Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எனது மகளை காணவில்லை” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தக்கோட்டை கிராமத்தில் ராஜா- தேவிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஜித் என்ற மகன் உள்ளார். இவர் மூங்கில் நார் கூடை பின்னும் இருக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித்துக்கும் 13 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முக்கிய ஆவணங்கள் ஆய்வு…. சைக்கிளில் சென்ற சூப்பிரண்டு…. போலீசாருக்கு அறிவுரை…!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைக்கிளில் சென்று காவல்நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சைக்கிளில் சென்று காவல் நிலையங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் திண்டுக்கல் நகர மேற்கு காவல் நிலையத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு முக்கிய வழக்குகளின் கோப்புகளை ஆய்வு செய்து பணியில் இருந்த காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி விட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுக்கல்…. மாணவர்களுக்கு கள ஆய்வு பயிற்சி…. விளக்கம் அளித்த பேராசிரியர்…!!

15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுக்கல் குறித்து பேராசிரியர் மாணவர்களுக்கு விளக்கி கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பாயூர் கிராம பகுதியில் பழங்கால வரலாறு தொடர்பாக 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி கள ஆய்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, தேனி மாவட்டம் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சி.மாணிக்கராஜ், கம்பளியம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் போன்றோர் மாணவர்களுக்கு பயிற்சி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இந்த திருமணத்தில் உடன்பாடில்லை” காதல் ஜோடி தஞ்சம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் சௌந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜான்சி என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆசிரியர்களை பிரிய மனமில்லாமல்….. பள்ளியின் முன்பு போராடிய மாணவிகள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கலந்தாய்வின் மூலம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விகிதாசார அடிப்படையில் கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.அதன்படி திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேலை பார்க்கும் சில ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ததால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே ஆசிரியர்களை மாற்ற கூடாது என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெரும் பயங்கரம்… போன் செய்து கொடுக்காத தங்கை… வெட்டி சாய்த்த பாவி அக்கா…!!!!

திண்டுக்கல்லில் போன் செய்து கொடுக்காத காரணத்தினால் தனது தங்கையை அக்கா வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நாககோனனூர்  பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 43). இவரது கணவர் இறந்த நிலையில் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். தமிழ்செல்வி உடன்பிறந்த அக்கா வெங்கடேஸ்வரி (வயது 46) தனது கணவர் சுப்பிரமணியனுடன் தனியாக வசித்து வருகிறார். ஈஸ்வரியின் மகன் நாக மணிகண்டன் கோயமுத்தூரில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு சகோதரிகள் இருவரும் தாயாருடன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி” இறந்த தம்பி மடியில் வைத்து காதணி விழா…. நெகிழ்ச்சி சம்பவம்!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வசிப்பவர் சவுந்தரபாண்டி- பசுங்கிளி தம்பதிகள். இவர்களுடைய மகன் பாண்டித்துரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள், மகனுக்கு காதணிவிழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. தனது பிள்ளைகளுக்கு தாய்மாமனான பாண்டித்துரை இறந்து போனதால் அவருடைய மெழுகு உருவச் சிலையை செய்து அவருடைய மடியில் குழந்தையை வைத்து காது குத்தப்பட்டது. அக்கா குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் இஎன்பது பாண்டித்துரையின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொது இடத்தில் இறந்து கிடந்த நபர்…. எப்படி இந்த நிலை….? விசாரணையில் தெரிந்த உண்மை….!!

பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று முதியவர் ஒருவர்  இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு 60 வயது மதிப்பிலான முதியவர் ஒருவர் நேற்று மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார்.  இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அந்த விசாரணையில் அலுவலகம் முன்பு இறந்தவர் அண்ணாநகரைச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பின் தொடர்ந்து சென்ற வாலிபர்கள்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எழில் நகரில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற விசேஷ விழாவில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முஸ்லிம்களை விடுதலை செய்யனும்… எஸ். டி .பி.ஐ கட்சி சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம்..!!

எஸ். டி .பி.ஐ கட்சி சார்பில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்  பேகம்பூரில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம்,  பேகம்பூர் மற்றும்  சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் எஸ். டி .பி.ஐ கட்சி சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தபால் அட்டை மூலம் கடிதம் அனுப்பும் போராட்டத்தை  நேற்று  நடத்தினர் . இதில்  ஏராளமான மக்கள்  தபால் மூலம் கடிதம் எழுதி அதில் கையொப்பமிட்டு உள்ளார்கள். இந்த கடிதத்தில் பல்வேறு வழக்குகளில் கைது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் நண்பரான சுபாஷ் என்பவரும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எழுவனம்பட்டியில் இருக்கும் தனியார் மில்லில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் குமாரும் சுபாஷூம் வத்தலகுண்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆண்டிப்பட்டி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உடல் கருகி இறந்த நிதி நிறுவன அதிபர்…. மகளின் காதலனே எரித்து கொன்ற கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நிதி நிறுவன உரிமையாளர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தப்பட்டியில் இருக்கும் தோட்டத்து வீட்டில் நிதி நிறுவன அதிபரான பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் அரிமா சங்கத்தின் துணைத் தலைவராக இருந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி அரிமா சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு நள்ளிரவு நேரத்தில் பாலசுப்ரமணி வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது மனைவி நண்பர்களிடம் செல்போன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 5 பேர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

யானை தந்தத்தை கடத்த முயன்ற குற்றத்திற்காக 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சவரிக்காடு மலை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் யானை தந்தத்தை கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் தேக்கந்தோட்டம் என்ற இடத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சவரிக்காடு பகுதியை சேர்ந்த ராஜ் மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“போலியான பட்டாவை பயன்படுத்துறாங்க” விவசாயிகளின் முற்றுகை போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

விவசாயிகள் ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியம்மா பட்டி பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பழனி ஆர்.டி.ஓ அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது, பெரியம்மாபட்டி பகுதியில் உச்சவரம்பு சட்டத்தின் கீழ் நிலங்களை கையகப்படுத்தி அவற்றை அரசு ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளது. இதில் நாங்கள் பயிர் சாகுபடி செய்துள்ளோம். ஆனால் தற்போது ஏழை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விஷேச நிகழ்ச்சிக்கு சென்ற பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் அதிரடி…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எழில் நகரில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடந்து செல்லும் மாணவர்கள்…. அச்சத்தில் பெற்றோர்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஆபத்தான முறையில் மாணவ-மாணவிகள் தண்டவாளத்தை கடந்து செல்வதால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சி. அம்மாபட்டி இந்திரா காலனியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சி. அம்மாபட்டி மற்றும் இந்திரா காலனிக்கு இடையே ரயில்வே தண்டவாள பாதை அமைந்துள்ளது. இதனால் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருவதற்கும்,மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும் இந்த தண்டவாள பாதையை கடந்து செல்கின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாற்று பாதை அமைத்து தருமாறு கடந்த சில […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊழியர் அளித்த புகார்…. 3 பேரை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக 3 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டி பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சீலப்பாடியில் இருக்கும் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்புசாமி தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தி விட்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தார். வேலை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த கருப்புசாமி உடனடியாக திண்டுக்கல் தாலுகா காவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அப்பா…! அப்பா…! என கதறிய 3 வயது சிறுவன்…. ஆதார் கார்டு எடுக்க சென்ற இடத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!

மகனுக்கு ஆதார் கார்டு எடுக்க சென்ற தொழிலாளி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எரியோடு பாண்டியன் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், 3 வயதில் மகனும் இருக்கிறான். இந்நிலையில் தனது மகனுக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி வேடச்சந்தூர் ஆத்துமேடு பகுதியில் இருக்கும் தனியார் வங்கிக்கு மகனை தூக்கியபடி நடந்து சென்றுள்ளார். ஆனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல் சீரமைப்புக்கான அறுவை சிகிச்சை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி வடக்கியூரில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெசிந்தா மேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராகுல்லண்ட் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராகுல்லண்ட் பல் சீரமைப்புக்கான அறுவை சிகிச்சை செய்து கிளிக் மாட்டியுள்ளார். இதனால் பல் வலிப்பதாக கூறி சிறுவன் பள்ளிக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 3 பேருந்துகள்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பழனிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு ஒபுளாபுரம் பகுதியில் இருக்கும் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் பேருந்தை நோக்கி கற்களை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்துவிட்டது. இதுகுறித்து பேருந்தின் ஓட்டுனர் அளித்த புகாரின்பேரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த மரம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்னை மரம் முறிந்து விழுந்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவியம்பாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பழைய சோதனை சாவடி அருகில் இருக்கும் தனியார் குவாரியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு விஜயகுமார் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சொக்கனூர்-வீரப்பகவுண்டனூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த தென்னை மரம் முறிந்து விஜயகுமாரின் இருசக்கர வாகனம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் இன்று (மார்ச்.7) இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு…. முழு விவரம் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் :- இன்று (07-03-2022) நத்தம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி, நத்தம், பொய்யாம்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, அரவங்குறிச்சி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேந்தூர், சமுத்திராபட்டி, கோட்டையூர், சிறுகுடி, பன்னியாமலை, பூசாரிபட்டி, பூதகுடி, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஒடுகம்பட்டி, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புஸ் புஸ் என்று வந்த சத்தம்….!! அடித்துப்பிடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி….!!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்புதுறையினர் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் காமராஜர் நகரில் ராமாயம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தோட்டத்து வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனை பார்த்த குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு 8 அடி நீளமுள்ள சாரைப் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விபத்தில் உயிரிழந்த போலீஸ்” காப்பீடு தொகை வழங்கிய அதிகாரிகள்….!!!

விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்தினருக்கு 30 லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் பால சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போக்குவரத்து போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் விபத்து காப்பீட்டு தொகையாக பாலசுப்ரமணியின் குடும்பத்தினருக்கு 30 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அப்போது திண்டுக்கல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஹீட்டர் இணைப்பை துண்டித்த இளம் பெண்” திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கள்ளிப்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 108 ஆம்புலன்சில் தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பாண்டியம்மாள் தனது இரண்டாவது மகன் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்துள்ளார். இதனை அடுத்து வாட்டர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடி கொண்டிருந்த போதே….. கொழுந்து விட்டு எரிந்த தீ…. அதிர்ஷ்டவசமாக தப்பிய இருவர்…!!

சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதிஷ்டவசமாக இருவர் உயிர் தப்பிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சுரைக்காய்பட்டி இப்பகுதியில் கணேசன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணேசன் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்த காரை கதிர்வேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை பைபாஸ் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிரிகெட் மட்டையால் அடித்து…. தந்தையை கொன்ற சிறுவன்….. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தாய் மற்றும் தங்கையை அடித்து துன்புறுத்தியதால் சிறுவன் கிரிக்கெட் மட்டையால் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி முல்லை நகரில் ஓமந்தூரான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலத்திலுள்ள புன்னங்குளம் என்னுமிடத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். வாரத்தில் ஒரு முறை மட்டுமே ஓமந்தூரான் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 17 வயதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர சத்தம்….. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கல்குவாரியில் நடந்த வெடி விபத்தினால் தொழிலாளி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் நத்தம் பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கல்குவாரி குரும்பபட்டியில் அமைந்துள்ளது. இந்நிலையில் பாறையை உடைப்பதற்காக எந்திரம் மூலம் துளையிட்டு அதில் வெடிமருந்து நிரப்பும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் வடிவேல் உள்பட 6 தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் 5 தொழிலாளர்கள் பாறையில் துளையிட்டு கொண்டிருந்தனர். அந்த துளைகளில் வெடிமருந்து நிரப்பும் வேலையை வடிவேல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அண்ணனுக்காக தீக்குளிக்க வந்தேன்” ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சம்பவம்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அண்ணனுக்காக தம்பி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன பள்ளப்பட்டி பகுதியில் முருகபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தென்னரசு என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தென்னரசு திடீரென தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் தென்னரசுவை தடுத்து நிறுத்தி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பல லட்ச ரூபாய் கொடுத்துட்டேன்” மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள விளாம்பட்டி பகுதியில் மாற்றுத்திறனாளியான தவசி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற தவசி தான் கொண்டு சென்ற மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தவசி கூறியதாவது, ஒரு தொண்டு நிறுவனத்தினர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகள்…. சிறப்பு மருத்துவ முகாம்…. நடைபெற்ற பரிசோதனைகள்…!!

ஆதரவற்ற குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மணியக்காரன்பட்டி பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான கருணை இல்லம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதரவற்றோர்  இல்லத்தில் குழந்தைகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த மருத்துவ முகாமில்  குழந்தைகளுக்கு பல்வேறு விதமான உடல்   பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆதரவற்றோர்  இல்லத்தில் சமையல் செய்பவர்கள் 6 மாத்திற்கு ஒருமுறை  மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீர் எங்கிருந்து வந்தது…? குழப்பத்தில் ரயில்வே நிர்வாகம்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

சுரங்கப்பாதையில் திடீரென தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் மிகவும்  சிரமப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு அருகில் நடைமேடை அமைந்துள்ளது.  இந்நிலையில் 2-வது நடைமேடை மற்றும் 3-வது நடைமேடைக்கு பயணிகளின் வசதிக்காக  சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த  சுரங்கப்பாதை அடைக்கப்பட்டது. இதனால்  பயணிகள் இந்த நடைபாதைகளுக்கு செல்வதற்கு மேம்பாலத்தை பயன்படுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சுரங்கப் பாதையை ரெயில்வே நிர்வாகம் திறந்துள்ளது. இந்நிலையில்  அந்த சுரங்கப் பாதையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறந்த குறும்படங்கள்…. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு…. பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

சிறந்த குறும்படத்தை தயாரித்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசுகளை வழங்கி  பாராட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் குறும்படபோட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 12 குழுக்கள் தாங்கள் தயாரித்த குறும்படங்களை வெளியிட்டுள்ளனர். அதாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி இந்த குறும்படங்கள் எடுக்கப்பட்டிருந்தது. அதில் சிறந்த குறும்படங்கள் காவல்துறை ஆய்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசுகளை வழங்கி  பாராட்டியுள்ளார்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு ஒப்பந்ததாரருக்கு அரிவால் வெட்டு…. பொதுமக்கள் சாலை மறியல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

அரசு ஒப்பந்ததாரரை  தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் உள்ள எரியோட்டையில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர்  நாடார் சங்கத்தின் நிர்வாகியாகவும் அரசு ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இவர் இந்த பகுதியில் இருக்கும் விநாயகர் கோவிலின் முன்பாக அமர்ந்து சிலருடன் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் பழனிச்சாமியை அரிவாளால் வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணத்தை எடுத்து சென்றாயா? தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடக்கு மோளப்பாடியூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன் அதே பகுதியில் வசிக்கும் ராஜ் குமார் என்பவரது வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வேலை முடிந்து மாலை நேரத்தில் முருகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது ராஜ்குமார் முருகனின் வீட்டிற்கு சென்று எனது வீட்டில் இருந்த பணத்தை எடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வேட்டையாட போறோம்” வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

நாட்டு துப்பாக்கியுடன் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் சோழவந்தான் பிரிவு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேலாயுதபுரம் அண்ணா நகரில் வசிக்கும் வீரணன் என்பவர், நண்பரான பாண்டி என்பவருடன் நாட்டு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட சென்றது தெரியவந்துள்ளது. இதனால் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உதவித்தொகையில் முறைகேடு…. தாசில்தார் உள்பட 2 பேருக்கு சிறை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

தாசில்தார் உள்பட 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் மூலம் கடந்த 2013-ஆம் ஆண்டு முதியவர் உதவித்தொகை உழவர் பாதுகாப்பு உதவித்தொகை மற்றும் முதியவர் உதவித்தொகை ஆகியவற்றிற்கு மொத்தம் 26 லட்சத்து 93 ஆயிரத்து 495 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உதவி தொகை வழங்கியதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் முறைகேடு நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

18 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம்…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி ஆய்வு….!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைக்கிளில் சென்று காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சாதாரண உடை அணிந்து காலை 7 மணி அளவில் அலுவலகத்திலிருந்து கிளம்பியுள்ளார். இதனை அடுத்து சீனிவாசன் 18 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வடமதுரையில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அதன்பின் போலீஸ் சூப்பிரண்டு காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் இருக்கும் முக்கிய கோப்புகள், வருகைப்பதிவேடு போன்ற ஆவணங்களை ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கூடுதல் கட்டணம் கேட்கின்றனர்…. வியாபாரிகளின் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை அணைப்பட்டி ரோட்டில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும். இந்நிலையில் பேரூராட்சியில் இருந்து ஏலம் எடுத்தவர்கள் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடமிருந்து மூட்டைக்கு 10 ரூபாய் வசூல் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஏலம் எடுத்தவர்கள் கூடுதல் கட்டணம் கேட்கின்றனர். இதனால் வியாபாரிகளுக்கும், ஏலம் எடுத்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தம்பியுடன் சென்ற இளம்பெண்…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

இளம் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நாகல் நகரில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மகள் உள்ளார். இந்த பெண் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி தனது சகோதரரான ராஜ் என்பவருடன் சர்மிளா தாடிக்கொம்பு பேருந்தில் சென்றுள்ளார். இந்நிலையில் அக்கா தம்பி இருவரும் கோவிலை நோக்கி நடந்து சென்றபோது பின்தொடர்ந்து வந்த மர்ம […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மதுபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டெல்லைபாறை பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாண்டி மது குடித்துவிட்டு அப்பகுதியில் இருக்கும் கிணற்றின் சுற்று சுவரில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மதுபோதையில் பாண்டி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏன் ஊர்ந்து செல்கிறது….? மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்…. அதிகாரியின் தகவல்….!!

நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரியகோம்பை மலை கிராமம் அமைந்துள்ளது. இது குடியிருப்புகள் எதுவும் இல்லாத அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கன்னிவாடி வனச்சரகர் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு புதருக்குள் சிறுத்தை ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்த வனத்துறையினர் அதன் காலில் ஏதேனும் காயம் ஏற்பட்டு இருக்குமோ என சந்தேகம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் இருந்த ஓட்டுநர்…. படுகாயமடைந்த 15 தொழிலாளர்கள்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வடமதுரை அருகில் மில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களை வேனில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் புதுப்பட்டி தச்சன் குளம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் படுகாயம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

12 அடி நீளமுள்ள நல்லபாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தோட்டத்திற்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் சுமார் 12 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டனர். இதேபோல் கோபிநாதன் என்பவரது வீட்டிற்குள் பகுதி இருந்த 9 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பன்னியான் மலை கிராமத்தில் கூலி தொழிலாளியான அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நத்தம் சேர் வீடு நான்குவழிச்சாலை பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து அர்ஜூனன் கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் அதிரடி…!!

மருத்துவரின் வீட்டில் தங்க நகைகள்  கொள்ளையடிக்கப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் சக்திவேல்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் சக்திவேலின் பெற்றோர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் உறங்கிக் கொண்டிருந்த போது இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து  அவர்களை  கயிறால் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 150 பவுன்  தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு காரில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 10 தொழிலாளர்கள்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை வேல்வார்கோட்டை பிரிவில் தனியார் நூற்பாலை அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களை சுக்காம்பட்டி பகுதியிலிருந்து ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று தொழிற்சாலை நூற்பாலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புதுப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு வேணும்” தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் திருமணம் செய்தவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கவுண்டர் பட்டியில் பட்டதாரியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான அகல்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு அகல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியபித்தம்பட்டி பொம்மையம்மன் சுவாமி கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். அதன்பின் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வேடசந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழிப்பறைக்கு சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. மருத்துவர்கள் அளித்த தகவல்…!!

திடீரென மயங்கி விழுந்து பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் காலனியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சம்பத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல் அருகே இருக்கும் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழக விடுதியில் இருக்கும் கழிப்பறையில் சம்பத்குமார் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாக சம்பத்குமாரை மீட்டு அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி வேன் மோதல்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாட்டி லட்சுமி, உறவினர் யோகேஸ்வரன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு நிச்சயதார்த்த விழாவிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எரியோடு-வடமதுரை சாலையில் இருக்கும் தனியார் நூற்பாலை விடுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது கோபாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த […]

Categories

Tech |