Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டியில் சென்ற பெண் போலீஸ்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பெண் போலீசிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் ஐஸ்வர்யா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கோவை மாநகர ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா பணி முடிந்து இரவு நேரத்தில் தனது ஸ்கூட்டியில் சகோதரியுடன் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் ஐஸ்வர்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாலையில் தெரிந்த வெளிச்சம்…. வனப்பகுதியில் நடந்த சம்பவம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சந்தன மரங்களை வெட்ட முயற்சி செய்த 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கட்டாஞ்சி மலை வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் வெளிச்சம் தெரிவதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது நான்கு நபர்கள் சந்தன மரங்களை வெட்ட முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின் வனத்துறையினர் அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் மன்னார்காடு பகுதியில் வசிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதனால் ஏற்பட்ட தகராறு…. நண்பரின் கொடூர செயல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாலிபர் தனது நண்பரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த மணிகண்டன் பீர் பாட்டிலால் கார்த்திகை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த கார்த்திக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலாவதியான பொருள் இருக்கா….? அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி பெண்…. அதிகாரிகளின் தகவல்….!!

கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட மருந்து பெட்டகத்தில் காலாவதியான பொருட்கள் இருந்ததா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்த கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கென்னடி வீதியில் வசிக்கும் லோகநாதன் என்பவரின் சகோதரி தற்போது கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்த கர்ப்பிணி பெண் சிங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மருந்து பெட்டகத்தை ஊழியர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் என்ன வேலை….? வசமாக சிக்கிய நால்வர்…. சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கள் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிலர் சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். இந்நிலையில் தோட்டத்தில் வைத்து சட்ட விரோதமாக கள் விற்பனை செய்த குற்றத்திற்காக திருமலைச்சாமி, கணபதி உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அவங்களும் மிரட்டி பண்ணிருக்காங்க” சிறுமி அளித்த வாக்குமூலம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

14 வயது சிறுமியை காதலன் உட்பட 6 பேர் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இந்த சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அனைத்து மகளிர் காவல் துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நான் அடிச்சதுனால செத்துட்டாங்களா….? தவறுதலாக நினைத்த தொழிலாளி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குடிபோதையில் தாக்கியதால் சித்தி இறந்து விட்டதாக நினைத்த வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரிச்சிபாளையம் பகுதியில் ரங்கராஜ் என்ற வெல்டிங் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரங்கராஜன் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து ரங்கராஜனின் சித்தி ராஜம்மாள் என்பவர் மதுபோதையில் இருந்த ரங்கராஜனை கண்டித்துள்ளார். அப்போது கோபமடைந்த அவர் குடிபோதையில் தனது சித்தி ராஜம்மாளை கல்லால் தாக்கியுள்ளார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதுக்கு தான் நிக்கிறீங்களா….? தாய்-மகன் செய்த வேலை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் வெள்ளலூர் பகுதியில் வசிக்கும் சித்திக், லத்தீப் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதனால இப்படி நடந்துச்சா…? வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

திருட முயற்சித்ததாக விசாரணைக்கு அழைத்து சென்ற வடமாநில தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் மில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மில்லில் வேலை பார்ப்பதற்காக ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கடந்த வாரம் கஜேந்திரன் பிரசாத் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மில்லில் இருந்து வெளியேறிய கஜேந்திர பிரசாத் வேட்டைக்காரன் குட்டை பகுதியில் இருக்கும் மணி என்பவரது வீட்டு காம்பவுண்டு சுவரை ஏறி குதித்துள்ளார். இது குறித்து அறிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பார்க்கவே அழகா இருக்கு…. தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்கள்…. ஆச்சரியத்தில் சுற்றுலா பயணிகள்….!!

சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் தத்ரூபமாக வன விலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் குரங்கு அருவி அமைந்திருக்கிறது. இந்நிலையில் வால்பாறை எஸ்டேட் மற்றும் மலைப் பகுதியில் பெய்யும் மழையின் மூலம் இந்த அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கிறது. தற்போது இந்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த அருவிக்கு அருகில் தடுப்பு கம்பிகளை அமைத்து அங்கு செல்லும் சுற்றுலாப் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்க வைத்து பாதுகாக்க முடியல…. சீக்கிரம் சரி பண்ணுங்க…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

பள்ளி கட்டிடங்களை பராமரிக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் வட்டார கல்வி அதிகாரி அலுவலகம் இருக்கின்றது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் தான் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகிறது. இந்நிலையில் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், அதனுள் இருக்கும் வட்டார கல்வி அதிகாரி அலுவலகமும் பழுதாகி கிடைக்கிறது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விற்பனை செய்ற மாதிரி போயிருக்காங்க…. சிக்கிய தம்பதிகள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வீடு புகுந்து கொள்ளையடித்த தம்பதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான் பேட்டை பகுதியில் பரமேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவர்களது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகை மற்றும் 22 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் பரமேஸ்வரி புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் மகளோட வாழ்க்கை என்னாகும்” பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியில் மோகன்ராஜ் என்ற ஓட்டுனர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 20 வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில் தனது மகளுக்கு ரத்தினம் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். ஆனால் பொருத்தமான வரன் அமையவில்லை. மேலும் பொருளாதார ரீதியிலும் மோகன் ராஜின் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் வாழ்க்கையை வெறுத்த ரத்தினம் தனது வீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களை யாராவது காப்பாத்துங்க” திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

ஆற்றில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட 9 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வழியாக பவானி ஆறு செல்கின்றது. இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட 9 பேர் நெல்லி துறையில் இருக்கும் படித்துறை பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 9 பெரும் ஆற்றின் நடுவே இருக்கும் திட்டு பகுதியில் நின்று கொண்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புதருக்குள்ள தான் போகுது…. பார்த்ததும் அதிர்சியடைந்தவர்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

9 1/2 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தில் தொழிலாளர்கள் உருளைக்கிழங்குகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்குள்ள புதர்களுக்கு இடையே பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 9 1/2 அடி நீளமுள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இந்த சூழல் இப்படியே இருக்கணும்” சுதந்தரமாக உலா வரும் விலங்குகள்…. வனத்துறையினரின் கோரிக்கை…!!

கோவை மாவட்ட வனப்பகுதியில் விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டெருமை, கழுதை புலி, சிறுத்தை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. மேலும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட முக்கிய பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கோவை மாவட்ட வனப்பகுதி வழியாகத்தான் செல்கிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட வனப் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பது, கழுதைப்புலி நிற்பது, சிறுத்தை வேட்டையாடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் போல பேசி நிர்வாண வீடியோ…. இளைஞர்களே உஷாரா இருங்க…!!!

கோவை மாவட்டத்தில் பெண்கள் போல பேசி இளைஞர்களின் ஆசையை தூண்டி பின் அவர்களின் நிர்வாண வீடியோ பெற்று பணம் பறிக்கும் கும்பல் செயல்படுவது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் பெயரில் இளைஞர்களுக்கு நட்பு அழைப்புகள் வருகின்றன. இதை நம்பி தொடர்புகொள்ளும் நபர்களிடம் வீடியோ கால் பேசலாம் என்று ஆசை காட்டி, நைசாக பேசி அந்தரங்க வீடியோ பற்றி அந்த வீடியோவை பெறுகின்றனர். பின்னர் அந்த விடியோவை காட்டி பணம் பறித்து வருகின்றனர். எனவே இளைஞர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விவாகரத்து வழக்கால் வந்த தொடர்பு…. சப்-இன்ஸ்பெக்டரின் மூர்க்கத்தனமாக செயல்…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!

சப்-இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணை தாக்கியதோடு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் அபிநயா என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிநயாவின் விவாகரத்து வழக்கை ரேஸ்கோர்ஸ் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் பார்த்திபன் என்பவரின் தம்பியான வழக்கறிஞர் நடத்தி வந்துள்ளார். அப்போது அபிநயாவிற்கும், பார்த்திபனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனாரு….? ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயில் நிலையத்திற்கு ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அந்த நபர் கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விட்டு  அழைப்பை துண்டித்துள்ளார். இதனை அடுத்து கோவை ரயில் நிலையம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களும், ரயில்வே காவல்துறையினரும் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அங்கு எந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரி இப்படி செய்யலாமா….? பெண் அளித்த புகார்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய மின்வாரிய இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயந்தி தனக்கு சொந்தமான இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் மின்கம்பத்தை தள்ளி வைக்க கோரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த மின்வாரிய உதவி இன்ஜினியர் சுரேஷ் பாபு என்பவர் அதற்கு லஞ்சமாக 23 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் ஜெயந்தி புகார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எதிர்ல என்ன இருக்கு….? எங்கும் பார்த்தாலும் பனிமூட்டம்… சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!

பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்ட படி  பயணித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் அதிகாலை கடுமையான பனி மூட்டம் நிலவியதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்ட படி சென்றுள்ளனர். இவ்வாறு எதிரே வரும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று காலை 8 மணிக்கு அறிவிப்பு வெளியாகும்… கோவை மாநகராட்சி…..!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா தடுப்பு ஊசி மையங்களின் விவரங்களை இன்று காலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இனிமேல் நீ பேச கூடாது” கணவரின் கொடூர செயல்…. கோவையில் பரபரப்பு…!!

மனைவியின் கழுத்தை சேலையால் நெறித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி நகரில் இரும்பு வியாபாரியான செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பூமாதேவி அடிக்கடி செல்போனில் பேசியதால் செல்லையாவிற்கு அவரின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உமாதேவி செல்போனில் தனது தோழியுடன் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பெரும் பரபரப்பு…..!!!!

கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று  காலையில் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது, தான் மது போதையில் இருப்பதாகவும், கோவை ரயில் நிலையத்திற்கு குண்டுவைக்கப்போவதாக 2 பேர் பேசிக்கொண்டிருப்பதை தான் கேட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரயில் நிலையம் முழுவதும் ஸ்கேன்னர் உள்ளிட்ட கருவிகள் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதித்தனர். தொலைபேசியில் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இப்படி முயற்சி பண்ணாதீங்க” பரிதாபத்தை ஏற்படுத்திய சம்பவம்…. சமூக ஆர்வலர்களின் கருத்து….!!

காட்டு யானை மீது அதிகமான பட்டாசுகளை வெடிக்கச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகுபலி என்ற காட்டு யானையை சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு எடுத்துள்ளனர். இதற்காக முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பாகுபலி யானை பிடிக்கும் முயற்சித்தபோது அது வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது. இதனை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி நிகழ்ந்த திருட்டு…. மாட்டி கொண்ட வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, ஆர்.எஸ். புரம், துடியலூர், கவுண்டம்பாளையம் போன்ற பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவது குறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…. பின் நடந்த சம்பவம்….!!

கோவை அருகில் மனைவியை கொன்று விட்டு தலைமறைவாக இருந்த கணவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதி ஜெயமங்கலத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனது மனைவி கலாமணியுடன் கோயம்புத்தூரில் உள்ள தொண்டாமுத்தூர் வ.உ.சி. வீதியில் வசித்து வந்துள்ளனர். இதில் பாண்டியராஜன் அங்கு இருக்கக்கூடிய ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக பாண்டியராஜன் வேலைக்கு செல்ல வில்லை. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி பாண்டியராஜன் வீட்டில் இருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே இன்று கிடையாது…. யாரும் போகாதீங்க…. கோவை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. முறிந்து விழுந்த ராட்சத மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

கனமழையின் காரணமாக முறிந்து விழுந்த ராட்சத மரத்தை நெடுஞ்சாலைதுறையினர் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் வரட்டுபாறை எஸ்டேட் பகுதியில் இருக்கும் ஒரு ராட்சச மரம் கனமழையின் காரணமாக முறிந்து சாலையில் விழுந்து விட்டது. இதனை அடுத்து முறிந்த மரம் மின் கம்பியின் மீது விழுந்ததால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா….? வசமாக சிக்கிய நால்வர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான் பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சூதாடி கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செந்தில்குமார், ராமசாமி, கார்த்திக் மற்றும் அஜித் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்க வந்தும் நீ திருந்தலையா….? தாயின் கொடூர செயல்…. கோவையில் பரபரப்பு…!!

செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் தலையில் கல்லைப்போட்டு தாய் மகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணவாய்பாளையம் பகுதியில் நதியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் சரவணன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் நதியா தனது குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குழந்தைகளை கவனிக்காமல் நதியா அடிக்கடி செல்போனில் பேசியதால் மாமியார் அவரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக மாமியார், மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு […]

Categories
கோயம்புத்தூர்

“அவனும் ஸ்டேட்டஸ் வச்சிருக்கான்” புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. 4 நாட்களில் நடந்த சோகம்….!!

திருமணமான 4 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசும், அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் 24 வயது இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதன்பிறகு கடந்த 7-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் தனது மனைவி அழுது கொண்டிருப்பதைப் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உங்க கார் ஏன் இங்க நிக்குது….? அதிர்ச்சியடைந்த ரியல் எஸ்டேட் அதிபர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் பணம் மற்றும் நகை போன்றவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியநாயகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி தனது குடும்பத்துடன் சுந்தரம் வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தேவகோட்டைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிங்காநல்லூர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இது ரொம்ப பழமையானது” பொதுமக்களின் திடீர் போராட்டம்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

பழமையான கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ். புரம் பகுதியில் இருக்கும் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2000 வீடுகளை அதிகாரிகள் இடித்தனர். அதன் பிறகு அந்த வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான மாரியம்மன் கோவிலை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மெதுவா போங்க…. கண்டிப்பா அதை கொடுக்காதீங்க…. வனத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கை….!!

வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்குமாறு அதிகாரிகள் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான அரியவகை வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் இருக்கும் வளைவுகளில் அமர்ந்திருக்கும் அரியவகை விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, அரிய வகை விலங்குகள் இந்த சாலையில் சுற்றித் திரிவதால் சுற்றுலா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ரொம்ப பாசமா வளர்த்தேன்” துக்கத்தில் ஊழியர் எடுத்த முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

3 வயது மகன் இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் கார்த்திக் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் 3 வயது மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் எதிர்பாராதவிதமாக கார்த்திக்கின் மகன் உயிரிழந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டில் உள்ள யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு இங்கிருந்து வர மனசு இல்ல” புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோவையில் நடந்த சோகம்…!!

புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியங்குளம் பகுதியில் கூலி தொழிலாளியான ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மாதம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் வசிக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆர்த்தி தனது பெற்றோரை பார்க்க வேண்டும் என கூறியதால் ரஞ்சித்குமார் அவரை கோத்தகிரிக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பிறகு ஆர்த்தி ஓரிரு நாட்கள் தனது பெற்றோர் வீட்டில் இருந்து விட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பொள்ளாச்சி நோக்கி வேகமாக சென்ற கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜசேகரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவன் கூட ஏன் சண்டை போட்ட….? நண்பருக்கு நடந்த கொடூரம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் விளையாடும் போது சூர்யாவிற்கும், செல்வா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கார்த்தி கோபமடைந்து செல்வாவை தாக்கியுள்ளார். இதனையடுத்து தனது நண்பர்களுடன் இணைந்து செல்வா மாரியம்மன் கோவில் வீதியில் நின்று கொண்டிருந்த கார்த்திக்கின் கையை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நானும் அவரு கூடவே போறேன்” தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் அய்யாசாமி என்ற பால் வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், 5 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக அய்யாசாமி திடீரென தனது வீட்டில் உயிரிழந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்து கதறி அழுத மரகதம் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டார். அதன் பின் உறவினர்கள் இரண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு… கேமராவில் பதிவான காட்சிகள்… வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

ஊருக்குள் சிறுத்தை புலிகள் நடமாடுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் பதிவாகி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினர் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 3 சிறுத்தை புலிகள் நடமாடுவது பதிவாகியிருக்கிறது. இவ்வாறு சிறுத்தை புலிகள் குடியிருப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் தவித்த உறவினர்கள்… விடுதியில் நடந்த சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் பாலகிருஷ்ணன் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலகிருஷ்ணன் மீண்டும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தனர். இந்நிலையில் ஒரு தனியார் விடுதியில் பாலகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வெறித்தனமா சுத்திட்டு இருந்தான்” அலறி சத்தம் போட்ட பெண்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தம்பியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு கூலித்தொழிலாளி பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பள்ளபாளையம் பகுதியில் வசந்த், முருகன் என்ற இரண்டு கஞ்சா வியாபாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கில் காவல்துறையினர் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இந்நிலையில் வசந்தனின் அண்ணனான பேச்சிமுத்து என்ற கூலித் தொழிலாளி தனது தம்பியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு அரிவாளுடன் இருசக்கர வாகனத்தில் ஊருக்குள் சுற்றித்திரிந்துள்ளார். இதனை அடுத்து வசந்தனின் கொலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்கயே தான் சுற்றி வருது… அச்சத்தில் வாகன ஓட்டிகள்… பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

உணவு மற்றும் தண்ணீரை தேடி வந்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு வசிக்கும் யானைகள் தண்ணீர் மற்றும் உணவினை தேடி மலையடிவார கிராமத்திற்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில் ஆனைகட்டி அருகில் இருக்கும் செங்கல் சூளைக்குள் காட்டு யானை ஒன்று புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் தெருநாய்கள் குறைத்ததால் காட்டு யானை மிரண்டு சாலைக்கு வந்துள்ளது. இந்நிலையில் காட்டு யானைகளை பார்த்ததும் வாகன ஓட்டிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த மகள்கள்… தந்தையின் கொடூர செயல்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மகள்களை கொன்ற குற்றத்திற்காக தந்தைக்கு நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மசக்காளிபாளையம் பகுதியில் பத்மநாபன் என்ற மருத்துவ பிரதிநிதி வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹேமவர்ஷினி, ஹர்ஷா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவர்களுடன் செல்வராணியின் தாயாரான பிரேமா என்ற மூதாட்டியும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு பத்மநாபன் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். கடந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

49,50,000 ரூபாய் கடன்…. மோசடி செய்த பள்ளி தலைமை ஆசிரியை…. கைது செய்த போலீஸ்….!!

49,50,000 ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த பள்ளித் தலைமை ஆசிரியை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொங்கேகவுண்டன்புதூர் பகுதியில் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியைராக மாலதி பணிபுரிந்து வருகின்றார். இவர் கார்த்திக் குமார் என்பவரிடம் மகளின் திருமணத்திற்காகவும், மகனின் உயர் கல்வி செலவிற்காகவும் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதேபோல் தலைமையாசிரியை மேலும் 6 நபரிடம் கடன் வாங்கி மொத்தம் 49½ லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இதனை அடுத்து கார்த்திக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அவன் தான் கூட இருந்திருக்கான்” சடலமாக கிடந்த கூலி தொழிலாளி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோமனூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்நாதன் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட செந்தில் குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உன்னை யாரு இப்படி பண்ணுனா…? காவல் நிலையம் சென்ற கணவர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அழகு நிலைய பெண் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோமனூரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கங்காதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதியில் கங்காதேவி அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு 8 மணி ஆகியும் அழகு நிலையத்தில் இருந்து கங்காதேவி திரும்பி வராததால் சந்தேகமடைந்த சீனிவாசன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கயிறுகளால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்க இருந்த மாதிரி இல்ல… அவதிப்படும் கும்கி யானைகள்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

வெப்பம் தாங்க முடியாமல் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள் சோர்வுடன் காணப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி திரிகிறது. இந்நிலையில் இந்த காட்டு யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்துவதற்கு வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாரியப்பன், கலீம், வெங்கடேஷ் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் மயக்க ஊசியை செலுத்தி பிடிக்க முயற்சி செய்த சமயத்தில் […]

Categories

Tech |