Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மாயம்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நந்தவனப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவிகள் கிடைக்காததால் பெற்றோர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவிகளின் தோழிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் கடும் பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வழக்கமாக விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் மழை பெய்யும் காரணத்தினால் பக்தர்கள் குறைந்த அளவிலேயே கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனையடுத்து சாலைகள் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். தொடர்ந்து பெய்யும் மழையினால் பொதுமக்களின் இயல்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்டோ-சரக்கு வேன் மோதல்….. காயமடைந்த 4 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து….!!

ஆட்டோவும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனாங்கோட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோவில் தனது நண்பர்களான அழகர்சாமி, சுரேஷ் ஆகியோருடன் திண்டுக்கல் சாலையில் இருக்கும் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு டீசல் போடுவதற்காக சென்றுள்ளார். பின்னர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இன்ப சுற்றுலா சென்ற நண்பர்கள்….. தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. போலீஸ் விசாரணை…!!!

கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்களான சிதானந்தம்(35), ராகேஷ்(28) ஆகிய இருவரும் காரில் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை ராகேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நண்டாங்கரை பகுதி மலைப்பாதை வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் தலைகுப்புற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மரியமங்கலம் பகுதியில் விவசாயியான பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி கட்டிட சிமெண்ட் பூச்சுகள்….. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!!

அரசு பள்ளி கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராமபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் பள்ளி கட்டிடத்தில் உட்புறம் இருக்கும் கான்கிரீட் சிமெண்ட் பூச்சுகளும், மேல்புற பக்கவாட்டு சுவரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இழப்பீடு வழங்கவில்லை…. அரசு பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்…. அதிரடி உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற மோகன் அரசு பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மோகனின் தந்தை சுப்பிரமணி, தாய் கருப்பாயி ஆகியோர் இழப்பீடு கேட்டு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“3டி பிரிண்ட் டெக்னாலஜி உதவியுடன் ரோபோட்” புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் என்.பி.ஆர் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மதுரை தியாகராஜர் கல்லூரியில் தனியார் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கழிவு நீர் குழாய், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக 3டி பிரிண்ட் டெக்னாலஜி உதவியுடன் ரோபோட்டை வடிவமைத்து மாணவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த படைப்பு இரண்டாவது இடத்தை பிடித்ததால் மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து எந்திரவியல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை ரெடியா இருக்கு” 85,000 ரூபாயை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லமான்தடி பகுதியில் இளையராஜா(33) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாடு செல்ல முயற்சி செய்த இளையராஜா திருச்சி தில்லைநகர் 6-வது கிராஸ் பகுதியில் இயங்கி வரும் கன்சல்டன்சியை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த நவாஸ்(39) என்பவர் வெளிநாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்கு 85 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி இளையராஜா நவாஸிடம் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து நவாஸ் போலியான விசாவை இளையராஜாவிடம் கொடுத்துள்ளார். அது போலியானது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தம்பி மகனுடன் சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு கொங்கு நகரில் சாமியாத்தாள்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை சாமியாத்தாள் தனது தம்பி மகனான சேகர் என்பவருடன் பூதிபுரத்தில் இருக்கும் தோட்டத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அய்யர்மடம் அருகே சென்ற போது கரூர் நோக்கி வேகமாக சென்ற லாரி மொபெட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாமியாத்தாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளபொம்மன்பட்டி பகுதியில் டிப்ளமோ படித்து முடித்த கோகுலவிஜயன்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கோகுல விஜயனும் அதே பகுதியில் வசிக்கும் ஹேமமாலினி(21) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய சரக்கு வேன்…. பிளஸ்-2 மாணவர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

மொபட் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உண்டார்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரவன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி இருந்து சின்னாளப்பட்டியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கதிரவனுக்கு பிறந்தநாள். இதனால் கதிரவன் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரசின்னம்பட்டி பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பையா(23) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் மில்லியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்பையாவும், அபிராமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு விட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காதல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்….. தொழிலாளிக்கு “தர்ம அடி” கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெறியம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான ரங்கசாமி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் குடகனாறு தடுப்பணை பகுதிக்கு சென்று தனியாக குளித்து கொண்டிருந்த 22 வயதுடைய இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ரங்கசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு பிரிந்து சென்று காயமடைந்த ரங்கசாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரத்தம் வடிந்த நிலையில் துடித்த “ஆடுகள்”…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொரசனம்பட்டி பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் கட்டியிருந்த 11 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லையாவின் குடும்பத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கும், கால்நடை துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோபால்பட்டி அரசு கால்நடை மருத்துவர் முருகானந்தம் ஆடுகளை பரிசோதனை செய்தார். அப்போது நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் படுகாயமடைந்தது தெரியவந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்ட சிறுமி…. அக்காள் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் வலைவீச்சு….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே இருக்கும் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். அப்போது கம்பளிபட்டியில் இருக்கும் உறவினர் வீட்டில் சிறுமி இருப்பதை அறிந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மலரும் “பிரம்ம கமலம் பூ”…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி சண்முகா நகரில் ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஹரிஷ் தனது வீட்டில் பல்வேறு செடிகளை நட்டு வைத்து பராமரித்து வருகிறார். அதில் ஒன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் செடி. இந்த செடியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இது இரவில் மலர்ந்து பகலில் வாடும் தன்மை உடையது. இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குரங்கு குட்டி”யை காப்பாற்ற போராடிய வியாபாரிகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோக்கர்ஸ்வாக் சுற்றுலா இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குரங்கு குட்டி பாறையின் நடுவே கிடந்தது. இதனை பார்த்த வியாபாரிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு குட்டியை அரவணைத்தனர். இதனையடுத்து மிதமான சூட்டில் தண்ணீர் கொடுத்து, முகத்தை துடைத்து சுறுசுறுப்பாக மாற்ற முயற்சி செய்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குரங்கு குட்டியை மீட்டு கொடைக்கானல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் மனு அளிக்க வந்த நபர்…. “பையில்” இருந்த பொருள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது அதில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கே.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தாய்முத்து என்பது தெரியவந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. கதம்ப வண்டுகள் கடித்து 9 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கதம்ப வண்டுகள் கடித்து 9 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருப்பம்பட்டியில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சிலர் சாமி கும்பிடுவதற்காக சென்றபோது கதம்ப வண்டுகள் பக்தர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் கந்தசாமி(59), பாலகிருஷ்ணன்(19), அழகுபிள்ளை(33) உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொத்துக் கொத்தாய் பூக்கும்…. ஆப்பிரிக்கன் துலிப் பூக்கள்…. ரசிக்கும் சுற்றுலா பயணிகள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதை கண்டு ரசிக்கலாம். இந்த நிலையில் தற்போது “ஸ்பாத்தோடியா கம்முலேட்டா” என்ற பெயர் கொண்ட பூக்கள் ஆப்பிரிக்கன் துலிப் மரங்களில் செந்நிறத்தில் பூத்து குலுங்கி வருகின்றது. இந்த பூக்கள் உக்கார்த்தே நகர், வில்பட்டி, பேத்துப்பாறை, ஆனந்தகிரி போன்ற மலைப்பாதைகளில் கொத்து கொத்தாய் பூத்து வருகின்றது. இந்த பூக்கள் சுற்றுலா பயணிகளின் மனதை மயக்கி காணும் இடமெல்லாம் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றது. வருடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இந்த களைக்கொல்லி மருந்தால் வந்த வினை”…. 15 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகி நாசம்…. வேதனையில் விவசாயிகள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிலாத்து பகுதியில் ராமசாமி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய தோட்டத்தில் ஏக்கர் கணக்கில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். பிறகு பயிர் நன்கு வளர்ந்த உடன் வடமதுரையில் இருக்கும் ஒரு உரக்கடையில் தனியார் நிறுவனத்தினுடைய கலைக்கொல்லி மருந்தை வாங்கி பயிர்களுக்கு அடித்துள்ளார். இந்த மருந்தை அடித்ததும் பயிர்கள் வளராமல் அப்படியே கருகிவிட்டது. ஆனால் வேறு களைக்கொல்லி மருந்தை வாங்கி அடித்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் ஐந்து அடி உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றது. இதே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அட!… என்ன‌‌ ஓர் அதிசியம்…. கன்று‌ ஈனாமல் 24 மணி நேரமும் பால் கறக்கும் பசுமாடு…. பக்தியோடு வணங்கும் கிராம மக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே நந்தவன பட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெருமாள் மற்றும் மயில் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகள் வளர்க்கும் ஒரு பசு மாடு கன்று இல்லாமல் 24 மணி நேரமும் பால் கறக்கிறது. இந்த மாட்டிற்கு சினை ஊசி கூட போடவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு கன்று இல்லாமல் சினை ஊசி போடாமல் ஒரு மாடு 24 மணி நேரமும் பால் கறப்பது மிகவும் அதிசயமாக […]

Categories
ஆன்மிகம் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜோதாம்பட்டியில் இருக்கும் வெற்றி விநாயகர் கோவிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனையடுத்து கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், புனித தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. நேற்று காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோபுரத்தின் மீது உள்ள விநாயகர் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புகார் வாங்க மறுப்பு….. இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்…. மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் வலசை பகுதியில் கந்தசாமி-செல்லாத்தாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குப்புசாமி என்ற மகன் உள்ளார். இவர்களிடம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பைனான்சியர்களான மணி, செல்வம் ஆகியோர் வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் குப்புசாமி புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் அலைக்கழித்துள்ளனர். மேலும் புகார் கொடுக்க சென்ற குப்புசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன ஒரு அதிசயம்….! 24 மணி நேரமும் பால் கறக்கும் பசு…. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் மக்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டியில் பெருமாள்-மயில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பெருமாள் ஒரு கன்று குட்டியை வாங்கி வளர்த்து வந்துள்ளார். அந்த கன்று வளர்ந்து தற்போது தெய்வீகத் தன்மை உடையதாக காணப்படுகிறது. அதாவது கடந்த பல மாதங்களாக கன்றும் ஈன்றாமல், சினை ஊசி போடாமலும் அந்த பசு 24 மணி நேரமும் பால் கறக்கிறது. எந்த நேரத்தில் கறந்தாலும் அந்த பசு பால் தருகிறது. இதனை அறிந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விஷம் குடித்ததாக கூறிய நபர்…. சிகிச்சை அளிக்க விடாமல் ரகளை செய்ததால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தள்ளாடியபடி நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க நபர் சென்றுள்ளார். அவர் தான் விஷம் குடித்து விட்டதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்க முயன்ற போது அந்த நபர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர் பட்டி பகுதியில் வசிக்கும் பெயிண்டரான ஜெபாஸ்டின் விமல்ராஜ்(43) என்பது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதணி விழாவுக்கு வந்த இடத்தில்…. வாலிபரை மரத்தில் கட்டி வைத்து அடித்த 3 பேர்…. வைரல் வீடியோ…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பாடி பகுதியில் நெசவு தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜேஷ் என்பவரிடம் கடன் வாங்கி வட்டி செலுத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாததால் வட்டி செலுத்த இயலவில்லை. இதனால் ராஜேஷ் ராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊரில் நடைபெற்ற காதணி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்லடத்தில் இருந்து ராமன் தனது மனைவி சுமதி, மகன் ஜோதிமணி ஆகியோருடன் வந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீசாரின் நடவடிக்கை…!!!

விபத்துக்குள்ளான டிப்பர் லாரியை போலீசார் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து கட்டிடக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி சமுத்திராபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராமு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நத்தம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கழிவு நீர் ஓடையில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ராமு உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அங்கு தங்க கூடாது”…. வெளியூரில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கு எச்சரிக்கை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு கன்னிவாடியில் இருந்து அரசு பேருந்து கடந்த 31- ஆம் தேதி வந்தது. இந்நிலையில் உரிய நடைமேடையில் பேருந்தை நிறுத்துவதற்காக ஓட்டுநர் வாகனத்தை திருப்பி உள்ளார். அப்போது கண்டக்டர் மாணவர்களை விலகி நிற்குமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 9 மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு…. கேமராவில் சிக்கிய மர்ம நபரின் உருவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

குடிபோதையில் மோட்டார் சைக்கிள்களை எரித்த நபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரியோடு மாலைகோவில் தெருவில் மின்வாரிய ஊழியரான சேகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பூண்டு வியாபாரியான கோபால் என்பவரும் வசித்து வருகிறார். இருவரும் அவரவர் வீட்டிற்கு முன்பு மொபட்டை நிறுத்தியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து விட்டு சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதே போல் கல்லூரி பேராசிரியரான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பஸ் டிரைவர்- கண்டக்டரை தாக்கிய பள்ளி மாணவர்கள்…. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு….!!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பேருந்து காலை 8.45 மணிக்கு நேற்று கன்னிவாடியில் இருந்து வந்தது அப்போது பேருந்தை உரிய இடத்தில் நிறுத்துவதற்கு ஓட்டுனர் வாகனத்தை திருப்பி திருத்தியுள்ளார். இதனை அடுத்து கண்டக்டர் பேருந்து நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவர்களை விலகி நிற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அப்போது மாணவர்கள் மற்றும் ஓட்டுநர், கண்டக்டருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்ததும் சக ஓட்டுநர், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சிறுமி பாலியல் பலாத்காரம்” தந்தை உள்பட 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி நடவடிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியின் தாய் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்து மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது, தனது தந்தை நாகல் நகர் பகுதியில் வசிக்கும் முகமதுரபிக்(59), கண்ணன்(50) ஆகியோருடன் இணைந்து பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நீச்சல் கற்றுக்கொடுத்த போது…. தந்தை, மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

தண்ணீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விபுல்குமார்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றுக்கு ராஜ்குமார் அழைத்து சென்றுள்ளார். அங்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

2 கி.மீ தூரம் துரத்தி சென்று வாலிபரை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்…. பாராட்டிய அதிகாரிகள்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் அருண்குமார் என்பவர் கோவையில் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார். நேற்று முன்தினம் அருண்குமார் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை காண்பிக்குமாறு அருண்குமார் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் நைசாக அங்கிருந்து தப்பி ஓடி மாயமானார். மற்றொரு வாலிரும் ஓட்டம் பிடித்ததால் அருண்குமார் அவரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விடாமல் துரத்தி சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா” அரோகரா கோஷம் எழுப்பி தரிசித்த பக்தர்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒய்.எம்.ஆர் பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி சுவாமி அஜமுகன், அக்னிமுகம், தாரகாசூரன், சிங்கமுகசூரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று மாலை வள்ளி- தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்தியை 2-வதாக திருமணம் செய்த தந்தை…. ஆத்திரத்தில் மகன்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கால் புதுப்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சற்குண பாண்டி(24) புவனேஷ்குமார்(19) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா இறந்துவிட்டார். இதேபோல் ஜெயாவின் தங்கை பாண்டியம்மாள் என்பவரின் கணவரும் இறந்து விட்டார். இதனால் தனிமையில் இருந்த பாண்டியம்மாளும், பாண்டியும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபமடைந்த சற்குண பாண்டியும், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

படபிடிப்பை பார்க்க சென்ற போது…. பள்ளி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஓடும் வேனில் ஏறும் போது தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் பழனி பாலாறு-பெருந்தலாறு அணை பகுதியில் தனியார் நிறுவனத்தின் குறும்பட படப்பிடிப்பு நடைபெற்றதால் ரமேஷ் தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளான். இந்நிலையில் பாலசமுத்திரம் சாலையில் நடந்து சென்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் ஏறி பட்டாசு வெடித்த வாலிபர்…. என்ன காரணம்….?? பரபரப்பு சம்பவம்….!!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்நகர் சிறுமலை செட் பகுதியில் கையில் பையுடன் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். மாலை 6.30 மணிக்கு திடீரென அந்த வாலிபர் செல்போன் அந்த பையில் இருந்து அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள், பட்டாசுகள் மற்றும் கோரிக்கை மனுவை கையில் எடுத்துக்கொண்டு அப்பகுதியில் இருந்து செல்போன் கோபுரத்தின் மீது ஏறி உச்சிக்கு சென்றார். இதனை அடுத்து கட்சி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்காக நிர்வாகத்தை ஒப்படைத்த நிதி நிறுவன அதிபர்…. 59 லட்சம் ரூபாய் கையாடல்…. போலீஸ் விசாரணை…!!!

59 லட்ச ரூபாய் பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமியார் புதூரில் செல்வ பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷுக்கு திருமணம் நடைபெற்றது. இதனால் திருமண வேலைகளை கவனிப்பதற்காக 4 மாதங்கள் ஊழியர்களிடம் நிதி நிறுவன நிர்வாகத்தை பிரகாஷ் ஒப்படைத்தார். இதனை அடுத்து செல்வ பிரகாஷ் கொடுக்கல்- வாங்கல் கணக்குகளை சரிபார்த்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலனுக்கு நடக்கவிருந்த திருமணம்…. கடைசி நேரத்தில் நிறுத்திய கர்ப்பிணியான ஆசிரியை…. பரபரப்பு சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒத்தப்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நாகபிரியா(30) தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக நாகபிரியாவும், பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் சின்னச்சாமி(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதனால் நாகப்பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் வேறொரு பெண்ணுடன் சின்னசாமிக்கு திருமங்கலம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குப்பையில் அடுத்தடுத்து வெடித்த பட்டாசுகள்…. வகுப்பில் இருக்க முடியாமல் சிரமப்பட்ட மாணவிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கச்சேரி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அதே தெருவில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் தெருவின் ஓரத்தில் பள்ளிக்கு எதிரே குப்பைகளை குவித்து வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசி மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று குவிந்து கிடந்த குப்பைக்கு யாரும் தீ வைத்ததால் குப்பைகள் தீப்பிடித்து எரிந்து பள்ளி வளாகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதற்கிடையே குப்பையில் கிடந்த பட்டாசுகளும் திடீரென […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி பகுதியில் விவசாயியான பிரபாகரன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு எதிர்பாராதவிதமாக 90 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகனை தூக்கி விளையாடிய தந்தை…. 1 1/2 வயது குழந்தை பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!!

தந்தை தூக்கி விளையாடிய போது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடும்பபட்டி பகுதியில் கொத்தனாரான காந்தவேல்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள்(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதுடைய ருத்ரா தேவி என்ற மகளும், 1 1/2 வயதுடைய கபிலன் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 25-ஆம் தேதி காந்தவேல் தனது மகனை தூக்கி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்த கபிலனை குடும்பத்தினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. 4 மாத குழந்தை-பாட்டி பலி…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!!

கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 மாத குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் எஸ்.எஸ் தேவி நகரில் பழைய இரும்பு வியாபாரியான வீரமணி(31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்த 4 மாதமேயான சாதனாதேவி, 2 வயதுடைய கிருஷ்கா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கிருஷ்காவை திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மகன்களுடன் தற்கொலை முயற்சி” தாயின் பிடியிலிருந்து மீண்ட சிறுவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தகோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு செல்வகுமார், சிவகுமார் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தீபாவளி பண்டிகை தினத்தில் இரவு நேரத்தில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது இதனால் மன உளைச்சலில் இருந்த அங்கம்மாள் தனது மகன்களை மறுநாள் காலை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து மகன்களுடன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் நின்ற வாலிபர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

விலங்கை வேட்டையாடிய வாலிபருக்கு வனத்துறையினர் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனச்சரகர் பழனி குமாரின் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஓடைக்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அழகாபுரியில் வசிக்கும் வீரன்வல்லரசு(21) என்பது தெரியவந்தது. இவர் காட்டுப்பன்றியை வேட்டையாடியுள்ளார். பின்னர் அதன் 8 கிலோ இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த போது வனத்துறையினரிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை தினத்தில்…. பட்டாசு வெடித்த 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். தீபாவளி பண்டிகை கடந்த 24-ஆம் தேதி உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெடச்சந்தூர் குஜிலியம்பாறை, ஆகிய பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வடித்த நான்கு பேரை போலீசார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யார் முதலில் போவது….? “போட்டி போட்டுக் கொண்டு சென்ற தனியார் பேருந்துகள்”…. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்து…!!!!!

போட்டி போட்டுக் கொண்டு இரண்டு தனியார் பேருந்துகள் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டதில் ஆறு பேர் படுகாயமடைந்தார்கள். கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பேருந்து சென்ற 22-ம் தேதி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செக்கண்ணன் என்பவர் ஓட்டினார். இந்த பேருந்துக்கு பின்னால் கரூரில் இருந்து திண்டுக்கலுக்கு மற்றொரு தனியார் பேருந்து சென்றது. இந்த பேருந்தை சண்முகம் என்பவர் ஓட்டினார். இரண்டு பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு சென்றபோது முன்னாள் சென்ற பேருந்து டிரைவர் திடீரென பிரேக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த விவசாயி கைவிரல் துண்டானது”…. மருத்துவமனையில் அனுமதி….!!!!!

வேடந்தூர் அருகே பட்டாசு வெடித்து விவசாயின் கட்டைவிரல் துண்டானது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் ரோசாப்பாளையத்தை சேர்ந்த விவசாயி சௌந்தரராஜன் நேற்று மதியம் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது அவர் கையில் பிடித்து பட்டாசை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென வெடித்து சிதறியது. இதனால் அவரின் இடது கையின் கட்டை விரல் துண்டானது. இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். தற்போது மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]

Categories

Tech |