Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீவிரமடைந்த ரோந்து பணி…. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட வாலிபர்…. கைது செய்த காவல்துறை….!!

கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக மது விளக்கு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவனியாபுரம் பகுதியில் கள் விற்பனை செய்துகொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஜே.பி நகர் பகுதியில் வசிக்கும் செல்வகுரு என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 20 லிட்டர் கள்ளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து செய்த செயல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை…. வசமாக சிக்கிய வாலிபர்….!!

வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு எஸ்.ஆலங்குளம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக அசோக் குமார் என்பவரை கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொது குளியல் தொட்டியில் குளியல்…. சட்டென்று வந்த கார்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

வேகமாக சென்ற கார் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சதாசிவம் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதாசிவம் அப்பகுதியில் இருக்கும் பொது குளியல் தொட்டியில் குளித்து விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திருமங்கலம் நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக சதாசிவத்தின் மீது மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த சதாசிவத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 4 மாதம் தான் ஆச்சு…. புது மாப்பிள்ளையின் முடிவு…. விசாரணையில் காவல்துறை….!!

திருமணமான நான்கு மாதங்களில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள இடையப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கடையில் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் அபிநய பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாழ்க்கையை வெறுத்த வினோத்குமார் மன உளைச்சலில் […]

Categories
மதுரை

காய்கறிப் பைக்குள் என்ன….? பரிசோதித்த காவல்துறை…. காத்திருந்த அதிர்ச்சி….!!

காய்கறிப் பைக்குள் மறைத்து வைத்து கடத்தி சென்ற 4 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையை பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது 4 கிலோ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான் இனிமேல் என்ன செய்யப் போகிறேன்…. தவித்த கொத்தனாரின் முடிவு…. தவிக்கும் பிள்ளைகள்….!!

மனைவி இறந்த துக்கத்தில் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடமலை மணக்காடு கிராமத்தில் ராஜ்குமார் என்ற கொத்தனார் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றது. இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். ராஜ்குமார் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சோகத்தில் இருந்த அவர் “நான் இனிமேல் என்ன செய்யப் போகிறேன்” என அடிக்கடி கூறிக் கொண்டே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட சென்ற தொழிலாளி…. வேகமாக வந்த லாரி…. கலங்கி நிற்கும் குடும்பம்….!!

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அய்யன்கோட்டை பகுதியில் ஹரிஹர சுரேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கப்பலூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் ஹரிஹர சுரேந்திரனின் நண்பர்கள் அவரை தடுப்பூசி போடுவதற்காக அழைத்துள்ளனர். இதனால் அவர் தன்னுடைய இருசக்கரவாகனத்தில் தடுப்பூசி போடுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இவர் வாடிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது கப்பலுர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற முதியவர்…. கத்தியை காட்டியதால் பதற்றம்…. கைது செய்த காவல்துறை….!!

கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர் சேரி கிராமத்தில் வசித்து வருபவர் மஹாலிங்கம். இவர்  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து மகாலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த கார்…. நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. கண்ணீரில் குடும்பம்….!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கூத்தியார்குண்டு பகுதியில் வசித்து வருபவர் மாரி கண்ணன். இவரும் அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்பவரும் திருமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் துவரிமான் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது கோச்சடை பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பின்பக்க கதவு…. தகவலறிந்த உரிமையாளர்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

கடையின் கதவை உடைத்து பணம், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தத்தனேரி பகுதியில் வசித்து வருபவர் முத்துப்பாண்டி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். தற்சமயம் கொரோனா ஊரடங்கினால் இவர் தனது கடையை பூட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் அவரது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் முத்துப்பாண்டிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் முத்துப்பாண்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விமானத்தில் திருமணம் செய்த தம்பதி…. நோட்டீஸ் அனுப்பிய ஆட்சியர்….!!

கொரோனா பரவல் அதிகரிக்கும் நேரத்தில் விமானத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு அனுமதி அளித்தது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அணி சேகர் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மதுரையிலிருந்து  தூத்துக்குடி சென்ற விமானத்தில் மதுரையைச் சேர்ந்த தொழில் அதிபர் மகன் ராகேஷ் மற்றும் சக்ஸிதா திருமணம் நடைபெற்றது. இது குறித்து வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்த கொரோனா காலங்களில் இத்தகைய திருமணம் நடைபெற அனுமதி அளித்தது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் கடத்திய பொருள்…. போலீசில் சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறை….!!

கள் கடத்தி விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் காவல்துறையினர் வண்டியூர் பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் சிலர் கள் விற்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில்  அவர்கள் நரசிம்மன் மற்றும் சேது மாதவன் என்பது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

20 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள்…. ஜூன் 15 வரை நீட்டிப்பு…. ரத்து செய்யப்பட்ட தென் மாவட்ட ரயில்கள்….!!

தென் மாவட்ட ரயில்கள் வருகிற 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் மதுரை கோட்டத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில ரயில்கள் வருகிற 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த ரயில்கள் அனைத்தும் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை ரத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் செய்த செயல்…. பயத்தில் இருட்டுக்குள் மறைந்த கும்பல்…. வலைவீசிய காவல்துறையினர்….!!

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருட முயன்ற மர்ம கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கச்சைகட்டி சாலையில் டாஸ்மாக் கடை ஓன்று உள்ளது. இந்த கடை ஊரடங்கு காரணமாக பூட்டப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்று கடையின் முன்புறத்தில் உள்ள இரும்புக் கேட்டின் பூட்டை உடைத்துள்ளது. அதற்குபின் உள்ளே சென்று ஷட்டர் போட்ட கதவின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்று 21 மதுபாட்டில் பெட்டிகளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்…. கைது செய்த காவல்துறை….!!

கத்தி முனையில் வாலிபரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று கும்பலில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள விளாத்தூர் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 22ஆம் தேதி சாந்தமங்கலம் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் இரவில் தங்கிவிட்டு மறுநாள் காலை மீண்டும் தனது ஊருக்கு திரும்பியுள்ளார். அதன்பின்  நடுபட்டி அய்யனார் கோவில் அருகில் வைத்து பிரபுவை 4 பேர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போராட்டம் தொடங்கி 6 மாதம் ஆச்சு…. கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகளை வலியுறுத்திய தமிழக விவசாயிகள்….!!

விவசாய சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண்மை திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்றுடன் ஆறு மாதங்கள் ஆனதால் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் இந்த நாளை கருப்பு தினமாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரம் பகுதியில் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்ட விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர் இணைந்து வீடுகள் தோறும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி செய்த செயல்…. வசமாய் சிக்கிய 4 வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

அனுமதியின்றி செம்மன் திருடிய 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் செம்மினிபட்டி கண்மாய் பகுதியில் சிலர் செம்மண் மணல் அள்ளிக் கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அனுமதியின்றி செம்மண் அள்ளியது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் விக்னேஷ், பெருமாள், அஞ்சுமுத்து மற்றும் பொக்லைன் எந்திரம் டிரைவரான கார்த்திக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மறைமுக தேங்காய் ஏலம்…. 19 குவியல்களாக இருந்த தேங்காய்…. கலந்து கொண்ட 12 விவசாயிகள்….!!

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் நடைபெற்று உள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் 12 விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் 38810 தேங்காய்களை 19 குவியல்களாக குவித்திருந்தனர். இந்த ஏலத்தில் 15 வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்சமாக தேங்காய்க்கு ரூபாய் 14.10 க்கும் குறைந்தபட்சமாக ரூபாய் 8.75 க்கும் சராசரியாக ரூபாய் 9.92க்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பழமை வாய்ந்த பால தண்டாயுதபாணி கோவில்…. சிறப்பாக நடந்த வைகாசி விசாக திருவிழா…. பக்தர்களுக்கு தடை….!!

பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி  நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் இருக்கும் குலசேகரன்கோட்டை கிராமத்தில் சிறுமலை அடிவாரத்தில் பழமை வாய்ந்த பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் நேற்று வைகாசி விசாகத்தை ஒட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்யப்பட்டுள்ளது. இந்த பூஜையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காய்ந்து கிடந்த மூங்கில் மரங்கள்…. திடீரென பற்றிய தீ…. தடைபட்ட மின்சாரம்….!!

மூங்கில் தோட்டத்தில் காய்ந்து இருந்த மூங்கில் மரங்கள் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் மூங்கில் தோட்டம் உள்ளது. இந்த மூங்கில் தோட்டத்தில் காய்ந்த மூங்கில் மரங்களில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இந்த தீ மளமளவென பரவியதால் தோட்டத்திற்கு மேலே சென்று கொண்டிருந்த மின்சார ஒயரில் பட்டு அதுவும் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் கப்பலூர் சுற்றுப் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டிட வேலைக்கு சென்ற பெண்…. தண்ணீர் தெளிக்கும் போது நேர்ந்த சோகம்…. கண்ணீரில் குடும்பம்….!!

கட்டுமான வேலைக்கு சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள இ.மலம்பட்டி கிராமத்தில் சேகர் சுகந்தம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். சுகந்தம்மாள் அப்பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது வீட்டில் கட்டுமான வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மின்சாரம் மோட்டாரை இயக்கி கட்டிட சுற்றுச்சுவருக்கு தண்ணீர் தெளித்துள்ளார். அந்த சமயத்தில் சுகந்தம்மாள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலமாரட் வீதியில் இருக்கும் தனியார் விடுதி கார் நிறுத்தும் இடத்தில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் மது  விற்பனை செய்து கொண்டிருந்த சோலையழகுபுரம் பகுதியில் வசிக்கும் மனோகரன் மற்றும் சுந்தரராஜன் ஆகிய இருவரையும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸ் வரல…! தவித்த கொரோனா நோயாளி… சரக்கு ஆட்டோவில் பயணம் ..!!

மதுரை அருகே ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 30 கிலோமீட்டர் தூரம் சரக்கு ஆட்டோவில் கொரோனா நோயாளி அழைத்து வரப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மூடுவார் பட்டியைச் சேர்ந்த பரணி முத்து என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து சரக்கு ஆட்டோவில் 30 கிலோமீட்டர் தூரம் அழைத்துச் சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பால்கடை முன்பு அதிர்ச்சி…! வசமாக படம்பிடித்த சிசிடிவி…. மதுரை கார்த்திக் பரபரப்பு புகார் ..!!

மதுரை அருகே மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அலங்காநல்லூர் அருகே ஐய்யூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது பால் கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் அந்த வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்திருந்தார். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விடுமுறையை கொண்டாட வந்த சிறுவன்…. விளையாடும் போது நேர்ந்த சோகம்…. கண்ணீரில் பெற்றோர்….!!

மின்கோபுரத்தை தொட்டதால் 11 வயது மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ராயபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன்-மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுடைய மகன் யுவன் சரண் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். தற்போது விடுமுறை என்பதால் யுவன் சரண் ராயபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தான். இந்நிலையில் யுவன் சரண் அப்பகுதியிலுள்ள மந்தை திடல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது உயர்விளக்கிற்கான மின் கோபுரம் பிடித்துள்ளான். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த ரயில்கள் மட்டும் ரத்து…. பயணிகளின் வரத்து குறைவு…. திடீர் முடிவு….!!

நாகர்கோவில்-கோவை மற்றும் சென்னை-மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு நேற்று முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதில் ரயில்வே போக்குவரத்திற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் பயணிகளின் வரத்து குறைவால் சில ரயில்கள் வருகின்ற 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் கோவை பகல் நேர சிறப்பு ரயில் (வ.எண். 06321/06322) மற்றும் சென்னை மதுரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவ படிப்பு படிக்கல…. ஆனா இதை பண்ணுனாங்க…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

மருத்துவ படிப்பு படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மூன்று போலி டாக்டர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் சிலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பேரையூர் வருவாய்த்துறையினர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் விஸ்வநாத பிரபு தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் ராமர் என்பவரது வீட்டில் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப்பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் விசாரணை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இன்னும் விரிவாக்கம் செய்யனும்…. கடை உரிமையாளரின் முயற்சி…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

கடன் பிரச்சனையால் மனமுடைந்த கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொடிக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் பாலாஜி. இவர் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த கடையை விரிவாக்கம் செய்ய அவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் கடையை திறக்க அனுமதி இல்லை. அதனால் வியாபாரமும் மந்தமாகவே இருந்தது. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை கேட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போர்க்கால அடிப்படையில் செயல்பட்டது…. மதுரைக்கு வந்த ஆக்சிஜன் லாரிகள்…. சிறப்பு ரயில் மூலம் ஒடிசாவுக்கு அனுப்பப்பட்டது….!!

ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரிகள் சிறப்பு ரயில் மூலம் ஒடிசாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தீவிரமடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. அதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் கூடுதலாக ஆக்சிஜன் இருப்பு வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை தரைவழியாக லாரியில் வந்தால் கால தாமதம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு வெளியே நின்ற 9 இருசக்கர வாகனங்கள்…. அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர்…. அதிரடி விசாரணையில் காவல்துறை….!!

ஒன்பது இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் இருசக்கர வாகன பழுது நீக்கம் கடை வைத்து நடத்தி வருபவர் மணிகண்டன். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் கடையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது…. மருத்துவமனைக்கு அருகில் நின்ற ஒருவர்…. மடக்கி பிடித்த காவல்துறை….!!

மருத்துவமனைக்கு அருகில் கஞ்சா விற்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்குள்ள மருத்துவமனைக்கு அரசு கஞ்சா விற்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்திய போது அவர் வலையன்குளத்தை  சேர்ந்த முத்துமணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாசலில் உட்கார்ந்திருந்த மூதாட்டி…. வேகமாக வந்த 3 நபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொங்கபட்டி கிராமத்தில் கட்ட ராமன்-கருப்பாயி என்ற வயது முதிர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பாயி தனது வீட்டில் முன்புற வாசலில் உட்கார்ந்து இருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கருப்பாயி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் உசிலம்பட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மொத்தம் 60 பேர்…. தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு…. பொருட்களை வழங்கினார் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா….!!

தூய்மை பணியாளர்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான பலசரக்கு மற்றும் காய்கறி பொருட்களை இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா வழங்கியுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய 60 துப்புரவு பணியாளர்களுக்கு முழு ஊரடங்கின் காரணமாக ஒரு வாரத்துக்கு தேவையான பலசரக்கு மற்றும் காய்கறி பொருட்களை சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா வழங்கியுள்ளார். மேலும் இதில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், தலைமை காவலர் கவிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட அனைவரும் தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும் போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் தனிமையில் இருந்த பெண்…. 4 வாலிபர்களின் சேட்டை…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

தனியாக இருந்த பெண்ணிடம் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ரீகன். இவருடைய மனைவி தீபா சம்பவம் நடந்த அன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக மாடியில் தங்கியிருந்த 4 வாலிபர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். இதுகுறித்து தீபா கேட்டபோது வாலிபர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்…. தவிக்கும் குழந்தைகளை காக்க பணிக்குழு…. செய்தி வெளியிட்டார் மாவட்ட கலெக்டர்….!!

கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட அளவில் பணிக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட அளவிலான பணிக்குழு நியமிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது “மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நபர்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி இறக்கும் நபர்களின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வியாபாரம் தொடர்பாக தகராறு…. சரமாரியாக தாக்கிய 2 பேர்…. கைது செய்த காவல்துறை….!!

வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மதுரை மாவட்டத்திலுள்ள யானைகல் பகுதியில் வேர்க்கடலை வியாபாரம் கடை வைத்து நடத்தி வருபவர் தாத்து பெருமாள். இவருக்கும் பக்கத்தில் உள்ள கடைக்காரரான கோகுல ராமன் மற்றும் சுருளி கோவிந்தம் ஆகியோருக்கும் இடையே வியாபாரம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று ஏற்பட்ட தகராறில் கோகுல ராமனும் சுருளி கோவிந்தனும் இணைந்து தாத்து பெருமாளை திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தாத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்களால போயிட்டு வர முடியல… கர்ப்பிணி பெண்களின் அவலம்… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

போக்குவரத்து வசதி இல்லாமல் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் சிறப்பு பஸ் அல்லது ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்தநிலையில் முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல இருக்கும் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாலத்தில் நின்ற சகோதரர்கள்…. விரைந்து சென்ற காவல்துறை…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் முத்து பாலம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் சேக் முகமது மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓடைக்கு அருகில் என்ன வேலை….? கண்காணித்த காவல்துறை…. வசமாய் சிக்கிய வாலிபர்கள்….!!

21 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற 5 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அல்லம்பட்டி ஓடைக்கு அருகில் சந்தேகப்படும் படியாக சில நபர்கள் நின்று கொண்டிருந்தனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது அவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் கோவிலுக்கு பயணம்…. நடந்து சென்ற போது நேர்ந்த விபரீதம்…. அதிரடி விசாரணையில் காவல்துறை….!!

மலை மீதுள்ள கோவிலுக்கு வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நல்லுதேவன்பட்டி கிராமத்தில் பொன் கலை என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரசாத் தனது நண்பர்களுடன் மலை மீதுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பிரசாத் மலைமீது ஏறிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவருடைய நண்பர்கள் அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அலட்சியமா இருக்காங்க..! ரொம்ப கஷ்டமாக இருக்கு….. புலம்பிய மதுரை வாசிகள் …!!

இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு  உள்ளதால் நேற்று மதுரையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் தளர்வற்ற ஊரடங்கு அமல்படுத்தபட்டு  உள்ளதாலும் நேற்று இரவு வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் நேற்று மதுரை சிம்மக்கல் பகுதியில் வாகன நெரிசலால் மக்கள் சிக்கித் தவித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பலரும் அலட்சியம் செய்து விட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கேள்விக் குறியாக இருப்பதாகவும் கருத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தெறிக்கவிட்ட புதுமண தம்பதிகள்…! இப்படி ஒரு கல்யாணமா ? மதுரை முழுவதும் ஒரே பேச்சு தான் …!!

மதுரையைச் சேர்ந்த ஜோடி பறக்கும் விமானத்தில் திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இன்று முதல் தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நேற்று அவசரகதியில் நடத்தப்பட்டன. மதுரையை சேர்ந்த மீனாட்சி ராகேஷ் திக்சனா தம்பதியினர் பறக்கும் விமானத்தில் பயணித்தப்படி  திருமணம் செய்தனர். பெங்களூருவில் இருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் வருகை தந்த இந்த ஜோடி தங்களது உறவினர்கள் முன்பாக திருமணம் செய்து கொண்டு ஆசி பெற்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் சண்டையா….? பேராசையால் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு….!!

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடைக்காரர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் சிவசாமி என்பவர் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகில் உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயபாலனின் மகன் காசிராஜன் தனது இரு சக்கர வாகனத்தை அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மலை பெய்ய தொடங்கியது…. வெளியில் இருக்கும் மூட்டைகள்…. கோரிக்கை விடுத்த விவசாயிகள்….!!

திறந்தவெளியில் அடுக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அமைந்துள்ளது. இந்த நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் மூட்டைகளை திறந்தவெளியில் அடுக்கி வைத்துள்ளனர். தற்சமயம் மழை பெய்து கொண்டிருப்பதால் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் இது குறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உணவு வாங்குவதற்காக சென்ற டிரைவர்…. வழிமறித்த 3 பேர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமி என்ற லாரி டிரைவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு லாரியில் சீனி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அவர் மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகில் சென்றுகொண்டிருக்கும் போது லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு ஒரு ஹோட்டலில் உணவு வாங்குவதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பெரியசாமியை வழிமறித்து அவரிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செக்கானூரணி நோக்கி பயணம்…. எதிரே வந்த வேன்…. கதறி அழும் குடும்பங்கள்….!!

விபத்தில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேல பெருமாள்பட்டி கிராமத்தில் மாயி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஷேவாக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஹரிஹரன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஷேவாக்கும் ஹரிஹரனும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் செக்கானூரணி நோக்கி சென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு அறிவித்த கட்டுப்பாடு…. விதியை மீறி செயல்பட்ட கடை…. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்….!!

விதியை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக வாகன உதிரிபாக கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதில் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள திருவாடானை பகுதியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்…. ஓட்டம் பிடித்த வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறை….!!

கஞ்சா கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளனர். அந்த சமயத்தில் காவல்துறையினர் தப்பிச் செல்ல முயன்ற இருவரில் ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர் அப்பகுதியைச் சேர்ந்த ரபீக்ராஜா என்பதும் அவரிடம் 25 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இ பதிவு அனுமதி அவசியம்…. எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு…. 111 பேர் மீது வழக்குப்பதிவு….!!

இ பதிவு அனுமதி இல்லாமல் பயணம் செய்த 111 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதனால் மாவட்டத்துக்கு உள்ளேயும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ பதிவு அனுமதி மிக அவசியம் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில்  மதுரை மாவட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படியாக நின்ற 3 பேர்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

கஞ்சா விற்ற குற்றத்திற்காக இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் உமச்சிகுளம் பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை எடுத்து சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று […]

Categories

Tech |