Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கும் ஒரு மனசு வேணும்… போலீஸ் ஏட்டின் சிறப்பான செயல்… குவியும் பாராட்டுகள்…!!

போலீஸ் ஏட்டு மனநலம் குன்றியவருக்கு செய்த உதவியால் பொதுமக்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதிக்கு அருகில் இருக்கும் ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பசியுடன்  வெளியில் சுற்றித்திரிவதாக போலீஸ் ஏட்டு முத்துஉடையாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் ஏட்டு அங்கு விரைந்து சென்று சலூன் தொழிலாளியின் உதவியோடு அந்த முதியவருக்கு முடி வெட்டி சவரம் செய்து குளிக்க வைத்துள்ளார். அதன்பின் அந்த முதியவருக்கு மாற்று உடை அணிவித்ததோடு தலைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உணவில்லாமல் தவித்த தம்பதியினர்… காவல்துறையினரின் சிறப்பான செயல்… குவியும் பாராட்டுகள்…!!

 ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவித்த தம்பதிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு தனது சொந்த செலவில் உதவி செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் அவசர அழைப்பு அறையின் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு ஊரடங்கு நேரத்தில் உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்கள் உதவி கேட்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட காவல்துறை அவசர அழைப்பு எண்ணிற்கு நிலக்கோட்டையில் வசித்து வரும் ரோகிணி என்ற மூதாட்டி தொடர்புகொண்டு ஊரடங்கு நேரத்தில் உணவு கிடைக்காமல் தவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மாவட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க…. அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

லாரியில் மணல் அள்ளிய 4 பேர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷுக்கு மொட்டனம் பட்டியில் அனுமதியின்றி தனியார் நிலத்திலிருந்து மர்மநபர்கள் லாரியில் மணல் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மர்மநபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி 2 டிப்பர் லாரிகளில் ஏற்றி கொண்டிருந்ததை பார்த்து உள்ளனர். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொம்பேரி பட்டி காடையனிர் பகுதியில் பொன்னுசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்று வலி குறையவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பொன்னுசாமி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய 14 பேர்… பிடித்து பரிசோதனை செய்த அதிகாரிகள்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த 14 பேரை பிடித்து அதிகாரிகள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறி 10 மோட்டார் சைக்கிள்களில் 3 பெண்கள் மற்றும் 11 வாலிபர்கள் அத்தியாவசிய தேவையின்றி கூட்டமாக வந்துள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அதிகாரிகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அப்போ இவரு டாக்டர் இல்லையா…? கண்டுபிடித்த காவல்துறையினர்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் போலி டாக்டர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் கொடைக்கானல் குண்டுப்பட்டி பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து உரிய மருத்துவம் படிக்காமல் டென்சிங் என்பவர் பொதுமக்களுக்கு போலியாக மருத்துவம் பார்த்தது தனிப்படை காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. எனவே டென்சிங்கை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவங்களால வர முடியல… பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி… காவல்துறையினரின் நடவடிக்கை…!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜாவும் வடக்கம்பட்டி பகுதியில் வசிக்கும் செல்வி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு குடும்பத்தினரும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் சார்பாக… தொழிலாளர்களுக்கு உதவி… வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்…!!

காவல்துறையினர் சார்பாக முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எரியோடு ராமசாமி நகர் பகுதியில் வசிக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா பிரபா தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் எரியோடு பாண்டியன் நகர் பகுதியில் வசிக்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ அவரை பிடிங்க..! வாலிபரை துரத்திய காவல்துறையினர்… பதறி ஓடிய பொதுமக்கள்… கொடைக்கானலில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் காவல்துறையினர் கொரோனா குறித்து பொதுமக்களிடையே நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் நேற்று கையில் குளுக்கோஸ் பாட்டிலை வைத்தபடி வாலிபர் ஒருவர் உலா வந்துள்ளார். மேலும் தன்னை அவர் கொரோனா நோயாளி என்று சொல்லி கொண்டு, தனக்கு உதவி செய்யுங்கள் என்று அங்கு வாகனங்களில் சென்றவர்களிடமும், பொதுமக்களிடமும், கடையில் அமர்ந்திருந்தவர்களிடமும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த வாலிபரை துரத்தி கொண்டு அவரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! விதிமுறைகளை மீறிய செயல்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இருதயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் நகராட்சி அலுவலகமானது 50 பேர் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி ஏராளமானோர் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் கூடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முதலமைச்சரின் அதிரடி உத்தரவால்… தொடங்கிய நிவாரண நிதி நிகழ்ச்சி… மாவட்ட கவுன்சிலர் தலைமை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுளிபட்டியில் கொரோனா நிவாரண நிதி ரேஷன் கடையில் வழங்கப்பட்டது. தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள 16 கூட்டுறவு ரேஷன் கடைகளில் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. அதன்படி கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிபட்டி கூட்டுறவு ரேஷன் கடையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலரும், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினருமான விஜயன் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… திண்டுக்கல்லில் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 380 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 380 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் 3 பேர் பலி… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் முதியவர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர், நாயக்கர் புதுதெருவை சேர்ந்த 50 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு… பெற்றோர் பரபரப்பு புகார்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுநாயக்கன்பட்டியில் மணிகண்டன் ( 24 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பழனி டவுன் காவல்துறையினர் சட்ட விரோதமான செயல்களை தடுப்பதற்காக ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது தாராபுரம் சாலை பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அடிவாரம் பகுதியில் வசித்து வரும் சிவகுமார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… சோதனையில் சிக்கிய வாலிபர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் 986 மதுபாட்டில்களை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் மது பாட்டில்களை தனியார் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி காவல் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 986 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அவை அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு..! விரைவில் நடவடிக்கை எடுங்க… விவசாயிகள் கோரிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே கீரனூர், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி, மானூர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் நெல் பயிர் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவற்றை விவசாயிகள் விற்பனைக்கு தயாராக அறுவடை செய்து வைத்துள்ளனர். இந்த பகுதியில் விலையை நெல்லின் தரத்திற்கேற்ப நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 398 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 162 பெண்கள் உட்பட 398 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமெடுத்து பரவும் கொரோனா… அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை… கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் மக்கள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் முதியவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 245 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 66 வயது முதியவர், திண்டுக்கல்லை அடுத்த ஒபுளாபுரத்தை சேர்ந்த 65 வயது முதியவர், கே.டி.பாளையத்தை சேர்ந்த 51 வயது ஆண், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 70 வயது முதியவர், ராஜக்காபட்டியை சேர்ந்த 53 வயது பெண், பழனியை சேர்ந்த 58 வயது ஆண், பாலசமுத்திரத்தை சேர்ந்த 57 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் செய்த கொடூரம்… வசமாக சிக்கிய குற்றவாளி… போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துறை அருகே விவசாயி கொலை தொடர்பாக மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரந்தமலையூர் பள்ளத்துகாட்டில் வசித்து வந்த விவசாயியான வெள்ளைக்கண்ணுக்கும், அவருடைய உறவினரான தங்கராஜ் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தங்கராஜ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பொன்னர், பழனிச்சாமி, சின்னச்சாமி, ராஜாங்கம், முத்து என்ற மீசை ஆகியோருடன் சேர்ந்து கடந்த 29-ஆம் தேதி வெள்ளைக்கண்ணுவை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் வெள்ளைக்கண்ணு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க தான நிறுத்தி வச்சிருந்தோம்..! அதிர்ச்சியில் உறைந்த காவல்துறையினர்… விசாரணையில் சிக்கிய வாலிபர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினரின் சைரனுடன் நின்று கொண்டிருந்த ரோந்து மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் வழக்குப்பதிந்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று வடமதுரை ரயில் நிலையம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ பாவம்..! தனியாக இருந்த மூதாட்டி… வாலிபர் செய்த செயல்… போலீஸ் வலைவீச்சு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டியில் மூதாட்டியிடம் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொ.கீரனூரில் செல்லம்மாள் ( 75 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் 30 வயது வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு வந்துள்ளார். அதன்பின்னர் செல்லமாளை மிரட்டி அந்த வாலிபர் அவர் காதில் இருந்த அரைப்பவுண் கம்மலை பறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கை முன்னிட்டு… இரண்டு நாட்களே திறக்க அனுமதி… படையெடுத்து சென்ற மதுப்பிரியர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு மதுப்பிரியர்கள் மதுக்கடைகளுக்கு படையெடுத்துச் சென்றனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நாளை முதல் வருகின்ற 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மதுபான கடைகள் இன்றும், நேற்றும் இரண்டு நாட்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் மது பிரியர்கள் மதுபான கடைகளை நோக்கி படையெடுத்து செல்ல தொடங்கினர். அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 158 மதுபான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! பிச்சை சாமிகளுக்கு நேர்ந்த சோகம்… பக்தர்கள் அதிர்ச்சி..!!

திண்டுக்கல்லில் வசித்து வந்த பிச்சை சாமிகள் என்றழைக்கப்படும் மூக்குப்பொடி சித்தர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததால் அவருடைய பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வந்த பிச்சை சாமிகள் என்றழைக்கப்படும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூரை சேர்ந்தவர். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஐந்து மகள்கள் மற்றும் மனைவி உள்ளனர். இவர் பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். இதையடுத்து அவர் நீண்ட சடைமுடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்போ மாடுகளுக்கு தீவனமா மாறிடுச்சு..! வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி… விவசாயிகள் வருத்தம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில் வெண்டைக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டதால் விலை திடீர் வீழ்ச்சி அடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, வேடசந்தூர், குரும்பபட்டி, அய்யர்மடம் ஆகிய பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காயை அதிக அளவில் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் வெண்டைக்காய் அதிக அளவில் விளைச்சல் செய்யப்பட்டதால் மார்க்கெட்டிற்கு வெண்டைக்காய் வரத்து அதிகமானது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு ரூ. 20க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் தற்போது ரூ.1.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை தான் காரணமா..? கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைக்காடு அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரல்பட்டியில் சிவக்குமார் ( 40 ) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் . சிவகுமார் கூலித்தொழில் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 280 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 280 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 16 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. அதே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படி தான் நடக்குது..! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முசுவனூத்து காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி ( 24 ) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த காளீஸ்வரி வீட்டில் யாரும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென புகுந்த பாம்பு… அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்… பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சிற்பக்கூடத்தில் புகுந்த பாம்பை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பழைய தாராபுரம் சாலை பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான சிற்பக் கலைக்கூடத்தில் வழக்கம்போல் நேற்று ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது விரீயன் பாம்பு ஒன்று அங்கு திடீரென்று புகுந்துள்ளது. அதனைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அந்த பாம்பை தேடி பார்த்தனர். அதற்குள் அந்த பாம்பு அங்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ பாவம்..! மின்சாரம் தாக்கி இறந்த உயிர்… காவல்துறையினர் விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே சினை பசுமாடு ஒன்று மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதூரில் வினோத்குமார் ( 55 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் எட்டு மாத சினையான பசுமாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த பசு மாடு அதே பகுதியில் உள்ள எம்.எஸ்.எம்.பி. சாலையில் கடந்த 1-ஆம் தேதி மாலையில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பசுமாடு அங்கு அறுந்து கிடந்த மின் கம்பி மீது மிதித்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெயிலுக்கு நல்லா குளிர்ச்சியா இருக்கும்..! விரும்பி வாங்கும் பொதுமக்கள்… விற்பனை அமோகம்..!!

திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக இளநீர், நுங்கு, பழச்சாறு மற்றும் குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக உடலுக்கு சக்தியும், குளிர்ச்சியும் தருகின்ற நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் நகரில் உள்ள முக்கிய சாலை பகுதிகளில் ஏராளமானோர் நுங்குகளை குவித்து வைத்து விற்பனை செய்கின்றனர். அவற்றை வயதானவர்கள், குழந்தைகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… திண்டுக்கல்லில் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 223 நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 223 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கோவிந்தபுரத்தில் வசித்து வந்த 57 வயது ஆண் ஒருவர் கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் கொரோனா தொற்றிலிருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல..! சடலமாக கிடந்த பெண்… காவல்துறையினர் விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிமந்தையம் அருகே பெண் ஒருவர் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருப்பதேவன்பட்டி பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் ? அவர் யார் ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. மேலும் அவர் எப்படி இறந்தார் ? என்ற தகவலும் தெரியவில்லை. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாக்கு மூட்டைல என்ன இருக்கு..? ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகே போலீஸ்காரர் முனீஸ், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு தங்கபாண்டியன் ஆகியோர் சித்தரேவு முத்தாலம்மன் கோவில் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் வந்தனர். அவர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரை கண்டதும் மோட்டார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… திண்டுக்கல்லில் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 270 பேருக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 270 பேருக்கு நேற்று முன்தினம் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்மூலம் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் 16,281 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவிலிருந்து 244 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் கோர முகம்… அதிகரித்து வரும் உயிரிழப்புகள்… திண்டுக்கல்லில் ருத்ர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் முதியவர் உட்பட 4 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனாவால் நேற்று முன்தினம் 210 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த 73 வயது முதியவர், 76 வயது முதியவர், ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 58 வயது பெண், 66 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மீண்டும் மிரட்டும் கொரோனா… ஒரே நாளில் உச்சகட்டம்… திண்டுக்கல்லில் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 220 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் 220 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் 16 ஆயிரத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட… கோர்ட்டு கட்டிடம்..!!

திண்டுக்கல்லில் உள்ள பழைய கோர்ட்டு கட்டிடம் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கலைக்கல்லூரியில் 160 படுக்கை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 390 படுக்கை, பழனி அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர தனி சிகிச்சை பிரிவுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாடுகள் அமலில் இருக்கு..! தேவையானதையெல்லாம் இப்போவே வாங்கிறனும்… அலைமோதிய பொதுமக்கள்..!!

திண்டுக்கல்லில் பொதுமக்கள் கூட்டம் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக அலை மோதியது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவது வழக்கம். மேலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கடைகள் அனைத்தும் மூடப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்குவதில் ஆர்வம் காட்டினர். அதனை முன்னிட்டு மெயின் ரோடு, திண்டுக்கல் நாகல்நகர் சந்தை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமிக்கு செய்த கொடுமை… அவங்களுக்கு இந்த தண்டனை குடுங்க… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல் அருகே 13 வயது சிறுமியை தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.கல்லுப்பட்டி பகுதியில் குருநாதன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் தங்கவேல் (38), பெருமாள் (58) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி 13 வயது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனத்துறையினருக்கு வந்த ரகசிய தகவல்… கையும் களவுமாக சிக்கிய விவசாயி… கைது செய்த காவல்துறை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு வந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோனிமலை புலக்கரை பகுதியில் விவசாயியான ரெங்கராஜ் (50) வசித்து வருகிறார். இவர் கன்னிவாடி வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள காட்டுப்பன்றிகளை தனது நாய் மூலம் வேட்டையாடி அதில் கிடைக்கும் இறைச்சியை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்பேரில் கன்னிவாடி வனவர் ரங்கநாதன், வனச்சரகர் சக்திவேல், வனகாப்பாளர் நாகராஜ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… குளத்தில் பிணமாக மிதந்த வாலிபர்… காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

திண்டுக்கல்லில் நெசவு தொழிலாளி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அண்ணா காலனி முத்துசாமி குளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று பிணமாக மிதந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து திண்டுக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு உறுதியான தொற்று… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி ஊராட்சி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி பகுதியில் வசித்து வரும் 54 வயது பெண் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த விருப்பாச்சி ஊராட்சி தலைவர் மாலதி வெண்ணிலா சந்திரன் தலைமையில் அந்த பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரவில் வீட்டிற்கு சென்றவர்களுக்கு… காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கரூர் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த 28-ஆம் தேதி ஊழியர்கள் வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். அதன்பின் டாஸ்மாக் கடையை நேற்று முன்தினம் காலையில் திறக்க வந்த போது கடையில் உள்ள மூன்று பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..! கமிஷனர் உத்தரவால்… தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கை..!!

திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு தினமும் 200 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1,600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் 270 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள இடங்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன ஆச்சுனே தெரியல..! பரிதாபமாக இறந்த உயிர்கள்… மருத்துவர்கள் பரிசோதனை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியில் மூன்று மாடுகள் மர்ம நோய் தாக்கி பரிதாபமாக பலியாகின. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளத்துப்பட்டியில் விவசாயியான சக்திவேல் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வந்த 2 மாடுகள் மர்ம நோய் தாக்கியதால் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அதே பகுதியில் வசித்து வரும் முத்துசாமி என்பவருடைய பசுமாடுக்கும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு பசு மாடுகளுக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியில் உறைந்த மனைவி… திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல்லில் நேற்று அதிகாலையில் அரசு அதிகாரி ஒருவர் காரில் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.காலனி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியான குப்புசாமி (68) வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மருத்துவர்களாக வெளியூரில் வேலை பார்த்து வருவதால் குப்புசாமி அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த மழை… பறந்து நொறுங்கிய ஆஸ்பெட்டாஸ்… சேதமடைந்த கடைகள்..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் திடீரென பெய்த கனமழையால் மூன்று கடைகளில் ஆஸ்பெட்டாஸ் ஓடுகளால் போடப்பட்டிருந்த மேற்கூரை சாலையில் விழுந்து நொறுங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே நேற்று முன்தினம் மாலை பிலாத்து பகுதியில் சூறாவளி காற்றுடன் திடீரென பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் உள்ள சில கடைகள் எதிர்பாராதவிதமாக சேதமடைந்தது. அதிலும் குறிப்பாக வாலிசெட்டிபட்டி செல்லும் சாலையில் திருமலைசாமி என்பவருடைய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதியில்லாம இப்படி பண்றாங்க..! திண்டுக்கல்லில் பரபரப்பு புகார்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் அனுமதியில்லாமல் பொக்லைன் இயந்திரத்தை இயக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் அனுமதியின்றி கொடைக்கானல் மலைப்பகுதியான தாண்டிக்குடியில் பொக்லைன் இயந்திரம் இயக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இது குறித்து தாண்டிக்குடி கிராம நிர்வாக அலுவலர் சேதுமணி, கொடைக்கானல் தாசில்தார் சந்திரன் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா..! பிளஸ்-1 மாணவன் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் பதினொன்றாம் வகுப்பு மாணவன் கட்டிலுக்கு மெத்தை வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு முத்துநகரில் வில்சன் செபாஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோபியா செல்வராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இன்பென்ட் (17) என்ற மகன் இருந்தார். இவர் பதினொன்றாம் வகுப்பு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வில்சன் செபாஸ்டின் வேலைக்கு சென்ற […]

Categories

Tech |