இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் ரஞ்சித்-ரம்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 11 மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் ரம்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த ரம்யா வீட்டில் […]
