முகவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 151 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 151 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை எச்சரிக்கையும் செய்துள்ளனர். இதனை அடுத்து சாலை பகுதிகளில் கட்டுப்பாடுகளை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வந்த 213 பேரின் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.