புரட்டாசி மாதத்தால் மீன்கள் விலை வீழ்ச்சி அடையும் என்பதால் வேதாரண்யத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்து இருக்கும் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ள பள்ளம், கோடிய கரை உள்ளிட்ட மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் புரட்டாசி மாத விரதம் மேற்கொள்ளுவதால் அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். இதனால் மீன் விலை […]
