Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இங்கு சந்தன மரக்கட்டை பதுக்கி வச்சிருக்காங்க” வசமாக சிக்கிய 2 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டை பதுக்கி வைத்திருந்த  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ். கே. நகரில் அமைந்துள்ள ஒரு தோட்டத்தில் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக தோட்டத்து அறையில் சந்தன  மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டை பதுக்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கல்லறைத் தோட்டத்தை அகற்றக்கூடாது”… எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…!!!

கல்லறைத் தோட்டத்தை அகற்றக்கூடாது என்று பொதுமக்கள் மறுப்பு தெரிவித்தார்கள். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் வேலம்பட்டி கிராமத்திற்கு கல்லறை தோட்டம் கொசவபட்டி பகுதியில் அமைந்துள்ளது. இந்த கல்லறை தோட்டம் இருக்கின்ற இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்பதால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொசவபட்டி உள்ள கல்லறைத் தோட்டத்தை அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கொசவப்பட்டியில் உள்ள கல்லறைத் தோட்டம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் பதுக்கிய மான் கொம்பு-தோல்…. ஜோதிடர் அதிரடி கைது…!!

ஜோதிடர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான்கொம்பு, தோல் ஆகியவற்றை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரெட்டியபட்டியில் மான்கொம்பு, தோல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜோதிடம் பார்த்து வந்த சுந்தரமூர்த்தி என்பவரது வீட்டில் மான் கொம்பு, ஆமை ஓடு, மான்தோல், நரிப்பல் ஆகியவை பதுக்கி வைத்து இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை அழைத்து சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வேலிபட்டியில் கூலித் தொழிலாளியான சின்னகருப்பு(19) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னகருப்புக்கும் அதே பகுதியில் வசிக்கும் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி சின்ன கருப்பு சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடுவழியில் நின்ற பேருந்து…. சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் இருந்து பெரும்பாறை, கே.சி.பட்டி வழியாக பன்றிமலைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு வத்தலக்குண்டில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் பெரும்பாறை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து பழுதாகி நின்றதால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பொக்லைன் எந்திரம்…. துடிதுடித்து இறந்த மூதாட்டி…. கோர விபத்து…!!

பொக்லைன் எந்திரம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நொச்சிஓடைப்பட்டியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் மளிகை கடைக்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து திண்டுக்கல்-நத்தம் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக சென்ற பொக்லைன் எந்திரம் மேரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இருதரப்பினர் இடையே மோதல்…. மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு….திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்தி நகர் காலனி பகுதியில் இருக்கும் மைதானத்தில் செட்டிநாயக்கன்பட்டி யை சேர்ந்த வாலிபர்கள் நேற்று இரவு அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கும் காந்திநகர் காலனியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த காந்திநகர் காலனியை சேர்ந்த சில வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்தவர்களை விலகி விட்டனர். அப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டி கிருஷ்ணாபுரத்தில் எலக்ட்ரீசியனான முனுசாமி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி(29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நர்சாக வேலை பார்த்த மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு பணிக்கு செல்லவில்லை. நேற்று அதிகாலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய முதியவர்…. தூங்கி கொண்டிருந்த போது நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆவணி மூல வீதி பகுதியில் தட்சிணாமூர்த்தி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் நேற்று பழனி காரமடை பகுதியில் சாலையோர திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் “கவர்ந்த காட்டெருமை சிலை”… செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!!

கொடைக்கானல் மோயர் பாயிண்ட்டில் வைக்கப்பட்ட காட்டெருமை சிலை சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு வனபகுதி இருக்கின்ற குணாகுகை, மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி, பில்லர்ராக், பைன்மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் தீலிப் ஆலோசனையின்படி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுற்றுலா இடங்களை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. அதன்படி மோயர் பாயிண்ட் பகுதியில் இரும்பு, கான்கிரீட் கலவையால் செய்யப்பட்ட காட்டெருமை சிலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மர்ம நோய் தாக்குதல்…. பரிதாபமாக இறந்த 20 ஆடுகள்…. சோகத்தில் விவசாயிகள்…!!

மர்ம நோயால் 20 ஆடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான 20 செம்மறி ஆடுகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர்கள் செந்தில், ஸ்ரீவித்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளின் தோல் மற்றும் இரத்த மாதிரிகளை சேகரித்தனர். இதனையடுத்து சோதனை முடிவில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எலுமிச்சை பழம் வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு… ஒரு கிலோ ரூ 200-க்கு விற்பனை ..!!!

எலுமிச்சைபழம் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோ ரூ 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், வத்திப்பட்டி, நத்தம், லிங்கவாடி, பெரியமலையூர், குட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் எலுமிச்சை பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்கள் சந்தைக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகமாக இருந்ததால் பத்து ரூபாய்க்கு 5 முதல் 7 பழங்கள் வரை விற்றனர். இந்த மே மாதம் ஆரம்பத்திலிருந்து எலுமிச்சை பழம் வரத்து குறைந்து விட்டது. இதனால் தற்சமயம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

50 வயது பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கிய உறவினர்கள்…. கொடைக்கானலில் பரபரப்பு…!!!

50 வயது பெண்ணை திருமணம் செய்த வாலிபரை கட்டிப்போட்டு அந்தப் பெண்ணின் சொந்தக்காரர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வசித்த 32 வயது வாலிபர் ஒருவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் கொடைக்கானல் மேல்மலைப்பகுதியான கூக்கால் கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு நிலத்தை வாங்கி,  கட்டிடம் கட்டி தங்கும் விடுதி நடத்தி வருகின்றார். அந்த விடுதியில் கூக்கால் கிராமத்தில் வசித்த கணவனை இழந்த 50 வயது பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்புதுறையினரின் முயற்சி….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் பூங்காவை நோக்கி பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்றதை காட்டி கொடுத்ததால் வாலிபர் கொலை…. வியாபாரி கைது….!!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த வழக்கில் கஞ்சா வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வெங்கந்தூர் காலனியில்  உள்ள சென்னை கண்ணகி நகரில் வசித்து வருபவர் அசோக் (25). அதே பகுதியில் வசித்த ஞானவேல்(35) என்பவர் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் அசோக் கஞ்சா விற்று வருவதாக புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து முன்விரோதத்தில் கடந்த 6ஆம் தேதி ஞானவேலுவை அசோக் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின் அசோக் தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து அசோக்கை கைது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்…2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்…

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமியை வழிபட்டு சென்றனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். நேற்று வார விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதிலும் குறிப்பாக கேரளா மாநிலத்திலிருந்து அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் கோவிலில் அதிகாலை முதல் அடிவாரம், பாத விநாயகர் கோவில், மலை கோவில், திருஆவினன்குடி ஆகிய இடங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் வெளியூர், வெளி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கலீம், சின்னதம்பி கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு”… ஒற்றை காட்டு யானை பிடிப்பதற்கு முயற்சி… கலெக்டர் தகவல்…!!!

கலீம், சின்னதம்பி என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ஒற்றை காட்டு யானையை பிடிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி வெளியே சென்று பயிர்களை சேதப்படுத்துகின்றது. அதன்படி தருமத்துப்பட்டி, பண்ணைப்பட்டி, கோம்பை, அழகுமடை, அமைதிச்சோலை பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விளைநிலங்களில் புகுந்த காட்டுயானைகளை விரட்டும் பணி நடைபெற்றது. அப்போது அதில் ஒற்றை யானை தாக்கி வேட்டை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட மத்திய அதிவிரைவு படையினர்… கொடைக்கானலில் பதற்றமான பகுதிகள் உள்ளதா? என்று ஆய்வு…!!!

கொடைக்கானலில் பதற்றமான பகுதிகள் இருக்கின்றதா? என்று மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மத்திய அதிவிரைவு படையினர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மத்திய அதிவிரைவு படையினர் 15 பேர் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டு, கொடைக்கானலில் பதற்றமான பகுதி இருக்கின்றதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில், சுற்றுலாத்தலங்களில் பாதுகாப்பு மேற்கொள்வது எப்படி என்றும், மதக்கலவரங்களை தடுப்பதற்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்வது எப்படி என்றும், கொடைக்கானலில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வரிசையாக வந்த கார்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

சட்டவிரோதமாக காரில் போதைப்பொருள் கடத்தி வந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சாலையில் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் போதை  பொருட்கள் கடத்தி வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீனிவாசன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கரூர்-திண்டுக்கல் நான்கு வழி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய  கார் ஒன்று வந்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நம்பி வேலை கொடுத்த உரிமையாளர்…. கேரள வாலிபர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

காரை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சைமரத்து ஓடை பகுதியில் ஜின்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவரது விடுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஆதிநாராயணன்(29) என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் ஜின்னாவுக்கு சொந்தமான 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து ஜின்னா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை பல்வேறு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அக்கா வீட்டிற்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோர விபத்து…!!

தடுப்பு வேலி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார்(27) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரத்குமார் மதுரையில் இருக்கும் தனது அக்காள் ராஜலட்சுமி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் சரத்குமார் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் அம்மையநாயக்கனூர் அருகே நான்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சாலையில் இறந்து கிடந்த சிறுத்தை” வாகன ஓட்டிகள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் வனத்துறையினர்…..!!!!

இறந்து கிடந்த சிறுத்தையின்  சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் அமைந்துள்ள  2- வது கொண்டை ஊசி வளைவு அருகே சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததுள்ளது. அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றிகள் இறந்த சிறுத்தையின் உடலை ஆக்ரோஷத்துடன் கடித்து குதறியுள்ளது.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை விரட்டிவிட்டு சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உளுந்த வடையில் ரப்பர் பேண்ட்”…. அவமரியாதையாக பேசிய கடைக்காரர்… தீவிர விசாரணையில் அதிகாரிகள் …!!!!!!!

உளுந்த வடையில் ரப்பர் பேண்ட் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  நூத்துலாபுரம் பகுதியில் மாற்றுத்திறனாளியான முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று நிலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு டீக்கடையில் உளுந்த வடை வாங்கியுள்ளார். இதனையடுத்து முனியாண்டி அந்த உளுந்த வடையை சாப்பிட்ட போது அதில் “ரப்பர் பேண்ட்”இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முனியாண்டி டீ கடைக்காரரிடம் கேட்டபோது அவர் முனியாண்டியை அவமரியாதையாக   பேசி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  முனியாண்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சாலையில் கம்பீரமாக வந்த காட்டெருமை” அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

சாலையில் கம்பீரமாக வந்த காட்டெருமையை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி  காட்டுக்குள் விரட்டி அடித்துள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டும் இன்றி  வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை அண்ணாசாலை பகுதியில் காட்டெருமை ஒன்று கம்பீரமாக நடந்து   வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு  ஓடினர். இதனையடுத்து அவர்கள்  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை அச்சுறுத்திய குரங்கு” பொதுமக்களின் கோரிக்கை…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

மக்களை அச்சுறுத்தி வந்த குரங்கை  வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர், கலைஞர் நகர், காந்திநகர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே குரங்கு ஒன்று புகுந்து குழந்தைகளை  அச்சுறுத்தி வருவதோடு மட்டும் இல்லாமல்  வீடுகளுக்குள் நுழைந்து தின்பண்டங்களையும் தூக்கி சென்று விடுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் குரங்கை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நேற்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கோணபட்டியில் கூலித் தொழிலாளியான பாலமுருகன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் அழகுமணி(20) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த இருவீட்டு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதனை அடுத்து காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலைத்தில் தஞ்சமடைந்தனர். அதன்பிறகு காவல்துறையினர் இரண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின் கம்பத்தில் மோதிய கார்…. உடல் கருகி”வாலிபர் பலி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மின் கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டிபுதூர் பகுதியில் சுரேஷ் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மரிசிலம்பு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி சாலையின் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. மேலும் மின்கம்பம் காரின் மீது விழுந்ததால்  தீ  பற்றி எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காருக்குள் இருந்த சுரேஷ்பாபுவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சாலையில் தாறுமாறாக ஓடிய கார்” வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 மரத்தின் மீது  கார் மோதிய   விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள    நவாமரத்துபட்டி  பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சண்முகம் என்பவருடன் சேர்ந்து நேற்று  நால்ரோடு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது  திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக  சாலையில்  ஓடி அருகில் இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விரைவில் விநியோகம் செய்யப்படும்” பொதுமக்களின் திடீர் போராட்டம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்த நகரில் கடந்த 15 நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அனுமந்தநகர் மேம்பாலத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்து சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும்…. குவியும் சுற்றுலா பயணிகள்….!!!!

கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடைகாலம் என்பதால் தமிழ்நாடு மட்டும் இன்றி  வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று அப்சர்வேட்டரி முதல் கலையரங்கம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் வெள்ளி நீர்வீழ்ச்சி, பூத்துக் குலுங்கும் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நான் முதல்வர் மு.க ஸ்டாலினை பார்க்க வேண்டும்” செல்போன் டவர் மீது ஏறிய வாலிபர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

செல்போன் டவரின் மீது வாலிபர் எறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருசங்கர் என்ற மகன் இருக்கிறார். இவர் கேபிள் டி.வி ஆபரேட்டராக வேலைப்பார்த்து வருகிறார். இவர் தி.மு.க கட்சியின் கொடி நிறத்திலான துண்டை அணிந்து கொண்டு கட்டகாமன்பட்டிக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்த ஒரு செல்போன் டவரின் மீது ஏறியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வத்தலக்குண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பணம் வரவில்லை” ஏ.டி.எம் எந்திரத்தை அரிவாளால் உடைத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய வத்தலக்குண்டு வடக்கு தெருவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற வாலிபர் கார்டை எந்திரத்தில் சொருகி பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பணம் வரவில்லை. இதனால் கோபமடைந்த அந்த வாலிபர் வீட்டிற்கு சென்று அரிவாளுடன் மீண்டும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். பிறகு அந்த வாலிபர் ஏ.டி.எம் எந்திரத்தை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். தென்காசி மாவட்டத்தில் கார் ஓட்டுநரான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ஜெய்பட்டேல், சந்திரகான் ஆகியோருடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் கொடைக்கானலை சுற்றிப் பார்த்து விட்டு நேற்று தென்காசி நோக்கி காரில் புறப்பட்டனர். இந்நிலையில் கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைப்பாதையில் பண்ணைக்காடு அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்துவிட்டது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எரிந்து சாம்பலான ஸ்கூட்டர்…. வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சள்பரப்பு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காபி, மிளகு போன்றவற்றை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் தனது ஸ்கூட்டரை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ஸ்கூட்டர் எரிந்து சாம்பலாகி கிடப்பதை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி ஸ்கூட்டரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவர்கள்…. பின்தொடர்ந்த காட்டுயானை…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

யானையை காட்டுக்குள் விரட்டும்  பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைபட்டி, பன்றிமலை, தருமத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்  அமைந்துள்ள விவசாய நிலத்தில்  யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 10-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் வழக்கம்போல் மலைப்பாதை வழியாக  பள்ளிக்கு  நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில்  திடீரென அவர்களை காட்டு யானை பின் தொடர்ந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அனைவரும்  மலை பாதை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்” நடைபெறும் கண்காட்சி…. குவியும் சுற்றுலா பயணிகள்….!!!!

2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியாக விளங்கும் கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு  ஆண்டுதோறும் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின்  காரணமாக கண்காட்சி நடைபெறவில்லை.  இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில்  பிரையன்ட் பூங்காவில்   59-வது ஆண்டு மலர் கண்காட்சி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பெங்களூர், கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட  சால்வியா, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தலைமை செயலகம் முன் உண்ணாவிரதம் இருக்க போகிறோம்” முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்….!!

பிரதமர் முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளி பெண் மனு ஒன்று அனுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் வசித்து வருபவர் கூடைப்பந்து வீரர் ரமேஷ்பாபு. இவருடைய மனைவி மூளை முடக்குவாதம் மாற்றுத்திறனாளியான ஷர்மிளா. இந்நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ்பாபு திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்திற்கு தனது மனைவியை கைகளில் தூக்கிக்கொண்டு வந்துள்ளார். அதன்பின் ஷர்மிளா சார்பாக மனு ஒன்றை பிரதமர், தமிழக முதலமைச்சர், டி.ஜி.பி ஐகோர்ட்டு, பா. ஜனதா மாநில தலைவர் ஆகியோருக்கு அனுப்பினர். இதுகுறித்து ரமேஷ் பாபு கூறியதாவது, என்னுடைய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாணவனை தாக்கிய ஓட்டுநர்…. காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

படிக்கட்டில் தொங்கிய மாணவனை அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் தேத்தாம்பட்டியிலிருந்து திண்டுக்கலுக்கு நேற்று முன்தினம் அரசு டவுன் பேருந்து ஒன்று கிளம்பியது. அந்த பேருந்து நேற்று காலை 8 மணி அளவில் சாணார்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்த போது, பள்ளி மாணவர்கள் சிலர் அந்த பேருந்தில் ஏறினார்கள். அதன்பின் பேருந்தில் ஏறிய மாணவர்கள் உள்ளே வராமல் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தார்கள். இதை பார்த்த ஓட்டுநர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“க்யூட் நுழைவுத் தேர்வு” மத்திய அரசை கண்டித்து தி.மு.கவினர் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

மத்திய பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பொது நுழைவுத் தேர்வை கண்டித்து தி.மு.க கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப் படிப்பில் சேர்வதற்கு க்யூட் என்ற நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த நுழைவுத்தேர்வு தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி மகளிர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் போன்றவற்றில் நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியின் வீட்டில் திடீர் சோதனை…. லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிரடி….!!!!

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசால் முக்கிய அதிகாரியின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பகுதியில் விவேகானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேனி மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விவேகானந்தனின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது வீட்டில் இருந்த அனைத்து சொத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“50-க்கும் மேற்பட்ட கிராமங்கள்” திடீரென உருவான அருவிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!!

தொடர் மழையின் காரணமாக திடீர் அருவிகள் உருவாகியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மலைகளின் இளவரசி என கொடைக்கானல் அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள தேவதை அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி போன்ற போன்றவைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் போளூர், பேத்துப்பாறை, பெருமாள்மலை, புலிச்சோலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறு சிறு அருவிகள் உருவாகியுள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்கள் வீட்டை இடிக்காதீங்க” கதறி அழுத மக்கள்…. அனைவரையும் கண்கலங்க வைத்த காட்சி….!!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த  200 வீடுகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நகராட்சியில் அமைந்துள்ள 26-வது வார்டில் ஏராளமான  மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான  13 ஏக்கர் நிலத்தை  ஆக்கிரமித்து  வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாரிகள்  ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த 200 வீடுகளை  அகற்ற வந்தனர். ஆனால்  அப்பகுதி  மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என கூறி  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கிணற்றில் சீறிக்கொண்டிருந்த நல்லபாம்பு” அதிர்ச்சியில் உறைந்த விவசாயி…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

கிணற்றுக்குள் விழுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  சத்திரப்பட்டி  கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய தோட்டம்  ஒன்று உள்ளது. இந்த  தோட்டத்தில் அமைந்துள்ள  கிணற்றில் 8 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு   ஒன்று தவறி விழுந்துள்ளது. அந்த பாம்பு   மேலே வர முடியாமல் படம் எடுத்தபடி சீறிக்கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அதிர்ச்சி   அடைந்த விவசாயி ஒருவர் உடனடியாக தீயணைப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காலையில்…. “வாக்கிங் சென்ற ஓட்டல் அதிபரை”…. காரில் கடத்தி சென்ற 7 பேர்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

வாக்கிங் சென்ற ஓட்டல் அதிபரை காரில் கடத்திய ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு புதுப்பட்டி சாலையில் வசித்து வருபவர் தொழிலதிபர் அன்புச்செல்வன்(55). இவர் வத்தலக்குண்டு பெரியகுளம் ரோட்டில் பயணியர் விடுதி எதிரில் மூன்று நட்சத்திர ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் வத்தலகுண்டு பைபாஸ் ரோட்டில் கணவாய்ப்பட்டி பிரிவு அருகில் வாக்கிங் செல்வது வழக்கம். அதன்படி அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து வெள்ளை நிற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தூய்மை பணி முகாம்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!

தமிழக அரசு உத்தரவின்படி தூய்மை பணி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் சுத்தமான மற்றும் பசுமையான சுற்று சூழலை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 3-வது   சனிக்கிழமைகளில் தூய்மை பணி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1-வது வார்டு பி.வி. தாஸ் காலனி, 3-வது வார்டு ஆர்.எம்.காலனி 80 அடி ரோடு, 8-வது வார்டில் நாயக்கர் புதுத்தெரு 1,2,3 சந்துகள், 12-வது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்”…. அனைத்து கோவில்களிலும் பிரசாதம் இலவசம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

பிரசித்தி பெற்ற  முருகன் கோவிலில் இலவசமாக பிரசாதம் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில்  ஆறுபடை வீடுகளில் 3-ஆம்  படை வீடாக விளங்கும் முருகப் பெருமான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் இணை இயக்குனர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக 40 கிராம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில்… குளுகுளு சீசன்… அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் …!!!

கொடைக்கானலில் நிலவிய குளுகுளு சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகமாக சென்றனர். சர்வதேச சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். கடந்த சில வருடங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டு கோடை காலத்தில் மழை அதிகமாக பெய்ததால்  அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவி வரும் நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி மட்டுமல்லாமல் மற்ற அனைத்து நீர்வீழ்ச்சிகளும் வெள்ளம் அதிகமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுமட்டுமல்லாது மலைப்பகுதியில் பசுமையாக காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவன்…. போலீசில் சரண்….காரணம் என்ன….?

மனைவியை  கொலை செய்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கெண்டையகவுண்டனூர் நால்ரோடு  பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனும் காளீஸ்வரியும்  சேர்ந்து அதே பகுதியில் உள்ள தனியார நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.இந்நிலையில் காளீஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கு  கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் மணிகண்டன் காளீஸ்வரியை  கண்டித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் கனமழை… “வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு”…!!!

கனமழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. சில தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் போது தர்மபுரம் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பிகள் உரசியதால் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தது. இதனால் அங்கு மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினமும் காலையில் லேசான மழை பெய்தது. மதியம் வெயில் அதிகமாக இருந்தத நிலையில் மாலை 4 மணிக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வீழ்ச்சியடைந்த வெங்காயத்தின் விலை”… வீதியில் கொட்டும் விவசாயிகள்…!!!!

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்ததால் விற்பனையாகத வெங்காயத்தை வீதியில் கொட்டி வருகின்றனர் விவசாயிகள். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் சென்ற சில நாட்களாகவே சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்திருப்பதால் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ஏழு முதல் பத்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்திருக்கின்றனர். சந்தைக்கு […]

Categories

Tech |