திண்டுக்கல் அருகே தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும், கரூர் மாவட்டம் தாந்தோனிமலை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கௌசிகா ஸ்ரீ என்ற 6 வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கார்த்திகா தனது மகளுடன் […]
