Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த பெண்…. கணவரின் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயி மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தியூர் கேர்மாளம் கிராமத்தில் விவசாயியான தனராஜ்(40)என்பவர் வசித்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனராஜ் அதே பகுதியில் வசிக்கும் பொன்னுச்சாமியின் மகள் துளசிமணி(31) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 15-ஆம் தேதி துளசிமணி வீட்டில் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் பொன்னுசாமியிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 ரூபாய் சில்லறையால் வந்த தகராறு…. பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து மேட்டூர் நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கவியரசன் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் பூதப்பாடி பேருந்து நிலையத்தில் வைத்து ஒரு வாலிபர் பேருந்தில் ஏறியுள்ளார். அந்த வாலிபர் 10 ரூபாய் கொடுத்து அம்மாபேட்டைக்கு டிக்கெட் வாங்கியுள்ளார். டிக்கெட் தொகை 7 ரூபாய் என்பதால் 2 ரூபாயை கண்டக்டர் அந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு, 1 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுற்றுலா வேன் மீது மோதிய பேருந்து…. படுகாயமடைந்த 4 பேர்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

சுற்றுலா வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் வேனில் கோயம்புத்தூருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு அவர்கள் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குதிரைகல்மேடு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பவானி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குருமாவில் கிடந்த பல்லி…. பரோட்டா சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி,மயக்கம்…. அதிகாரிகளின் திடீர் சோதனை…!!

பல்லி விழுந்த பரோட்டாவை சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அறச்சலூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான செந்தில்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அரசின் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிப்பதற்காக தனது மனைவி அமுதா, உறவினர்களான சண்முகம், சந்திரன், சுரேஷ் ஆகியோருடன் வாடகைக்கு கார் எடுத்து அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அனைவரும் காந்திஜி ரோட்டில் இருக்கும் தனியார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை….!!

வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என வாகன ஓட்டிகளை வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவ்வழியாக சொல்லும் வாகன ஓட்டிகள் யானை, மான் போன்ற விலங்குகளை புகைப்படம் எடுக்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் சத்தமிடுவதால் கோபத்தில் யானைகள் அவர்களைத் தாக்க முற்படுவதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் மலை உச்சியில் நின்று வாலிபர்கள் செல்பி எடுப்பதுடன், நீரோடைகளில் இருக்கும் பாறை மீது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. பரோட்டா கிரேவியில் பல்லி….. உணவகத்தை மூட உத்தரவு….. பெரும் பரபரப்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் பரோட்டாவிற்கு ஊற்றிய கிரேவியில் பல்லி இருந்ததால் அதனை சாப்பிட்டவர் வாந்தி எடுத்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தனியார் ஹோட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்ட போது அந்தக் குழம்பில் பல்லி இருந்துள்ளது. அதனால் சந்திரன் என்பவர் வாந்தி எடுத்துள்ளார். உடனே அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து பல்லி விழுந்த புரோட்டா குழம்பு பரிமாறிய உணவகத்தின் உள்கட்டமைப்பு சேதமடைந்த காரணமாக அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

FLASH NEWS: பரோட்டா குருமாவில் பல்லி…. 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி….. அதிர்ச்சி….!!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா குருமாவில் பல்லி கிடந்துள்ளது. இந்த பரோட்டாவை சாப்பிட்ட நான்கு பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மயக்கமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதற்கு ஓட்டல் உரிமையாளர் மழுப்பலாக பதில் கூறியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் குருமாவில் பல்லி கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் சாப்பாட்டில் இதுபோன்று கரப்பான்பூச்சி, பல்லி, தவளை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியின் கரு முட்டை விற்பனை வழக்கு…. கைது செய்யப்பட்ட பெண் தரகர்…. வங்கிக்கணக்குகள் அதிரடி ஆய்வு….!!!!!!!

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த வழக்கில் சிறுமியின் தாயார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் நான்கு தனியார் மருத்துவமனைகளில் சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுக்கப் பட்டுள்ளது தெரிய வந்ததும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வேட்டையாட நாட்டு வெடிகுண்டு”… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. 2 பேர் கைது…!!!!!!!!

விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்துகின்றனர் என்று புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் குரும்பபாளையம் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் விதமாக கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை மேற்கொண்டனர். அதில் 20 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி விபத்தில் 2பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நரிக்காட்டுவலசு  பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், சுகுனி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கோமதி தனது மகளுடன் வேலம்பாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் நிலைதடுமாறி கோமதியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  கோமதி, சுகுனி ஆகிய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 லட்சத்து 40 ஆயிரம் இடம் காலியாக உள்ளது…. ஆட்சியரிடம் மனு அளித்த தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள்….!!!!

பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் நமது தமிழ்நாட்டில் மொத்தம் 490 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது. ஆனால் இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான இடம் காலியாக உள்ளது. இதற்கு காரணம் பாலிடெக்னிக் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதனை யாரும் நம்ப வேண்டாம்…. வைரலாகும் வீடியோ…. வனத்துறையினரின் கோரிக்கை….!!!!

ஊருக்குள் புலி சுற்றி திரிவது போல் வைரலாகி வரும் வீடியோவை யாரும் நம்ப வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள  சேஷன் நகரில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக அருகில் இருக்கும் வன பகுதியில் இருந்து  புலி ஒன்று புகுந்து  மக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, நாய்கள் போன்றவற்றை வேட்டையாடி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஊருக்குள் புகுந்து வேட்டையாடும் புலியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற குடும்பம்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கார் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூதிமடைபுதூர் பகுதியில் அண்ணன்மார்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்காக மகேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் குருமந்தூர்-கொளப்பலூர் சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகராஜ், மாதம்மாள், பத்திரமா, பல்லவி, திவ்யா உள்ளிட்ட 7 பேரையும் அருகில் இருந்தவர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணமான 3 மாதத்தில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் குட்டிமணியகாரனூரில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான சங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சங்கர் திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக பிரியதர்ஷினி திருச்சிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் பிரியதர்ஷினி கணவர் வீட்டிற்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள்”…. பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!!!

நம்பியூர் அருகே நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் அருகே இருக்கும் கரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓணான்கரடு கிராமத்தில் பல வருடங்களாக ஒருவரின் நிலத்தை அங்குள்ளவர்கள் பாதையாக பயன்படுத்தி வந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் அந்த நிலத்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்து இருக்கின்றா.ர் நிலத்தை வாங்கியவர் சுற்றிலும் வேலி அமைத்ததால் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அண்ணனை ஓட ஓட அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தம்பி”…. கைது செய்த போலீஸார்…!!!!!

தம்பியே அண்ணனை ஓட ஓட அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி வேலை செய்து வருகின்றார். இவரின் தம்பியும் திருமணம் ஆனவர். இவர் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியண்ணன் வீதியில் லேபில் பணியாற்றி வருகின்றார். குடிப்பழக்கம் உள்ள அருண்பாண்டியன் அடிக்கடி மது அருந்திவிட்டு அஜித் குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மதுபோதையில் இருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக கார்த்திக் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் கார்த்திக் மது போதையில் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவதாபுரம் பகுதியிலிருக்கும் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்ற தலைமையாசிரியர்…. ஸ்கூட்டருக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

மர்ம நபர்கள் தலைமை ஆசிரியரின் வீட்டிற்கு முன்பு நின்ற ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியில் ஜெயப்பிரகாஷ்(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷீஜா(52) என்ற மனைவி உள்ளார். இவர் வெட்டுகாட்டுவலசுவில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28-ஆம் தேதி ஜெயபிரகாஷின் குடும்பத்தினர் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை ஜெயப்பிரகாஷின் வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சமையல் செய்ய முயன்ற பெண்…. உடல் கருகிய நிலையில் மீட்ட சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை ஆர்.என்.புதூர் குடிசை மாற்று வாரிய பகுதியில் கட்டிட தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் சமையல் செய்வதற்காக சரண்யா வீட்டில் இருந்த ஸ்டவ்வை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சரண்யாவின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதனால் வலியில் சரண்யா அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாட்டை அடித்து கொன்ற விலங்கு…. வனத்துறையினரின் ஆய்வு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

புலி மாட்டை அடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் விவசாயியான நாகமணி(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மதியம் 12.30 மணி அளவில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் திடீரென சத்தம் போட்டது. அந்த சத்தத்தை கேட்டு நாகமணி விரைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது கழுத்து முதுகு போன்ற பகுதிகளில் கடித்துக் குதறப்பட்ட நிலையில் மாடு இறந்து கிடந்ததை பார்த்து நாகமணி அதிர்ச்சி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாசடைந்த குடிநீர்…. 2 கி.மீ தூரம் நடந்து செல்லும் மலைவாழ் மக்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

மலைவாழ் மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் கல்வாரை மற்றும் நெல்லிக்காடு ஆகிய மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 22 மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீர் வரவில்லை. இதனால் பயனற்று அந்த கிணறு அப்படியே இருக்கிறது. இந்நிலையில் மலைவாழ் மக்கள் வனப்பகுதியை ஒட்டி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தந்தை…. மகள் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் செங்காடு பகுதியில் ராமகண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவியும், கிருத்திகா(17) என்ற மகளும் உள்ளனர். இதில் கிருத்திகா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமகண்ணன் உடல்நலம் சரியில்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து தந்தையின் உடல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேற்று தொடங்கியது… தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்… உற்சாகத்துடன் கண்டு களித்த ரசிகர்கள்….!!!!!!!!!

தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் கடந்த முப்பது வருடங்களில் மலேசியா, சிங்கப்பூர், எத்தியோப்பியா, சூடான், எகிப்து, லெபனான், சிரியா, இலங்கை உட்பட 30க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சர்க்கஸ் ஈரோடு மரப்பாலம் பேபி ஆஸ்பத்திரி அருகே உள்ள மஹாஜன பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கி உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் குறிஞ்சி என் தண்டபாணி, சசிகுமார் போன்றோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து உள்ளனர். இதில் கவுன்சிலர்கள் ரமணி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அலுவலகத்திற்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு…. அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தபால் அலுவலகத்திற்கு நழைந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர் ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே தபால் அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம்போல ஊழியர்கள் தபால் அலுவலகத்தை திறந்தனர். அப்போது நாகப்பாம்பு ஒன்று அலுவலகத்திற்குள் பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாகப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எட்டு முறை கரு முட்டை விற்பனை”…. தாய் உட்பட 3 பேர் போக்சோவில் கைது… போலீஸ் விசாரணை…!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எட்டு முறை கரு முட்டை விற்ற தாய் உட்பட 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில்  வசித்த 38 வயதுடைய பெண்ணிற்கு 16 வயதில் ஒரு சிறுமி உள்ளார். அந்த சிறுமிக்கு மூன்று வயது இருக்கின்ற போது அந்தப் பெண் தனது கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின் ஈரோட்டில் வசித்த 40 வயதுடைய பெயிண்டர் ஒருவருடன் அந்தப் பெண்ணிற்கு கள்ள […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெருந்துரை அருகே மூடப்பட்ட கிணறு… “தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட 3 கற்சிலைகள்”…. மீண்டும் தோண்ட வருவாய்த்துறை தடை…!!!!

மூடப்பட்ட கிணற்றை தோண்டியபோது 3 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சந்தைப்பேட்டை பெரியகுளம் என்ற பகுதியில் விஜயபுரி அம்மன் கோவில் இருக்கின்ற நிலையில் திருவிழாவின் பொழுது இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிணற்றுக்கு சென்று தீர்த்தத்திற்காக தண்ணீர் எடுத்து வருவர். இந்த கிணறு பாழடைந்துவிட்டதால் பல வருடங்களாக தீர்த்தம் எடுக்க செல்லவில்லை. பின் அது மண்ணை போட்டு மூடப்பட்டு விட்டது. இந்த நிலையில் கோவிலில் ஒருவருக்கு சாமி வந்து கோவில் கிணற்றுக்குள் […]

Categories
ஈரோடு கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பவானிசாகர் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த திருநங்கை”…. நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு…!!!!!

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த திருநங்கை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தா காலனி ராஜா நாயுடு வீதியை சேர்ந்த திருநங்கையான சிங்கராஜா என்கின்ற நவீனா என்பவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அருகே இருக்கும் பகுத்தம்பாளையம் பகுதியில் தனது நண்பரின் வீட்டிற்கு 3 பேருடன் வந்துள்ளார். இவர்கள் நேற்று காலை 10 மணிக்கு எம்ஜிஆர் நகர் அருகே ஓடும் பவானி ஆற்றுக்கு சென்று குளித்து கொண்டிருந்த பொழுது நவீனா ஆற்றின் ஆழமான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இவர் எங்களை ஏமாற்றிவிட்டார்” காவல் நிலையத்திற்கு வந்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 மோசடி செய்த 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான முத்துக்குமார் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்  கடந்த 2000-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் நான்  2.2 சென்ட்  நிலத்தை வாங்கினேன். இதனை சிவகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து என்னுடன் நிலம் வாங்கிய 8 பேருடன் சேர்ந்து பத்திரம் பதிவு செய்தேன். இந்த நிலத்தை கோவை மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனின் சாவில் சந்தேகம்…. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்த தந்தை…. போலீஸ் விசாரணை…!!

மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பாறையூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மகன் சின்ராஜ் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 21-ம் தேதி எனது மகன் இரண்டு பேருடன் மோட்டார் சைக்கிளில் அந்தியூருக்கு சென்று வந்துள்ளார். மறுநாள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை கடத்திய குற்றத்திற்காக தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தார் கல்பாவி பகுதியில் தங்கராஜ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான அண்ணாதுரை(22) என்ற மகன் உள்ளார். இன்னிலையில் அண்ணாதுரைக்கும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அண்ணாதுரை அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கர்நாடக மாநிலத்தில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூர் நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த சரக்குவேன் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் மேடான இடத்தில் ஏறி மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் சரக்கு வாகன ஓட்டுநர் காயமின்றி உயிர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்… குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு….!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் ஒரு பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் எண்ணமங்கலம் ஓம்காளியம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் பிரேமா(28). இவர் நேற்று தனது ஒன்றரை வயது மகனுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே சென்றதும் திடீரென்று பையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலிலும், தனது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இவ்வளவு பெரிய சிலையா?…. பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் கும்பாபிஷேக விழா….!!!!

71 அடி உயரத்தில் நவகாளி அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காரப்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற நவகாளி  அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விநாயகர், நவ காளியம்மன் போன்ற சன்னதி அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கு  தமிழகத்தில் முதல் முறையாக  71 அடி உயரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நவகாளி அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கும்பாபிஷேகம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது. தமிழகத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டாக்டர் வீட்டில்… கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை…. 67 பவுன் நகை, ரூ 3 லட்சம் மீட்பு…. 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!!!

மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை அடித்த 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை சாலை டாக்டர் தங்கவேல் வீதியில் வசித்து வருபவர் விஷ்ணு தீபக்(44). இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், யோக சந்திரன் என்ற மகனும் உள்ளார்கள். விஷ்ணு தீபக் தன்னுடைய மகனுக்கு மொட்டை போடுவதற்காக குடும்பத்துடன் கடந்த 22ஆம் தேதி விருத்தாச்சலத்திற்கு சென்று உள்ளார்கள். இதனை அடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில்….பொது கலந்தாய்வு முகாம்… 320 காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் …!!!!

பொது கலந்தாய்வு மூலம் 320 காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் முகாம் போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவல்துறையினருக்கு பொது பணியிட மாறுதல் வருடம் தோறும் வழங்கப்படும். இதில் மூன்று வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு வழங்குவார். இதற்குமுன் காவல்துறையினரிடமிருந்து அவர் செல்ல விரும்பும் காவல் நிலையங்கள் குறித்த விவரம் விண்ணப்பத்துடன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் கொள்ளை அடித்தது” வசமாக சிக்கிய 3 தம்பதிகள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த குமார் தலைமையிலான காவல்துறையினர் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது 3 தம்பதிகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் மூழ்கிய லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. கிரேன் மூலம் மீட்பு…!!

கிணற்றுக்குள் மூழ்கிய லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு நாராயணன் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் லாரி வைத்து ஆள்துளை கிணறு தோண்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழனிக்கவுண்டன் பாளையத்தில் இருக்கும் ஒரு தோட்டத்தில் ஆள்துளை கிணறு தோண்டுவதற்காக பிரகாஷின் ரிக் லாரி சென்றுள்ளது. இதனையடுத்து ரிக் லாரி பின்னோக்கி நகர்ந்த போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழ கிணற்றின் பக்கவாட்டு சுவர் சரிந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. மலைப்பாதையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து மாட்டுத்தீவனம் லோடு ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை 19-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். மேலும் லாரி சாலையோரமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை தர்மராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கும்டாபுரம் அடுத்த சாலையில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய சரக்கு வேன் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் தர்மராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சரக்கு ஏற்றி வந்த லாரி” திடீரென நடந்த விபரீதம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!!

கொண்டை ஊசி வளைவில் சிக்கிய லாரியை நீண்ட நேரம் போராடி திருப்பியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் திம்பம் மலைப்பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கர்நாடகாவில் இருந்து  தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டில் இருந்து  கர்நாடகாவுக்கும், செல்கின்றது. இந்நிலையில் இந்த மலைப்பாதையில் அமைந்துள்ள 9-வது  கொண்டை ஊசி வளைவில் கர்நாடக மாநிலத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்று விட்டது. இதனையடுத்து லாரி ஓட்டுநர்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் மூழ்கிய ரிக் லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. மீட்பு பணி தீவிரம்….!!

கிணற்றுக்குள் ரிக் லாரி விழுந்து மூழ்கிய விபத்தில் ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு நாராயணன் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் லாரி மூலம் ஆழ்துளை கிணறு தோண்டும் வேலை பார்த்து வருகிறார். நேற்று ஈரோடு மாவட்டத்திலுள்ள பழனிக்கவுண்டன் பாளையத்தில் இருக்கும் மணிவேல் என்பவரது தோட்டத்தில் ஆழ்துளைக்கிணறு தோன்றுவதற்காக பிரகாஷின் ரிக் லாரி சென்றுள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் இருக்கும் மண் பாதையில் லாரி பின்னோக்கி நகர்ந்தது. அப்போது ரத்தினசாமி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வாழ்வதை விட சாவதே மேல்” தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

வயது முதிர்வு காரணமாக தம்பதியினர் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி நாயக்கன்காட்டில் பெரிய தம்பி(77) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள்(72) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு பேரும் மன உளைச்சலில் இருந்தனர். இதனால் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்த தம்பதியினர் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. படுகாயமடைந்த 3 பேர்…. திம்பம் மலைப்பாதையில் பரபரப்பு…!!

சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரிலிருந்து மாவு அரைக்கும் கிரைண்டரில் உபயோகப்படுத்தக்கூடிய குழவி கற்களை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேன் ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுனர் சுந்தரலிங்கம், மற்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வீட்டில் தனியாக இருந்த சிறுமி” தாயின் 2-வது கணவரின் வெறிச்செயல்…. அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு  சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் தகுதிகள் தீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு கணவனை இழந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு அந்த பெண் தனது குழந்தையை கொரோனா  பாதிப்பு  காரணமாக விடுதியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை”… வாகனங்கள் பழுதாவதாக புகார்…. வைரலாகும் வீடியோ….!!!

பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் கூறியிருப்பதாவது, அந்தியூர் பகுதியில் செயல்படுகின்ற பங்குகளில் தான் நாங்கள் பெட்ரோல் போடுகின்றோம். ஆனால் பெட்ரோல் போட்ட சிறிது நேரத்தில் வாகனங்கள் நின்று விடுகின்றன. உடனே சம்பவ இடத்திற்கு மெக்கானிக்கை வரவழைத்து சரி பார்த்தால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவியை காரில் கடத்தல்…. தாலிகட்டிய வாலிபர் உட்பட 3 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!!!

கல்லூரி மாணவியை காரில் கடத்தி சென்று தாலிகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள திங்களூர் அருகில் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி. இவருக்கு 19 வயதுடைய மகள் உள்ளார். இவர் ஈரோட்டில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு வருவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது நிச்சாம்பாளையம் காலனியில் வசித்த 32 வயதுடைய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாலம் கட்டும் பணி…. தோண்டப்பட்ட குழிக்குள் பாய்ந்த பைக்…2 பேர் படுகாயம்…!!!!

பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில், தோண்டப்பட்ட குழியில் பைக்கில் வந்த 2 பேர் விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் ஈரோடு – சத்தி சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த பணிக்காக பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குருமந்தூர் மேட்டிலிருந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் குழிக்குள் விழுந்து விட்டார்கள். இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குரங்குகளுக்கு உணவு வழங்க கூடாது” சுற்றுலா பயணிகளை எச்சரித்த வனத்துறையினர்…!!

சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு பண்டங்களை வழங்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூர், கேர்மாளம், சத்தியமங்கலம் ஆகிய வனபகுதிகள் மழை பெய்து வருவதால் பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் ஆசனூர் பகுதியின் இயற்கை அழகை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குரங்குகளுக்கு சுற்றுலாப்பயணிகள் பொரித்த உணவுப்பொருட்களை வழங்குகின்றனர். இதனை சாப்பிடும் குரங்குகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றன. எனவே வனத்துறையினர் பொரித்த பண்டங்களை குரங்குகளுக்கு வழங்க கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வலியில் துடித்த இளம்பெண்…. மாத்திரை வாங்க சென்ற தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கனிராவுத்தர்குளம் காந்திநகர் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான நிவேதா(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவன விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவால் நிவேதா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று வயிற்றுவலியால் அவதிப்பட்ட நிவேதாவிற்கு மாத்திரை வாங்குவதற்காக ராமசாமி மெடிக்கலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ATM மையத்திற்குள் திருட நுழைந்த நபர்…. சட்டென்று அடித்த அலாரத்தால் தப்பிய பணம்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, மாதம்பாளையம் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று இயங்கி வருகிறது. அந்த வங்கியின் அருகில் ஏடிஎம் மையம் இருக்கிறது. இங்கு ஒரு பணம் எடுக்கும் இயந்திரம், பணம் டெபாசிட் செய்யும் இயந்திரம், வங்கி வரவு செலவு கணக்கினை பிரிண்ட் செய்யும் இயந்திரம் போன்றவை இருக்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை மர்மநபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தவாறு முகத்தை துண்டால் கட்டிகொண்டு எடிஎம் மையத்தின் முன் புறம் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு உள்ளே […]

Categories

Tech |