திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் நேற்று வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே அம்மாபட்டி பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அதன்பின் எந்திரம் சரி செய்யப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. […]
