மயிலாடும்பாறையில் கடன் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகின்ற நிலையில் இங்கு 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது […]
