Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் நடந்த பிரசவம்…. சாதூர்யமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்கள்….!!

காட்டுப்பகுதியில் வைத்து பெண்ணிற்கு பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளாமலை ஆதிவாசி காணி குடியிருப்பில் சுபாஷ் என்பவர் பசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீலேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஸ்ரீலேகாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் பேச்சிபாறையிலிருந்து விளாமலைக்கு விரைந்து சென்றது. இதனை அடுத்து காட்டுப்பகுதி வழியாக பேச்சிப்பாறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியில் பிராங்கிளின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஷோபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பிராங்கிளின் புதிய வீடு கட்டுவதற்காக பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பிராங்கிளின் தனது வீட்டில் தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரில் பதுக்கிய பொருள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக காரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் 120 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தும்பக்கோடு பகுதியில் வசிக்கும் ஜெபிஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெபிஸை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சம்பள பணத்தை கடனாக கொடுத்த வாலிபர்…. கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை பகுதியில் விஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக விஜூ வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜூ தனது சம்பள பணத்தை ஒருவருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதற்கிடையே புதிதாக வீடு வாங்குவதற்காக விஜூவிடம் அவரது பெற்றோர் பணம் கேட்டுள்ளனர். அப்போது தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மருமகளை திட்டிய மாமியார்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் புதூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு செல்வகுமாருக்கு ஆலிஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய ராணி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் செல்வகுமாரின் தாயாரான செல்வராணி என்பவர் தனது மருமகளை அடிக்கடி திட்டியுள்ளார். இதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ஆலிஸ் தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இன்னும் திருந்தவே இல்ல…. வாலிபர் மீது நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைவிளை பகுதியில் கஞ்சா வியாபாரியான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் மார்த்தாண்டம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அஜித்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

யாரோ கடத்திட்டு போயிட்டாங்களா….? வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாணவி வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜூ மன உளைச்சலில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை வெறுத்த ராஜூ தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் ரப்பர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லாட்ஜில் அதிரடி சோதனை….. வசமாக சிக்கிய 3 பேர்…. குமரியில் பரபரப்பு…!!

விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கழுவன்திட்டை பகுதியில் இருக்கும் தனியார் லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட லாட்ஜில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ராஜஸ்தான், தூத்துக்குடி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 இளம்பெண்களும், ஜெயக்குமார், தேவபிரசாத், வினில் ஆகிய 3 பேரும் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அனைவரையும் பிடித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடியோ காலில் ஆபாசமாக தோன்றிய இளம்பெண்…. அதிர்ச்சியடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் வீடியோ அழைப்பில் ஆபாசமாக தோன்றி வாலிபரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் வாலிபரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வீடியோ கால் மூலம் அழைப்பு வந்துள்ளது. இந்நிலையில் வாலிபர் அந்த அழைப்பை ஏற்று பேசிய போது எதிர்முனையில் ஒரு பெண் ஆபாசமாக தோன்றியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் சுதாரிப்பதற்குள் இளம்பெண் வீடியோ அழைப்பை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நகைகளை அடகு வைத்த தாய்-மகன்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

போலியான நகைகளை அடகு வைத்த குற்றத்திற்காக தாய் மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த முகமது என்பவரின் மனைவியான சபியா மற்றும் அவரது மகன் அபு பைசல் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் சந்திரசேகரின் நிறுவனத்தில் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்த நகைகளை ஆய்வு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தவணை தொகை கட்ட முடியவில்லை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சோட்டப்பணிக்கன் தேரிவிளை பகுதியில் கட்டிட தொழிலாளியான பால் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் டிரைவரான மனோஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் தவணை முறையில் புதிதாக ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார். ஆனால் அதற்கான தவணை ரூபாயை மனோஜால் கட்ட முடியவில்லை. இதனால் வீட்டில் உள்ளவர்களிடம் தவணை தொகை கட்டுவதற்காக மனோஜ் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடிநீர் தொட்டி மீது மோதிய வாகனம்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முள்ளங்கினாவிளை பகுதியில் சேம் பென்னட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பென்சேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பென்சேக் தனது நண்பரான சிஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர்கள் சடையன்குழி பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறுக்கே ஒரு ஆட்டோ சென்றுள்ளது. இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளியலறையில் இருந்த மனைவி…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. குமரியில் பரபரப்பு…!!

வீட்டு குளியலறையில் பெண் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரியகோடு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குளியலறையில் ராதா மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வின்சென்ட் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ராதாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. இளவட்ட கல்லை தூக்கி இளைஞர்கள்…. நடைபெற்ற பல்வேறு போட்டிகள்…!!

புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில்  தளக்காவூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதே போல் நேற்றும் கத்தோலிக்க இளைஞர் மன்றம் சார்பில் போட்டிகள் நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், முறுக்கு சாப்பிடுதல், பலூன் உடைத்தல், பாட்டில்களில் நீர் நிரப்புதல்   போன்ற போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஆண்களுக்கு 1000 மீட்டர் ஓட்டம், குண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மரத்தினாலான திருவள்ளுவர் சிலை… கடலுக்கு செல்ல தடை… மரியாதை செலுத்திய தமிழ் அமைப்புகள்…!!

திருவள்ளுவர் சிலைக்கு  தமிழ் அமைப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  நடு கடலில்   133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை நிறுவப்பட்டு 22 ஆம் ஆண்டு நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிலையில் கடலுக்கு செல்ல மூன்று நாட்களுக்கு அரசு  தடை விதித்துள்ளது. அதனால் பகவதி அம்மன் கோவிலில்  மரத்தினாலான திருவள்ளுவர் சிலையை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இதில்  நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம். ஆர். காந்தி மற்றும்  பல  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை… கோவில்களில் திரண்ட ஏராளமான பக்தர்கள்…!!

புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான தாணுமாலய சாமி கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், அழகம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், வெங்கடாஜலபதி கோவில் உள்ளிட்ட கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு காலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் ஆதாரணை செய்யப்பட்டு சிறப்பு  பூஜைகள் நடைபெற்றன.  இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தவாறு சாமியை  தரிசனம் செய்துள்ளனர். மேலும் கோவிலுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்….. கேக் வெட்டி மகிழ்ந்த போலீசார்….!!

புத்தாண்டை கொண்டாடும் விதமாக காவல்துறையினர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட நித்திரவிளை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து 2022 என்ற வடிவில் உருவாக்கப்பட்ட கேக்கை சரியாக 12 மணிக்கு வெட்டி காவல்துறையினர் புத்தாண்டை வரவேற்றனர். அதன் பின் துணை சூப்பிரண்டு சிந்து அனைவருக்கும் கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்வளவு பணமா….? ஜோராக நடைபெற்ற விற்பனை…. புத்தாண்டு கொண்டாட்டம்….!!

புத்தாண்டை முன்னிட்டு 4 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் மதுக்கடைகள் அமைந்துள்ளது. இதில் 53 மதுக்கடைகளில் பார் வசதி உள்ளது. சாதாரணமாக நாளொன்றுக்கு மதுக்கடைகளில் 2 கோடி முதல் 3 கோடி வரை மது விற்பனை நடைபெறும். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 கோடியே 7 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அளித்த தகவல்….. பத்திரமாக மீட்கப்பட்ட குரங்கு….. வனத்துறையினரின் முயற்சி…!!

மின்சாரம் தாக்கியதால் மயங்கிய குரங்குக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை பண்டாரபுரம் அருகில் இருக்கும் சானல் கரையோரம் மின்சாரம் தாக்கி குரங்கு ஒன்று மயங்கிய நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காயமடைந்த குரங்கை மீட்டு ஜீவகாருண்ய விலங்குகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர் அந்த குரங்குக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதனால் உயிர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட பெண்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் கூலித் தொழிலாளியான முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான மிக்கேல் அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக மிக்கேல் அம்மாள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மிக்கேல் அம்மாள் வீட்டில் இருந்த அனைத்து மாத்திரைகளையும் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மிக்கேல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர்…. தி.மு.க பிரமுகர் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

துப்பாக்கியை காட்டி மிரட்டி தி.மு.க பிரமுகரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நெய்யூர் பகுதியில் ஜெபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குருந்தன்கோடு ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெபராஜிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வாலிபர் ஒருவர் 1,500 ரூபாயை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து ஜெபராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வந்த டாக்டர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த டாக்டர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆற்றூர் பறம்புவிளை பகுதியில் எட்வின் ஜேக்கப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 1 வயதுடைய குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் எட்வின் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கடையில் உணவு பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை காப்பாற்றிய தந்தை…. பேராசிரியருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மகனை காப்பாற்ற முயன்ற போது தண்ணீரில் மூழ்கி தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மாணிக்க விநாயகர் கோவில் தெருவில் பிரபுதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ஜோஸ்வா பிரின்ஸ், டேனியல் பிரின்ஸ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரபுதாஸ் தனது குடும்பத்தினருடன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிற்கு சென்ற கொத்தனார்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற சில நாட்களிலேயே கொத்தனார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குற்றக்கரை பகுதியில் கொத்தனாரான சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுரக்சன், சாய்சரண் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகன்களை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு சுபாஷ் கடந்த 16-ஆம் தேதி மஸ்கட் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாலையை கடக்க முயன்ற போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உன்னை 2-வது மனைவியாக கவனிக்கிறேன்” இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய தொழிலதிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய தொழிலதிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளாங்கோடு பகுதியில் தொழிலதிபரான அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இவரது ஏ. சி மெஷின் சர்வீஸ் நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் திருமணம் நடத்துவதற்காக பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த அனில்குமார் இளம்பெண்ணிடம் நீ இருந்தால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற தம்பதியினர்…. திடீரென நடந்த சம்பவம்…. கன்னியாகுமரியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கணபதிபுரம் பகுதியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் சொந்த ஊருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் விசுவாசபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த வேன் அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடக்கவிருந்த திருமணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

மாணவிக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும், 31 வயதுடைய வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவெடுத்தனர். அதன்படி இன்று நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் மாணவிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாக்குமரி சுற்றுலா தலங்களுக்கு செல்ல 3 நாட்கள் தடை…. மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். எனவே இங்கு இருக்கும் , கடற்கரை, நீர்வீழ்ச்சி, பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி முதல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் இருந்த பணம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஸ்கூட்டரில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் நிதிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் இருந்து 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்து தனது ஸ்கூட்டர் இருக்கையின் கீழ் பகுதியில் இருக்கும் பாக்ஸில் வைத்துள்ளார். அதன்பிறகு நிதிஷ் தான் நடத்தி வரும் பேன்சி கடைக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் 2 லட்ச ரூபாயை வைத்து விட்டு மீதி பணத்தை நிதிஷ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நகைகளை கழற்றி தா” பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் சஜின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருங்கல் பகுதியில் வசிக்கும் அபிஷா என்ற பெண்ணும், சஜினும் கடந்த 1 1/2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அபிஷாவிடமிருந்து செல்போனை வாங்கிக் கொண்டனர். இதனால் தனது பெற்றோர் வெளியே சென்ற சமயத்தில் அபிஷா அக்கம் பக்கம் இருந்தவர்களின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ள நோட்டுகள் புழக்கமா….? தந்தை-மகன் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

மீன் வாங்கி விட்டு தந்தை, மகன் இருவரும் கள்ள நோட்டை வியாபாரியிடம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக செல்வர். இந்நிலையில் ரீத்தாபுரம் பகுதியில் வசிக்கும் தந்தையும், மகனும் மீன் வாங்கிவிட்டு வியாபாரியிடம் பணத்தை கொடுத்துள்ளனர். அதில் ஒரு 500 ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் வியாபாரி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கள்ள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தங்கச்சி என்னை யாரும் தேட வேண்டாம்” வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரியாம்பகோடு பகுதியில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு வாலிபருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனை ஸ்டாலினின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஸ்டாலின் தனது தங்கையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு “இனி யாரும் என்னை தேட வேண்டாம்” என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தங்கை மீண்டும் ஸ்டாலினை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அசால்ட்டா இருந்த பெற்றோர்…. வீட்டுக்குள் சிக்கிய 2 1/2 மாத குழந்தை…. தீயணைப்பு துறையினரின் துரித செயல்….!!!

கன்னியாகுமரியில் பெற்றோரின் கவன குறைவால் பூட்டிய வீட்டில் சிக்கிய 2 1/2 மாத குழந்தையை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பகுதியில் நிதின்-சிந்து என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 1/2 மாத கைக்குழந்தை இருக்கிறது. இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கணவனை வழியனுப்புவதற்காக சிந்து, தூங்கி கொண்டிருந்த குழந்தையை வீட்டின் நடு தளத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக வீசிய காற்றினால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தும்பவிளை பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் திங்கள் நகர் நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் புதுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அஜித் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுபாஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாலத்தீவில் மர்மமான மரணம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

வாலிபர் மாலதீவில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டவிளை பகுதியில் பிரின்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் பிரின்ஸ் மாலத்தீவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இவர் அங்கு இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரின்ஸ் கடந்த 9-ஆம் தேதி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலத்தீவில் வசிக்கும் தமிழர்களின் உதவியுடன் பிரின்ஸின் சடலத்தை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரப்பர் தோட்டத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நிதி நிறுவன உரிமையாளர் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துகோட்டை பகுதியில் ரப்பர் தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் ரப்பர் பால் வெட்டுவதற்காக தொழிலாளர்கள் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது ரப்பர் மரத்தில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்குவதைக் கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

55 லட்ச ரூபாய் மதிப்பு…. நடுக்கடலில் கவிழ்ந்த படகு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 2௦ பேர்…!!

விசைப்படகு கடலில் மூழ்கிய விபத்தில் 20 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இணையம்புத்தன்துறை கிராமத்தில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான அனிட் மரியா என்ற விசைப்படகில் சார்லஸ் உள்பட 20 பேர் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூடேஷ்வரம் துறைமுக பகுதியில் இருந்து சுமார் 30 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகின் அடிப்புறத்தில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்துள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீராடி கொண்டிருந்த பக்தர்கள்…. தொழிலாளி செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

புனித நீராடி கொண்டிருந்த பக்தர்களின் உடைமைகளை திருடிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த சுற்றுலாப்பயணிகள் அதிகாலை நேரத்தில் சூரிய உதயத்தை பார்த்து ரசிக்கின்றனர். அதன் பிறகு சுற்றுலா பயணிகள் முக்கடல்  சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் தங்களது உடைமைகளை கடற்கரையில் வைத்துவிட்டு புனித நீராடியுள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறுநீர் கழிப்பதற்காக சென்ற நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயில் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் ரயில் நிலையத்திற்கு கூலி தொழிலாளியான லாசர் என்பவரும், அவரது சகோதரரும் வந்துள்ளனர். இந்நிலையில் லாசர் சிறுநீர் கழிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவரின் நண்பருடன் ஏற்பட்ட தொடர்பு…. திடீரென ஓட்டம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

கள்ளக்காதலனுடன் ஓடிய இளம் பெண்ணை காவல்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பட்டன்விளை பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தொழிலாளி தனது மனைவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தொழிலாளி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளம்பெண்ணுக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமண நாள் அன்று….. திடீரென மாயமான மணப்பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருமண நாளன்று இளம்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடக்கவிருந்தது. இந்நிலையில் திருமணத்தை முன்னிட்டு மணப்பெண்ணின் குடும்பத்தினர் மதுரைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மணப்பெண்ணின் குடும்பத்தினர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரவு 1 மணி அளவில் குளியலறைக்கு சென்ற மணப்பெண் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஊருக்கு வந்த குடும்பம்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம் …. போலீஸ் வலைவீச்சு …!!!

பீரோவை உடைத்து திருடி சென்ற மர்மநபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வாணியங்குடி பகுதியில் மீனவரான ஆண்டனிபாபு என்பவர் வசித்துவருகிறார். இவர் கேரளாவில் விசைப்படகு வைத்து  மீன்பிடித்தொழில் செய்து வந்த நிலையில் தனது சொந்த ஊரான வணியங்குடி கிராமத்திற்கு ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். கிராமத்தில் நடந்த குருசடி திருவிழாக்கு சென்றுள்ளனர். இந்நிலையில்  வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆண்டனி பாபு  அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்  உள்ளே சென்று பார்த்த போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டீ கடையில் நடந்த சம்பவம்…வசமாக சிக்கிய வாலிபர்கள் … போலிஷ் நடவடிக்கை …!!

கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் அமைந்துள்ள சந்தைக்கு அருகே சசி, பத்மராஜ், விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து  டீக்கடையை நடத்தி வருக்கின்றனர். இந்த டீ  கடையின்   பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கல்லாவில்  இருந்த   1,500 ரூபாயை   கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர்கள் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மாணவர் எடுத்த விபரீத முடிவு….போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினித் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் பகுதியில் அறை எடுத்து தங்கி இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வினித் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினித்தின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என்னை ஏமாற்றிவிட்டார்” பெண் அளித்த புகார்….சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் மீது வழக்கு…!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பலுக்கல் காவல்நிலையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு சுந்தரலிங்கம் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது இவர் தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு காவல்நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் களியக்காவிளை பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய பெண் குழித்துறை நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இதனையடுத்து எனக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகைகள்…. டாக்டர் அளித்த புகார்…. வேலைக்காரி உள்பட இருவர் கைது…!!

டாக்டர் வீட்டில் திருடிய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் டாக்டரான ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆபிரகாம் ஆசாரிப்பள்ளம் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனது வீட்டில் உள்ள லாக்கரின் சாவியை காணவில்லை. மேலும் அதில் வைத்திருந்த 42 பவுன் தங்க நகைகள், வைரம் மற்றும் பணத்தை மர்மநபர்கள் யாரோ லாக்கர் நம்பரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பூஜை நடத்திய மந்திரவாதி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மாணவியை கர்ப்பமாக்கிய மந்திரவாதியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் தொழிலாளி தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது 2-வது மகளுக்கு உடல்நல குறைபாடு இருந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் தொழிலாளி தனது உறவினர் ஒருவரின் பேச்சை கேட்டு தனது 2 மகள்களுடன்  பேச்சிப்பாறை அருகில் இருக்கும்  மணலோடை பகுதியில் வசிக்கும் மந்திரவாதி சேகர் என்பவரை சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புல் அறுப்பதற்காக சென்ற தொழிலாளி…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதூரில் கட்டிட தொழிலாளியான ஆண்டனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தான் வளர்க்கும் முயல்களுக்கு புல் அறுப்பதற்காக ஆண்டனி வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது கால்வாய் அருகில் ஆண்டனியின் சைக்கிள் நின்றுள்ளது. அதன்பின் கால்வாய்க்குள் பார்த்தபோது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனின் திருமண ஏற்பாடுகள்…. தந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மகனுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் சாலை விபத்தில் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவறவிளை பகுதியில் லாரன்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிளாடிஸ் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கிளிண்டன்ஸ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வருகிற 13-ஆம் தேதி கிளிண்டன்சுக்கு திருமணம் நடைபெறயிருந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற அன்று லாரன்ஸ் தனது மோட்டார் […]

Categories

Tech |