குடிநீர் வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அருகாமையில் இருக்கும் விவசாய நிலங்களுக்குச் சென்று குடிநீர் பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இதனால் கோபமடைந்த […]
