லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் தொழிலாளியான ரத்தீஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரத்தீஷ் தனது நண்பரான சத்தியசீலன் என்பவருடன் காரில் சென்றுள்ளார். இந்த காரை கிருஷ்ணா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கார் பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் சத்தியசீலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
அதன்பின் படுகாயமடைந்த ரத்தீஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்தியசீலனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.