ஆபத்தான வகையில் நிற்கும் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற கோரி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் இருக்கும் உழவர் சந்தைக்கு பின்புறத்தில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் மூலம் கே.சி.ஆர் தெரு, முல்லை நகர், கரூர் சாலை, வள்ளுவர் நகர் போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் செல்கிறது, தற்போது இந்த கம்பத்தில் உள்ள சிமெண்ட் அனைத்தும் உதிர்ந்து கம்பிகள் மட்டும் வெளியே தெரிகிறது. மேலும் மின்கம்பத்தில் செல்லும் […]
