Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கார்-லாரி மோதல்…. உடல் நசுங்கி பலியான மாணவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒரு மாணவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவர் காரில் கொட்டாம்பட்டி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் பாண்டாங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் மீது எதிரே வேகமாக வந்த லாரி பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட கிணறு” கல்வெட்டில் இருந்த குறிப்புகள்…. பேராசிரியர்களின் ஆய்வு பணி…!!

20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்த பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பணிபுரியும் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்களான பிறையா, ராஜகோபால் போன்றோர் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சரவண பொய்கை கிரிவல சுற்றுப்பாதையின் இடது புறத்தில் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்த ஒரு கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4 அடி உயரமும், 1 அடி அகலமும் உடைய அந்த கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களில் 26 […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேரடி செமஸ்டர் தேர்வுக்கு எதிர்ப்பு… மதுரையில் கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது.!!

நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்று போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் நேற்று முன்தினம் முதல், ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்தி விட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது, ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பும், கல்லூரி முன்பும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்நிலையில் போராடிய 710 மாணவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. மதுரையில் பரபரப்பு…!!

ரோட்டில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பள்ளத்தில் இறங்கிய  சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலிருந்து 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று ஈரோட்டுக்கு புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நாகபட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ நடுரோட்டில் திரும்பியுள்ளது. அப்போது பேருந்தின்  ஓட்டுநரான ஜெகதீஷ் என்பவர் ஆட்டோவின் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை வலது பக்கமாகத் திருப்பியுள்ளார். இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகனை பார்க்க சென்ற தந்தை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தந்தை மற்றும் மகனை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள விளாச்சேரி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் கீழகுயில்குடி அருகில் இருக்கும் கருப்பசாமி கோவிலில் பூசாரியாக இருக்கும் தனது மகன் ரஞ்சித் குமாரை பார்ப்பதற்காக ராஜேந்திரன் அங்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜேந்திரன் மற்றும் ரஞ்சித் குமாரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் எலக்ட்ரீசியனான ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராமுவை மின்சாரம் தாக்கி விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெண்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து செல்போன் மற்றும் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கருவேலம்பட்டி பகுதியில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பால பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரம்யாவிடம் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் 2 செல்போன்களை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ரம்யா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… துரிதமாக செயல்பட்ட தனிப்படையினர்…!!

வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள கரட்டுபட்டியில் கோட்டைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று கொலை செய்துவிட்டு அவரது உடலை கிணற்றில் தூக்கிப் போட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சென்ற காவல்துறையினர் கோட்டைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்… 14ஆம் தேதி கார்த்திகை மாத திருவிழா ஆரம்பம்…!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா வருகிற 14-ஆம் தேதி முதல் 23 தேதி வரை நடக்க உள்ளது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மேலும் வருகின்ற 19ஆம் தேதி பெரிய கார்த்திகை அன்று மாலை 6 மணிக்கு கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது. மேலும் அன்று மீனாட்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் திருட்டு…. மருத்துவமனையில் நடந்த சம்பவம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

பணத்தை திருடிய லேப் டெக்னீசியனை கண்டுபிடித்த காரணத்திருக்காக  இன்ஸ்பெக்டரை  கமிஷனர் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அலுவலகத்தில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மதன் அண்ணாநகர் காவல் துறையில் புகார் அளித்தார். அந்த  புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்   மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை   ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு  லேப் டெக்னீசியன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வாலிபர்…. நிற்காமல் சென்ற வாகனம்…. போலீஸ் வலைவீச்சு…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விராட்டிபத்து பகுதியில் வசித்து வந்த நாகேந்திர பிரசாத் தனது இருசக்கர வாகனத்தில் நாகமலைபுதுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது சீனிவாசா காலனி அருகே சென்று கொண்டிருந்த நாகேந்திர பிரசாத்தின் இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த நாகேந்திர பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய வாகனம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மதுரையில் நடந்த சோகம்…!!

நிலைதடுமாறிய நபர் சாலையிலுள்ள தடுப்பு சுவர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் கீழத்தோப்பு பகுதியில் காசிமாயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள உத்தங்குடி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் ஒன்றில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த  காசிமாயன் சம்பவ இடத்திலேயே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முன்விரோதத்தால் வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகன் அவரது நண்பர்களான அதே பகுதியில் வசிக்கும் சங்கர்குரு, முனியசாமி, பிரகாஷ் ஆகிய 3 பேருடன் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று அவரை அழைத்தனர். ஆனால் கார்த்திகேயன் வர […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிரடி வாகன சோதனை…. போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்…. 79 பேர் மீது வழக்கு பதிவு….!!

போக்குவரத்து விதிகளை மீறிய 79 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி பொதுமக்களுக்கு  அச்சுறுத்தல் ஏற்படுத்திய 150 இருசக்கர வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு வாகன சட்டத்தின்படி வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனங்களை அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும் ஓட்டி பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி 112 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் மீது காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் குடிச்சிட்டு வந்த… “தட்டிக்கேட்ட தந்தை அடித்துக்கொலை”… போதையில் மகன் வெறிச்செயல்..!!

மதுரை மாவட்டத்தில் மது போதையில் தந்தையை அடித்துக் கூறுகின்றார் மகனை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள பல்கலை நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயமணி. இவர்களுக்கு அருணா என்ற மக்களும், அரவிந்த் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில்  மகன் அரவிந்த் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த சூழலில் மகன் அரவிந்த் கடந்த 21ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் கோபமடைந்த அண்ணாதுரை கண்டித்துள்ளார். இதனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான் ஒரு சீரியல் நடிகர்… “பேஸ்புக்கில் பழகி ரூ. 2,50,000ஐ சுருட்டிய நபர்”… பெண் பரபரப்பு புகார்!!

சந்தோஷ் ராஜா என்பவர்  சீரியல் நடிகர் என்று முகநூலில் ஒரு பெண்ணை காதல் செய்து பண மோசடி செய்துள்ளார். சென்னையில் உள்ள திருவொற்றியூரில் சந்தோஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் முகமது அசீம் என்ற முகநூல் பக்கத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நண்பருக்கான விருப்பத்தை அனுப்பியுள்ளார்.இதனை அந்த பெண்ணும் ஏற்றுள்ளார். அதன்பிறகு வாட்ஸபில் பேசி தான் ஒரு சீரியல் நடிகர் என்று கூறி ஒரு மாத காலமாக காதலித்து வந்தார்.இதனை அந்த பெண் நம்பியுள்ளார். இதையடுத்து இவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரு மாதத்தில் திருமணம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாராணை…!!

திருமணம் நடைபெற உள்ள நிலையில் திடீரென வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோமதியாபுரத்தில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் வெள்ளரிப்பட்டியில் உள்ள ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு  ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இரவு நேரம் தனியறையில் தூங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் அறைக்குச் சென்ற யுவராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோட்ட வேலைக்கு சென்ற நபர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பணம், நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோளங்குருணி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். அதன்பின் வேலை முடித்து வீடு திரும்பிய செந்தில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்திருந்த 2000 ரூபாய் பணம், ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

4000 ஆண்டுகள் பழமையான ஓவியம்… கண்டெடுத்த தொல்பொருள் ஆய்வாளர்கள்… பழங்கால மக்களின் உணர்வுகள்…!!

களஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தபோது 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்ணன், திண்டுக்கல் மாவட்ட நெல்லூர் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள தும்மிநாயக்கன்பட்டியில் களஆய்வு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருந்த முனியப்பசாமி கோவில் அருகே இருந்த பாறையில் மிகவும் பழமையான ஒவிங்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உதவி செய்வது போல் பாவனை…. இளம்பெண்ணின் சூழ்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்காக வருபவர்களிடம் இளம்பெண் ஒருவர் உதவி செய்வது போல் பாவனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் உசிலம்பட்டி காவல்துறையினர் அங்குள்ள ஏ.டி.எம். மையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வின் போது பணம் எடுப்பதற்கு உதவி செய்வதாக பாவனை செய்து மோசடியில் ஈடுபட்டது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிமேகலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிகமான மன அழுத்தம்…. டாஸ்மாக் கடை ஊழியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பாண்டியராஜன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பாண்டியராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விரட்டி அடித்த மாமியார்…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ரயில்வே மேம்பாலத்தில மேலே ஏறி வாலிபர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேல் ஏறிய ஒரு நபர் தற்கொலை செய்ய போவதாக சத்தமிட்டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அந்த நபரை கீழே இறங்கும்படி தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிக் கொண்டே இருந்தார். இதனிடையில் ஒருவர் பாலத்தின் மேலே ஏறி கீழே இறங்கி வா பேசிக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்… அதிஷ்டவசமாக தப்பிய பயணிகள்… போலீஸ் விசாரணை…!!

2 அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூதாட்டி உள்பட 2 பேருக்கு காயமடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்ததுள்ளது. அப்போது அரசு பேருந்தின் மாதாந்திர சுங்க கட்டணம்  முடிவடைந்ததால் பேருந்தை மேலும் இயக்கமுடியாது என சுங்கசாவடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பேருந்தின் ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்தை அனுமதிக்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த வியாபாரி…. கொலை செய்ய முயன்ற மர்மநபர்கள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பால் வியாபாரியின் தலையின் மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்ய முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் அன்னக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லபாண்டி என்ற மகன் உள்ளார். இவர் பால் பூத்து வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் செல்லப்பாண்டி இரவு பால் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையின் முன்புறம் படுத்திருந்தார். அப்போது மர்ம நபர்கள் செல்லப்பாண்டியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பையில் இருந்த ரூ.3 லட்சம்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

3 லட்சம் ரூபாயை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் லின்சிஜோன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காளவாசல் பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு பையில் ரொக்கப் பணமாக 3 லட்சம் ரூபாயை வைத்திருந்தார். அந்த ரூபாயை மர்மநபர்கள் யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து லின்சி ஜோன்ஸ் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் நடந்த அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள முள்ளிகாடு பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கோட்டப்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழனி நாட்டு துப்பாக்கியை மாட்டுக் கொட்டகையில் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பழனியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலில் நுழைந்த மர்மநபர்கள்… நிர்வாகத்தினர் அளித்த புகார்… போலீஸ் விசாரணை…!!

கோவிலின் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளப்பட்டி-லக்கம்பட்டி செல்லும் பகுதியில் சிவனடி அய்யன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து கோவில் கதவு திறந்திருப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக பாலமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இவர் மீது மதுரை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருந்ததால் காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்து மதுரை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து பிரபாகரனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மதுரை காவல் துறையினர் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை மக்களே… தவறாம போய் தடுப்பூசி போட்டுக்கோங்க… நடிகர் சசிகுமார் வெளியிட்ட வீடியோ…..!!!

தமிழகம் முழுவதும் இன்று 5வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் நடிகர் சசிகுமார் மதுரை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, முதல் அலை இரண்டாம் அலை நிறைய பாதிப்புகளை மக்களிடையே ஏற்படுத்தியுள்ள நிலையில் மூன்றாவது அலை வரப்போகிறதாக கூறுகிறார்கள். எனவே மதுரை மாவட்டத்தில் இன்று 5 வது முறையாக தடுப்பூசி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிகாரி போல நடிப்பு….. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அதிகாரி போல ஏமாற்றி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறை அதிகாரி ஒருவர் வாகனங்களை வழிமறித்து பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கருவேலம்பட்டி- பெருங்குடி சாலையில் காவல்துறையினர் வாகனம் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த வாலிபர் ஒருவரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அவரது பதில் காவல்துறையினருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கைதான குற்றவாளி…. ஜாமீன் வழங்க கோரி வாதம்…. வழக்கு ஒத்தி வைப்பு…!!

திருமண நிகழ்ச்சியில் தங்க நகையை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் சிந்தாமணி என்னும் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காமெடி நடிகரின் குடும்பத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தங்க நகைகள் திருடபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  நடத்திய விசாரணையில் பரமக்குடியில் வசித்து வரும் விக்னேஷ் என்பவரை கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாயின் பெயரில் சொத்து…. மகளின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சொத்துக்காக தாயை கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கோ.புதூர் என்னும் பகுதியில் பாப்பம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெயரில் சில சொத்துக்கள் இருந்துள்ளன. அதனை அபகரிக்கும் எண்ணத்தில் பாப்பம்மாளின் மகளான நாகேஸ்வரி என்பவர் தனது கணவர் முனியாண்டியுடன் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளார். இதுகுறித்து புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த தம்பதியை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு பற்றி மதுரை மாவட்ட 4-வது கூடுதல் செசன்ஸ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

களிமண் போன்று இருந்த பொருள்…. வசமாக சிக்கிய இருவர்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

தங்கம் கடத்திய இரண்டு நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு  துபாய் விமானம் வந்துள்ளது.  இந்த விமானதில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்க புலனாய்வு துறை அதிகாரிகள் துபாயில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து இறங்கிய விமானத்தில் வந்த அனைத்து பயணிகளையும் தனித்தனியாக சோதனை செய்துள்ளனர். மேலும் அவர்களின் உடைமைகளையும் தனித்தனியாக பரிசோதித்த போது விமானத்தில் வந்திறங்கிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த நண்பர்கள் மீது கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள முகமதியாபுரத்தில் ரஜினி மஸ்தான் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது ஆசிக் அலி தனது நண்பரான முகமது உவைஸ் உடன் நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு பேரும் தங்களது இரு சக்கர வாகனங்களில் வெளியே புறப்பட்டுள்ளனர். அப்போது நாவினிபட்டி நான்கு வழி சாலையில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு…!!

இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நல்லூர் என்னும் பகுதியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அழகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூவாள் என்பவருடன் ஒரு வேலை விஷயமாக இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் மண்டேலா நகரில் உள்ள ரிங்ரோடு பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தபோது திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக இரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்? மாணவி எடுத்த விபரீத முடிவு…. கடிதத்தில் உருக்கம்…!!

விரக்தியில் இருந்த 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வருமானவரி காலனி முதல் தெருவில் அக்னல் டயாஸ் என்பவர் அந்தமானில் உள்ள கப்பல் நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரான்சிடா சைனி பழைய குயவர் பாளையத்தில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடந்த நிலையில் பிரான்சிடா சைனி கடந்த ஒரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீபாவளி அதிரடி சலுகை…. வெறும் 6 ரூபாய்க்கு துணி விற்பனை…. அலைமோதிய கூட்டம்….!!!!

மதுரையில் தனியார் துணிக்கடையில் வெறும் 6 ரூபாய்க்கு துணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் அங்கு அளவுக்கு அதிகமான கூட்டம் அலைமோதியது. மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. அதில் திறப்பு விழா சலுகையாக ஆறு ரூபாய்க்கு துணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதையொட்டி ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர். அதனால் கொரோனா தடுப்பு விதிகளை மீறி ஒரே இடத்தில் யாரால மானூர் குவிந்ததால் அங்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிவனிடம் காதல் சிபாரிசு….. கடிதம் எழுதிய பக்தர்…. குழப்பத்தில் கோவில் நிர்வாகிகள்….!!

நாம் ஏதேனும் ஒன்று நமக்கு வேண்டும் என்று நினைத்தால் அதனை இறைவனிடம் கேட்போம். அதேபோன்று ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் நேரடியாக கோவிலுக்கு சென்று இறைவனிடம் முறையிடுவோம். ஆனால் இங்கு இளைஞர் ஒருவர் சிவபெருமானிடம் கடிதத்தின் மூலமாக தனக்கு வேண்டியவற்றை கேட்டுள்ளார். மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கிபி பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு வெங்கடேசன் எனும் பக்தர் தினமும் கடிதம் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் அவரது முகவரியை அவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

70 கடைகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற நோட்டீஸ்… திடீர் அறிவிப்பு…!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 70 கடைகளை அகற்ற உரிமையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவிலில் உள்ள பூ, பழம் மற்றும் தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்கும் 70 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கு மேற்பட்ட கடைகள் எரிந்து சேதம் ஆகிய நிலையில், அதிகமாக கடைகள் இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக கடை உரிமையாளர்கள் உயர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகறாறு…. தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் சரணடைந்த நபர்….!!

தொழிலாளியை வெட்டியவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள கீழச்சொரிக்குளம் கிராமத்தில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அழகு என்ற மனைவி உள்ளார். இவர் கீழச்சொரிக்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகுவை நீக்கி விட்டு அந்த இடத்திற்கு அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான ஈஸ்வரனின் மனைவி சித்ரா என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளனர். இதனால் ஈஸ்வரனுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. திடீரென தாக்கிய மின்னல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலசை கிராமத்தில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மேலூர் அருகில் உள்ள முசுண்டகிரிபட்டியில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் மேலூர் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது ராஜேஷ் கண்மாய் பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராஜேஷை மின்னல் தாக்கியதில் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது கடமை…. ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியே இலக்கு…. முதல்வர் ஸ்டாலின்!!

வட மாவட்டம், தென் மாவட்டம் என வேற்றுமை பார்க்காமல் ஒட்டு மொத்த தமிழக வளர்ச்சி அரசின் இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.. இந்த கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் அனீஷ் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் பொது மக்களிடம் முக ஸ்டாலின் கலந்துரையாடினார்.. அப்போது, பாப்பாபட்டி கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சித் திட்டங்களை […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காரை விட்டு இறங்கி வயலுக்கு சென்று… நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!!

பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் நாற்று நட்ட பெண்களிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொது மக்களிடம் கலந்துரையாடினார்.. அப்போது, பாப்பாபட்டி கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முதல்வரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். பாப்பாபட்டி கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றி இருவழிப்பாதை அமைக்கவும் கிராம சபையில் கோரிக்கை வைத்தனர்.. முன்னதாக பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்து…. உயிரிழந்த கால்நடைகள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் கொட்டகையில் ஏற்பட்ட  தீ விபத்தில் ஆடு, மாடுகள்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுரைமாவட்டத்திலுள்ள  பொட்டிபுரத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு சொந்தமாக 2  கொட்டகைகள் இருக்கின்றது. அங்கு ஆடு,மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது  கொட்டகையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு  வீரர்கள்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  ஒரு மணி நேரம் போராடத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கொட்டகையில் இருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கணவர், குழந்தை யாருமே வேண்டாம்” தோழியுடன் சென்ற பெண்….. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தோழியுடன் வசிக்க விரும்பிய பெண் தனது கணவர் மற்றும் குழந்தையை விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பனங்காடி என்னும் பகுதியில் சரவணன் என்பவர் தனது மனைவி ஜெயஸ்ரீயுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ திடீரென வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். அனைத்து இடங்களிலும் தேடியும் ஜெயஸ்ரீ கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அலங்காநல்லூரில் உள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ஜெயஸ்ரீயின் கணவர் தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து ஆஜர் படுத்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குப்பென்று பற்றி எரிந்த நெருப்பு…. பல லட்ச ரூபாய் பொருட்கள் நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம் …!!

கரும்பு தோட்டத்திம் முதல் பால்பண்ணை வரை தீ பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஓட்டுபட்டி பகுதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செம்புக்குடிபட்டியில் கரும்பு தோட்டம் ஒன்று வைத்துள்ளார். அதே தோட்டத்தை ஒட்டி கரும்பாலை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மின் கசிவு ஏற்பட்டதால் கரும்பு ஆலையின் மேற்கூரையில் நெருப்புப் பற்றி எரிந்தது. அந்த நெருப்பு அங்கு வைக்கப்பட்டிருந்த கொப்பரை, கரும்புச்சக்கை உபகரண பொருட்கள் மற்றும் மூன்று தென்னை மரங்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்  செய்தனர்.  மதுரை மாவட்டத்தில் உள்ள   ஆட்சியர்  அலுவலகத்திற்கு பார்வை திறனற்ற மாற்றுதிறனாளிகள்சென்றுள்ளனர். இந்நிலையில்   அரசின் சலுகைகள் உட்பட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  திடீரென போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட  மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவர்த்தை நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து….சேதமான மின்கம்பம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

கட்டுப்பாட்டை இழந்த அரசு பெயரில் மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்திலுள்ள மேலவெளி வீதியில் ரோட்டில்  அரசு டவுன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  இந்நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் மின்கம்பம் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டது.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எடுத்தாச்சு மொத்த லிஸ்ட்டையும்…. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…. அசத்தும் மதுரை காவல்துறை….!!!!

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்ற மாவட்டங்களில் மதுரையும் ஒன்று. மதுரையில் மட்டும் சுமார் 1600 க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு குற்றங்களில் செய்து வருகின்றனர்.இநிலையில் மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்தா சின்ஹா என்பவர் காவல் உயரதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஒரு மொபைல் செயலி ஒன்றை வடிவமைக்க உத்தரவிட்டார். அந்த செயலில் ரவுடிகள் பற்றி பல்வேறு தகவல்கள் குறித்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ரவுடிகளின் பெயர் வாரியாக, காவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டுக்கு விஷம் வைத்த தந்தை….. மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் நடவடிக்கை…!!

சொத்து பிரச்சனையில் மாட்டுக்கு விஷம் வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.  மதுரை மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி அருகே மருதம்குடியில் கூலித் தொழிலாளியான மருதப்பன் வசித்து வருகிறார். இவருக்கு மருதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மருதி தன் தாத்தாவின் சொத்தில் தன்னுடைய  பங்கினை  தருமாறு தந்தையிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவரின் தந்தை சொத்தை தர மறுத்துவிட்டார். இந்நிலையில் மாலை நேரத்தில் மருதி தனது மாட்டுக்கு குடிப்பதற்கு நீரை வைத்தார். இதில் மருதப்பன் விஷத்தை கலந்ததாக கூறப்பட்டது.  இதனை […]

Categories

Tech |