Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்னாள் முதலமைச்சரின் நினைவுநாளையொட்டி… பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா… தொடங்கி வைத்த எம்.எல்.ஏ…!!

முன்னாள் முதலமைச்சர் தலைவர் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி சி.பி.எஸ்.சி பள்ளியில் மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள புதுநகரில் டாக்டர் அப்துல்கலாம் சி.பி.எஸ்.சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவுநாளையொட்டி பள்ளி வளாகத்தில் மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றுள்ளது. இதில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்துள்ளார். இதனையடுத்து மொத்தமாக சுமார் 100 மரகன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பள்ளியின் சேர்மன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்… வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தடைந்ததில் மாவு வியாபாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வண்டிக்காரதெரு டாக்டர் அம்பேத்கர் தெருவில் பகுர்தீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவு அரைத்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் மாவு விற்பனைக்காக பகுர்தீன் ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டிணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மரப்பாலம் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதியுள்ளது. இந்த கோர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த நபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை… சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் மலைசெல்வம் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் லட்சுமிபுரம் ஊருணி மேல்கரையை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கோரவள்ளி பகுதியில் வசிக்கும் சந்துரு(23) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி விற்பனை செய்யபடுவதாக கமுதி குற்றபிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பெருநாழி இன்ஸ்பெக்டர் ஏ.ஜி. முருகன் தலைமையில் குற்றபிரிவு காவல்துறையினர் முத்துசெல்லபுரம் சாலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தியுள்ளனர். அப்போது காரில் இருந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூட்டை உடைத்த மர்மநபர்கள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெட்டிகடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெளிபட்டினம் லட்சுமிபுரம் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மகர்நோன்பு பொட்டல் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் மர்மநபர்கள் சிலர் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 1,000 ரூபாய் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக மாதேஸ்வரன் வந்த நிலையில் கடையின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையோரம் உள்ள உலோக தடுப்புகள்… மர்ம நபர்களின் கைவரிசை… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சாலையில் அமைத்துள்ள உலோக தடுப்புகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழ்குடி பகுதியில் இருந்து வாலசுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் உள்ள ஓடை மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் விபத்துகளை தடுப்பதற்கும், வாகனங்களின் பாதுகாப்பிற்கும் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள உலோக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மர்ம நபர்கள் சிலர் அந்த உலோக தடுப்புகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பெருநாழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தடுப்புகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முககவசத்தின் முக்கியத்துவம்… நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா 3ஆம் அலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3 அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் கமுதி பேருந்து நிலையம் வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், தனிமனித இடைவெளி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்… அச்சத்தில் இருக்கும் பெண்கள்… பொதுமக்கள் கோரிக்கை…!!

வழிப்பறி திருட்டு போன்றவற்றை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வழிப்பறி நடப்பதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பரமக்குடி பகுதியில் உள்ள காளிதாஸ் தெருவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் 2 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது அப்பகுதியில் உள்ள சிசிடிவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனுமதியின்றி தோட்டத்தில் புகுந்து… வாலிபர் செய்த செயல்… விவசாயியின் பரபரப்பு புகார்…!!

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வல்லந்தை பகுதியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தர்சன் சிங்(55) சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பழதோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார். இவரது தோட்டத்தில் மாம்பழம், சப்போட்டா, கொய்யா என பலவகையான மரங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தர்சன் சிங் தோட்டத்தில் ஒரு இளைஞர் அனுமதியின்றி கொய்யா பழங்களை பறித்துள்ளார். இதனை பார்த்த தர்சன்சின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்ல…. பயணிகளுக்கு இன்று முதல் தடை…!!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதிகளுக்கும், கோவில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா பரவலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மைதானத்திற்கு சென்றுகொண்டிருந்த போலீசார்… நடுவில் நடந்த விபரீதம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு இரண்டு காவலர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் , சிவகங்கையை சேர்ந்த 2ஆம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு, சான்றிதல் சரிபார்ப்பு உள்ளிட்டவை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இங்கு பாதுகாப்பு பணிக்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உதவி செய்வது போல் நடித்த இளைஞர்கள்… முதியவருக்கு ஏற்பட்ட கதி… தேடுதல் வேட்டையில் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி செய்வது போல் நடித்து முதியவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அடுத்துள்ள பிரப்பன்வலசை களஞ்சியம் நகரில் முத்துகூறி(67) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் சென்ற இவர் மீண்டும் பிரப்பன்வலசை வருவதற்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் காத்துகொண்டிருந்துள்ளர். அப்போது அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள் முத்துகூரியிடம் வந்து பேசியுள்ளார். இதனையடுத்து முதியவரை பிரப்பன்வலசையில் கொண்டிபோய் விடுவதாக கூறி உதவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடைபெற்ற கிரிகெட் போட்டி… அணிகளுக்கு இடையே வாக்குவாதம்… 9 பேர் மீது வழக்குபதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிரிகெட் விளையாடி கொண்டிருக்கும் போது இரண்டு அணிகளுக்கும் நடந்த தகராறில் 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கிராமத்தில் கிரிகெட் போட்டி நடந்து வந்துள்ளது. இந்நிலையில்  நேற்று நடைபெற்ற போட்டியில் அண்ணா குடியிருப்பு அணியினருக்கு எதிராக சத்தக்கோன்வலசை அணியினர் விளையாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து விளையாடி கொண்டிருந்த 2 அணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வினோத்(20) என்பவர் கோபி கிருஷ்ணனை கிரிகெட் மட்டையால் தலையில் அடித்துள்ளார். இதில் அவருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தப்பியோடிய விவசாயி… மர்மமான முறையில் உயிரிழப்பு… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் தாக்கியதால் தான் விவசாயி உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள ஏ.புனவாசல் கிராமத்தில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு நிகழ்ச்சியில் அங்குள்ள கண்மாய் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடந்துள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் போலீசார் வருவதை பார்த்ததும் சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். அதில் பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜோதிநாதன்(45) என்பவர் கால் தடுமாறி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணிநிரந்தரம் செய்ய வேண்டும்… கோரிக்கை விடுத்த தூய்மைபணியாளர்கள்… அதிகாரிகள் பேர்ச்சுவார்தை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி  பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து சங்க நிர்வாகிகள் கணேசன், முருகவேல், முனியசாமி, பெருமாள், பாலு, முனியசாமி மற்றும் தூய்மை பணியாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட எதிர்பாக்கல… துடிதுடித்து உயிரிழந்த பெண்… தனியார் பஸ் டிரைவர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது தனியார் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியில் செந்தூரப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி வள்ளி(48). இந்நிலையில் வள்ளி கடலாடி அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு அங்கிருந்த சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதிவழியாக வந்த தனியார் பேருந்து ஓன்று எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியுள்ளது. இதனையடுத்து விபத்தில் பலத்தகாயம் அடைந்த வள்ளியை கடலாடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆஸ்பத்திரி போறதுக்குள்ள இப்படி ஆகிட்டு… தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி… தீவிர விசாரணை நடத்தும் போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள சின்ன பாளையரேந்தல் பகுதியில் முத்துமணி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி தற்போது ஊரிலேயே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமணி வேலையை முடித்து விட்டு ராமநாதபுரத்தில் இருந்து இருசக்கர வாகனம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் விற்பனை செய்யக்கூடாது… ரோந்து சென்ற அதிகாரிகள்… ஒருவரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல அப்பகுதியில் ரோந்து பணியில் .ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் அலங்கச்சேரி தெருவில் சென்றபோது சந்தேகப்படும் படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கொத்தனார் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(52) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட வெளிமாநில […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்… மானியத்துடன் கடன் உதவி… நடைபெற்ற நேர்காணல்…!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சுய தொழில் தொடங்குபவர்களுக்கு கடனுதவி வழங்க தகுதியுள்ள நபர்களை தேர்தெடுக்கும் நேர்காணல் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்றினால் பலரும் வாழ்வாதாரம் இழந்து மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைவாய்ப்பு இல்லாத ஆதி திராவிட இளைஞர்கள் சுயதொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கும் வகையிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மாவட்ட தாட்கோ அலுவலகத்தின் சார்பில் அரசின் மானியத்துடன் தொழில் முனைவோர் திட்டம், வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெயிலினால் வந்த விளைவு… அலறியடித்து சென்ற தொழிலாளர்கள்… விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மாவு மில் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள அலியார் சாலை கோலியார்க்கோட்டையில் மாவு மில் ஓன்று செயல்பட்டு வந்துள்ளது. இதனை இஸ்மாயில் என்பவர் நடந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல மாவு மில் செயல்பட்டு வந்த நிலையில் அதிக வெயிலின் காரணமாக அங்கிருந்த எந்திரத்தில் தீப்பிடித்துள்ளது. இதனைப்பார்த்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வெளியே ஓடியுள்ளார். இதனையடுத்து இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எந்த காரணமும் சொல்லல… மனைவிக்கு வந்த அதிர்ச்சி தகவல்… உறுதியளித்த மாவட்ட ஆட்சியர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள காக்கூர் அருகே உள்ள புளியங்குடியில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சண்முகவள்ளி. இந்நிலையில் குமரவேல் துபாயில் ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 26ஆம் தேதி குமரவேல் உயிரிழந்துவிட்டார் என அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளார். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரே நாளில் 1008 பேரா…? அதிரடி சோதனையில் போலீசார்… 1,23,000 ரூபாய் அபராதம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்த போலீசார் சாலை விதிகளை மீறிய 1,008 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் காவல் உட்கோட்ட பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் 867 பேர் இருசக்கர வாகனம் ஓட்டி சென்றுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டு சென்றதாக 57 பேர் மீது, சிக்னலை மதிக்காமல் சென்ற 5 பேர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முறையாக பயன்படுத்தனும்… பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை… வேளாண் இணை இயக்குனர் ஆய்வு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட பண்ணை இயந்திரங்களை வேளாண்மை இணை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பண்ணை இயந்திரங்களை வேளாண்மை இணை இயக்குனர் டாம்பிசைலஸ் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து மேலகிடாரம், பீ. கீரந்தை, மூக்கையூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வழங்கிய பண்ணை இயந்திரங்களை முறையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இந்த ஐடியா நல்லா இருக்கே… பலூன்களை பறக்கவிட்ட அதிகாரிகள்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3ஆம் அலை குறித்து வருவாய் துறையினர் மற்றும் சுகாதார துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் கொரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து நேற்று திருப்புல்லாணி, கீழக்கரை சீதக்காதி சாலை, ஏர்வாடி, மீன் மார்க்கெட், பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் நகராட்சி அதிகாரிகள், சுகாதார துறையினர், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளிய தனியா போகமுடியல… அதிர்ச்சியடைந்து அலறிய பெண்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைக்கு சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள காளிதாஸ் பள்ளி தெருவில் கமலம்(55) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் அப்பகுதியில் வடை, பஜ்ஜி போன்றவை சுட்டு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கமலம் கடைக்கு செல்வதற்க்காக அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கமலம் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் ஒரு வேலையா… மதுக்கடையில் நடந்த திருட்டு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மதுக்கடையில் பூட்டை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பழங்குளம் பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு கவரங்குளத்தை சேர்ந்த முத்துமாரி என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி வழக்கம் போல வியாபாரத்தைமுடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது கடையின் பூட்டு உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இ-பதிவு கட்டாயம்… அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை…வாகனத்தை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்களை வருவாய் துறையினர் அபராதம் விதித்து திருப்பி அனுப்பியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதி வழியாக வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு வாகனங்கள் வந்து செல்வதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 3ஆம் அலையை தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழக்கரை பகுதியில் வருவாய்துறை அதிகரிகம் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எவ்வளவு தப்பு தான் பண்ணுவீங்க… உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்… 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிக குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஆனையூர் பகுதியில் அழகுராஜா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த சக்திமுருகன் என்பவருடன் டிராக்டரில் சென்றுள்ளார். அப்போது மேலக்கன்னிசேரியை சேர்ந்த நாகேந்திரன்(26), முனியசாமி(21), வழிவிட்டான்(42), மணிகண்டன்(21) ஆகிய 4 பேர் இவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அழகுராஜா காவல்நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நோட்டமிட்ட மர்ம நபர்கள்… தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணை நடத்திவரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம்  பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள மீனாட்சி நகரில் தர்மலிங்கம்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கம் மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பீரோவையும் உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆனால் பீரோவில் எதுவும் சிக்காத நிலையில் வெளியே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வியாபாரி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… சோகத்தில் வாடும் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கோழிக்கடை வியாபாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள பாசிபட்டினத்தில் முஜமீல்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொண்டிக்கு சென்ற முஜமீல் இருசக்கர வாகனம் மூலம் ஊருக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் இவருடைய இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முஜமீல் தூக்கிவீசப்பட்டு சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த நபர்… மனைவி அளித்த புகார்… சிறுவர் உட்பட 6 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழிலாளியை கொலை செய்த சிறுவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழகாக்காகுளத்தில் கருப்பையா(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் கீழநரியன் பகுதிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கீழநரியன் பேருந்து நிலையம் அருகே வைத்து சில மர்ம நபர்கள் கருப்பையாவை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் கருப்பசாமியை தாக்கி கொலை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க… ஆத்திரமடைந்த மனைவி… நடவடிக்கை எடுத்துவரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவியை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவருக்கு எதிராக மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்திநகர் 4-வது தெருவில் முகம்மது உசேன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சமீசா(28). இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து முகம்மது உசேன் மனைவி என்றும் பார்க்காமல் சமீசாவை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து இதே போல் அடிக்கடி வீட்டின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

14 வயசு தான் ஆச்சு… சிறுமிக்கு பிறந்த குழந்தை… ரகசிய திருமணம் செய்து வைத்த பெற்றோர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கர்பமாக்கிய இளைஞன் உட்பட சிறுமியை பெற்றோரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயதுள்ள சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி அவரது அத்தை மகனை காதலித்து அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞனும் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி சில மாதங்கள் முன்பு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்பமடைந்துள்ளார். இதனையறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இங்கேயும் நுழைஞ்சிட்டாங்களா… அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… வசமாக சிக்கிய சிறுவன்…!!

ராமநாதபுரத்தில் உள்ள திருவேட்டுடைய அய்யனார் கோவிலின் உண்டியலில் உள்ள பணத்தை கொள்ளையடித்த 2 பேரில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள காட்டு பரமக்குடியில் திருவேட்டுடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 மர்மநபர்கள் கோவிலில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியினர் சந்தேகமடைந்து அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து தப்பியோடிய அந்த 2 நபர்களில் ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்… கத்தியை காட்டிய இளைஞன்… அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர்…!!

ராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள தினைக்குளம் பகுதியி முத்துக்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சவாரிக்காக திருப்புல்லாணி பகுதிக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் முத்துக்குமாரை வழிமறித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி முத்துகுமாரிடம் இருந்த 500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து முத்துக்குமார் உச்சிப்புளி காவல்நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிருச்சு… அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்… ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பலி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த வாகன விபத்தில்ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள இளஞ்செம்பூர் கிராமத்தில் செந்தூர்பாண்டியன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் செந்தூர்பாண்டியன் நேற்று வழக்கம்போல நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த ஜீப்பும் இருசக்கர வாகனமும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட கதி… சிகிச்சை பெற்றுவரும் பெற்றோர்… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி போட்டனூத்து பகுதியில் முனீஸ்வரன்(30) என்பவர் அவரது மனைவி வினிதா(24) மற்றும் இவர்களது 6 மாத குழந்தை நிதிஷா ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனீஸ்வரன் அண்ணாநகரில் உள்ள ஒரு முறுக்கு கம்பனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனம் மூலம் சொந்த ஊரான கம்பத்திற்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டை பூட்டிட்டு போகமுடியல… தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடி வரும் போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பூட்டியிருந்த தச்சு தொழிலாளி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள சமத்துவபுரத்தில் முத்துராமலிங்கம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துராமலிங்கம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் சிலர் நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வீட்டின் பீரோவை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படியெல்லாம் மீன் பிடிப்பிங்களா…? போலீசாரை கண்டதும் தப்பியோட்டம்… வெடி பொருட்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வெடி வைத்து மீன் பிடித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள திருப்பாலைக்குடியில் உள்ள கடல்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக வெடி வைத்து மீன் பிடிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தேவிபட்டினம் கடற்கரை காவல்துறை இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கணேச மூர்த்தி, தனிப்பிரிவு காவல்துறை அதிகாரி இளையராஜா ஆகியோர் அப்பகுதிக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மோர்பண்ணை கடற்கரையில் சந்தேகம்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதையும் கொண்டு போறாங்களே… இரவோடு இரவாக செய்த செயல்… விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயி தோட்டத்தில் இருந்த மின்வயர்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மேலூர் அடுத்துள்ள பதினெட்டான்குடி கிராமத்தில் தனபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயம் செய்து வரும் இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. இந்நிலையில் இவர் தோட்டத்தில் தண்ணீர் பாசனம் மற்றும் மின்சாரத்திற்கு தேவையான மின் வயர்கள் இருந்துள்ளது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவோடு இரவாக தனபாலனின் தோட்டத்தில் இருந்த மின் வயர்கள் அனைத்தையும் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

யாரு மேல தப்பு இருக்கும்…? பரிதாபமாக பறிபோன உயிர்… பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி இளைஞன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகில் உள்ள ரெட்டையூரணி பகுதியில் அருணாச்சலம்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று உச்சிப்புளியை அடுத்துள்ள அலைகாத்தவலசைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து திரும்பி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சாலையில் ஏற முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக அருணாச்சலம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ நம்ம மாட்டிக்க கூடாது… அதிவேகத்தில் சென்ற கார்… விரட்டி பிடித்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ராமேஸ்வரம் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி தீபக்சிவாச் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளனர். ஆனால் வாகனத்தில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் காரை நிறுத்தாமல் வேகமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை… கண்டுகொள்ளாத ஆட்சி… குற்றம் சாட்டிய அதிமுக நிர்வாகிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க அரசை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்திரக்குடி பகுதியில் அதிமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏவும், அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான டாக்டர் முத்தையா தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஒன்றிய ஜெயலலிதா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீரோடையயும் விட்டு வைக்கல… அதிகாரிகளை கண்டு ஓட முயற்சி… வசமாக சிக்கிய 3 பேர்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த நிலையில் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் மணல் கடத்தலை தடுப்பதற்கு காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாலாந்தரவை கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தலைமையில் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து ஏந்தல் சுடுகாடு பகுதியில் உள்ள நீரோடையில் சிலர் நீரோடையை சேதப்படுத்தி மணல் அள்ளிக்கொண்டிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வருவாய் துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி… பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி… பதற வைக்கும் சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கவாகனம் ஒன்றுடன் ஓன்று மோதி நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள ஆதிதிராவிடர் தெருவில் சாமுவேல்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கமுதியில் உள்ள ஒரு கடையில் புதுப்பட்டியை சேர்ந்த மாரிசாமி(20) காளிசாமி(18), காளீஸ்வரன்(18) மற்றும் முதுவழிவிட்டான்(20) ஆகியோர் வேலை பரந்து வந்துள்ளார். இவர்கள் 4 பேரும் வேலையை முடித்துவிட்டு புதுப்பட்டிக்கு இருசக்கர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எவ்வளவு சொன்னாலும் கேக்கல… கடும் நடவடிக்கை வேண்டும்… டிராக்டரை பறிமுதல் செய்த தாசில்தார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை தாசில்தார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை தாலுகாவில் உள்ள ஆண்டாவூரணி பகுதியில் உள்ளமணவாளன் கண்மாய்கரையில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளியது தொடர்பான ஒரு டிராக்டரை பறிமுதல் திருவாடானை துணை தாசில்தார் சேதுராமன் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து தப்பியோடிய குற்றவாளியை கைது செய்யுமாறு துணை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடைபெற்ற உடற்தகுதி தேர்வு… உற்சாகமாக பங்கேற்பு… சூப்பிரண்டு அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவலர் தேர்வில் தேர்வான நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஒருங்கிணைந்த 2ஆம் நிலை காவலர், சிறை காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக தேர்வானவர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்த்தல் போன்றவை நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் எழுத்து தேர்வில் தேர்வான தேர்வாகி அழைப்பு கடிதம் அனுப்பட்ட 501 நபர்களில் இருந்து 398 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இது பெண்களுக்கு அவசியம்… நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டம்… ஏராளமானோர் பங்கேற்ப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்தும் கூறியுள்ளனர். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாகவும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர் தர்மர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நடவடிக்கை எடுக்க வேண்டும்… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் புதிய குடிநீர் குழாய்கள் அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் போகலூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள முகம்மதியாபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி இல்லாத நிலையில் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியினர் பலமுறை இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெண்ணை ஏமாற்றிய இளைஞன்… ஆத்திரத்தில் இருந்த உறவினர்கள்… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளியை தாக்கிய 2 பேரை கைது செய்த நிலையில் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள பெரியகுளம் பகுதியில் கணேசமூர்த்தி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்ணை காதலித்து கர்பமாக்கி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனையடுத்து கணேசமூர்த்தி வெளியே சுற்றி திரிந்ததை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இந்நிலையில் மகேஷ் […]

Categories

Tech |