குடிநீர் தொட்டியில் குரங்கு இறந்து கிடந்ததால் அந்த தண்ணீரை குடித்த கிராமமக்கள் மர்ம காய்ச்சலில் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கோள் பட்டியில் 700க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு அமைந்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலமாக சுற்றிருக்கும் கிராமப் பகுதிகளுக்கு வழங்கபட்டு வந்த தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால் கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்கள் தொட்டியின் மேல்பகுதியில் ஏறிப் பார்த்துள்ளனர். அப்போது தொட்டியின் தண்ணீருக்குள் அழுகிய நிலையில் ஒரு குரங்கு இறந்து கிடந்ததை […]
