முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 179ஆவது பிறந்தநாள் விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பேட்டியளித்துள்ளார். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே தனது சொத்துக்களை விற்று அதனை கட்டி முடித்தவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். […]
