Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள்…. “1,000 வாழை மரங்கள் நாசம்”….!!!!!

விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து 1,000 வாழை மரங்கள். தென்னை மரங்கள் உள்ளிட்டவற்றை நாசமாக்கியுள்ளது. பூதப்பாண்டி அருகே இருக்கும் உடையார்கோணம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கின்ற நிலையில் இங்கு வன விலங்குகள் புகுந்து அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குட்டிகளுடன் வந்த யானை கூட்டம் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து ஆயிரம் வாழைகளை பிடுங்கி எரிந்து நாசமாக்கியது. மேலும் அருகில் இருக்கும் தென்னந்தோப்புக்குள் புகுந்து 18 தென்னை மரங்களை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆற்றில் குளிக்கச் சென்ற கூரியர் நிறுவன ஊழியர்”…. பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழப்பு….!!!!!

ஆற்றில் குளிக்கச் சென்ற கூரியர் நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ள நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக குடும்பத்துடன் மணவாளக்குறிச்சி அருகே இருக்கும் சூரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடியபட்டணம் அருகே உள்ள மெல்லிய ஆறு கடலுடன் கலக்கும் கழிமுகப்பகுதியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாம்பு கடித்து இறந்து போன குழந்தை”…. புகார் கொடுத்த தாய்…. தந்தை அதிரடி கைது…!!!!!

பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரத்தில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே இருக்கும் காட்டாத்துத்துறையை சேர்ந்தவர் சுரேந்திரன். கூலி தொழிலாளியான இவருக்கு ஷிஜிமோள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் நாலரை வயதில் சுஷ்விகா மோள் என்ற மகளும் இருந்தனர். சுரேந்திரன் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து குழந்தைகளையும் மனைவியையும் துன்புறுத்தி வந்த நிலையில் சென்ற 13-ஆம் தேதியும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகாத வார்த்தைகளால் திட்டி முடியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிறைவு பெற்ற மீன்பிடி தடை காலம்…. “உற்சாகத்துடன் கடலுக்கு சென்ற மீனவர்கள்”….!!!!!

மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்ற நிலையில் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்று ஏராளமான மீன்களை பிடித்து வந்தனர். ஆழ்கடலில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தக் காலம் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினத்தோடு மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் நேற்று அதிகாலையில் இருந்தே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று விட்டனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீனவர்கள் கடலுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கல்லறை கட்டி வைத்து உயிரிழந்த மூதாட்டி”…. மனதை உருக்க வைக்கும் சம்பவம்….!!!!

ஒரு வாரமாக வீட்டிலேயே இறந்து கிடந்த மூதாட்டியின் அழகிய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் பல்லுளிப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டியை திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலை செய்துவந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்திலும் சேர்ந்து வேலை செய்து இருக்கின்றார். இவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வந்ததால் ஊராட்சி மன்ற தலைவர் இவருக்கு பொன்னாடை வழங்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிப் பெண் மீது கொடூர தாக்குதல்…. இணையத்தில் வைரல் வீடியோ….. குமரியில் பரபரப்பு….!!!

கர்ப்பிணி பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு அருகே கேரளபுரம் பகுதியில் கில்பர்ட் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் ஏஞ்சல் சகாரின் என்பவருக்கும், கில்பர்ட் ராஜனுக்கும் வழிப்பாதை சம்மந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய வீட்டின் முன்பாக கில்பர்ட் ராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது ஏஞ்சல் சகாரின் மற்றும் அவருடைய சகோதரர் பிராங்க்ளின் இருவரும் கில்பர்ட் ராஜனை கொடூரமான முறையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் கடத்தி வந்த வாலிபர்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்திய  5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே நேற்று காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுற்றி திரிந்த வாலிபரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பதும்,டெம்போவில் சட்டவிரோதமாக குட்கா கடத்தி வந்ததும்  தெரியவந்தது. இந்நிலையில் ஆறுமுகம் ஓட்டி வந்த டெம்போவை வழிமறித்த சிலர் ஆறுமுகத்தை   கடத்தி விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இவ்வளவு பேர் பார்த்துள்ளனர்…. குவியும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்….!!!!

லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி  வெளி நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களில் மட்டும் 4 லட்சத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் சம்பளம் வழங்கவில்லை…. ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு உள்ளிட்ட பல்வேறு   பகுதிகளில் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம்  ஊழியர்கள் நியமிக்கப்பட்டு  மாதந்தோறும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 2 ஒப்பந்த ஊழியர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டெம்போ…. ஏ.டி.எம். காவலாளிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாளக்குடி பகுதியில் ஏ. டி.எம் கவலாளியான சிவதாணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று வீரநாயக்கன்மங்கலம்-இறச்சகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சிவதாணுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவதாணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்….. தீவிர பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!!!

பல்வேறு சுற்றுலா இடங்களை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று  காலை  ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில்  காத்திருந்து சூரியன் உதயமாகும் காட்சியை கண்டனர். இதனையடுத்து பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காமராஜர் மணிமண்டபம், காந்தி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட துப்பாக்கி சுடும் சத்தம்…. முன்னாள் ராணுவ வீரரின் விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் சங்கர் நகர் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெயபிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குமாரி சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு பிரீத்தி என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மேலும் ஜெயபிரசாத் ஓய்வு பெறுவதற்கு முன்பே முறைப்படியாக புதுப்பித்த பாடி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்கள் குத்தாட்டம்…. இணையத்தில் வைரல் வீடியோ…. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்….!!!

மாணவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்காட் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன் நடனமாடி அதைக் கொண்டாடியுள்ளனர். இந்த பள்ளியானது கட்டுப்பாட்டுக்கு பெயர் போனது ஆகும். இதன் காரணமாகவே ஏராளமான பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்கின்றனர். இந்நிலையில் தேர்வு முடிவடைந்தவுடன் மாணவர்கள் நுழைவு வாயிலின் கேட் மீது ஏறி நின்று நடனம் ஆடியுள்ளனர். இவர்கள் அரசு பள்ளி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சென்னையிலிருந்து கடத்தி வந்த 13 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்…. பெண் உட்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!!!

சென்னையிலிருந்து கடத்தி வந்த 13 1/2 கிலோ கஞ்சாவை மார்த்தாண்டம் காவல்துறையினர் பறிமுதல் செய்து, பெண் உட்பட 2 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்படி காவல்துறையினர் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதன்படி மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கல்லூரி மாணவர் பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவிளை அம்மன் கோவில் தெருவில் எட்வர்ட் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு நிவேத்(19) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிவேத் தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் வடசேரி காசிவிஸ்வநாதர் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்ப செலவிற்காக வாங்கிய பணம்…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெயிண்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்ணாரங்கோடு காலனியில் பெயிண்டரான ராஜேஷ்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் குடும்ப செலவிற்காக பலரிடம் இருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகக்கோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் நாக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் செல்வன், பிரவீன், வெண்டலிகோட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் சிலை….”ரூ 1 கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணி”….. இன்று முதல்….!!!!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ரூ 1 கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் கடலின் நடுவே இருக்கின்ற பாறையில் விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இதை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றார்கள். இந்த திருவள்ளுவர் சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

133 அடி உயர திருவள்ளுவர் சிலை…. சுற்றுலா பயணிகளுக்கு 5 மாதங்கள் தடை…. வெளியான அறிவிப்பு….!!!

திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தளமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கு காலையில் உதிக்கும் சூரிய உதயத்தை பார்ப்பதற்காகவே கடற்கரையில் ஏராளமான மக்கள் குவிகின்றனர். இங்கு கடலின் நடுவே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு மூலமாக சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இந்நிலையில் 133 அடி உயரத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை உப்பு காற்றால் பாதிக்கப்படாமல் இருக்க […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த வீடு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாதபுரம் பகுதியில் மணிகண்டன்-மலர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சரவண பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சில நாட்களுக்கு முன்பு  குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று இவரது  வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

18 நாட்கள் கழித்து…. அண்ணனின் உடலை தோண்டி எடுத்த தம்பி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

அடக்கம் செய்யப்பட்ட சடலம் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராத்தூர் பகுதியில் ஜெஸ்டல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி ஜெஸ்டலுக்கு விபத்து நடந்துள்ளது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ஜெஸ்டல் உயிரிழந்தார். இந்நிலையில் ஜெஸ்டலின்‌ உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவருடைய தாய், தந்தையரை அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு அருகில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்க முடிவு”…. பயணிகள் சங்கம் எதிர்ப்பு…!!!!

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் டவுன் ரயில் நிலையம் வழியாக செல்ல பயணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் என்ஜின் மாற்றம் செய்யப்பட்ட பிறகு புறப்பட்டு செல்வதால் சுமார் 40 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்கள் வரை தாமதமாகி வந்தது. இதனால் நேரம் வீணாவதைத் தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடற்பகுதி கரையில் காயத்துடன் தவித்த வெளிநாட்டவர்”…. கடற்படையினர் முதலுதவி செய்து விசாரணை…!!!!!

இரையுமன்துறை கடற்பகுதி கரையில் காயத்துடன் தவித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவருக்கு கடற்படையினர் சிகிச்சையளித்து விசாரணை செய்தார்கள். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் இரையுமன்துறை கடற்கரை கரையில் இரண்டு  நாட்டிக்கல் கடல்மைல் தூரத்தில் வெளிநாட்டு மர்ம படகு ஒன்று நேற்று மாலையில் நங்கூரமிட்டு நின்று கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சிறிய படகு மூலம் அங்கு சென்று விசாரணை செய்தார்கள். விசாரணையில் நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த ஜெயின் என்பதும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“புதைக்கப்பட்ட உடலை 18 நாட்களுக்குப் பின் தோண்டி எடுத்த உறவினர்கள்”….. போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை…!!!!!

புதைக்கப்பட்ட உடலை 18 நாட்களுக்கு பின் தோண்டி எடுத்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டஸ் என்பவர் சென்ற மாதம் 16ஆம் தேதி விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இவரின் உடலை உறவினர்கள் தாய், தந்தையை அடக்கம் செய்த கல்லறை தோட்டம் அருகே அடக்கம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இவரின் சகோதரர் கிறிஸ்டோபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் குடும்பத்தினர்கள் அவரின் எதிர்ப்பை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு…. வங்கி ஊழியர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை….சோக சம்பவம்….!!!!

மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு வங்கி ஊழியர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் புலியூர்குறிச்சி ஒற்றை தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(51). இவர் மார்த்தாண்டம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி 45 வயதுடைய ரோகிணி பிரியா. இவர் நாகர்கோயில் இருக்கின்ற ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரே மகள் 13 வயதுடைய அர்ச்சனா. இவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீண்டும் கைவரிசை காட்டிய இளம்பெண் கைது…. 9 1/2 பவுன் நகை மீட்பு…. போலீஸ் விசாரணை…!!!

திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளி வந்து மீண்டும் கைவரிசையை காட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 9 1/2 பவுன் நகையை மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தெருவில் வசித்து வருபவர் கட்டிட தொழிலாளி சகாய செல்வராஜன்(40). இவருடைய மனைவி டெல்வின். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று டெல்வின் பீரோவில் இருக்கின்ற 9 1/2 பவுன் நகையை பார்த்துள்ளார். ஆனால் அங்கு நகை இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பூதப்பாண்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்…. “திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்”…!!!!

பூதப்பாண்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் பொதுமக்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமாக பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 22 வருடங்கள் ஆகின்றதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேலைகள் நடந்து வருகின்றது. கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு சாமி சிலைகளை வெளியே கொண்டுவந்து பல வகையான மூலிகை மூலம் மருந்து சாத்தும் பாலாலயம் என்ற சிறப்பு பூஜை நடைபெறும். இதனால் கோவிலின் ஸ்ரீகரியம் பொதுமக்கள் மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குறைந்த கடல் நீர் மட்டம்” குவிந்து வந்த சுற்றுலா பயணிகள்…. பாதிக்கப்பட்ட படகு போக்குவரத்து….!!!!

நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் படகுகளில் ஏறி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை  பார்வையிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களான விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண்பதற்கு உள்நாடு மட்டும் இன்றி  வெளிநாட்டில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் நீர் மட்டம் தாழ்வு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்றும் காலையில் கடல் உள்வாங்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாசன கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறப்பு” குளிப்பதற்கு குவியும் சுற்றுலா பயணிகள்….!!!!

வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாயத்திற்காக பாசன கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு மறுகால் மதகுகள் மூடப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளபெருக்கு தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் திற்பரப்பு  அணையில் குளிப்பதற்கு சில நாட்களுக்கு பிறகு அனுமதித்துள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!!!

லாரி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் புறவழி சாலையில் நாகர்கோவிலில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் லாரி  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 15 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில்  லாரியில்  இருந்த 4 பேரில்  ஓட்டுநர், மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் 2  பேர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி வெளியேவர […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்” திடிரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பேருந்து மீது மோதிய  விபத்தில் 2 பேர் படுகாயமடைந்து சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெய்யூர் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்து  நண்பரான சேது  என்பவருடன் சேர்ந்து  உடையார்விளை சாலையில் மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சக்திவேலின்  கட்டுப்பாட்டை இழந்து  மோட்டார் சைக்கிள் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பொதுமக்களை பயமுறுத்திய முதலை… “18 நாட்களுக்குப் பிறகு வலையில் சிக்கியது”… வனத்துறையினர் நடவடிக்கை…!!!

பொதுமக்களை பயமுறுத்திய முதலை 18 தினங்களுக்கு பிறகு வலையில் சிக்கியது. மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகில் வரதம்பட்டு கிராமத்தில் ஓமக்குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு கடந்த 12ஆம் தேதி ஒரு முதலை பாலாற்றின் வழியாக வந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் வருவாய்த்துறை, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் ஆகியோர் குளத்திற்கு சென்று மூன்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தனியாக கடையில் இருந்த பெண்” கைவரிசையை காட்டிய 4 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கடைக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை சாலை பகுதியில் மணிவண்ணன்-சுதந்திரவள்ளி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் சொந்தமாக பர்னிச்சர் கடை ஒன்றை  வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுதந்திரவள்ளி கடைகள் இருந்தார். அப்போது சுரேஷ், ரெஜி, ராமசாமி, பரமசிவம் ஆகிய 4 பேர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு கம்பியை கொண்டு சுதந்திரவள்ளியை சரமாரியாக தாக்கி விட்டு கடையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையம் முன்…கோர விபத்து…. பஸ்சின் அடியில் சிக்கிய பைக்…!!!

தக்கலை பேருந்து நிலையம் முன் நடந்த விபத்தில் பஸ்சின் அடியில் பைக் சிக்கியது. கன்னியாகுமரி மாவட்டம் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு நேற்று காலை ஒரு அரசு பேருந்து கிளம்பியது. அந்த பேருந்து காலை 7.30 மணி அளவில் தக்கலை பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி விட்டு வெளியே சென்றபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று நாகர்கோவிலிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பைக் தூக்கி வீசப்பட்டு எதிரே வந்து கொண்டிருந்த இன்னொரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில்… 3 பேர் படுகாயம்… 3 வாகனங்கள் சேதம்… போலீஸ் விசாரணை…!!!!

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், இரண்டு கார் மற்றும் பைக் சேதமடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் முளகுமூட்டையில் வசித்து வருபவர் 39 வயதுடைய வினோ ரெஞ்சின். இவர் கடந்த 26ம் தேதி மதியம் தனது நண்பர்களுடன் தூத்துக்குடிக்கு காரில் புறப்பட்டு சென்றார். காரை வினோ ரெஞ்சின் ஓட்டிச் சென்றார். அப்போது நாகர்கோவில் பாலத்தை கடந்து வெட்டூர்ணிமடம் வரும்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொத்தனார் சாவில் மர்மம்…. “ஒரு மாதமாகியும் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரவில்லை”… ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற குமரி கொத்தனார் மரணத்தில் மர்மம் இருப்பதாக மனைவி மனு கொடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகில் வெண்டலிகோடு பம்பச்சைக்கரைக் காட்டில் வசித்து வந்தவர் கொத்தனார் தேவதாஸ்(52). இவருடைய மனைவி தங்கலீலா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள். தேவதாஸ் சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் தனது அறையில் தற்கொலை செய்துள்ளதாக மனைவி தங்கலீலாவுக்கு தகவல் வந்துள்ளது. இதை கேட்டதும் தங்கலீலாவும், அவருடைய குடும்பத்தினரும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலியை வழிமறித்து தகராறு…. தட்டிகேட்ட தந்தைக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தையை 3 வாலிபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் ஈச்சவிளை பகுதியில் வைகுண்ட மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜின்(20) என்ற மகன் உள்ளார். இவர் தொலையாவட்டம் பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அஜின் மாங்கரை செங்கிட்டான்விளை பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகரின் மகளை காதலித்தது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. நேற்று அஜின் தனது நண்பர்களான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தகராறு செய்த மாமனார்…. காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரங்குடி புதுதெருவில் பாக்யராஜ்(35) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ் விஷ்ணு தேவி(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மேனகா ஆஷா(1) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது பாக்கியராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணு தேவியின் மாமனார் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது வசமாக சிக்கிய 5 பேர் கைது…. 300 கிராம் கஞ்சா பறிமுதல்… போலீஸ் விசாரணை….!!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக புகார்கள் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் சென்ற போது சந்தேகப்படும்படி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் களியக்காவிளை ஆர்.சி தெருவில் வசித்து வரும் 38 வயதுடைய அலெக்ஸ் மாணவர்களுக்கு கஞ்சா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்வாரியத்தில் வேலை வேணுமா?…. 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மோசடி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பண மோசடி செய்த 2  பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முகிலன்விளை  பகுதியில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரான நாராயண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜே.கே. நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயக்குமாரின்  மனைவியான சுனிதா  நாராயண பெருமாளின் மருமகனுக்கு மின்வாரியத்தில் இளநிலை பொறியாளர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய நாராயண பெருமாள் சுனிதாவின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலை பணியில் முறைகேடு நடந்துள்ளதா?… அதிகாரிகள் ஆய்வு….!!!

ஆற்றூர் பேரூராட்சியில் நடைபெற்ற சாலை பணியில் முறைகேடு நடந்துள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் பேரூராட்சியில் சில வருடங்களுக்கு முன் நடந்த காவின் குளம் கான்கிரீட் சாலை பணி உட்பட சுமார் ரூ 66 லட்சத்தில் நடைபெற்ற பணிகள் தரமற்றவை என்று அரசுக்கு புகார் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சாலை பணிகள் முறைப்படி நடந்துள்ளதா? அல்லது முறைகேடு நடந்து உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம்  திருநெல்வேலி கோட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஜமாபந்தி நிகழ்ச்சியில்… 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிய கலெக்டர் ….!!!!

கலெக்டர் அரவிந்த் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு கொடுத்தார். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் இருக்கின்ற கல்குளம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 4 தினங்களாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் கல்குளம் தாசில்தார் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் மரிய ஸ்டெல்லா, தலைமையிடத்து துணை தாசில்தார் முருகன், மண்டல துணை தாசில்தார் மாரியப்பன், தலைமை நிலஅளவர் கிரிதர் உட்பட பலர் பங்கேற்றனர். இதனையடுத்து கலெக்டர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரூ 68 கோடி செலவில் கன்னியாகுமரி ரயில் நிலையம் மேம்பாட்டு பணி”… காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி…!!!

கன்னியாகுமரி ரயில்நிலையம் ரூ 68 கோடி செலவில் அதிநவீன முறையில் உலக தரத்துடன் மேம்படுத்தப்பட உள்ளது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்து ரயில் போக்குவரத்து. மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு அதிகமாக ரயில் போக்குவரத்தை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் ரயிலில் பயணம் செய்கின்ற பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் ரயில் நிலையங்களை உலகத் தரத்துடன் நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ரயில் நிலையங்களை பழமை மாறாமல் புதுப்பித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கின் நடமாட்டம்…. 30-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

மர்ம விலங்கு கடித்து 30-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெலகிருஷ்ணன்புதூரில் பாலமுருகன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாலைபுதூரில் 2 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் 12 அடி உயரத்தில் நான்கு புறமும் சுற்று சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் கழுத்தில் காயத்துடன் 30-க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து பண்ணை ஊழியர்கள் அதிர்ச்சி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. உறவினர் செய்த செயல்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியின் தாயாருக்கு கடந்த மார்ச் மாதம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவியின் தாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது உறவினரான ரியாஸ்(26) என்பவர் அங்கு சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து ரியாஸ் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்வயர் மீது விழுந்த மரக்கிளைகள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் கூலித் தொழிலாளியான ஜோஸ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செந்தில்குமாரி(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபிகா(15) வர்ஷிகா(1) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ஜோஸின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் அவரது வீட்டிற்கு முன் நின்ற மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார். அந்த மரக்கிளைகள் ஜோஸ் வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயர் மீது விழுந்து மின் விநியோகம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த மாணவி… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

10-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரித்து கோணம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீபா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீபா கணக்கு தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு தூங்க சென்ற சிறுமியை மறுநாள் காலை அவரது பாட்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வலையை வீசிய சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கடலில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் சகாய பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஹித் டோனி(15) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ரோஹித் டோனி 18 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்த படகை பியஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் 18 நாட்டிக்கல் மைல் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது ரோஹித் டோனி கடலில் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளார். அப்போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டெம்போ வேன்…. துடிதுடித்து இறந்த மாணவர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குஞ்சாலுவிளை பகுதியில் கூலித் தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விச்சு(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விச்சு பனிச்சவிளை பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த டெம்போ வேன் விச்சுவின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 நாட்களாக பாறையில் சிக்கியிருந்த மயில்…. வியாபாரிகள் அளித்த தகவல்…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்….!!

கடலில் இருக்கும் பாறையில் சிக்கி 3 நாட்களாக சிரமப்பட்ட மயிலை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் மரணப்பாறை ஒன்று அமைந்துள்ளது. இந்த பாறையில் கடந்த 3 நாட்களாக ஆண் மயில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் கடற்கரை வியாபாரிகள் உடனடியாக பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று கடலின் உட்பகுதியில் இருக்கும் பாறையில் […]

Categories

Tech |