Categories
மாநில செய்திகள்

அரசு பணியில் சேரும் இளைஞர்களின் வயது வரம்பை தளர்த்தகோரி வழக்கு: மறுப்பு தெரிவித்தது ஐகோர்ட்!!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது உயர்ந்தப்பட்டுள்ளதால் வேலை தேடும் இளைஞர்களின் பணிக்கு சேரும் வரம்பை தளர்த்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விவரம்:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் நிவாரண பணிகளுக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் விடுப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகியவை ஓராண்டிற்கு நிறுத்திவைப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை நீடிக்கப்பட்டுள்ளதால் வெளிவாய்ப்புக்காக காத்திருக்கும் பல இளைஞர்களின் கனவு கேள்விக்குறியாகும் என்பதால் அவர்களுக்கும் வயது வரம்பு சலுகை வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை அமைந்தகரையை சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதா மனுவில் அரசு பணியில் சேர்வதற்கான அதிகபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 34 வயதை கடந்தோர் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படுவர். மேலும் ஓய்வு வயது நீட்டிப்பு அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கும் வகையில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மனு தள்ளுபடி:

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பாதிக்கப்பட்ட நபர் அல்ல எனவும், அரசு பணிகள் தொடர்பான விவகாரங்களை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |