கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் பகுதியில் பாரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பரத் தனது உறவினரான ஜெயசீலன் என்பவருடன் இணைந்து சென்னைக்கு காரில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே சென்று கொண்டிருக்கும் போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது.
இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரத் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.