செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே தனியார் கல் குவாரிகளால் ஒரு கிராமத்தில் இருக்கும் வீடுகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மதுராந்தகம் தாலுக்கா விராலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகாமலை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பிரதான தொழில் விவசாயமாக உள்ளது. இப் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் தனியார் கல் குவாரிகளால் பொது மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இங்குள்ள […]
