Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டியில் 20 தற்காலிக கழிப்பறைகள்”… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!!!

ஊட்டியில் முக்கிய இடங்களில் 20 தற்காலிக கழிப்பறை அமைக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைகளின் ராணி என அழைக்கப்படும் நீலகிரியில் உள்ள ஊட்டியில் கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றார்கள். ஆனால் அங்கு போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் சிலர் பொது இடங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறார்கள். இதனால் நகராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் வருகை எந்த இடத்தில் அதிக அளவு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த 3 பேர்…. திடீரென பள்ளத்தில் இறங்கிய வாகனம்…. நீலகிரியில் பரபரப்பு…!!

சரக்கு வாகனம் பள்ளத்தில் இறங்கிய விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் இருந்து மாம்பழ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நீலகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் ஓட்டுநர் உட்பட 3 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் உள்பட மூன்று பேருக்கும் தூக்கம் வந்தது. இதனால் அவர்கள் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. மின்னல் தாக்கி 2 ஆடுகள் பலி…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாதிரிமூலா, அய்யன்கொல்லி ஆகிய பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் அங்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரிதினி பகுதியில் வசிக்கும் சசிதரன் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் மின்னல் தாக்கியதால் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது தொடர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரவில் கதவை தட்டும் விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கரடிகள் இரவு நேரத்தில் வீடுகளின் கதவை தட்டுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தேயிலைத் தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜெகதளா கிராமத்தில் கரடியின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த கரடி இரவு நேரத்தில் வீடுகளின் கதவை தட்டுவதால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பையை தவறவிட்ட முதியவர்…. நேர்மையாக ஒப்படைத்த கடை ஊழியர்…. பாராட்டிய போலீசார்…!!

முதியவர் தவறவிட்ட பணப்பையை காவல்துறையினர் பத்திரமாக ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மார்க்கெட்டில் ஜெராக்ஸ் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வந்த முதியவர் ஒருவர் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து விட்டு சென்றுள்ளார். அப்போது முதியவர் கடையில் தனது பையை தவற விட்டுள்ளார். இதனை பார்த்த கடை ஊழியர் ஜெனட் பவுலின் அந்த பையை எடுத்தபோது அதில் 13 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பையில் கிருஷ்ணன் கல்லட்டி என்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த வேன்…. படுகாயடைந்த 7 பேர்…. நீலகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் ரெட்டி என்பவர் தனது குடும்பத்தினர் 15 பேருடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் ஊட்டியில் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் பார்த்துவிட்டு கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சுற்றுலா வேனின் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பாலன்(34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர்…. உடல் நசுங்கி பலியான சோகம்…. நீலகிரியில் பரபரப்பு…!!

யானை தாக்கியதால் இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பவானி எஸ்டேட் பகுதிக்குள் ஒற்றையானை நுழைந்தது. இந்த யானை தேயிலை தோட்ட தொழிலாளியான முருகன்(40) என்பவரது வீட்டிற்கு பின்புறம் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக முருகன் வீட்டிற்கு பின்புறம் சென்றுள்ளார். அப்போது காட்டு யானை முருகனை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது. இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கிரேன்…. உயிருக்கு போராடிய ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கிரேன் சுவர் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் ஊட்டியில் கிரேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பேச்சிமுத்து நேற்று மாலை கிரேனில் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் கொட்டக்கம்பை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கிரேன் சாலையோரம் இருந்த சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையை கடந்த புலி…. பீதியடைந்த சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினர் எச்சரிக்கை….!!

புலி திடீரென சாலையை கடந்து சென்றதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது அங்கு வாழும் வன விலங்குகள் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றன. தற்போது சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காரில் சுற்றுலா பயணிகள் சிலர் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டியில் தொடங்கிய புகைப்பட கண்காட்சி”… கண்கவரும் புகைப்படங்கள்… நுழைவு கட்டணம் இல்லை…!!!!

ஊட்டியில் புகைப்பட கண்காட்சி தொடங்கிய நிலையில் வருகின்ற 31ம் தேதி வரை நடைபெறுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருக்கும் சேரிங்கிராசில் கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை சார்பாக அரியவகை பறவைகள், வனவிலங்குகள் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைக்க மாவட்ட ஆட்சியர் அம்ரித், உதவி வனபாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர் நவீன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். இந்தக் கண்காட்சியில் பச்சை சிட்டு, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த சுற்றுலா வேன்…. வடமாநில தொழிலாளி பலி…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 40 தொழிலாளர்கள் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள் ஒரு சுற்றுலா வேனில் ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு நேற்று முன்தினம் தொழிலாளர்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெய்ஷல்(24) என்பவர் தனது நண்பரான சபிபுல்லா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் கேரளா கூடலூர் மலைப்பாதையில் கீழ் நடுவானில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர்கள் மீது லாரியின் சக்கரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த காட்டு யானை…. காரை துரத்தி தாக்கியதால் பரபரப்பு…. அச்சத்தில் சுற்றுலா பயணிகள்…!!

காட்டு யானை சுற்றுலா பயணிகளின் காரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று மாலை சுற்றுலா பயணிகளின் கார் இந்த சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று நடந்து சென்றது. இதனை பார்த்ததும் சுற்றுலா பயணிகள் காரை சற்று தூரத்திலேயே நிறுத்திவிட்டனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வந்த காட்டெருமை…. அடித்து பிடித்து ஓடிய பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பிளாக் பிரிட்ஜ் பகுதியிலுள்ள வனப்பகுதியில் காட்டெருமைகள் வசித்து வருகின்றன. இவைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகிலுள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றி திரிகின்றன. மேலும் அங்கு வசிக்கும் காட்டெருமைகள் ஜெயந்தி நகர், அன்னை நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் ஒரு காட்டெருமை அவாஹில் ராணுவ முகாம் பகுதியிலிருந்து நல்லப்பன் தெரு சாலையில் உலா வந்தது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள்…. இங்கிலாந்து பெண்ணின் புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் புகார்  அளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த  பார்பரா எலிசபெத் வில்லிஸ் என்ற பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் எனக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரட்டை குடியுரிமை உள்ளது. எனது முன்னோர்களின் பூர்வீக சொத்து கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இந்நிலையில் நான் கடந்த 2014- ஆம் ஆண்டு கடலூரில் 2 ஏக்கர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காலாவதியான 100 கிலோ இறைச்சி பறிமுதல்… கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்… அதிகாரிகள் அதிரடி சோதனை…!!!

காலாவதியான 100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடைகால சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் ஹோட்டல்களில் காலாவதியான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், நந்தகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர், ஊட்டி நகர் பகுதியில் பல இடங்களில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருதலைக்காதல்…மாணவிக்கு கத்திக்குத்து…வாலிபரை மின்கம்பத்தில் கயிறால் கட்டி வைத்த பொதுமக்கள்… குன்னூரில் பரபரப்பு…!!!

ஒருதலைக்காதலால் வாலிபர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் 17 வயது மாணவி. இவர் குன்னூரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கீழ் பள்ளிவாசல் பகுதியில் வசித்த பூ வியாபாரி அப்பாஸ் என்பவருடைய மகன் ஆசிக் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரது காதலை பள்ளி மாணவி ஏற்க மறுத்து விட்டார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடநாடு வழக்கு…. “துபாய்க்கு ஏன் போனீங்க”…. பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் 6 மணி நேரம் விசாரணை…!!

கோடநாடு வழக்கு தொடர்பாக ஐ.ஜி சுதாகர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் பர்னிச்சர் கடை உரிமையாளரிடம்  ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் வருடம் ஏப்ரல் 24 ஆம் தேதி காவலாளி ஒம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் இன்னொரு காவலாளி கிருஷ்ணதாபா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோடநாடு பங்களாவில் இருந்த பொருட்களும், முக்கிய ஆவணங்களும்  கொள்ளையடிக்கப்பட்டது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கர்நாடகாவிற்கு கடத்தப்பட்ட மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஜீவகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 14 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சேரம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாணவி கர்நாடக மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கர்நாடகாவிற்கு சென்று மாணவியை மீட்டனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புத்தகங்கள் படிப்பதன் அவசியம்…. சிறப்பாக வழங்கப்பட்ட அறிவுரை…!!!

மாணவர்களுக்கு புத்தக பயன் குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொக்காபுரம் பகுதியில் பழங்குடியினர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை மசினகுடியிலிருக்கும் நூலகத்திற்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்கள் பல்வேறு புத்தகங்களை அமர்ந்து படித்தனர். அதன்பிறகு புத்தகத்தின் பயன் மற்றும் படிப்பதன் அவசியம் குறித்து  மாணவர்களுக்கு விளக்களிக்கப்பட்டது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“புஸ் புஸ் சத்தம்” அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!!

தோட்டத்திற்குள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே லாரன்ஸ்டன் பகுதியில் அன்புராஜ் என்பவருக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு மலைப்பாம்பு வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தோட்டத்தைவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து ஓவேலி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பாம்பை பத்திரமாக பிடித்தனர்‌. அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“65 வருடங்கள்” பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி…. புதர் செடிகள் அகற்றும் பணி தீவிரம்…!!!

பள்ளி வளாகத்தை சுற்றி இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் 65 வருடங்கள் பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் வளாகத்தை சுற்றிலும் அடர்த்தியான புதர் செடிகள் உள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் பள்ளி வளாகத்தை சுற்றி அதிக அளவில் நடமாடுகிறது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கத்தி போடும் நிகழ்ச்சி…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

சிறப்பாக நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் சிறுவர்கள் கத்திபோடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது  அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. சதுப்பு நிலத்தில் சிக்கிக்கொண்ட டயர்கள்…. மீட்கும் பணி தீவிரம்…!!!

திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி சதுப்பு நிலத்தில் மாட்டிக்கொண்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பேரூராட்சியில் தினந்தோறும் தூய்மைப் பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என பிரித்து லாரிகள் மூலமாக வளம் மீட்பு பூங்காவிற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் குப்பைகளை ஏற்றிக்கொண்டு லாரி கான்கிரீட் சாலை வழியாக சென்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரமாக இருந்த சதுப்பு நிலத்தில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாதம் “7,000 ரூபாய்” உதவித்தொடையுடன்…. தொழில் பழகுனர் பயிற்சி முகாம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அரசு தொழிற் பயிற்சி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாம் வருகிற 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் முன்னணி அரசு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற முத்துப்பல்லக்கு வீதி உலா….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

சிறப்பாக நடைபெற்ற வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 13-ம் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துப்பல்லக்கு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அம்மன் பல்லக்கில் வைத்து முக்கிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் நலனுக்காக”…. ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்…. கலெக்டர் அறிவிப்பு….!!!

நியாயவிலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாயவிலைக் கடைககளுக்கு  சென்று பொருட்கள் வாங்குவதில் மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் உள்ள படிவத்தினை பெற்று அதில் தங்களுக்கு பதிலாக பொருட்கள் வாங்கும் மாற்று நபரின் விவரங்கள் குறித்து பூர்த்தி செய்ய வேண்டும். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது கார் மோதல்…. கோர விபத்தில் ஓட்டுநருக்கு படுகாயம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!

பயங்கர விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள  தட்டக்கொல்லி பகுதியில் யூசுப் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் தொரப்பள்ளி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார் ஆட்டோவின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஆட்டோ ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண்…. திடீரென தாக்கிய காட்டுப்பன்றி…. அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…!!!

வனவிலங்கு தாக்கி பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே ஒன்னோரை கிராமத்தில் ரஜினி ஹரியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவர் தேயிலை பறிக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி வழக்கம்போல் தேயிலை பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென ஒரு காட்டுப்பன்றி லட்சுமியை தாக்கியுள்ளது. இதில் லட்சுமிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த சக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகள்” ஆதிவாசி கிராமங்களில் ஆய்வு….. உறுதியளித்த அதிகாரிகள்….!!

ஆதிவாசி கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே செவிடன்கொல்லி, புதுச்சேரி, அயினிப்புறா, நெல்லிப்புறா, தோட்டப்புறா, முள்ளன்வயல் போன்ற கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வேண்டி மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமையிலான ஒரு குழு ஆதிவாசி கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற உரிமையாளர்….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்பலமூலா அருகே மணல்கொல்லி கிராமத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் ரவீந்திரன் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவீந்திரன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது 10,500 ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அம்பலமூலா காவல்நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வந்த காட்டு யானைகள்…. பீதியில் வாகன ஓட்டிகள்….!!!

காட்டு யானைகள் சாலையில் உலா வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தினால் பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இங்குள்ள கோத்தகிரியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பல கிராமங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சில யானைகள் சுற்றிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சாலை ஓரமாக வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். அதன்பிறகு யானைகள் சிறிது நேரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக”….. குப்பைகள் தூர்வாரும் பணி….. பொதுமக்களுக்கு வேண்டுகோள்…. !!!

சாலையோரமாக இருக்கும் குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி-மேட்டுப்பாளையம் பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் அரவேனு வழியாக செல்கிறது. இந்தப் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் செல்கிறது. இதன் காரணமாக சாலைகளில் இருக்கும் குப்பைகளையும், புதர்களையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கால்வாய் அடைப்புகளை அகற்றுதல், காலி மது பாட்டில்களை சேகரித்தல், வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை…. அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…. வனத்துறையினர் விசாரணை….!!!

தேயிலை தோட்டத்திற்குள் அழுகிய நிலையில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே பேரகனி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் துர்நாற்றம் வீசிய இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ஒரு சிறுத்தை அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து கட்டப்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு”…. பீதியில் குடும்பத்தினர்…. வனத்துறையினரின் முயற்சி…!!!

திடீரென வீட்டிற்குள் பாம்பு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைகாலம் நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வன விலங்குகள், பாம்புகள் போன்ற உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள வீடுகளில் அடிக்கடி பாம்புகள் வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து மசினகுடி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அந்த பாம்பு வீட்டிற்குள் படமெடுத்து ஆடியுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோடை மழை” பூத்துக்குலுங்கும் காபி செடிகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

காபி செடிகள் பூத்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள செம்மனாரை, கரிக்கயூர், குஞ்சப்பனை, கீழ்தட்டபள்ளம், அரவேனு போன்ற கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காபி செடிகளை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர். இங்கு ரொபஸ்டா மற்றும் அரபிக்கா என்ற 2 விதமான செடிகள் பயிரிடப்படுகிறது. இந்த செடிகளில் ஆண்டுக்கு 2 முறை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு குடிநீர் வேண்டும்” அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!!

அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே காத்துக்குளி‌ கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மின்மோட்டார் மூலம் 2 கிணறுகளில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தக் கிணற்றில் பொருத்தப்பட்டிருக்கும் மின்மோட்டார் அடிக்கடி பழுதடைவதால் கிராம மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இதன் காரணமாக கிராம மக்கள் கோத்தகிரியில் உள்ள பேரூராட்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாணவியிடம் அத்துமீறிய “ஹெட் மாஸ்டர்”…. போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்…. பெரும் பரபரப்பு…!!!

சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே முத்தோரை பாலாடா பகுதியில் ஏகலைவா பழங்குடியினர் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளியில் படிக்கும் சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து அத்து மீறியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. மது பாட்டில்கள் பறிமுதல்…. ஒருவர் கைது…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.  அந்த விசாரணையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பது தெரியவந்தது. அதன்பிறகு காவல்துறையினர் செல்வகுமார் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகளில் பையில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் செல்வகுமாரை கைது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே சிலர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கோத்தகிரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.‌ இவர்கள் வ.உ.சி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புகழ் பெற்ற மாரியம்மன் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. வடம் பிடித்து இழுத்த கலெக்டர்….!!!

புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் புகழ் பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் தேர்த்திருவிழா கடந்த மாதம் 18-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மறுநாள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அங்காளம்மன், ஹெத்தையம்மன், பட்டத்தரசி அம்மன், ராஜகாளியம்மன், பவானி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ‌ நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே புகழ்பெற்ற சந்தைக்கடை மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள், அம்மன் வீதி உலா போன்றவைகள் நடைபெற்றது. இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து நகரின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“திடீர் ஆய்வு” உணவருந்திய கலெக்டர்…. மகிழ்ச்சியில் பழங்குடியின மாணவர்கள்….!!!!

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கார்க்குடி பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அம்ரீத் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  அந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவிகளுடன் உரையாடி கல்வியில் கவனம் செலுத்தி நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுரை கூறினார். அதன்பின் பள்ளியின் வகுப்பறை, ஆய்வகம், கணினி அறை, சமையல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் கிடைக்குமா?…. தவிக்கும் கிராம மக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே மஞ்சமலை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அரவேனு – அளக்கரை செல்லும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு  ஒற்றையடிப் பாதை வழியாக 400 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பகுதிகள் கரடு முரடாக காணப்படுவதால் பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இங்கு  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சேரும் சகதியுமாக காணப்பட்ட சாலை”…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!

வேலை செய்து கொண்டிருந்த  தொழிலாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கல்லூர், ஓமக்குழி, செட்டியார் மட்டம், கவட்டை, கீழ்ஆடுபட்டு  மற்றும் மேல்ஆடுபட்டு பகுதிகளில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கோத்தகிரியில் இருந்து மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஜக்கனாரை பகுதியில் மழையின் காரணமாக சாலை பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” ஓய்வூதியர்கள் சங்கத்தினர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சங்கத்தினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வட்டச்செயலாளர் தயாளன் தலைமை தாங்கினார். இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் வேண்டும். அதன்பிறகு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் சிகிச்சை பெற வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. “அகழிகள்” அமைத்துத் தாருங்கள்…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!

வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுப்பதற்காக அகழிகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வறட்சி நிலவுவதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த யானைகள் வீடுகளை நாசம் செய்வதுடன் விவசாய நிலங்களையும் நாசம் செய்து வருகிறது. இந்த காட்டு யானைகள் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, பாக்கு மரம், வாழை மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி வருகிறது. இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொடர் மழை”…. மீண்டும் பசுமைக்கு திரும்பிய வனப்பகுதி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

தொடர் மழையின் காரணமாக வனப்பகுதி மீண்டும் பசுமையாக காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியது. தற்போது பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் வனப்பகுதிகளில்  மீண்டும் புல் முளைத்து பசுமை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்…. மனுக்களை கொடுத்த பொதுமக்கள்…. உறுதியளித்த வருவாய் அதிகாரி…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். இதில் கலந்து கொண்ட சில மக்கள் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனு கொடுத்திருந்தனர். அதன்பிறகு சிலர் வீட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“1969-ம் ஆண்டு” கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…!!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே நெடுகுளா கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1969-ஆம் ஆண்டு முதல் படித்த அனைவரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதன்பிறகு பழைய நண்பர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து உரையாடினர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். […]

Categories

Tech |