Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…. 5 மாடுகளுடன் சிக்கி தவித்த முதியவர்…. பொதுமக்களின் செயல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் தண்டபாணி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 5 மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நல்லூர் மணிமுத்தா ஆற்றை மாடுகளுடன் கடக்க முயன்ற போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்டபாணி ஆற்றின் நடவே இருக்கும் மணல் திட்டில் மாடுகளுடன் சிக்கிக்கொண்டு என்ன செய்வது என அறியாமல் இருந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் கயிறு கட்டி தண்டபாணியையும், 5 மாடுகளையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, மணிமுத்தா […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்…. நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாமரத்துபள்ளம் கிராமத்தில் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயிகள் தக்காளி, சோளம், நெல், கம்பு உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்களை சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் 3 யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சாகுபடி செய்யப்பட்ட தக்காளி, நெல் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கிறது. இதனால் நஷ்டம் அடைந்து விவசாயிகள் மிகவும் வேதனையில் இருக்கின்றனர். இதுகுறித்து அறிந்த பாலக்கோடு வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இலவசமாக மதுபானம் வேண்டும்”…. ஊழியரை தாக்கிய தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை பகுதியில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு செந்தில் குமார் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்று கடை ஊழியரான சக்திவேலிடம் இலவசமாக மதுபானம் கேட்டுள்ளார். அப்போது சக்திவேலுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபப்படைந்த செந்தில்குமார் காலி மதுபாட்டிலை எடுத்து சக்திவேலின் வயிற்றில் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் இடிந்து விழுந்த வீட்டு சுவர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம்-ஈரோடு ரோட்டில் ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவில் எதிரே மாது என்பவர் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டு சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அப்போது மாது மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற போது மோதிய கார்கள்…. கல்லூரி மாணவர் காயம்…. போலீஸ் விசாரணை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமாபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பிரபு தனது நண்பர்களான மனிஷ், சையது, லுகேஸ்வரன் ஆகியோருடன் காரில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூர் அருகே மற்றொரு காரை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக இரண்டு கார்களும் மோதியது. அப்போது பிரபு ஓட்டி வந்த கார் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து நொறுங்கியது. மற்றொரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்திப்பாரா மேம்பாலத்தில் சிவப்பு நிற மின்விளக்குகள்… இதற்கு தானா..? போக்குவரத்து போலீசார் தகவல்…!!!!

சென்னையை அடுத்த கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து ஆத்தூர் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் இறங்கும் பகுதியில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி அதிக அளவிலான விபத்துக்கள்  ஏற்படுகின்றது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார்  கூறியதாவது, விபத்துகளை தவிர்க்கும் விதமாக மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் இறங்கும்போது சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதாமல் இருப்பதற்காக சிவப்பு நிற விளக்குகள்  பொருத்தபட்டுள்ளது. மேலும் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொடூர சம்பவம்: மனைவி, 5 குழந்தைகளை கொன்ற தொழிலாளி தற்கொலை…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆலந்துரை அடுத்த கீழ் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பழனி. இவர்  குடும்ப பிரச்சினை காரணமாக அவருடைய மனைவி வள்ளியம்மாள் மற்றும் அவரது மகள் திரிஷா, மோனிஷா, மகன் சிவா,  பூர்ணிமா,  பூமிகா ஆகியோரை அருவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இதில் த்ரிஷாவுக்கு 14 வயதாகிறது. மேலும் பார்த்தோம் என்றால் மோனிஷா 11 வயது, சிவாவுக்கு 4 வயது, பூரணிமா மூன்று வயது,  பூமிகா 9 வயதாகும் இவர்கள் ஐந்து பேருமே சிறுவர்கள். மிகவும் […]

Categories
மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு….!! 2 பெண்களுடன் குடும்பம் நடத்தும் கணவர்…. கொதித்தெலுந்த முதல் மனைவி…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு பெண் மனு ஒன்றை அளித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள பொன்னாக்குடி பகுதியில் ஏஞ்சல் மரியபாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்  கூறியிருந்ததாவது,”எனக்கும்  முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு மும்பு  உறவினர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. தற்போது எங்களுக்கு அபிஷா, அஜித்தா என்ற  2  பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் எனது கணவர் முத்துக்குமார் தினமும் குடித்துவிட்டு எங்கள் வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…!! மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்…. சிறப்பு பூஜை நடத்திய மக்கள்…. எங்கு தெரியுமா….?

மோடி மீண்டும் பிரதமராக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டப்பம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 2024 -ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும்  மோடி   பிரதமராக வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் மிஷன் மோடி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, அகில பாரத பொதுச் செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே  நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும்  செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள் வேலூர்

சாலையின் மறுபுறம் பாய்ந்த கார்… காரின் மீது மோதிய டேங்கர் லாரி.. வேலூர் அருகே நேர்ந்த துயரச் சம்பவம்..!!!

வேலூர் அருகே காரின் மீது டேங்கர் லாரி மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தைச் சேர்ந்த நித்யா, சுரேந்தர், கமலேஷ் உள்ளிட்டோர் காரில் வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் உறவினர் ஒருவர் காத்திருந்ததால் அவரை அழைத்துச் செல்வதற்காக மூன்று பேரும் காரில் வந்ததாக சொல்லப்படுகின்றது. இவர்களின் கார் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாடு இழந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள் வேலூர்

அகாடமி கிரிக்கெட் போட்டி… சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற சேலம் அணி.. பரிசு வழங்கிய ஆட்சியர்..!!!

வேலூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சேலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காளாம்பட்டியில் இருக்கும் வேலூர் கிரிக்கெட் மைதானத்தில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு அகாடமி கோப்பைக்கான  கிரிக்கெட் போட்டிகள் சென்ற 6-ம் தேதி முதல் நடைபெற்றது. இதில் சேலம், சென்னை, திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு சென்னை அணியும் சேலம் அணியும் தேர்வாகி மோதியது. இதில் சென்னை அணி 22.2 ஓவர்களில் 60 ரன்களுக்கு […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“இந்த மாவட்டத்திற்கு” இன்று விடுமுறை இல்லை…. உண்மையான தகவல் இல்லை….. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி முதல் தொடங்கியது. அது முதலே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வந்தது. இதற்கிடையில் மாண்டஸ் புயல் காரணமாகவும் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சி திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குஷியோ குஷி…! இன்று(டிச.,13) பள்ளிகளுக்கு விடுமுறை…. 3 மாவட்டங்களுக்கு மட்டும்…!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே  நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்இன்றும்  செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முன்விரோத தகராறு… துப்பாக்கியால் சுடப்பட்ட விவசாயி.. இளைஞர் போலீசில் சரண்..!!!!

முன்விரோதம் காரணமாக விவசாயி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இளைஞர் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பலாக்கனுர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான துரைசாமி என்பவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஏழுமலை என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் துரைசாமி அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கும் ஏழுமலைக்கும் இடையே முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டிருக்கின்றது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை நாட்டு துப்பாக்கி எடுத்து துரைசாமியை நோக்கி சுட்டு இருக்கின்றார். இதில் அவரின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பெண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தொந்தரவு…. தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆண்டாள் கோவில் 30 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெண் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காதலிப்பதாக கூறிய கிருஷ்ணன் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் நிறுவனத்தில் இருந்து வெளியேறி மற்றொரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தீபாவளி சீட்டு நடத்தி ஏமாற்றம்”… பாதிக்கப்பட்டோர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்…!!!

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தாலுகாவிற்குட்பட்ட எடத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, மாரி, தீபா, ருக்மணி, ரேகா, பரிமளா உள்ளிட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, சென்ற 2021 ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் எங்கள் பகுதியில் சுமார் 350 பேரிடம் 500, 200 முறையில் 10 மாதங்கள் என்ற அடிப்படையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நாய்க்குட்டிகளை பத்திரமாக பாதுகாத்த நல்ல பாம்பு… பிரமிக்க வைக்கும் நிகழ்வு… ஆச்சரியத்தில் பொதுமக்கள்….!!!!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரில் வீடு கட்டுவதற்காக பள்ளம்  ஒன்று தோன்றியுள்ளனர். இந்த பள்ளத்தில் நாய் ஒன்று தன்னுடைய 3 குட்டிகளை ஈன்று  பாதுகாப்பாக வைத்து விட்டு சென்றுள்ளது. அந்த சமயம் அங்கு வந்த நல்ல பாம்பு ஒன்று நாய்க்குட்டிகள் இருந்த பள்ளத்தில் இறங்கி குட்டிகள் முன்பு படம் எடுத்து நின்றுள்ளது. அதன் பின் தாய்நாய் வந்து தன்னுடைய குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது. இதனையடுத்து  தாய் நாயை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடடே.. நாய்க்குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்…. வியப்பில் பொதுமக்கள்….!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  கீழநாலுமூலைக்கிணறு அம்பேத்கர் நகரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்குட்டியின் பெயர் பப்பு. நேற்று முன்தினம் இவர் வளர்த்து  வரும் நாய் குட்டிக்கு  5-வது வயது பிறந்தது. இந்நிலையில் முத்துகுமார்  குடும்பத்தினருடன் சேர்ந்து அதன் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளார். இதற்காக கேக் வாங்கி அதில் ஹேப்பி பர்த்டே பப்பு என எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து வீட்டில் வைத்து தன்னுடைய குடும்பத்தினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மத்திய அரசின் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு… கலெக்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு தேர்வாணையத்தால் மத்திய அரசு போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை போன்றவற்றில் 45,284 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கான்ஸ்டபிள், எஸ்.எஸ்.சி போன்ற தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சி.எச்.எஸ்.எஸ்.எல் தேர்வுக்கு 4,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய கார்…. அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் அண்ணன் தம்பி உள்பட 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் அண்ணன் தம்பியான மணிகண்டன்(25), பாலமுருகன்(21) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் நண்பர்களான நவீன்(19), விஷ்வா(20) ஆகியோருடன் பழனி முருகன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். இந்த காரை இஸ்மாயில்(19) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பிரிவு அருகே சென்ற போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பாரதியார் பிறந்தநாள்…. ஓவியத்தில் அசத்திய மாணவிகள்… குவியும் பாராட்டுகள்…!!!!!

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி எட்டயாபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில் “மகாகவி பாரதியும் கண்ணனும்” என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர். கோவில்பட்டி ரோட்டரி சங்கம் கொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ரோட்டரி மாவட்ட தலைவர் முத்து செல்வம், ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் தற்போது சபரிமலை சீசனை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் பழனிக்கு சென்று சாமியை தரிசனம் செய்வதால் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலுக்கு சென்றனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உருண்டோடி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. படுகாயடைந்த 5 பேர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியசேமூரில் பாலதண்டாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்(22), கிருஷ்ணன்(19) என்ற 2  மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் உறவினர்களான சதீஷ்(35) மணிகண்டன்(32), ஐயப்பன்(27) ஆகியோருடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். அந்த காரை கிருஷ்ணன் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் நான்கு வழி சாலையில் இருக்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்த்த சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. 8 மணி நேர போராட்டம்…!!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நல்லாம்பிள்ளை கிராமத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரமோத்(14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் சிங்காரப்பேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று விடுமுறை தினம் என்பதால் பிரமோத் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளான். இதனையடுத்து அங்குள்ள 80 அடி ஆழ கிணற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்த போது நீச்சல் தெரியாத பிரமோத் கிணற்றின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“செல்பி” எடுத்தவர்களை துரத்திய யானை…. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது அந்த பகுதி பசுமையாக இருப்பதால் சாலையோரம் முகாமிட்டு யானைகள் தீவனம் உண்ணுகின்றன. நேற்று மதியம் ஒரு யானை திம்பம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற 2 பேர் யானையுடன் செல்பி எடுக்க முயன்ற போது கோபமடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் “செல்போன்” பார்த்த மகனை கண்டித்த தாய்…. திடீரென நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காலிங்கராயன் பாளையம் மனக்காட்டூர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எம்.பி.ஏ முதலாமாண்டு படிக்கும் ராமகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக செல்போன் பார்த்து கொண்டே ராமகிருஷ்ணன் வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 7-ஆம் தேதி நள்ளிரவு நேரமாகியும் ஏன் செல்போன் பார்த்து கொண்டிருக்கிறாய்? போய் தூங்கு என சுமித்ரா தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் தூங்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நாய் குட்டிகளை பாதுகாத்து நின்ற பாம்பு…. பிரம்மிப்புடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் சம்பத் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒரு நாய் 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்து விட்டு சென்றது. இந்நிலையில் அந்த இடத்திற்கு வந்த நல்ல பாம்பு யாரையும் குட்டிகளிடம் நெருங்க விடாமல் அவற்றை பாதுகாத்து நின்றது. இதனையடுத்து அங்கு வந்த தாய் நாய் பாம்பு இருப்பதை பார்த்து குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது. ஆனாலும் நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடாமல் இருந்ததால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொசத்தலை ஆற்று வெள்ளத்தில்… சிக்கிய 18 பேர்… பேரிடர் படையினர் மீட்பு…!!!

ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் பூண்டி ஏறி தண்ணீர் அளவு உயர்ந்தது. இதனால் ஏறியின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 7000 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கொசத்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 42 பேர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்கள். இதில் 18 பேர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிமெண்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால்…. நள்ளிரவில் அலறி துடித்த மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!!

வீட்டில் சிமெண்டு மேற்கூரை பெயர்ந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகியநத்தம் காலனி தொகுப்பு வீட்டில் ராஜலட்சுமி(70) என்பவர் வசித்து வருகிறார் . இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் மூதாட்டி படுகாயமடைந்து அலறி சத்தம் போட்டார். அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. மருத்துவ குழுவினரின் துரிதமான செயல்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் வள்ளியை கோபி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் கடுக்காம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சக்திவேல் வாகனத்தை ஓரமாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிஞ்சிவாக்கம் தடுப்பணையில்… ஆபத்தை உணராமல் குளித்த பொதுமக்கள்… எச்சரித்த போலீசார்..!!!

ஆபத்தை உணராமல் பிஞ்சிவாக்கம் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கேசாவரம் அணையில் இருந்து கூவம் ஆற்றிற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கின்றது. இதனால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிச்சைவாக்கத்தில் இருக்கும் தடுப்பணை நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது. தடுப்பணை முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சி அளிக்கின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டுமனை பட்டா வழங்குங்க… இல்லைனா, குடியரசு தினத்தன்று கால வரையற்ற உண்ணாவிரதம்… ஆட்சியரிடம் மனு…!!!

வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்றால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம் என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இச்சிப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, எங்கள் பகுதியைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் எங்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் துணையுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். சென்ற 2021 ஆம் வருடம் பட்டா வழங்குவதற்கான நிலத்தில் பூங்கா அமைப்பதற்கு செடிகளை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

2 மாதங்களாக… முழு கொள்ளளவில் நீடித்து வரும் அமராவதி அணை… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!!

அமராவதி அணையில் சென்ற 2 மாதங்களாக முழு கொள்ளளவு நீடித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார்கள். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருக்கும் காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீர் ஆதாரங்களில் சாரல் மழையும் சில நேரங்களில் கனமழையும் பெய்கின்றது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டிருப்பதால் அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து அணையின் நீர் இருப்பு சென்ற மாதம் 10-ம் தேதியிலிருந்து முழு கொள்ளவில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளியின் அவசர முடிவால்…. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் கோ.ஆதனூரில் கூலி தொழிலாளி பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பழனிச்சாமி தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதற்கு பழனிச்சாமியின் மனைவி சங்கீதா பணம் இல்லை என கூறி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் பழனிச்சாமி வீட்டில் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி.. ஓட்டுநர் உள்பட 2 பேர் காயம்…. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!!

லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து பூக்கள் பாரம் ஏற்றி கொண்டு லாரி நிலக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை வேல்முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனரான ராஜேஸ்வரன் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லாரி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வேன்…. இடுபாடுகளில் சிக்கி அலறிய ஐயப்ப பக்தர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் வேனில் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம்புதூர் தேசிய நெடுஞ்சாலை கூட்ரோடு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஐயப்ப பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறி சத்தம் போட்டனர். சிலர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசாரும், சுங்க சாவடி ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

2 நாட்களுக்கு பிறகு…. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மாண்டஸ் புயல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சுற்றுலா இடங்களுக்கு செல்ல 2 நாட்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். பின்னர் புயல் கரையை கடந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் கொடைக்கானலுக்கு படை எடுத்தனர். இந்நிலையில் வட்டக்கானல் அருவி, பிரயண்ட் பூங்கா, மோயர் பாயிண்ட் ,பில்லர் ராக்ஸ் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலில் வினோத வழிபாடு…. மலை கிராம மக்களின் நம்பிக்கை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டிக்குடியில் முத்தாலம்மன், பட்டாளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு நடத்துவார்கள். அதன்படி பண்ணைக்காடு, கானல்காடு, காவனூர், கோடங்காடு உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தாண்டிக்குடி முத்தாலம்மன், பட்டாளம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்கள் மட்டும் சேத்தாண்டி வேடம் அணிந்து ஊர்வலமாக வந்து ஒருவருக்கொருவர் உடலில் சேற்றை வாரி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை… அதிரடி காட்டிய அதிகாரிகள் …!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்  பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சுகாதார  அலுவலர்கள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே 2 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 620 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த ஒரு கடைக்கு 15,000 ரூபாய் அபராதமும், மற்றொரு கடைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புயல் – மழையால் போக்குவரத்து பாதிப்பு இல்லை… எப்படி தெரியுமா…? போலீஸ் கமிஷனர் வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையில் உள்ள கீழ்பாக்கம் ஓட்டேரி புளியந்தோப்பு மற்றும் கொண்டிதோப்பு போன்ற போலீஸ் குடியிருப்புகளில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால்  நேற்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் போலீஸ் குடும்பத்தினரிடம் கமிஷனர் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். இந்நிலையில்  நிருபர்களிடம் பேசிய அவர், சென்னையில் புயல் மற்றும் மழையின் போது நான் உட்பட அனைத்து உயரதிகாரிகளும் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருந்தோம். மேலும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மண்டஸ் புயல் எதிரொலி… வீடுகளில் புகுந்த மழைநீர்… ஆட்சியர் உத்தரவு… மக்கள் முகாமில் தங்க வைப்பு..!!!!

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அடுத்திருக்கும் பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தினால் கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவ கிராமங்களில் கடல் நீர் சூழ்ந்தது. இதனால் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில் பொன்னேரி துணை ஆட்சியர், தாசில்தார் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்கள். இதுபோல […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே.! நிலக்கடலை சாகுபடி செய்கிறீர்களா…? இதோ உங்களுக்காக மானியம்..!!!

நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி உள்ளிட்டோர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, நிலக்கடலை சாகுபடி 100% மானியத்துடன் செயல்படுத்துவதற்கு வேளாண் அறிவியல் நிலையம் தயாராக இருக்கின்றது. இதற்காக விதைகள், ஜிப்பம், நடமாடும் நீர் தெளிப்பான் என பல இலவசமாக வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

OMG..! ரேஷன் அரிசியில் எலிகள்… ஆண்டிபட்டி அருகே பரபரப்பு..!!!

ரேஷன் அரிசியில் எலிகள் இருந்ததால் ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் ரேஷன் கடையில் ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் வாங்கிச் சென்றார்கள். அப்போது பாலசமுத்திரத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் சாக்கு பையில் அரிசியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அதை வீட்டில் எடுத்து பார்த்தபோது சாக்கு பையில் ஐந்துக்கும் மேற்பட்ட எலிகள் ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அரிசியை எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்… ரேஸ்கோர்ஸில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்…!!!

ரேஸ்கோர்ஸில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்ட பணி நடைபெற்று வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் சாலையில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியுள்ளதாவது, மழை நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கோவையில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ரேஸ்கோர்ஸ் சாலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வியாபாரி கொலை வழக்கு… ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி கைது… போலீஸ் அதிரடி.!!!!!!

செங்குன்றத்தை அடுத்த அமலாதி ஊராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் எம்.ஜி.ஆர் தெருவில் வசித்து வந்த முரளி என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி  கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் அலமாதி சாந்தி நகரை சேர்ந்த திலீபன் (25), நவீன் (24), தீபன் (41), ஆறுமுகம் (60) ஆகிய  4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் முரளியின் உறவினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர்…. நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. பரபரப்பு சம்பவம்….!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி டவுன் சிவா தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி விஜய் தொழிலதிபராக இருக்கிறார். நேற்று கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜய் காரில் சென்றுள்ளார். இதனையடுத்து விஜய் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காரில் மீண்டும் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மதுரை- நெல்லை நான்கு வழி சாலையில் இருந்து குறிச்சிகுளம் வழியாக நெல்லை நோக்கி வந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை…. என்ன காரணம்…? போலீஸ் விசாரணை…!!

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலபட்டமுடையார் புரம் ராமர் கோவில் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கணேசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. வேறு பெண்ணுடன் திருமணம்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலப்பாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் முகேஷ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் சிறுமியை காதலிப்பதாக ஆச வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வனப்பகுதியில் ஏராளமான மன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் நகராட்சி நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் பாலுவின் உத்தரவின் படி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு குடோனில் அதிரடியாக சோதனை நடத்தி தின்பண்டங்களை பேக்கிங் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். […]

Categories

Tech |