Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த கடைகளுக்கு அனுமதி இல்லை… போலீசாரின் தீவிர சோதனை… நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த கம்ப்யூட்டர் சென்டர் உட்பட 7 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறையாத நிலையில் மாவட்டம் முழுவதிலும் உள்ள காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் என சில அத்தியாவசிய கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அனுமதியளிக்கப்படாத கடைகள் திறந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நகராட்சி ஆணையர் பொன்னம்பலத்தின் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரம் போன் எடுக்கல… சந்தேகமடைந்த உறவினர்கள்… வீட்டிற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்துசென்றதினால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார்(45),அவருடைய மனைவி பிரீத்தி(35), இவர்களுடைய மகன் ஆசிஸ் ராகவேந்திரா(13) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றிபோன நிலையில் ஆத்திரமடைந்த பிரீத்தி அவரது மகனை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று ராகவேந்திரா தொலைபேசியில் விஜயகுமாரை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கலெக்டரின் அதிரடி சோதனை… லாரியை மடக்கி பிடித்த அதிகாரிகள்… கைது செய்யப்பட்ட டிரைவர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பதவியேற்ற நாள் முதல் கொரோனா தடுப்பு பணியாக கொரோனா மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வுகளை நடத்தி வரும் ஆட்சியர் நேற்று கொல்லிமலையில் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்திற்கு திரும்பியுள்ளார். இதனைத்தொடர்ந்து சேந்தமங்கலம் ராமநாதபுரம்புதூர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூன்-23). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதியதில்… இளைஞர் பரிதாப உயிரிழப்பு… இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் எதிரே வந்த மொபட் மீது மோதியல் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டியில் மோகன்(28) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் போர்வெல் மோட்டார் பொருத்தும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை இருசக்கர வாகனம் மூலம் வேலை முடித்து விட்டு மோகன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து எருமைப்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும்போது சிங்களம் கோம்பை பகுதியை சேர்ந்த அமிர்தவல்லி என்பவர் மொபட்டில் எதிரே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்… மருத்துவமனையில் திடீர் ஆய்வு… சத்தான உணவு வழங்க உத்தரவு…!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருச்செங்கோடு மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, பொது பிரிவு என அனைத்து பிடிவுகளுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ உபகரணங்கள் குறித்தும் அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டு அறிந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரத்த வங்கியில் நடைபெறும் பணிகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது… ஏற்பட்ட பயங்கர விபத்து… இருவரின் கால் சிதைந்ததால் பரபரப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் 2 பேர் கோவைக்கு சென்று கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரியில் சிக்கி விபதடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பகுதியில் ராமச்சந்திரன்(30) என்பவரும், தண்டராம்பேட்டையை சேர்ந்த பெரியசாமி(31) என்பவரும் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு கட்டிட வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தள்ளனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுப் பாலம் அருகே சென்று கொண்டிருக்கும்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு அதுல உடன்பாடு இல்லை… மகளை கட்டாயப்படுத்திய பெற்றோர்… இளம்பெண் எடுத்த முடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் மகளை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்லி பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியிலுள்ள கொசவம்பாளையத்தில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகள் சந்தியாவிற்கு(20) கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அங்கிருந்து சண்டை போட்டு சந்தியா பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து சந்தியாவின் பெற்றோர் அவரை இடண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்லி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 95 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வீட்டிற்கு வந்த பெண்… கூட்டாளிகளுடன் இணைந்து போட்ட திட்டம்… கைது செய்ததில் வெளிவந்த உண்மை…!!

நாமக்கல் மாவட்டத்தில் தனியாக இருந்த பெண்ணை வீட்டில் கட்டிப்போட்டு 3 பவுன் நகையை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சேலம் செல்லும் சாலையில் உள்ள பொதிகை நகரில் அமுதா(48) என்ற பெண் கணவனை இழந்து தனியாக வசித்து வந்துள்ளார். அவர் தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அமுதாவின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 3 பவுன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோர் பேச்சை கேக்காத சிறுமி… ஆசை வார்த்தை கூறிய இளைஞன்… போக்சோவில் அதிரடி கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை காதலித்த இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்துள்ள மல்லசமுத்திரம் பாலிக்காடு என்ற பகுதியில் குணசேகரன்(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் குணசேகரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குணசேகரன் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில்… சிறப்பு அபிஷேக பூஜை… தங்க கவசத்தில் காட்சியளித்த சுவாமி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் ஆனி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்டு 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. இக்கோவிலில் தினமும் பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கினால் பக்தர்கள் இல்லாமல் பூஜை மற்றும் சாமிக்கு அபிஷேகம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று ஆடி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கட்டிட தொழிலாளி… 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தல்… போக்சோ சட்டத்தில் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்ற கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி கரை ஒன்பதாம் படி பகுதியில் கோபி(24) என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ள நிலையில் தற்போது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபி ஓடப்பள்ளி பகுதியில் கட்டிட வேலைக்கு சென்ற போது அப்பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வடமாநில இளைஞர் கொலை வழக்கு… சிக்கிய 2 இளைஞர்கள்… போலீசாரை பாராட்டிய அதிகாரி…!!

நாமக்கல் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்த வடமாநில இளைஞரை கொன்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியிலுள்ள புதுப்பாளையத்தில் இருக்கும் ஒரு சோளக்காட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் ஒரு பாயல் சுற்றப்பட்டு இருந்துள்ளது. இதனை கடந்த 7ஆம் தேதி காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நபர் குறித்து நடத்திய விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிம்புசாகர்(26) என்பதும், அவர் நாமக்கலில் உள்ள […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 95 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் செல்லும்போது… தந்தை மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்… சிறுவனுக்கு தீவிர சிகிச்சை…!!

நாமக்கல் மாவட்டத்தில் மொபட் விபத்தடைந்து லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில் 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அடுத்துள்ள தேவனாம்பாளையத்தில் வசித்து வரும் கார்த்திகேயன்(35) அப்பகுதியில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி மாதவி, இவர்களுக்கு அபிஷேக் என்ற 5 வயதில் மகனும் உள்ளது. இந்நிலையில் நேற்று கார்த்திகேயன் அவரது மகன் அபிஷேக்குடன் மொபட்டில் சோழசிராமணிக்கு சென்று கொண்டிருந்துளார். அப்போது பெருங்குடி அருகே சென்றுகொண்டிருக்கும் மொபட் எதிர்பாராதவிதமாக நிலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ விட்டுட்டு போய்ட்டா… விரக்தியில் கணவன் செய்த செயல்… சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள அரியூர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(28). கூலி தொழிலாளியான இவருக்கு கடகால்புதூரை சேர்ந்த தமிழரசி(21) என்பவருடன் கடந்த 11 மாதங்கள் முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாரத்தில் மூன்று நாள்கள்… செயல்பட அனுமதி… ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் வாழைத்தார் ஏல சந்தை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி தலைமையில் வாழைத்தார் ஏல சந்தை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரமக்குடி தாசில்தார் சுந்தரவல்லி, துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து ஏல சந்தை ஒவ்வொரு வாரத்திலும் திங்கள், புதன், சனிக்கிழமை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 85 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரை சோதனை செய்ததில்… வசமாக சிக்கிய நபர்… உடனடியாக கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நல்லூர் போலீசார் வழக்கம்போல வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மணியனூர் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் வந்த வாகனத்தை சந்தேகத்தின் பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர் தோக்கவாடி ப51குதியை சேர்ந்த ரவி(42)என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது வாகனத்தை சோதனை செய்ததில் மது பாட்டில்கள் இருந்துள்ளது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொதிக்கும் எண்ணையை ஊற்றி… தற்கொலை செய்த இளம்பெண்… கதறிஅழும் பெற்றோர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் திட்டியதால் இளம்பெண் கொதிக்கும் எண்ணையை ஊற்றி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கோனூர்கந்தம்பாளையத்தில் மனோகரன் மற்றும் அவரது மனைவி சாந்தி வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு காவியா(19) என்ற பெண் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 12ஆம் தேதி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய… கணவன் கைது… சிறையில் அடைத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியில் ராமச்சந்திரன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் 8 மாதங்கள் முன்பு சத்யா(32) என்ற பெண்ணுடன் 8 மாதங்கள் முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் ராமசந்திரன் சைக்கிள் ஸ்டாண்டு வைத்து வேலை பார்த்து வருகின்றார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்தால்… குண்டர் சட்டம் தான்… புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி எச்சரிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் துணை சூப்பிரண்டு அதிகாரியாக இருந்த காந்தி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிதாக சுரேஷ் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் துணை சூப்பிரண்டு அதிகாரியாக பணியாற்றி வந்த காந்தி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக சுரேஷ்(35) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று நாமக்கல் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் மாவட்டத்தில் குற்றங்கள் தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கள்ள சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் தேவையின்றி குற்றத்தில் ஈடுபடுவோரை குண்டர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வழக்கத்தை விட… அதிக வாகனங்கள் இயங்குவதால்… போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது…!!

நாமக்கல் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதிக வாகனங்கள் இயங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், வேளாண் உபகரணங்கள், வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள் உள்ளிட்ட சில கடைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கும் இ-பதிவுடன் இயங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்… பள்ளத்தில் கவிழ்ந்தது… சிறுவன் பலி…!!

நாமக்கல் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்த்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சோழசிராமணி பச்சாகவுண்டன்வலசையில் மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்(17) என்ற சிறுவனும் நேற்று முன்தினம் சோழசிராமணியிலிருந்து சித்தாளந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து மணிகண்டன் காரை ஒட்டியுள்ளார். அப்போது பெருங்குறிச்சி என்ற இடத்தில் வைத்து கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் வேகமாக ஓடிய வாகனம் சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்த்துள்ளது. இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டாஸ்மார்க் கடையில் மேற்க்கூரை வழியாக… தப்பிக்க முயன்ற நபர்… தலையில் பலத்த காயம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையில் திருடிய நபர் தப்பியோடும் போது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் மர்மநபர்கள் வந்து மது பாட்டில்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து வருகின்றது. இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் சுழற்சி முறையில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நல்லிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் சக்திவேல் நேற்று முன்தினம் காவல் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதிகாலை 3 மணியளவில் கடையில் இருந்த மது பாட்டில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதி அளிக்காத கடைகளை… திறந்தால் நடவடிக்கை… மேலும் 3 கடைகளுக்கு சீல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி திறந்திருந்த 3 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சில கடைகளை மட்டுமே திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அனுமதி பெறாமல் கடைகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் திறந்திருந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி சுகாதார […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வரும் குற்றங்களால்… போலீசார் அதிரடி நடவடிக்கை… மேலும் ஒருவர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பலரும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியை அடுத்துள்ள பெரியசோளிபாளையத்தில் வைத்து சாராயம் காய்ச்சுவதாக பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு அதிகாரியான ராஜரணவீரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரின் உத்தரவின்படி ஜோடர்பாளையம் காவல்துறையினர் பெரியசோளிபாளையத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரில் மயங்கி கிடந்த மனைவி…. அதிர்ச்சியடைந்த கணவர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

காரில் சென்ற இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் சபரிநாதன்- தரணி தேவி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 1/2 வயதில் சுகின் என்ற மகன் இருக்கின்றான். இதில் சபரிநாதன் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகின்றார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் மகனை அழைத்துக் கொண்டு ஆத்தூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். இதனையடுத்து மகன் சுககினை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு சபரிநாதன் மற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…. ஒரே நாளில் 9,900 பேர்…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஒரே நாளில் 9,900 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 72 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்துகின்றனர். இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறியபோது 45 வயது முதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரில் வைத்து கடத்தல்…. வசமா மாட்டிய 2 பேர்…. போலீஸ் இன்ஸ்பெக்டரின் அதிரடி….!!

காரில் மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் சிலர் வெளி மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு மது கடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள மல்லூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி திறந்த கடைகள்… எச்சரிக்கை விடுத்த போலீசார்… 5,000 ரூபாய் அபராதம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி திறந்த ஸ்டேஷனரி கடைகள் உட்பட 4 கடைகளுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிகளில் கொரோனா ஊரடங்கு மீறி அனுமதி வழங்கப்படாத கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜாரணவீரன் உத்தரவின்படி பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் அனுமதியின்றி 2 ஸ்டேஷனரி கடைகள், பேட்டரி கடை, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ அதுக்கு ஒத்துக்கல… அதான் கொலை செய்தேன்… கணவன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் கணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் செந்தில் மற்றும் அவரது மனைவி சங்கீதா வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சங்கீதாவின்  தலையில் கல்லை போட்டு செந்தில்குமார் கொலை செய்துள்ளார். இதுகுறித்து ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசாரை கண்டதும்… வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய இளைஞர்…மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மது பாட்டில்களை கடத்தி வந்த 2மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் காவல்துறையினர் சாமுண்டி தியேட்டர் அருகே மது விலக்கு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த இளைஞன் போலீசாரை கண்டதும் வாகனத்தை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இதனை தொடர்ந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி திறந்த கடைகள்… சீல் வைத்ததுடன்… 5,000 ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டம் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய மொபைல் கடைக்கும், ஜெராக்ஸ் கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் பகுதியில் ஊரடங்கை மீறி மொபைல் கடை திறக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கும், பேரூராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அதிரடி சோதனையில் ஈடுபட்ட பரமத்தி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜாரணவீரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், கண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பாண்டமங்கலத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் வருவதை கண்டு… தப்பியோடிய நபர்… 300லிட்டர் சாராய ஊறலை அழித்த அதிகாரி..

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரில் ஒருவரை கைது செய்த போலீசார் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் பலர் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க மாவட்டங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள புதுவெங்கரை அம்மன் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து… மளமளவென பற்றிய தீ… காவல் நிலையத்தில் பரபரப்பு…!!

காவல் நிலையத்தில் மின்கசிவால் 50-க்கும் மேற்பட்ட கிரைண்டர்கள் எரிந்து நாசமாகி விட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. எனவே தற்காலிகமாக காடம்பாடி பகுதியில் ஓட்டு கட்டிடத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த வளாகத்தில் உள்ள மற்றொரு அறையில் அரசு திட்டத்தின் கீழ் விலையில்லா கிரைண்டர்கள், பயனில்லாத பழைய பொருட்கள் மற்றும் கொரோனா ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியவர்களின் இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை அங்கு வைத்துள்ளனர். இதனை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.06.2021) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை கொடூர கொலை செய்த… கணவன் கைது… விசாரணையில் ஏற்பட்ட குழப்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கணவன் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் செந்தில்குமார்(41) என்பவர் அவரது மனைவி சங்கீதா(36) மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆம்னி வேன் டிரைவரான செந்தில் கொரோனா காரணமாக வேலையிழந்து வருமானமின்றி இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி பண தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சங்கீதா அவரது இரு மகன்களுடன் மொட்டை மாடியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முட்டையின் ஓடு தரம் குறைவதை… தடுப்பது குறித்து… கால்நடை மருத்துவர் விளக்கம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதால் முட்டையின் ஓடு தரம் குறைய வாய்ப்புள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாமக்கல்லில் வெப்ப நிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஆங்காங்கே பரவலாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

15 ஆய்வகங்களுக்கு நோட்டீஸ்… முறையான உரிமம் பெற வேண்டும்… சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் முறையான உரிமம் பெறாமல் கொரோனா பரிசோதனை செய்த 15க்கும் மேற்பட்ட ஆய்வகங்களுக்கு சுகாதார துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகம் என 5 இடங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உரிய அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் பல தனியார் ஆய்வகங்களில் முறையான உரிமம் பெறாமல் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் கொரோனா பரிசோதனை […]

Categories

Tech |