Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“பால், பிஸ்கெட் கூட வாங்க முடியல…. குழந்தைகளுடன் தவிக்கும் இளம்பெண்”…. இலங்கை அகதிகள் வேதனை….!!

குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் வாங்கவும் பணம் இல்லாமல் தவித்து வருவதாக இலங்கையில் இருந்து அகதியாக வந்த பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை இல்லாத நிலையில் அனைத்து பொருட்களும் விலை சரமாரியாக உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் பஞ்சத்தின் காரணமாக இலங்கையில் இருந்து தப்பித்து தமிழகத்திற்கு அகதிகளாக வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் இருந்து நேற்று 5 குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 15 பேர் அகதிகளாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு படகு மூலம் வந்தனர். அப்போது யாழ்ப்பாணம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெற்ற மகள் என்றும் பாராமல்…. தந்தையே செய்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சொந்த மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் சமையல் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தாய் வெளியே செல்லும் நேரத்தில் சிறுமியின் தந்தை சொந்த மகள் என்றும் பாராமல் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. துடிதுடித்து இறந்த தையல் தொழிலாளி…. தப்பியோடிய டிரைவர்….!!

கார் கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியில் வசித்து வந்த முருகானந்தம்(44) தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் திடீரென கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.  இந்த கோர விபத்தில் பலத்தகாயமடைந்த முருகானந்தத்தை மீட்டு அக்கம்பக்கத்தினர் ராமநாதபுரம் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உடைக்கப்பட்ட மேற்கூரை…. நகைகளுடன் தப்பியோட்டம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

நகை பட்டறையின் மேற்கூரையை பிரித்து நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள எஸ்.பி.பட்டினத்தில் வசித்து வரும் செல்வம் என்பவர்(52) நகை பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று செல்வம் வழக்கம்போல கடையை திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம் உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பட்டறையில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சந்தேகப்படும்படி சுற்றிய நபர்…. மடக்கிய போலீசார்…. பறிமுதல் செய்யப்பட்ட பொட்டலங்கள்….!!

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே கமுதி இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கருங்குளம்  பகுதியை சேர்ந்த வழிவிடுமுருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் 60 கிராம் எடையுள்ள சுமார் 12 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கைது செய்யப்பட்ட மீனவர்கள்…. எச்சரித்து அனுப்பிய நீதிமன்றம்…. விசைப்படகு கிடைக்காததால் வேதனை….!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் கடந்த மாதம் 28ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து 4 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், நேற்று அவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி சோதனை…. கையும் களவுமாக சிக்கிய வாகனம்…. 3 பேர் அதிரடி கைது….!!

சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அடுத்துள்ள மேலக் கொடுமலூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வாகனத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வியாபாரத்தை முடித்து வந்தவருக்கு…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

வியாபாரியின் வீட்டு கதவை உடைத்து 12 பவுன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் மழையான் குடியிருப்பு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள் பார்கவியுடன் பரமக்குடியில் நடைபெற்ற சித்திரை திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் தோசை வியாபாரம் செய்ய வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து வியாபாரத்தை முடித்துவிட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. அரசு ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்…. அலுவலகத்தில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திடீர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 3% அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்பளிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு வட்டத்தலைவர் சுரேஷ் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிரசித்திபெற்ற கோவில் உண்டியல் திறப்பு…. 8 1/2 லட்சத்தை தாண்டிய காணிக்கை…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

பாகம் பிரியாள் சமேத வால்மீகிநாத சாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் 8 1/2 லட்சம் இருந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள திருவெற்றியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம் பிரியாள் சமேத வால்மீகிநாத சாமி கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவில் உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. மேலும் காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையால் சிவலிங்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து நடக்கும் பவுடர் விற்பனை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. சிக்கிய போதைப்பொருள்….!!

சட்ட விரோதமாக போதை பொருள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் 1 லட்சம் மதிப்புள்ள பவுடரை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சரவணபொய்கை ஊருணி பகுதியில் சட்ட விரோதமாக போதை பவுடர், மாத்திரை, கஞ்சா போன்றவற்றை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவத்தன்று போலீசார் முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது சட்டவிரோத செயல்…. போலீசை கண்டதும் தப்பியோட்டம்…. வளைத்து பிடித்த அதிகாரிகள்….!!

சட்ட விரோதமாக மணல் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூரில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக பஜார் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து டிராக்டரில் இருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மணலை அங்கேயே கொட்டிவிட்டு தப்பியோட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகாரியின் கார் மீது கல்வீச்சு…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

வருவாய் ஆய்வாளரின் கார் மீது கற்களை வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வீரபத்ரசாமி கோவில் தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி விட்டு இரவு நேரத்தில் தூங்க சென்றுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்த போது கார் கண்ணாடியை மர்ம நபர்கள் கற்களை வீசி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. சகதியில் சிக்கியதால் பரபரப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி சகதியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். மிட்டாய் தயாரிக்கும் தொழிலாளியான இவர் மீன் பிடிப்பதற்காக நயினார் கோவிலில் உள்ள பெரிய கண்மாய்க்கு சென்றார். இந்நிலையில் கண்மாயில் வலைவிரித்து மீன் பிடித்து கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்த சகதியில் ராஜன் சிக்கியுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வருவதற்குள் அவர் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பஜார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எதிர்ப்பார்த்த விலை கிடைக்கல…. மிளகாய் விளைச்சல் குறைவு…. வேதனையில் விவசாயிகள்….!!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், சிக்கல், மல்லல், திருஉத்திரகோசமங்கை, தாளியரேந்தல், மட்டியரேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிளகாய் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. தற்போது சீசன் உள்ள நிலையில் இந்த ஆண்டும் முதுகுளத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மிளகாய் விளைச்சல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை மழை இல்லாததால் மிளகாய் விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காததால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவிலில் கதவின் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகிலுள்ள தோளுர் கிராமத்தில் பூலார் உடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை திருடி சென்றுள்ளனர். அந்த உண்டியலில் ரூபாய் 15,000 இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தோளுர் கிராம தலைவர் பூமிநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்குள் புகுந்த மர்மநபர்கள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் விசாரணை….!!

மளிகை கடையின் பூட்டை உடைத்து லேப்டாப், செல்போன் ஆகியவற்றை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள அடுத்தகுடி கிராமத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் சிலர் மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், செல்போன், 5,000 ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த முருகேசன் உடனடியாக திருவாடானை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

7 வயது சிறுமிக்கு நேர்ந்த தொல்லை…. பெற்றோர் அளித்த பரபரப்பு புகார்…. பெயிண்டர் போக்சோவில் கைது….!!

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். பெயிண்டரான இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் சைல்டு லைன் அமைப்பினருக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் அனைத்து மகளிர் காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அழுகிய நிலையில் கிடந்த பெண் உடல்…. போலீஸ் தீவிர விசாரணை…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

காட்டு பகுதியில் பெண் ஒருவரின் உடல், அழுகிய நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாப்பாக்குடி கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரி…. தகராறு செய்த 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் சரக மோட்டார் வாகன ஆய்வாளராக பூர்ணலதா என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளர். இந்நிலையில் அப்பகுதி வழியாக செம்மண் ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி எடை போடுமாடு கூறியுள்ளார். அப்போது வாகனத்தில் இருந்தவர்களுக்கும் அதிகாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பூர்ணலதா, தன்னை பணி செய்ய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையேற்றத்தை கண்டித்து…. பாசன விவசாயிகள் கோரிக்கை…. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!

வேளாண் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் பார்த்திபனூரில் வைத்து பச்சை துண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேளாண் இடு பொருட்களான உரங்கள், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, கால்நடை தீவனங்கள் மற்றும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பொதுச் செயலாளர் அர்ச்சுனன், மாநில செயலாளர் முருகன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எவ்வளவு தேடியும் கிடைக்கல…. தவறி விழுந்த மீனவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது மீனவர் ஒருவர் தவறி விழுந்து கடலில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் இருந்து 12 மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது மீனவர் முனியராஜ் திடீரென படகில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து அவரை தேடியுள்ளனர். ஆனால் வெகு நேரம் தேடியும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசுக்கு கிடைத்த தகவல்…. சிக்கிய 1 கோடி ரூபாய் போதைபொருள்…. 2 பேர் கைது….!!

துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு 1 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி தீபக் சிவாஜ் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது துறைமுக பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பாம்பன் பகுதியை சேர்ந்த தஷ்மன்(27) என்பவரை பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் விழுப்புரம்

மாதத்தில் மூன்று நாள் தான்…. எப்போ திறக்கும்ன்னு தெரியல…. ரேஷன் கடையால் அவதிப்படும் மக்கள்….!!

 மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்படும் நியாய விலை கடையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகிலுள்ள வடநெற்குணம் கிராமத்தில் நியாய விலைக்கடை அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் ரேஷன் கடை மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு வருகின்றது. அதுவும் அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு எந்த தேதியில் ரேஷன் கடை திறக்கப்பட்டு சாமான் வழங்கப்படுகிறது என்ற தகவல் தெரியவில்லை. இதனால் தினசரி அப்பகுதி மக்கள் பொருள் வாங்குவதற்காக நியாயவிலை கடைக்கு வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் நடந்த தொல்லை…. சிறுவன் அளித்த பரபரப்பு புகார்…. வியாபாரி போக்சோவில் கைது….!!

பேருந்தில் பள்ளி சிறுவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த கைலி வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் 15வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏற்றியுள்ளார். அப்போது பேருந்தில் அருகே அமர்ந்திருந்த முதியவர் திடீரென பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவியை கடத்த முயற்சி…. அதிரடியாக மடக்கிய தந்தை…. 4 வாலிபர் கைது….!!

12ஆம் வகுப்பு மாணவியை காரில் கடத்த முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவதன்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த மாணவியை சிலர் திடீரென காரில் கடத்தி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை உடனடியாக அந்த காரை மடக்கி பிடித்துள்ளார். இதனையடுத்து காரில் இருந்தவர்களை பிடித்து முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலை தடுமாறிய இருசக்கர வாகனம்…. துடிதுடித்து இறந்த டிரைவர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பேரையூர் பகுதியில் வசித்து வந்த சரவணகுமார் என்பவர் முதுகுளத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சரவணகுமார் இருசக்கர வாகனத்தில் பேரையூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எட்டிசேரி வளைவு சலறி அருகே சென்றபோது இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறியதில் சரவணகுமார் கீழே விழுந்துள்ளார். இந்த கோர விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சரியான உணவும் கிடைக்கல…. எப்படியாவது கூட்டிட்டு வாங்க…. சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்கள்….!!

இலங்கையில் முறையான உணவு கிடைக்காமல் தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்குமாறு மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 12 மீனவர்கள் கடந்த 2ஆம் தேதி மீன்பிடிக்க விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு மண்டபம் பகுதியை சேர்ந்த 20 மீனவர்களையும் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது இலங்கை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கெமிக்கல் குடோனில் பிடித்த தீ…. போராடி அணைத்த வீரர்கள்…. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு….!!

ஆரம்ப சுகாதார நிலைய குடோனில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள பேரையூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு கெமிக்கல், பிளீச்சிங் பவுடன், ஆசிட், கொசு மருந்து மூட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய குடோனில் நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து ஏரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

160 கிராம் 6 கோடியா….? காரில் இருந்த வைரக்கற்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

ஹாங்காங் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கோடி மதிப்பிலான வைரக்கற்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ரயில்வே மேம்பாலம் அருகே கடந்த 2 ஆம் தேதி சூப்பிரண்டு சிறப்பு புலனாய்வு பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழக்கரையை சேர்ந்த யூசுப்சுலைமான் என்பவர் ஓட்டி வந்த காரில் 160.09 கிராம் (800  காரட் வைரக்கற்கள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் வைரகற்களை பறிமுதல் செய்து யூசுப்சுலைமானையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலை உயர்வால் பொதுமக்கள் அவதி…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தினந்தோறும் பெட்ரோல் , டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் காசிநாதன் துரை தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தாலுகா செயலாளர் முனியசாமி, தர்மலிங்கம், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில்….. மாடு வளர்க்கும் பயிற்சி…. பங்கேற்ற குழு உறுப்பினர்கள்….!!

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் வட்டார பால் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு மாடு வளர்க்கும் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை யூனியனில் வைத்து தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 47 கிராமங்களில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களில் மாடுகள் வளர்த்து வரும் பெண்களை உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து அவர்களை வைத்து வட்டார அளவிலான பால் உற்பத்தியாளர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குழுவின் உறுப்பினர்களுக்கு கன்று வளர்ப்பு, மாடு வளர்ப்பு, மாடு வளர்ப்பின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்…. கண்டன ஆர்ப்பாட்டம்…. அ.தி.மு.கவினர் கோரிக்கை….!!

தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழத்தில் சொத்துவரியை உயர்த்தியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதிலும் நடைபெற்றுள்ளது. மேலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது, விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும், பெண்களுக்கான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அ.தி.மு.கவினர் மீது பொய் வழக்குபோட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பேருந்து…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

தொழிலாளி மீது அரசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் செய்யலூரில் அழகர்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் திருஉத்திரகோசமங்கை விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக கமுதியை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென அழகர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் அழகரின் உடலை மீட்டு உடற்கூறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தங்க பிஸ்கட் வாங்கி தரேன்” 5 லட்ச ரூபாயை பறிகொடுத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

5 லட்ச ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெளிபட்டிணத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரலிங்கம் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சண்முகத்திடம் உசிலம்பட்டி பகுதியில் குறைந்த விலைக்கு தங்க பிஸ்கட் வாங்கி தருவதாக சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சண்முகம் 5 லட்ச ரூபாயுடன் உசிலம்பட்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தங்க பிஸ்கட் வாங்குவது குறித்து பேரம் பேசிக் கொண்டிருந்தபோது சில மர்ம […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை கட்டுபடுத்த வேண்டும்…. காங்கிரஸ் சார்பில் கோரிக்கை…. அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கமிட்டியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கியுள்ளார். மேலும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம், மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், நகர் காங்கிரஸ் தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அ.தி.மு.க நிர்வாகி காருக்கு தீ வைப்பு…. ஒருவர் அதிரடி கைது…. மேலும் 3 பேருக்கு வலைவீச்சு….!!

முன்னாள் அ.தி.மு.க பிரமுகரின் காரை எரித்த ஒருவரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காமராஜர் நகரில் வசித்து வரும் வின்சென்ட் ராஜா என்பவர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சசிகாலவுடன் தொலைபேசியில் பேசியதால் இவரை கட்சி பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வின்சென்ட் ராஜாவின் காரை மர்மநபர்கள் சிலர் தீவைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியெல்லாம் யோசிக்குறாங்க…. கோவிலுக்கு சென்ற பக்தர்…. கடற்கரையில் காத்திருந்த அதிர்ச்சி….

கோவிலுக்கு குடும்பத்துடன் வந்த பக்தரிடம் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான ராமேஸ்வரம் கோவிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது வெங்கடேஷ் கடற்கரையில் குடும்பத்தினரின் பைகள் மற்றும் உடமைகளுடன் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து வாலிபர் ஒருவர் உங்களுடைய பணம் கீழே விழுந்துள்ளதாக வெங்கடேஷிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோபித்துகொண்டு சென்ற தொழிலாளி…. பிணமாக கிடந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் சண்டை போட்டு வெளியே சென்ற தொழிலாளி கோவில் அருகே பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை சிவஞானபுரம் பகுதியில் விசுவநாதன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு குடிபழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விசுவநாதன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரதாதல் விசுவநாதனின் மகன் ராகுல் வெளியே தேடியதாக கூறப்படுகிறது. அப்போது அதேபகுதியில் உள்ள கோவிலுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாக்குமூட்டையில் அள்ள முயற்சி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை அள்ள முயன்ற நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காட்டு பரமக்குடி முத்தையா கோவில் பகுதியில் எமனேஸ்வரம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவில் அருகே உள்ள வைகை ஆற்றில் ஒருவர் சாக்குமூட்டையில் மணல் அள்ளி கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பரத்குமார் என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்ட விரோத செயல்…. போலீசுக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்….!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள வழிமறிச்சான் ஊருணி அருகே 3 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த பார்த்திபனூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா(63), ஜெயபால்(27), நாகசாமி(22) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணி செய்து கொடுத்த இன்ஜினியர்…. நூதன முறையில் பண மோசடி செய்த கும்பல்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஆன்லைன் மூலம் இன்ஜினியரிடம் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்பகோட்டை பகுதியில் இன்ஜினியரிங் பட்டதாரியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓமனில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவகுமார் விடுமுறையை முன்னிட்டு தனது தாயை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் நண்பரான முரளிதரன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் பகுதி நேரம் வேலை பார்த்தால் 500 முதல் 20 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பேருந்து…. முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து…..!!

அரசு பேருந்து மோதி கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி அடுத்துள்ள பள்ளபச்சேரி பகுதியில் முனியாண்டி(70) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் அருத்துவைக்கப்பட்ட நெல் மூட்டைகளை காவல்காத்துவிட்டு மீண்டும் அதிகாலையில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது ராமநாதபுரகுதில் இருந்து நெல்லையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக முனியாண்டி மீது மோதியுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்…. திடீரென தாக்கிய வெறிநாய்கள்…. 7 பேர் படுகாயம்….!!

தெருவில் விளையாடி கொண்டிருந்த 7 சிறுவர் சிறுமிகளை வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் மேலதெருவில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென 3 வெறிநாய்கள் அங்கு ஓடி வந்து சிறுவர்களை கடிக்க முயன்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் அச்சத்தில் ஓடியுள்ளனர். இருப்பினும் அந்த வெறிநாய்கள் சிறுவர் சிறுமிகளை கடித்து குதறியது. இதில் அதே பகுதியை சேர்ந்த சுகைனா ஆப்ரின்(7). தொகிதா(5) உள்பட 7 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கட்டுப்பாட்டை இழந்த வேன்…. சாலையோரம் கவிழ்ந்ததால் பரபரப்பு…. அதிஷ்டவசமாக தப்பிய பயணிகள்….!!

வேன் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள தளிர்மருங்கூர் பகுதியை சேர்ந்த சிலர் வேனில் வேம்புவயல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தளிர்மருங்கூர் தாண்டி சென்று கொண்டிருந்த போது திடீரென வேன் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த வயலில் இறங்கி கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து வேன் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த டிரைவர் மற்றும் பெண்கள் வெளியே வந்து விழுந்தனர். ஆனால் அதிஷ்டவசமாக அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து…. அதிகாரிகளை மிரட்டிய 4 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தாசில்தார் அலுவலகத்தில் புகுந்து அதிகாரிகளை மிரட்டி அம்பேத்கர் புகைப்படம் மாட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுக அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவகத்தில் சிலர் டாக்டர் அம்பேத்கர் புகைப்படத்தை மாட்ட முயன்றனர். இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி புகைப்படம் மாட்டக்கூடாது என கூறினார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அவர்கள் ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை மிரட்டி அம்பேத்கர் புகைப்படத்தை மாட்டி மாலை அணிவித்தனர். இச்சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிப்படை வசதிகள் கேட்டு…. பொதுமக்கள் திடீர் ஊர்வலம்…. 24 பேர் கைது….!!

அனுமதி ஊர்வலம் சென்று தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் அருகே இரட்டைமலை கிராமம் உள்ளது. இப்பகுதியில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனை கண்டித்து அப்பகுதியினர் பரமக்குடி தனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக  ஊர்வலமாக சென்றனர். இதனையரித்து சென்ற எமனேஸ்வரம் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அனுமதியின்றி ஊர்வலமாக சென்றதாக கூறி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நகைக்காக நடந்த கொடூரம்…. தனிப்படையினர் தீவிர விசாரணை…. குற்றவாளி அதிரடி கைது….!!

நகைக்காக பெண்ணை கொலை செய்து தலைமறைவான நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள நயினார்கோவில் சிறுவயல் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ராணி 20 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து நயினார்கோவில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்ததில் கரிசல்குளத்தை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான முனீஸ்வரனை தேடி வந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையேற்றத்தை கண்டித்து…. மக்கள் கட்சியினர் கோரிக்கை…. கடலில் இறங்கி போராட்டம்….!!

சமையல் கியாஸ் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வைத்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சமையல் கியாஸ் தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், கட்சி நிர்வாகிகள் மாரீஸ், மாரிஸ் குரு சர்மா, மகளிர் அணி  நிர்வாகிகள் சுந்தரி, லட்சுமி, கவிதா உள்பட பலரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது கட்சி நிர்வாகிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலி ஆவணம் தயாரிப்பு…. பெண் மீது தாக்குதல்…. 2 பேர் அதிரடி கைது….!!

வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 பேரை கைது செய்த நிலையில் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை பகுதியில் மரியம்பீவி(65) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அபுல்ஹசன் என்பவர் மரியம்பீவியின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்தத் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மரியம்பீவி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி அபுல்ஹசன் தயரிந்த போலியாக தயாரித்த பத்திரத்தை ரத்து செய்துள்ளனர். இதனை […]

Categories

Tech |