Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்….. நள்ளிரவில் நடந்த கோர விபத்து…. படுகாயமடைந்த நால்வர்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஜெகதாப்பட்டினம் பகுதியில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹர்ஷினி என்ற மகளும், லியோ என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தீபன் தனது குடும்பத்தினருடன் காரில் மணப்பாறைக்கு சென்றுள்ளார். இவர்கள் மேட்டுசாலை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது.

அதன் பிறகு கார் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |