பிய 400 பேர் ……. தேனி மசாலா கம்பெனியில் தீ விபத்து ……!!

தேனி மாவட்டத்தில் பிரபல தனியார் மசாலா நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்ட்டுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியல்  இருக்கக்கூடிய ஈஸ்டர்ன்  மசாலா நிறுவனத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மசாலா கொடுக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 400_க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல பணி தொடங்கிய போது தீடிரென தீ பற்றி எறிந்து விபத்துக்குள்ளாது. இதையடுத்து அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் அடித்ததை தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடினர். இதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (13.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.    சேலம் மேட்டூர் அணை :  அணையின் நீர்மட்டம் 115. 100 அடி அணையின் நீர் இருப்பு 85. 869  டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  12, 943 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 95. 70 அடி அணையின் […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (12.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.   சேலம் மேட்டூர் அணை :   அணையின் நீர்மட்டம் 115. 670 அடி அணையின் நீர் இருப்பு 86.732 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  11, 919 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை :   அணையின் நீர்மட்டம்- 95. 60 அடி அணையின் நீர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய (11.10.19) நீர் மட்டம்…!!

தேனி மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தேனி முல்லைப் பெரியாறு  அணை :  அணையின் நீர்மட்டம் 123. 70  கன அடி அணையின் நீர் இருப்பு 3, 361 மில்லியன் கன அடி அணைக்கு நீர்வரத்து 948 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1, 400 கன அடி தேனி சோத்துப்பாறை அணை :  அணையின் நீர்மட்டம் 126. 34 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (11.10.19) நீர் மட்டம்…..!!

    தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். சேலம் மேட்டூர் அணை :  அணையின் நீர்மட்டம் 116. 240 அடி அணையின் நீர் இருப்பு 87.600 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  13, 404 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 22, 700 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 95. 70 அடி அணையின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” சொந்த மகளை கொல்ல முயன்ற பெற்றோர்கள் கைது….!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மகளை கொலை செய்ய முயன்றதாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமையா கவிதா தம்பதியின் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் இரண்டாவது மகள் போடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தனது அக்காள் கணவரின் தம்பியை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாணவி தனது காதலனுடன் செல்போனுடன் பேசியதாக அவர் தங்கியிருந்த விடுதி வார்டன் மாணவியின் பெற்றோருக்கு தகவல் […]

Categories
ஈரோடு கரூர் கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (10.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை :  அணையின் நீர்மட்டம்- 95. 76 அடி அணையின் நீர் இருப்பு 25. 5 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 3, 358 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 900 கன அடி கரூர் மாயனூர் அணை :  அணையின் நீர்மட்டம் 14. 76 அடி அணையின் நீர் இருப்பு […]

Categories
ஈரோடு கரூர் கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (08.10.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 95.60 அடி நீர் அணையின் நீர் இருப்பு 25.4 டிஎம்சி அணைக்கு நீர்வரத்து 2, 410 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 2, 900 கன அடி நெல்லை பாபநாசம் அணை : அணையின் நீர்மட்டம் 143 அடி அணையின் நீர் இருப்பு 106.40 அடி […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் ஆள்மாறாட்டம் : தேனி கல்லூரி முதல்வரின் வாக்கு மூலம் ……!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா சேர்க்கை குறித்து தேனி கல்லூரி முதல்வரிடம் CBCID போலீசார் விசாரணை நடைபெற்றது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைதான மாணவன் உதித் சூர்யா நேற்று தேனி அழைத்துச் செல்லப்பட்டு இன்று விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி மருத்துவமனை டீன் ராஜேந்திரனுக்கு சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சித்ரா தகவல் அனுப்பினார். இதையடுத்து இன்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் , துணை முதல்வர் எழிலரசன் விசாரணைக்கு ஆஜராகிய நிலையில் அவர்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் ஆள் மாறாட்டம் : 2 பேர் மீது வழக்கு பதிவு,கைது நடவடிக்கை… தேனி SP தகவல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் புகாரில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்று தேனி மாவட்ட SP தெரிவித்துள்ளார். கடந்த 13_ஆம் தேதி அசோக் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகார் அளித்தன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று , தேனி மருத்துவ கல்லூரியில் படித்த உதய் சூர்யா_வில் புகைப்படம் சர்சைக்குள்ளாக்கியது. மேலும் இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தேர்வு எழுதியவர் […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி திருநெல்வேலி தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (12.09.19) நீர் மட்டம்…..!!

தமிழக அணைகளின் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். ஈரோடு பவானிசாகர் அணை : அணையின் நீர்மட்டம்- 96.28 அடி நீர் அணையின் நீர் இருப்பு 25.7 டிஎம்சி 25.9 அணைக்கு நீர்வரத்து 4, 573 கன அடி 4551 அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 3, 650 கன அடி 3050 கரூர் மாயனூர் அணை : அணையின் நீர்மட்டம் 11.81 அடி அணையின் நீர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உங்க ATM கார்டை தாங்க…. நான் எடுத்து தர்ரேன்… முதியவரை ஏமாற்றிய கல்லூரி மாணவன் கைது.!!

தேனி அருகே ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருவதாக கூறி விவசாயை ஏமாற்றிய கல்லுரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.     தேனி மாவட்டம் போடி அருகே உள்ள  விசுவாசபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற விவசாயி அங்குள்ள  ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் அவர் ஏடிஎம் பயன்படுத்துவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.அந்த நேரத்தில்  அந்த ஏடிஎம்க்கு  கல்லூரி வாலிபர் ராஜ்குமார் என்பவர் வந்துள்ளார். கல்லுரி மாணவர் நான் உங்களுக்கு விவசாயிக்கு உதவி செய்வதாக கூறி அவரிடம் இருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தவறான புரிதல்” அவசர கொலையால் ஆயுள்தண்டனை..!!

தேனியில் மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்ததாக எண்ணி கூலித்தொழிலாளியை கொலை செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பால்பாண்டி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரை கடந்த 2013ம் ஆண்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். பின் காவல்நிலையத்தில் கொலை குற்றத்திற்காக சரணடைந்த  அவரை காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் தனது மனைவியுடன் தவறான தொடர்பு உள்ளதாக எண்ணி இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.பின் […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த கல்வி மாவட்டமாக தேனி மாறும்… துணைமுதல்வர் OPS நம்பிக்கை..!!

இன்னும் 5 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மற்றும் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக தேனி உருவாகும் என்று துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பழனிசெட்டி பகுதியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் முறை நிதி உள்ளிட்டவற்றை வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பெண்களுக்கு நிதிகளை வழங்கினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனீ அரசு சட்டக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த OPS…!!!

தேனீ மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். தேனி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த கல்வி ஆண்டில் சட்ட கல்லூரி தொடங்க தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் வீரபாண்டியை அடுத்துள்ள சந்திரகுப்த மவுரியர் பள்ளியில் தற்காலிகமாக சட்டக் கல்லூரி வகுப்புகள் நடந்து வருகிறது. நிரந்தரமான சட்ட கல்லூரி கட்டிடம் அமைக்கப்பட்ட பிறகு மாற்றம் செய்யப்படும் என […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தக்காளி விலை கடும் சரிவு ..!!விவசாயிகள் கவலை ..!!!

தேனி மாவட்டத்தில் தக்காளி விலை கடுமையாக  சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர் . தேனி மற்றும் தேவதானப்பட்டி, தாமரைக்குளம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி பெரிதும் பயிரிடப்படுகிறது .போதிய மழை இல்லாததால் தக்காளி விளைச்சல்  குறைந்துள்ள நிலையில் ,ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிகத்தின் பல பகுதிகளுக்கு தக்காளி கொண்டு வரப்படுகிறது . இதனால் இப்பகுதியில் விளையும் தக்காளிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள்  வருத்தமடைந்துள்ளனர் .கடந்த மாதம்  15 கிலோ […]

Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

கலைஞரோ..ஜெயலலிதாவோ.. முதல்வராக இருந்திருந்தால் நீட் வந்திருக்காது…. ஸ்டாலின் அசத்தல் பேச்சு..!!

ஜெயலலிதாவோ கருணாநிதியோ முதலமைச்சராக இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் வந்திருக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கலைஞர் திடலில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். நிகழிச்சிக்கு பின் பொது கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தங்க தமிழ்ச்செல்வனை ஏற்கனவே தங்கள் பக்கம் இழுப்பதற்கு பலமுறை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வறட்சியில்லா மாவட்டமாகும் தேனீ…50,000 மரக்கன்றுகள்…மாவட்ட ஆட்சியரின் அசத்தல் திட்டம்…!!

தேனி மாவட்டம் போடி அருகே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தேனியை வறட்சி இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மரங்களை நட வேண்டுமெனவும் ,திட்டத்தை மாவட்டம் முழுமைக்கும் பேரூராட்சி வாரியாக செயல்படுத்த வேண்டுமெனவும் திட்டமிட்ட அவர் , பேரூராட்சி செயல் அலுவலக அதிகாரிகளுக்கு திட்டத்தை செயல்படுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு பேரூராட்சியிலும் தலா ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு” தொடரும் பரபரப்பு ….!!

நியூட்ரினோஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , போரட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் அம்பரப்பர் மலை பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோஆய்வு திட்டத்திற்கு கிராம மக்களும் , இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆகிய துறை சார்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நுண்துகள் மற்றும் பிரபஞ்ச யுக்திகளை கண்டறியும் ஆய்வாக இது அமைகின்றது. இந்த ஆய்விற்காக மலையை குடைந்து ஆய்வுமையத்தை தேனிமாவட்டத்தில் அமைக்கின்றனர். இது அங்குள்ள கிராமப்புரவாசிகள் மற்றும் இயற்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

57 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை…. தேனியில் கொடூரம் ..!!

தேனியில் 57 வயதான மூதாட்டியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஓடைத்தெருவில் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தி.  57 வயதான மூதாட்டி சாந்தி அருகேயுள்ள உழவர் சந்தையில் சிறு, சிறு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.நேற்று இரவு மூதாட்டி வேலை செய்து கொண்டு இருக்கும் போது  அங்கே வந்த ஒரு கும்பல் மூதாட்டியை கொடூரமாக பலாத்தகாரம் செய்துள்ளனர். இதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். பின்னர் காலை மூதாட்டியின் சடலத்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

25 கோடி மதிப்பிலான “தானியங்கி மின்தடை மையம்” திறந்து வைத்தார் OPS …!!

தேனியில் 25 கோடி மதிப்பிலான  தானியங்கி மின்தடையை நீக்கும் மையத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். சமீப காலமாக மின்தடை என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது. தமிழகம் முழுவதும் தொடர் மின்வெட்ட்டால் மக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். பல கிராமங்களில் ஒரு நாளைக்கு 5 முறைக்கு மேல் மின்வெட்டு ஏற்படுகின்றது. அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் மின்தடையை நீக்கும் தானியங்கி மையத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். சுமார் […]

Categories
தேனி மாநில செய்திகள்

தண்ணீர் பிரச்சினைக்கு போர்க்கால நடவடிக்கை…. துணை முதல்வர் உறுதி …!!

தண்ணீர் பிரச்சினையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த குடிநீர் கேட்டு அதிகமான இடங்களில் மக்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசிடமும் , மத்திய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் , தமிழகத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கணவனை கொன்று நாடகமாடிய மனைவி “தேனியில் பரபரப்பு..!!

மொய் பணத்தை செலவு செய்ததால் மனைவி கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டம் கொத்தப்பட்டி கிராமத்தின் மயானப் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அய்யனார் உடலில் காயங்களுடன் சடலமாக கடந்த மார்ச் 12 ஆம் தேதி மீட்கப்பட்டார் . இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதில் , திருமணத்தில் வந்த மொய் பணத்தை வீணாக செலவு செய்ததால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகை அணையில் படகு சவாரி…சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!!

ஆண்டிபட்டி அருகில் உள்ள  வைகை அணையில் படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டு  பயணிகள் சவாரி செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் வைகை அணைக்கு கோடை விடுமுறை காரணமாக திண்டுக்கல் ,மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து  மகிழ்ந்து செல்கின்றனர்.இந்நிலையில்  சுற்றுலாப் பயணிகள் மகிழும் வண்ணம் அங்கு படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில்  சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.படகு சவாரியின்  கட்டணத்தை குறைக்க வேண்டும்  என்ற கோரிக்கையே சுற்றுலா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வறட்சியின் காரணமாக விலை உயர்ந்த காய்கறிகள்….மக்கள் அவதி !!!

தேனி சந்தையில் ,வறட்சியின் காரணமாக,காய்கறிகள் விலை பெரிதும்  உயர்ந்துள்ளது. வறட்சியின் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதால்  காய்கறி விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான காய்கறிகள் விலை பெரிதும்  உயர்ந்துள்ளது.தேனி உழவர் சந்தையில் , நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும்  அவரைக்காய் ரூ.74-க்கும்  விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.24 , பட்டர் பீன்ஸ் ரூ.135 , கத்தரிக்காய் ரூ.22,   புடலங்காய் ரூ.30 ,  பாகற்காய் ரூ.38 , […]

Categories

Tech |