கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உடையாண்டஅள்ளி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் மொபட்டில் ராயக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் குடங்களை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராயக்கோட்டை-எச்சம்பட்டி சாலையில் பெருமாள் நின்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெருமாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]
