Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இறுதி ஊர்வலத்தில் தகராறு…. போலீசார் மீது தாக்குதல்…. அரியலூரில் பரபரப்பு…!!

பட்டாசு வீசியதை தட்டிக்கேட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இறந்தவரின் சடலம் அப்பகுதியில் இருக்கும் மார்க்கெட் வழியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பூக்கள் தூவியும், பட்டாசு வெடித்தும் சென்றுள்ளனர். இந்நிலையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் முகமது அபு என்பவர் அவ்வழியாக தனது சகோதரர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் முகமது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர்கள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் நந்தகுமார் என்பவரும் திருமானூரிலுள்ள மின்வாரிய அலுவலகம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையிலிருந்த பதாகையில் வேகமாக மோதியதில் இருவரும் கீழே விழுந்துள்ளனர். இந்த விபத்தில் வெங்கடேசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் கோட்டைவாசல் மேல வீதியில் இருசக்கர வாகன மெக்கானிக்கான விக்னேஸ்வரன் வசித்து வருகிறார். இவர் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் அந்த மாணவி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விக்னேஸ்வரனை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொத்து விவகாரம்…. வாலிபரின் வெறிச்செயல்…. அரியலூரில் பரபரப்பு…!!

சொத்து பிரச்சினை காரணமாக சகோதரர்களை சரமாரியாக வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள வெங்கனூர் கிராமத்தில் சகோதரர்களான தங்கராஜ் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகன்களுக்கிடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தங்கராஜின் மகனான ரஞ்சித் என்பவர் ராஜேந்திரனின் மகன்களான ராம்குமார், ராம்கி, ரமேஷ் ஆகிய 3 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் 3 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக விளையாட்டு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அரியலூரில் நடந்த சோகம்…!!

பண்டிகைக்கு சென்ற இடத்தில் குளத்தில் தவறி விழுந்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜமீன்மேலூர் என்னும் கிராமத்தில் கூலி தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிணி என்ற மகள் இருந்துள்ளார். பன்னீர்செல்வத்தின் சகோதரர் மகன் லோகேஷும் ஹரிணியும் அதே பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹரிணி மருகாலங்குறிச்சி கிராமத்திலுள்ள தனது பாட்டி வீட்டில் வைத்து தீபாவளி பண்டிகையை கொண்டாட விரும்பியுள்ளார். இதனால் பன்னீர்செல்வம் அவரை அழைத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழவிளாங்குடி காலனியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்துள்ளது. இதனால் அர்ச்ஜுனன் வீட்டின் அருகே மழை நீர் சூழ்ந்துள்ளது. அப்போது மழைநீர் வீட்டிற்குள் வராமல் இருக்க அர்ஜுனன் கால்களால் தண்ணீரை வெளியே தள்ளியுள்ளார். அப்போது அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் அர்ஜுனன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிணற்றிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள வெளிச்சங்குடி கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தின் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு அருகிலிருந்த வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் அதிர்ச்சியடைந்து கிணற்றின் அருகே சென்று பார்த்துள்ளார். அந்தக் கிணற்றில் சிறுவனொருவன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே செய்வதறியாது தவித்த அந்தப் பெண் உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றுவதற்காக தெருவில் உள்ளவர்களை உதவிக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-டிராக்டர் மோதல்…. கோர விதத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டத்திலுள்ள குழுமூர் கிராமத்தில் தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பலூர் தனியார் கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் மற்றும் அவரது நண்பரான ஆறுமுகம் என்பவருடன் அங்கனூரிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து குழுமூர் அரசு காப்புக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள விவசாய நிலத்திலிருந்து சாலையை கடக்க முயன்ற டிராக்டர் ஒன்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கால் கழுவ சென்ற முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாத்தூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இயற்கை உபாதை கழித்துவிட்டு அதே பகுதியில் உள்ள கேணிக்கரை திருகுளத்தில் கால் கழுவ இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சங்கர் ஏரியில் தவறி விழுந்து மூழ்கி இறந்தார். இதனைத் தெரியாத சங்கரின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் காலையில் ஏரி பகுதியில் வந்தவர்கள் தண்ணீரில் பிணம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்து கொள்கிறேன்” சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணக்கரை கிராமத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

படிப்புக்கேற்ற வேலை கிடைகல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்பலவர் கட்டளை தெற்குத்தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ. படித்துள்ள நிலையில், அதற்கேற்ற வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரியப்பன் விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து அருந்தியுள்ளார். அதன்பின் மயக்கமடைந்த நிலையில் கிடந்த மாரியப்பனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாரியப்பனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிகாரியின் கண்காணிப்பு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தா.பழூர் கிராம நிர்வாக அலுவலரான தினேஷ் என்பவர் தனது உதவியாளருடன் தாதம்பேட்டை ஆற்றங்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தாதம்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் லோகநாதன் என்பவர் அனுமதியின்றி தனது இருசக்கர வாகனத்தில் நான்கு மூட்டை மணலை ஏற்றி சென்றுள்ளார். இதுகுறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் தா.பழூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் லோகநாதன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செல்வநாதன், நந்த வேல் மற்றும் இளையராஜா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சந்திரன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சந்திரன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் நாராயணசாமி என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நாராயணசாமியின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்த போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தெரியவந்துள்ளது. அதன்பின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதா நகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த பெண் தொழிலாளர் நல வாரியத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அலுவலக கூட்டத்தில் பங்கேற்பதற்காக கலைச்செல்வி சென்னைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கலைச்செல்வி அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. தொழிலாளர் சங்கத்தினரின் போராட்டம்…. அரியலூரில் பரபரப்பு…!!

சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி செயலாளர் தம்பி செல்வம் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

மணல் கடத்திய நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள மழவராயநல்லூர் தெற்குத் தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அறிந்த விக்ரமங்கலம் காவல்துறையினர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பின் சில வருடங்களாக தலைமறைவாக இருந்த ரமேஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ரமேஷ் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. 2 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்…. போலீஸ் நடவடிக்கை…!!

பாலியல் பலாத்காரம் வழக்கில் கைதான 2 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, இதனை வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி விடுவதாக மிரட்டி சிவகுமார் என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த சிறுமிக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கிப்பிடித்தபோலீஸ்…!!

கஞ்சா விற்பனை குற்றத்திற்காக ஏற்கெனவே ஒருவர் சிக்கிய நிலையில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கோட்டியால் பேருந்து நிலையத்தின் அருகே கஞ்சா விற்றதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்குரிய சில நபர்கள் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். இதனை கண்ட காவல்துறையினர் அவர்களை துரத்தியதில் ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். மீதமுள்ள 6 பேர் தப்பி ஓடினர். அதன்பின் சிக்கியவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மனைவியை அழைக்க சென்ற கணவன்…. மாமனாருக்கு நடந்த கொடூரம்…. அரியலூரில் பரபரப்பு….!!

சொந்த மாமனாரை கொலை செய்த மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மெய்க்காவல்புத்தூர் மெயின் ரோடு பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவகி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில் 2-வது மகள் ஜெயந்தி திலக் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதன்பின் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஜெயந்தி தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

100கோடியை நெருங்கிடுச்சி…. ஒளிவிளக்கில் ஜொலித்த ஆலயம்…. திரண்டு வந்த பொதுமக்கள்…!!

பிரகதீஸ்வரர் ஆலயம் தேசியக்கொடியின் நிறத்தில் ஒளியூட்டப்படிருப்பதை கண்டு பொதுமக்கள் ரசித்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப்புகழ் வாய்ந்த பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மாமன்னர் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ஒரே கல்லால் ஆனது என்று கூறப்படுகிறது. அதன்பின் ஒரே கல்லால் ஆன அந்த சிவலிங்கம் 13 அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த சடலம்…. வாலிபரின் கொடூர செயல்…. அரியலூரில் பரபரப்பு…!!

தலைமை ஆசிரியரை கொன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வழியில் உடையார்பாளையம் சோழன் குறிச்சி சாலையில் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து செல்வராஜின் மனைவியான உஷாராணி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் நின்ற வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாரதிராஜா மற்றும் சின்னராசு என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்த குற்றத்திற்காக இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முருகையன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் இவர்களின் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி கேட்ட கருணாநிதி…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபரின் தலையில் பீர் பாட்டிலால் அடித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டியால் கிராமத்தில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பவருக்கு 200 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் கருணாநிதி நாகராஜனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது அவர் திருப்பி தர மறுத்துள்ளார். அதன்பின் கருணாநிதியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தலையில் தாக்கி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் நடந்த அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டித்திருக்கோணம் பகுதியில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செட்டித்திருக்கோணம் பகுதியில் வசிக்கும் ரமேஷ் மற்றும் முருகையன் ஆகியோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் இருவர் வீட்டிலும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷ் மற்றும் முருகையன் ஆகிய இருவாரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்றுகொண்டிருந்த நபர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக முத்துகுமார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துகுமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற அரியலூர் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பரவலாக பெய்த மழை…. தேங்கி நிற்கும் தண்ணீர்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இங்கு அதிகபட்சமாக 58 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. மேலும் அங்கு பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. அதன்பின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர். எனவே மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுற்று சுவர்…. பலியான 3 மாடுகள்…. அரியலூரில் சோகம்…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 6 பசுமாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ராமசாமி என்பவரின் வீட்டு சுற்றுசுவர் இடிந்து மாடுகள் மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே மூன்று மாடுகள் பரிதாபமாக விழுந்து விட்டது. மேலும் காயமடைந்த சினை பசுவிற்கு தீவிர […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பாதையில் கிடந்த மின்கம்பி….. தந்தை-மகனுக்கு நடந்த விபரீதம்…. அரியலூரில் பரபரப்பு…!!

மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பலூர் பகுதியில் விவசாயியான முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து தந்தையும், மகனும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அந்த சமயம் பலத்த மழை பெய்து இருந்ததால் பாதை சேறும், சகதியுமாக இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு அருகில் அறுந்து கிடந்த மின்கம்பியை பார்க்காமல் சங்கர் அதனை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்து கீழே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்திற்கு இடையூறு…. பூட்டு போடப்படும் வாகனங்கள்…. எச்சரிக்கை விடுத்த போலீஸ்…!!

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில் கடைகள் அதிகமாக உள்ளதால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகின்றது. போக்குவரத்து காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் சம்பத்தப்பட்டவர்கள் வாகனங்களை எடுப்பதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தால் அதன் சக்கரங்களை போக்குவரத்து காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீதியில் நின்ற மினிலாரி….. அடித்து பிடித்து ஓடியவர்கள்….. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆனைவாரி ஓடையில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளி உள்ளனர். அதன்பிறகு மணல் கடத்தப்பட்ட மினி லாரியோடு, சிலர் கடை வீதியில் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரை பார்த்ததும் மணல் கடத்தியவர்கள் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். ஆனால் காவல்துறையினர் அவர்களில் ஒருவரை மட்டும் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நாகல்குழி கிராமத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற கார்….. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சரவணன் என்பவர் ஓட்டி சென்ற கார் கணேசன் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆறுமுகம்-ஜெயந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு இந்த தம்பதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சியில் நடந்த தகராறு…. இருதரப்பினர் மோதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

துக்க நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் மதன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் காயம் அடைந்த மதன் குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகிய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான மாடுகள்….. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்….. போலீஸ் நடவடிக்கை…!!

மாடுகளைத் திருடிய குற்றத்திற்காக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு மணக்கொல்லை பகுதியில் அருளானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வயலில் இருக்கும் கொட்டகையில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஒரு ஜோடி மணப்பாறை மாடுகள் திடீரென காணாமல் போனதை அறிந்து அருளானந்தம் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அருளானந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கண்டிகுப்பம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்…. முன் விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

முன் விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கராயநல்லூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முகம் என்பவருக்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது விஜயகுமாரை சண்முகம் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த விஜயகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகன்-மருமகள் செய்த செயல்…. முதியவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் கிராமத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ராசாத்தி என்பவர் வீட்டில் கடந்த  மாதம் திருட்டு சம்பவம்  நடந்துள்ளது. இதில் ரங்கசாமியின் இளைய மகன் மற்றும் மருமகள் நகைகளை திருடி உள்ளனர். இதனால்  காவல்துறையினர் அவர்களை  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த  ரங்கசாமி தனது வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் திடீர் சோதனை…. மீட்கப்பட்ட 4 பெண்கள்…. அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி செல்லும் பிரதான சாலையில் ஒரு தனியார் தங்கும் விடுதி இருக்கிறது. அங்கு விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி, அரியலூர் காவல்துறையினர் இரண்டு பெண் காவல்துறையினருடன் ஒரு தனிப்படை அமைத்து விபச்சாரம் நடக்கும் அந்த விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு நான்கு பெண்களை இரண்டு ஆண்கள் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஸ்விட்சை போட்ட வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவூ ரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணி செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் பாலகிருஷ்ணன் குளிப்பதற்காக மோட்டார் சுவிட்சை அழுத்தியுள்ளார்.  அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட  பாலகிருஷ்ணனை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதித்து பார்த்த  மருத்துவர்கள் அவர் ஏற்கனவே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கூட்டத்தில் தாறுமாறாக ஓடிய கார்…. தகராறு செய்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

இறுதி சடங்குக்கு சென்ற கவுன்சிலரை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பரணம் என்னும் கிராமத்தில் அ.தி.மு.க. கவுன்சிலரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், இவரை எதிர்த்து போட்டியிட்ட  தி.மு.க. பிரமுகருக்குமிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் ஒரு இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்கு மணிகண்டனின் கார் ஓட்டுநரான குலோத்துங்கன் ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்த போது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவரின் உறவினரான […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இடையூராக இருக்கும் ரோடு ரோலர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வாகன ஓட்டிகளின் கோரிக்கை…!!

ரோடு ரோலர்  மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் வாலிபர் உயரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டத்தில் உள்ளமணக்கரை  பகுதியில் உபதேசியார் தெருவில்  டேனியல் வசித்து  வருகிறார்.  இவரின் மகன் ஸ்டீபன் ஸ்டாலின் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்இந்நிலையில் ஸ்டீபன் ஸ்டாலின் புதுச்சாவடி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  இதனையடுத்து எதிரே வந்த வாகனத்தின் வெளிச்சம் காரணமாக  ரோட்டோரம் இருந்த ரோடு ரோலர்  மீது ஸ்டாலின் மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதி விட்டது.  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேருந்தை வழி மறித்த நபர்…. ஓட்டுனருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்து ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்திலிருந்து அணைக்கரையை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்தை தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளார். அப்போது வாகனத்தை ஓரமாக நிறுத்தும்படி சிவகுமார் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நபர் சிவகுமாரை  தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

மர்ம நபர்கள் வீடிற்குள் புகுந்து 53 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் தெருவில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். அதன் பிறகு திரும்பி வந்து பார்த்த போது தனது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்தார். உடனே விரைந்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயலட்சுமியின் மணி பர்சில் இருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எதிரே வந்த தம்பதியினர்…. பள்ளத்திற்குள் இறங்கிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

பேருந்து பள்ளத்திற்குள் இறங்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடையக்குறிச்சி கிராமத்திற்கும் விருதாச்சலத்திற்கும் இடையே அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வளைவில்,  அரசு பேருந்து சென்றுகொண்டிருக்கும் போது எதிரே இருசக்கர வாகனத்தில்  ஒரு தம்பதியினர் சென்றுள்ளனர். இதனை பார்த்ததும் பேருந்து ஓட்டுனர், அந்த தம்பதியினர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை சற்றுத் திருப்பியுள்ளார். ஆனால் கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலை ஓரம் இருந்த  பள்ளத்தில் இறங்கி விட்டது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரவில் சென்ற பேருந்து…. மர்ம நபர்களின் செயல்….. போலீஸ் விசாரணை…!!

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த இரு நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அரசு பேருந்து ஒன்று  சென்று கொண்டிருந்தது.  அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கற்களை வீசி உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செந்துறை பத்திரப்பதிவு அலுவலகம்… லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு வரை சோதனை….!!!!!

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் தாலுகா அலுவலகம் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்தில் துணைப் பதிவாளராக ஸ்ரீராம் என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இங்கு பணி மாறுதலாகி வந்துள்ளார். கொரோனோ தொற்று காரணமாக கடந்த ஒரு வருடமாக பத்திரப்பதிவு குறைந்த அளவில் நடைபெறுகிறது. அதனால் இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு சமீப காலமாக அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்த தொழிலாளர்கள்…. துரத்தி கடித்த கதண்டுகள்…. படுகாயமடைந்த 6 பேர்…!!

கதண்டுகள் கடித்ததால் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரகுடி கிராமத்தில் இருக்கும் வயலில் தொழிலாளர்கள் கடலை செடி பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் வேலியில் இருந்த கதண்டு கூட்டில் எதிர்பாராதவிதமாக மண் விழுந்துவிட்டது. இதனால் கதண்டுகள் கூட்டில் இருந்து வெளியேறி வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை கடித்துள்ளது. இதனால் சேகர், மல்லிகா, ராஜா உள்ளிட்ட 6 பேரை கதண்டுகள் துரத்தி துரத்தி கடித்து காயப்படுத்தியுள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கணக்கில் வராத பணம்….. பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிரடி சோதனை…. போலீஸ் நடவடிக்கை…!!

லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் செந்துறையில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பத்திரப்பதிவு அலுவலகத்தின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி அலுவலர் ஸ்ரீதர் மற்றும் உதவியாளர் ஜோதி ஆகியோரிடம் தீவிர […]

Categories

Tech |